BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 10 July 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news


உலகின் கிறுக்குத்தனமான டாப் 10 செக்ஸ் சட்டங்கள்
http://www.satrumun.net/2014/05/worlds-top-10-funny-weird-sex-rules.html

மோடி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள், ஏற்றமா? ஏமாற்றமா?
http://www.satrumun.net/2014/07/modi-government-budget-high-lisghts.html

தமிழகத்தில் இனி 14 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி !!
எந்த எந்த இடங்கள் என அறிய
http://www.satrumun.net/2014/07/14.html

ராஜபக்‌ஷே கூட்டாளியின் குடும்ப விழா : லண்டனுக்கு பயணமாகும் விஜய் மற்றும் கத்தி குழு!!
http://goo.gl/yma39a

ஆசுஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள 5 புதிய மொபைல் போன்களின் விவரங்கள்
http://www.satrumun.net/2014/07/blog-post_10.html

ரஜினி ஒரு கோடி தருவாரா? நதிகளை இணைக்க அரசு முன்வந்தால் அதற்கு 1 கோடி தருவதாக கூறினாரே? இதோ அரசு முன்வந்துள்ளது, ரஜினி தருவாரா?
http://www.satrumun.net/2014/07/1_10.html


முதுகு உடைந்து சிகிச்சைக்காக கேரளா வருகிறார் பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் ??
http://www.satrumun.net/2014/07/blog-post_3730.html

சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் போட்டிருப்பவர்கள் பட்டியலில் இந்தியர்களே இல்லையாம், பட்டை நாமம் சாத்திய பேங்கும், அரசும்
http://www.satrumun.net/2014/07/blog-post_8072.html

பெருந்தலைவர் காமராஜரை அவதுறாக பேஸ்புக்கில் எழுதியவர் கைது !!, இப்படி எழுதுவதெல்லாம் ஒரு ஃபேஷனாயிருச்சா?
http://www.satrumun.net/2014/07/blog-post_6570.html


மோடி அரசின் முதல் பட்ஜெட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை





2014-15 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார் . அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னவென்று பார்ப்போம்.


* 2022 க்குள் அனைவருக்கும் சொந்த வீடு இருக்கும்.

* விவசாயிகளுக்கு என தனி தொலைகாட்சி தொடங்க்பட உள்ளது.

* பிரான்ட்பேண்ட் மூலம் அனைத்து கிராம்ங்களும் இணைக்கப்படும்.

* 2019 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி.

* பெண்கள் பாதுகாப்பிற்கு 150 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

* புதிதாக 5 ஐஐடி மற்றும் 5 ஐஐஎம் கள் தொடங்கப்பட உள்ளது.

* அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளது.

* சிகரெட் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயருகிறது. இதனால் அதன் பயன்பாடு குறையும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு ஆகும்

* சோடா பாகனங்கள், எவர்சில்வர் பொருட்களின் வரி உயருகிறது.

* சோப்பு,வைரம்,நவரத்தின கற்கள் மற்றும் டிவிக்களின் விலை குறைய உள்ளது.

* சூரிய ஒளி, காற்றாலை மின்சார உற்பத்தி பொருட்களின் விலை குறைக்கப்பட உள்ளது.

* ஃபிரிட்ஜ், செல்போன், கம்யூட்டர்,லேப்டாப்,கேட்ஜட் , தீப்பெட்டிகளின் வரி குறைக்கப்பட உள்ளது.

* கங்கை நதியை தூய்மைபடுத்த ரூ.2307 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

* டெல்லியில் குடிநீர், மின்சாரம் பிரச்சனையை தீர்க்க 800 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

*. காவல் துறையின் தரத்தை உயர்த்துவதற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

* ஆந்திரா, தெலுங்கானாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

* வருமான வரி உச்ச வரம்பு 2 இலட்சத்தில் இருந்து 2.5 இலட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

* வீட்டு கடன் வட்டிக்கு வழங்கப்படும் வரிசலுகை 1.5 இலட்சத்தில் இருந்து 2 இலட்சமாக உயருகிறது.

