BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 21 June 2014

செக்ஸ் பற்றி ஹிட்லரின் விபரீத கருத்துகள்



ஹோமோ செக்ஸ் பற்றி ஹிட்லர்

ஹிட்லரின் கட்சி ஹோமோ செக்ஸுக்கு எதிராக வெளியிட்ட பிரகடனத்தில் இப்படி சொல்லியிருந்தது. ‘நீங்களும், நாங்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தேவையில்லை. ஜெர்மன் மக்கள் தான் வாழ வேண்டும். உங்களது பழக்கம் அசிங்கமானது. அசிங்கத்துக்கு எதிராகப் போராடினால் தான் ஜெர்மனியர்கள் வாழ முடியும். போராட்டம் தான் வாழ்க்கை. ஆண்மைத்தனம் இருந்தால்தான் போராட முடியும். செக்ஸ் விஷயத்தில் ஒழுக்கம் இருந்தால்தான் ஆண்மைத்தனம் கிடைக்கும். ஒழுக்கமற்ற, இயற்கைக்கு முரணான செக்ஸை நாங்கள் வெறுக்கிறோம். அப்படி இருக்கும் யாரும் ஜெர்மன் மக்களுக்கு எதிரிகள். அவர்களை வேரறுப்பது எங்கள் கடமை.’

ஹிட்லர் கட்சியின் செக்ஸ் போதகர்

இது தவிர ‘செக்ஸ் சுகாதாரம்’ பற்றி ஹிட்லருக்குத் தனிப்பட்ட கருத்துகள் இருந்தன. மியூனிச் பல்கலைக் கழகப் பேராசிரியரான மேக்ஸ்வான் குரூபெர் என்பவர் தான் நாஜிக்களால் அங்கீகரிக்கப்பட்ட செக்ஸ் போதகராக இருந்தார். அவர் எழுதிய ‘செக்ஸ் சுகாதாரம்’ என்ற புத்தகம் தான் நாஜிக்களின் வேத புத்தகம் ஆனது. மலிவு விலைப் பதிப்பாக சுமார் மூன்றே கால் லட்சம் பிரதிகள் அச்சிட்டு, இது ஜெர்மன் முழுக்க விநியோகிக்கப்பட்டது.

‘செக்ஸ் உறவு என்பது திருமண பந்தத்துக்குள் தான் நிகழ வேண்டும். மற்ற எந்த வகை செக்ஸ் உறவும் மன்னிக்க முடியாத குற்றம். அவற்றை சமுதாயமும், அரசும் ஏற்றுக்கொள்ளாது. திருமணம் செய்து கொள்வதே குழந்தை பெற்றுக் கொள்வதற்கும், அதை வளர்ப்பதற்கும் தான். ஜெர்மனியின் தேசிய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு தம்பதியும் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று அந்தப் புத்தகத்தில் வலியுறுத்தினார் அவர்.

கல்யாணத்துக்கு கடன்

பெண்கள் சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள அரசு வற்புறுத்தியது. ‘திருமணக் கடன்’ என்ற பெயரில் பெண்களுக்குக் கல்யாணம் செய்து கொள்ள கடன் தரப்பட்டது. அவர்கள் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும் கடனில் இருபத்தைந்து சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டது. நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெண்கள், வாங்கிய கடனைத் திருப்பித் தரத் தேவையில்லை.

லட்சக்கணக்கான பெண்கள் இப்படி கடன் வாங்கித் திருமணம் செய்து கொண்டனர். ‘நவீன கால வரலாற்றில் எந்த அரசும் இவ்வளவு மோசமாகக் குடும்பங்களுக்குள் ஊடுருவி செக்ஸ் பற்றி அட்வைஸ் செய்ததில்லை’ என்று சொல்கிற அளவுக்கு இருந்தது ஹிட்லரின் ஆட்சி.

இன்டர்நெட் வணிகம் 2020க்குள் 76 பில்லியன் டாலராக உயரும் !!

