BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 30 July 2013

கனகா இறந்துவிட்டதாக செய்தி வெளியானது தவறு, தவறான செய்திக்கு மன்னிப்பை கோருகிறது சற்றுமுன் செய்திகள்.

கனகா இறந்துவிட்டதாக செய்தி வெளியானது தவறு, தவறான செய்திக்கு மன்னிப்பை கோருகிறது சற்றுமுன் செய்திகள்.

நடிகை கனகா இறந்ததாக கிடைத்த செய்தியை அடுத்து நமது சினிமா தொடர்புகளில் விசாரித்த போது இறந்த செய்தி உண்மை என்று கிடைத்ததை அடுத்து நாம் செய்திகளில் வெளியிட்டோம், ஆனால் தற்போது கனகா உயிருடன் நிருபர்கள் முன் தோன்றியுள்ளார். கனகா இறந்து விட்டதாக தவறான செய்தியை வெளி இட்டதற்காக சற்றுமுன் செய்திகள் நடிகை கனகாவிடமும் வாசகர்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறது.

இனி இம்மாதிரியான தவறு நிகழாது என்று உறுதியளிக்கிறோம்


கனகா நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென்று வேண்டுகிறோம்

நடிகர் சாந்தனு ரசிகையை அவரது பெயரில் மோசடி செய்து பணம் பறித்த இளைஞர் கைது

நடிகர் சாந்தனு ரசிகையை அவரது பெயரில் மோசடி செய்து பணம் பறித்த இளைஞர் கைது

நடிகர் சாந்தனு சில வாரங்களுக்கு முன் போலிஸ் கமிஷனர் இடம் தன் பெயரில் ஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்து ஒருவர் தனது ரசிகைகளையும் ரசிகர்களையும் ஏமாற்றி பணம் மோசடி செய்ததாக புகார் அளித்தார், இது தொடர்பாக விசாரித்த போலிஸ் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ரியாஸ்கான் என்ற 22 வயது இளைஞரை கைது செய்துள்ளனர். சாந்தனு போல ஃபேஸ்பூக்கில் சாட்டிங் செய்து தான் பணக்கஷ்டத்தில் இருப்பதால் 10,000 கொடுக்கவும் என்று கேட்டு ஒரு ரசிகையை மோசடி செய்துள்ளார்.

# ஃபேக் ஐட்க்களே உஷார் உஷார்

ராயல தெலுங்கான அறிவிப்பு இன்றிரவு? மாநிலம் முழுதும் துணை ராணுவப்படை குவிப்பு. ஐதராபாத் யூனியன் பிரதேசமாகிறதா?

ராயல தெலுங்கான அறிவிப்பு இன்றிரவு? மாநிலம் முழுதும் துணை ராணுவப்படை குவிப்பு. ஐதராபாத் யூனியன் பிரதேசமாகிறதா?

தனித்தெலுங்கானா கோரி நடந்த போராட்டத்தில் வெற்றி கிடைக்கும் நேரத்தில் காங்கிரஸ் தன் கட்சி நலனுக்காக தனது கட்சிக்கு செல்வாக்கு கிடைக்க வேண்டும் என்று தெலுங்கானாவை சேர்ந்த 10 மாவட்டங்களுடன் ராயலசீமாவை சேர்ந்த 2 மாவட்டங்களையும் இணைத்து 12 மாவட்டங்கள் கொண்ட ராயல தெலுங்கானா என்று அமைக்க முடிவெடுத்துள்ளது, இதை கடுமையாக எதிர்க்கின்றனர் தெலுங்கானா அமைய போராடியவர்கள், இதற்கு ஆந்திராவின் பிற பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தெலுங்கானாவில் இணைக்க கோரும் பிரச்சினைக்குறிய ஐதராபாத்தை தனி யூனியன் பிரதேசமாக மாற்ற முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது, யாருக்கும் திருப்தி இல்லாத தால் இது போன்று பிரித்தால் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதால் அதை கட்டுப்படுத்த மாநிலம் முழுவது துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது.

# காங்கிரஸ் கட்சியின் சுயநலத்துக்கு அளவே இல்லை போல

ஸ்பென்சர் பிளாசாவில் கீழே குதித்து வாலிபர் மரணம், It is just for Fun என்று தெரிவித்ததால் அதிர்ச்சி

ஸ்பென்சர் பிளாசாவில் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து வாலிபர் மரணம், It is just for Fun என்று தெரிவித்ததால் அதிர்ச்சி

சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அக்கவுண்டன்ட்டாக வேலை பார்த்து வந்தவர் கிஷோர்குமார் (வயது 27).காலை அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவிற்கு அவர் வந்தார்.அவர் திடீரென 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார், கடுமையான காயங்களுடன் இருந்தவரை மருத்துவமனையில் சேர்த்த போதும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இவரது செயல்குறித்து அவர் காயம்பட்டிருந்த போது காவலர்கள் விசாரித்தபோது இட் ஈஸ் ஜஸ்ட் ஃபர் ஃபன் என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் தொடர்பின்றி உளறியுள்ளார், தலையில் பலமாக அடிபட்ட நிலையில் உள்ளவர்கள் உளறுவது எப்போதும் நடக்ககூடியதே என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media