மரக்காணத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வரக் கூடாது கலெக்டர் உத்தரவு.
வன்னியர் சங்கத்தின் மாமல்லபுரம் சித்திரை திருவிழா நடந்த போது அதற்கு சென்றவர்களுக்கும் மரக்காணக்கம் பகுதியில் உள்ளவர்களுடனும் ஏற்பட்ட கலவரத்தால் இருவர் கொல்லப்பட்டனர், இதைத்தொடர்ந்து நடந்த பிரச்சினைகளில் டாக்டர் இராமதாஸ், காடுவெட்டி குரு உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று டாக்டர் இராமதாஸ் சிறையிலிருந்து விடுதலையானார், இந்தநிலையில் மரக்காணத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வரக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தடை விதித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை தொடரும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
#கலெக்டர் சார் முதலில் இந்த உண்மை அறியும் குழுக்களை போகக்கூடாது என்று தடை போடுங்கள், தினமும் ஒரு குழு அறிக்கை என்ற பெயரில் பீதியை கிளப்புகிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.