நம்முடைய ஆரம்ப கால வணிகம் பணம் இல்லாத காலத்தில் தேவையான பொருள்களை பெற்று கொண்டு அவர்களுக்கு தேவையான பொருள்களை கொடுப்பதுமாக இருந்தது .பிறகு சாலை ஒரம் இருக்கும் சிறு வணிகர்களிடம் பணத்தை கொடுத்து வாங்கி கொண்டோம் .பிறகு சூப்பர் மார்க்கெட்டுகள் ,மால்கள் என அந்நிய முதலிடுகள் உள்ளே வர, அவர்களிடம் இருந்து வாங்கி கொண்டோம் .


இன்று இது இன்டர்நெட் வணிகமாக மாறி வருகிறது .வீட்டில் இருந்தபடியே நமக்கு தேவையான அனைத்து பொருள்களையும் இன்டர்நெட் மூலம் பெற்று விடலாம் .இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு 1.62 பில்லியன் அமெரிக்க டாலர் வணிகம் நடக்கிறது .இது இந்த ஆண்டுக்குள் 3 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்கபடுகிறது .2020 க்குள் 76 பில்லியன் டாலராக உயரும் .


இதற்காக பல நிறுவனங்கள் உள்ளன, அவற்றுள் முன்னணியில் இருப்பது ப்ளிப்கார்ட் நிறுவனம் .18 மில்லியன் பதிவு பெற்ற வாடிக்கையாளர்கள் உள்ளனர் .இப்படியே சென்றால் நம் உள்ளூர் வணிகர்களின் நிலை என்னாகுமோ என்று நினைத்தால் ,இதனை எழுதி கொண்டு இருக்கும் போதே கண்களில் இருந்து ஒரு  சொட்டு கண்ணீர் வந்து விழுந்து வணிகம் என்னும் வார்த்தையை அழிய செய்தது .

சக்சேனா அப்ரூவர் ஆனார், சன் டிவி முடக்கம்?


தயாநிதிமாறன் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது அமைச்சர் என்ற பொறுப்பில் இருந்ததற்காக வழங்கப்பட்ட பி.எஸ்.என்.எல் இணைப்புகளை முறைகேடாக சன்டிவி நிறுவனத்திற்காக பயன்படுத்தியுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பி.எஸ்.என்.எல் முறைகேடு விவகாரத்தில் சன்டிவியின் முன்னாள் இயக்குனர் சக்சேனா அப்ரூவராக மாறியதினால் விசாரணையில் இந்த முறைகேடு தொடர்பான பல விவரங்கள் வெளிவந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, இதையடுத்து வழக்கு சூடுபிடித்துள்ள நிலையில் இந்த ஊழலை விசாரித்து வரும் சி.பி.ஐ  சன் டிவியை மூன்று மாத காலத்துக்கு முடக்கும் திட்டத்தில் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

# சன்டிவியை மூடும் நடவடிக்கையை ஆதரித்தால் ஒரு லைக் போடுங்கள்

தேர்தல் தோல்வி எதிரொலி 33 பொறுப்பாளர்கள் திமுகவிலிருந்து சஸ்பெண்ட், கண்துடைப்பு என கட்சியினர் வேதனை



தேர்தல் தோல்வி எதிரொலி திமுகவிலிருந்து எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், கேபி ராமலிங்கம், முல்லைவேந்தன் உட்பட 33 பேர் சஸ்பெண்ட்

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை, பல இடங்களில் மூன்றாவது இடத்தையும் இரண்டு இடங்களில் நான்காவது இடத்தையும் பிடித்தது, இதை அடுத்து தேர்தல் தோல்வியை ஆராய ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது.

அதிமுக 37 இடங்களில் வென்று 3 இடங்களில் மட்டுமே தோல்வியுற்றது, ஆனாலும் தோல்வியுற்ற இடங்களில் பொறுப்பாளர்களாக இருந்த அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களின் பதவியை பறித்தார் ஜெயலலிதா, கோவை தொகுதியில் வெற்றி பெற்றாலும் வாக்கு வித்தியாசம் குறைந்ததால் கோவை மேயர், மற்றும் அமைச்சர்களை நீக்கினார், அதிமுக அதிரடி நடவடிக்கை எடுக்க திமுக எதுவும் செய்யாமல் இருந்தது திமுக தொண்டர்களிடையே சோர்வை தந்தது.

ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் பேரில் இன்று மூன்று மாவட்ட பொறுப்பாளர்கள், ஒரு மாநில பொறுப்பாளர் உட்பட 33 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளனர், ஆனால் இவர்களில் மேலே குறிப்பிட்ட நான்கு பேரை தவிர மற்றவர்கள் எல்லாம் ஒன்றிய நகர செயலாளர்கள் தான், உண்மையில் திமுகவின் குறுநில மன்னர்களாக திமுகவின் பெயரை கெடுத்துவரும், மாவட்டத்தில் தனக்கு இணையாக யாரும் வளரக்கூடாது என்று செயல்பட்ட மாவட்ட செயலாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லாதது இந்த நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு என்று திமுகவினரே  கருதுகின்றனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள்

1.  எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாவட்டக் கழகச் செயலாளர், தஞ்சை மாவட்டம்.

2.  வ. முல்லைவேந்தன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர், தர்மபுரி தெற்கு மாவட்டம்.

3. பெ. இன்பசேகரன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர், தர்மபுரி வடக்கு மாவட்டம்.

4.  சிட்டி முருகேசன், நகரக் கழகப் பொறுப்பாளர், தர்மபுரி

5.  சுந்தரம், நகரக் கழகச் செயலாளர், கவுண்டம்பாளையம், கோவை மாவட்டம்.

6.  தென்றல் செல்வராஜ், நகரக் கழகச் செயலாளர், பொள்ளாச்சி, கோவை மாவட்டம்.

7.  மகாராஜன், நகரக் கழகச் செயலாளர், துறையூர், திருச்சி மாவட்டம்.

8.  சீனி அண்ணாதுரை, நகரக் கழகச் செயலாளர், பட்டுக்கோட்டை, தஞ்சை
மாவட்டம்.

9.  இராஜ பூபாலன், நகரக் கழகச் செயலாளர், மன்னார்குடி

10. முத்துக்குமாரசாமி, பேரூர் கழகச் செயலாளர், நத்தம், திண்டுக்கல் மாவட்டம்.

11 ரவிச்சந்திரன், நங்கவள்ளி ஒன்றியக் கழகச் செயலாளர்,

12.  பாரப்பட்டி சுரேஷ்குமார், பனைமரத்துப்பட்டி ஒன்றியக்இவ் கழகச் செயலாளர்,.

13.  ஓமலூர் பரமன், ஓமலுhர் ஒன்றியக் கழகச் செயலாளர்

14.  கே. பொன்னுச்சாமி, மொரப்பூர் ஒன்றியக் கழகச் செயலாளர்.

15.  ஆர். காசிவிசுவநாதன் மேச்சேரி ஒன்றியக் கழகச் செயலாளர்.

16.  க. கார்த்திகேயன், தியாகதுர்க்கம் ஒன்றியக் கழகச் செயலாளர்.

17. தீ. சக்திவேல், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.

18.  பி. கணேசன், நாமக்கல் ஒன்றியக் கழகச் செயலாளர்.

19.  டி.பி. சுப்பிரமணியம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக் கழகச் செயலாளர்.

20.  இராஜமாணிக்கம், குடிமங்கலம் ஒன்றியக் கழகச் செயலாளர்.

21.  கோழிக்கடை கணேசன், வால்பாறை ஒன்றியக் கழகச் செயலாளர்.

22. ஆனந்தன், மண்ணச்சநல்லூர் ஒன்றியக் கழகச் செயலாளர்.

23. சோழன், முசிறி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.

24.  ஜெயபால், கடலூர் ஒன்றியக் கழகச் செயலாளர்.

25.  ஏனாதி பாலு, பட்டுக்கோட்டை ஒன்றியக் கழகச் செயலாளர்.

26.  தியாக இளங்கோ, ஒரத்தநாடு ஒன்றியக் கழகச் செயலாளர்.

27. மாரியப்பன், பழனி ஒன்றியக் கழகச் செயலாளர்.

28.  ஓ. ராஜேந்திரன், வத்தலக்குண்டு ஒன்றியக் கழகச் செயலாளர்.

29.  சின்ராஜ், விருதுநகர் ஒன்றியக் கழகச் செயலாளர்.

30.  இராஜசேகர், கடலாடி ஒன்றியக் கழகச் செயலாளர்.

31.  கனகு (எ) கனகராஜ், மண்டபம் ஒன்றியக் கழகப் பொறுப்பாளர்.

32.  கே.பி. இராமலிங்கம், எம்.பி., மாநில விவசாய அணிச் செயலாளர்.

33.  எஸ்.எம். போஸ், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர், விருதுநகர்.

9 வது முறையாக உலக கோப்பைக்கு செல்லும் இந்திய ஜோடி !!

உலக கோப்பைக்கு இந்தியா போகவில்லையே என்று ஒவ்வொரு உலக கோப்பையின் போதும் நாம் வருத்தப்பட்டு கொண்டு இருப்போம் .

அந்த எதிர்பார்ப்புகளோடு இந்திய ஜோடி 9வது முறையாக சென்று உள்ளது .இவர்கள் கொல்கத்தாவை சேர்ந்த பர்னலால் - சேதாலி சாட்டர்ஜி தம்பதிகள் .1982 இல் ஸ்பெயினில் நடைபெற்ற உலக கோப்பை முதல் இப்போது பிரேசிலில் நடக்கும் உலககோப்பை வரை நேரில் சென்று பார்த்து உள்ளார்கள் .32 ஆண்டுகளாக கால்பந்து விளையாட்டை காதலித்து வருகிறார்கள் .

பர்னலால் சாட்டர்ஜிக்கு இப்போது 81 வயது ஆனாலும் அவரது கால்பந்து ஆர்வம் இன்னும் இளமையாகவே இருக்கிறது .இவர்கள் இதனை பார்பதற்கான செலவுக்காக சிறுக சிறுக சேர்கிறார்கள் .அதற்காக மீன் போன்ற இறைச்சி உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறார்கள் .

1986இல் மரடோனா ஆடியதை போல இன்னும் எந்த வீரரும் ஆடவில்லை என்கிறார்கள் .

எதிர்கட்சி பதவிக்காக அனைத்து முயற்சிகளையும் செய்து வரும் காங்கிரஸ் !!


நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியினால் 44 இடங்களையே பெற முடிந்தது . ஆனால் பாராளுமன்றத்தில் எதிர்கட்சியாக அமர குறைந்தது 55 இடங்கள் வேண்டும் . காங்கிரஸ் எதிர்கட்சியில் அமர இன்னும் 10 இடங்கள் வேண்டும் .

மேலும் மோடியின் புதிய அரசு காங்கிரஸ் ஆட்சியில் பதவியேற்ற ஆளுநர்களை மாற்ற திட்டமிட்டுள்ளது . இதனால் அவர்களை பதவியை ராஜினாமா செய்ய சொன்னதால் சர்ச்சை கிளம்பியது . மத்திய அரசு சொன்னதால் உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநில ஆளுநர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர் .

மேலும் மேற்குவங்கம், கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய 5 மாநில ஆளுநர்களையும் பதவி விலக வலியுறுத்துகிறது மத்திய அரசு. டில்லியில் தேர்தலில் தோற்றபின் கேரளாவின் ஆளுநராக பொறுப்பேற்றவர் ஷலா தீட்ஷித் . இவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யமுடியாது என்று கூறியுள்ளார் . மேலும் அஸ்ஸா மற்றும் கர்நாடகா ஆளுநர்களும் இதே முடிவைத் தான் எடுத்துள்ளனர் .  





இந்நிலையில் தீடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இவர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய சொல்லியதாக செய்திகள் வந்துள்ளது .

இந்த தீடீர் திருப்பம் ஏன் என்று பார்த்தால் , காங்கிரஸ் மத்திய அரசுடன் சூமுகமாக செயல்பட்டு எதிர் கட்சியாக அமர வாய்ப்புகளை அதிகப் படுத்துவதற்காக இந்த தீடீர் அறிவிப்பு வந்துள்ளதாக தெரிகிறது .  காங்கிரஸ் அரசு இப்போது எதிர் கட்சி பதவிக்காக இவ்வாற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது .

உலககோப்பை கால்பந்து : ஈகுவடாருக்கு அசாஞ்சே அதரவு !!

அமெரிக்க ராணுவ மற்றும்  அரசியல் விவகாரங்கள் தொடர்பான ரகசிய ஈ-மெயில்களையும் ,ஆவணங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உலக அளவில் பிரபலமானார் ஜூலியன் அசஞ்சே .

ஸ்வீடனில் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு ,அவருக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறபிக்கபட்டது . அதனால் பிரிட்டனில்  உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்து அங்கேயே தங்கி உள்ளார் .அவர்கள் இவருக்கு அடைக்கலம் கொடுத்தது .

அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இப்போது நடக்கும் உலக கோப்பையில் அந்த அணிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார் .அவரது தாய் நாடான ஆஸ்திரேலியாவிற்கு ஆதரவு இல்லை என்று கூறி உள்ளார் .

பிறந்த நாள் அன்று விஜய் அவுட் !!

தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டாராக குமுதம் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டு ,தமிழ் ரசிகர்களால் இளைய தளபதி என்று அழைக்கப்படும் விஜய்க்கு நாளை பிறந்தநாள் .

இதனை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்து உள்ளார்கள் .இரத்த தானம் ,உடல் உறுப்பு தானம் ,மக்கள் நல சேவைகள் என பலவற்றை செய்து உள்ளார்கள் .ஆனால் விஜய் பிறந்த நாள் அன்று சென்னையில் இருக்க போவது இல்லை .

அவர் நடித்து வரும் கத்தி படத்தின் படபிடிப்புக்காக ஆந்திராவில் தான் இருப்பார் .இதனால் அவருக்கு வாழ்த்து சொல்ல அவரது ரசிகர்கள் விஜய் இல்லத்திற்கு வர வேண்டாம் என்று விஜய் மக்கள் நற்பணி மன்றம் சார்பில் கூறினார்கள் .

உயருகிறது சிகரெட் விலை : குறையுமா பயன்பாடு !!

நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடர் ஜூலை 7 தொடங்கி ஆகஸ்ட் 25 வரை நடைபெறுகிறது .ஜூலை 11 ஆம் தேதி அன்று மோடி அரசின் முதல் நிதி பட்ஜெட் தாக்கல் செய்யபடுகிறது .அதில் தாக்கல் செய்வதற்கான சிலவற்றை நிதி அமைச்சகத்திற்கு சுகாதார அமைச்சகம் சில பரிந்துரைகளை செய்து உள்ளது .

அதில் முக்கியமான பரிந்துரை சிகரெட் விலையை உயர்த்துவது .ஒரு சிகரெட்டின் விலையை ரூ.3.50 வரை உயர்த்த திட்டமிட்டு உள்ளார்கள் .அது மட்டுமல்லாமல் 20 லட்சத்திற்கு குறைவான பீடிகள் தயாரிப்போருக்கு  வரி விலக்கை திரும்ப பெறுவது ஆகும் .இதனால் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறையும் என்பது அவர்களது எண்ணம் ஆகும் .புகையிலை பொருட்களுக்கு பலர் அடிமையாகி வருகிறார்கள் ,இதனால் நோய்களும் பரவி வருகின்றன .

முக்கிய குற்றமாக  சிறுவர்களும் இளைஞர்களும் இதற்கு அடிமையாக மாறி வருகிறார்கள் .எனவே புகையிலை பொருட்களை தடுக்க அரசு இந்த நடவடிக்கையில் இறங்கலாம் .ஆனால் இது நிரந்திர தீர்வு அல்ல ,அதனை தடுப்பதற்கான முதல் படியில் ஏற காத்து கொண்டு இருக்கிறார்கள் .

இந்த முயர்சி நல்லது தான் என்றாலும் அந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலையைக் கொடுக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் .

முதல் இடத்தை இழந்தார் விராத் கோலி !!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தை கோலி இழந்தார் .வங்கதேசத்திற்கு எதிரான போட்டிகளில் இவர் பங்கேற்காததே இதற்கு காரணம் என்று கூறபடுகிறது .

தென் ஆப்பரிக்காவின் டி வில்லியர்சை விட 13 புள்ளிகள் பின்தங்கி 2ஆம் இடத்திற்கு தள்ளபட்டார் .டெஸ்ட் தரவரிசையிலும் டி வில்லியர்ஸ் தான் முதலிடம் .கோலி 10 வது இடத்தில உள்ளார் .

அடுத்து இலங்கைக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவும் , இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவும் விளையாட உள்ளதால் தரவரிசையில் மாற்றம் இருக்கலாம் .கோலி இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் .கோலி அடுத்த சச்சினாக ஆவதை விட அவர் முதல் கோலியாக ஆக வேண்டும் .

மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்ட கேப்டன் விஜயகாந்த் !!

தேமுதிக தலைவர் விஜய்காந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் மலேசியா சென்று இருந்தார் . அங்குள்ள சுதேரா ஹார்பர் ரிசார்ட்டில் இருவரும் தங்கி இருந்தனர் . அந்த இடத்தைச் சுற்றி பார்த்துவிட்டு அங்குள்ள தமிழர்களிடம் சகஜமாக பழகினார் .



அவர் கிளம்பும் நாள் வந்ததால் அவர் கிளம்பும் போது அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள அவருடைய ரசிகர்கள் அவரைத் தேடி வந்தனர் . அவரும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டார் . இரண்டு இரண்டு பேராக போட்டோ எடுத்துக் கொண்டனர் . 

அப்போது காரைக்குடியைச் சேர்ந்த ஷாஜகான் என்னும் இளைஞர் இரண்டாவது முறையாக விஜயகாந்துடன் போட்டோ எடுக்க முயன்றார் . இதனை கவனித்த விஜய்காந்த் , " ஏ , என்னடா நீ , போட்டோ எடுத்து விளையாடிட்டு இருக்கியா நீ ?? " என கண்ணத்தில்  பளார் என்று ஒரு அடி அடித்தார் . அந்த இளைஞன் அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்து விட்டார் . இதை பார்த்து கண்டித்த பிரேமலதாவிடம் , " என்ன இப்போ மன்னிப்பு கேக்கனுமா ?? ஸாரி!! ஸாரி !! போதுமா ..! என்று சொல்லிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தார் . 

அங்கே இருந்த மலேசிய தமிழர்கள் விஜய்காந்தின் இந்த செயலைக் கண்டு இதுக்கெல்லாமா அடிப்பாரு ?? என நொந்து கொண்டனர் !! 

சிவகார்த்திகேயன் படத்தில் சன்னி லியோன் நடிக்கிறார் !!

பல பேரின் ஆசை நாயகியான சன்னி லியோனைப் பற்றி பெரிய விளக்கம் கொடுக்க தேவையில்லை .


'அந்த'  மாதிரியான  படங்களில் நடித்து விட்டு பிறகு சினிமாவுக்கு நடிக்க வந்தவர் சன்னி லியோன் .வடகறி என்னும் தமிழ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் .அதில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் .

இவர் இப்போது சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க உள்ளார் .படம் தமிழில் அல்ல தெலுங்கில் வர உள்ளது .சிவகார்த்திகேயன் நடித்த வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தின் ரீமேக் ,தெலுங்கில் வர இருக்கிறது .இதில் தான் சன்னி லியோன் நடிக்கிறார் .தமிழில் பிந்து மாதவி நடித்த ஆசிரியர் வேடத்தில் தான் நடிக்கிறார் .ஆனால் அவர் என்ன ஆசிரியராக நடிக்கிறார் என்று தெரியவில்லை .

சிறுவாணி தண்ணீரை தடுக்கும் கேரள அரசைக் கண்டித்து சீமான் போராட்டம் !!

நெல்லை வந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார் . அப்போது அவர் கூறியதாவது , 

"  விமானங்களை கடத்தும் தலீபான் தீவிரவாதிகள் மிரட்டுவது போல உள்நாட்டு மக்களை சிறைபிடித்து இலங்கை இந்தியாவை மிரட்டுகிறது. எனவே இலங்கையை சிங்கள தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்.
 புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு தமிழர்கள் நலனில் சிறப்பாக செயல்படும் என எண்ணுகிறோம் " என்றார் . 

மேலும் தமிழகத்திற்கு வரும் சிறுவாணி தண்ணீரை கேரளா நிறுத்தி வைத்துள்ளது . இதனை எதிர்த்து கோவையில் வருகிற 24 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார் . 

மு.க அழகிரி நில அபகரிப்பு செய்ததாக குற்றச்சாட்டு !!


மதுரையில் மு.க அழகிரி அவர்கள் புதிதாக பொறியியல் கல்லூரி ஒன்றை கட்டியுள்ளார் . அந்த கல்லூரி கட்டிய இடம் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது .

அந்த மனுவில் கூறியுள்ளதாவது , " சிவரக்கோட்டையில் மு.க.அழகிரி, கல்வி அறக்கட்டளை மூலம் தயா என்ஜினீயரிங் கல்லூரி கட்டியுள்ளார். 13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கல்லூரிக்கு பல்வேறு முறைகேடுகள் மூலம் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன . அதில் ஒரு பகுதியாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான 44 செண்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மு.க.அழகிரி 2011 ஆம் ஆண்டு கிரைய பத்திரம் போட்டுள்ளார். அரசு நிலத்தை ஆக்கிரமித்தது குற்றச்செயலாகும் " என மனுவில் பூகார் கொடுத்துள்ளனர் . 

இந்த மனுவைக் கொடுத்தவர் மதுரை சிவர்க்கோட்டையைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவரான ராமலிங்கம் என்பவர் . இவர்தான் பாசனக் கால்வாயை ஆக்கிரமித்ததாக மு.க.அழகிரி மீது இதற்கு முன்னாடியே பூகார் கொடுத்துள்ளார் . 


சீனா - இந்தியா எல்லையில் 5,000 கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளது !!


இந்திய சீன எல்லை எப்போதும் பிரச்சனை நிறைந்ததாகவே உள்ளது . இந்த எல்லையில் தான் இந்திய மாநிலமான அருணாச்சல் பிரதேசம் உள்ளது . அந்த மாநிலத்தின் ஒரு பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது . மேலும் அந்த பகுதிகளில் அவர்களின் உள்கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது . அடிக்கடி நமது எல்லைக்குள் புகுவதும் , ராணுவ அணிவகுப்பை நடத்துவதும் என அச்சுறுத்தி வருகின்றனர் .

இதனை தடுக்க தவறியது காங்கிரஸ் அரசு . புதிதாக ஆட்சி ஏற்றுள்ள மோடி அரசு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறது . அதற்காக தான் பூட்டானிற்கு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார்



.


இதன் பலனாக 5,000 கோடி ரூபாயில் அந்த எல்லையின் உள்கட்டமைப்பு மேபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது . ஏற்கனவே 28 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூடுதல் நிதி மேலும் சீன எல்லையில் இந்தியாவின் கையை ஓங்கச் செய்யும் .


ஒரு ஆசிரியை , வெறும் மூன்று மாணவர்கள் !!!


ராஜபாளையத்தில் தென்றல் நகர் உள்ளது . இங்கே உள்ள அரசு துவக்கப் பள்ளியில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா ??

ஆசிரியரைச் சேர்த்து மொத்தம் நான்கு பேர் தான் . இரண்டு மாணவர்கள் , ஒரு மாணவி , ஒரு ஆசிரியர் . ஒரே ஒரு வகுப்பறை மட்டுமே இருக்கிறது . அந்த மூன்று மாணவர்களுக்கான சத்துணவு வேறு இடத்தில் இருந்து வருகிறது . பாதி நேரம் இந்த மாணவர்கள் விளையாடையே தங்கள் நேரத்தை செலவழிக்கின்றனர் .

அங்கே இருந்த ஆசிரியர் கூறுகையில் ," தலைமை ஆசிரியர் இப்போது விடுப்பில் உள்ளார் . மற்ற விவரங்களை அவரிடம் தான் கேட்க வேண்டும் " என்றார் .

இது போன்ற பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media