* காஷ்மீரில் விளையாட்டு கழகம் அமைக்கப்பட உள்ளது.

* தேசிய விளையாட்டு அகாடெமி தொடங்கப்பட உள்ளது.

* நதிகளை இணைக்க தீவிர முயற்சி எடுக்கப்படும். அது பற்றி ஆய்வு செய்வதற்கு 100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

* சாலையோரத்தில் உள்ள கிராமங்களை மேம்படுத்த 900 கோடிஒதுக்கப்பட்டு உள்ளது.

* பெண் குழந்தைகளின் கல்வி, திருமணத்திற்காக சிறப்பு சேமிப்பு திட்டம் தொடங்கபட உள்ளது.

* புதிதாக 16 துறைமுகங்கள் வர உள்ளது.

* வங்கிகளுக்கு 2.4 இலட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

* தமிழகம்  உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஜவுளி மண்டலம் அமைக்க 200 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

* இந்த ஆண்டு 8 இலட்சம் கோடி விவசாய கடன் வழங்கப்பட உள்ளது.

* தமிழகம், ராஜஸ்தானில் சூரிய மின் சக்தி திட்டம் தொடங்க 500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் மூலம் மோடி தேர்வுக்கு நன்றாக தேர்வாகியுள்ளார். ஆனால் அவர் தேர்வை எப்படி எழுத போகிறார் என்பதை அவர் இந்த ஆண்டு எப்படி ஆட்சி செய்கிறார் என்பதை வைத்து தான் முடிவு செய்ய முடியும்.

உங்ககிட்ட ஸ்டார்டிங்க் நல்லா தான் இருக்கு , பினிஷிங் எப்படி இருக்கு என்று பார்ப்போம்.

மோடி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள், ஏற்றமா? ஏமாற்றமா?


1) தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அருண் ஜெட்லி இதை 5 இலட்சமாக உயர்த்த கோரியிருந்தார், ஆனால் அவரே நிதி அமைச்சராக தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் 2.5 இலட்சமாக மட்டுமே உயர்த்தியுள்ளார்.

#அது போன வருசம், இது இந்த வருசம்

2) கங்கை நதியை சுத்தப்படுத்தி மேம்படுத்த ரூ.2037 கோடி நிதி ஒதுக்கீடு, இந்த திட்டத்திற்கு நமாமி கங்கா என பெயரிடப்பட்டுள்ளது

#ரொம்ப முக்கியம்

3) சிகரெட், புகையிலை பொருட்களுக்கான உற்பத்தி வரி 22% அதிகரிக்கப்படுகிறது.

#பட்ஜெட் படிக்கும் போதே ரூ.85 விலையிருந்த கிங்க்ஸ் பாக்கெட்டை ரூ.100 ஆக்கி விற்க ஆரம்பித்துவிட்டார்கள், சிகரெட் குடிப்பவர்கள் குறைந்தால் சரி

4)25 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். முதல் மூன்று ஆண்டுகளுக்கு 15% வரிச்சலுகை வழங்கப்படும்.

#கம்பெனி முதலாளிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்னு சொல்லுங்க‌

5) வீட்டுக் கடனுக்கான வட்டியில் வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு

#வாடகையை குறைப்பாங்களா?

6) தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களீல் ரூ.500 கோடி செலவில் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும்

#கரண்ட்டு கட்டு அப்போவாவது குறையுமா?

7) ரூ.200 கோடி செலவில் குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை நிறுவப்படும்.

# சிலை வைக்குறோம்னு சேகரித்த இரும்பை என்ன செய்யப்போகின்றீர்கள்?

8) கூல்டிரிங்க்ஸ், எவர்சில்வர் பொருட்களின் வரி உயருகிறது.

#பெப்சி, கோக் விலை எகிறுமே

9) வைரம்,நவரத்தின கற்கள் மற்றும் டிவிக்களின் விலை குறைய உள்ளது.

#பணக்காரங்களுக்கு மேலும் வசதி

10) சூரிய ஒளி, காற்றாலை மின்சார உற்பத்தி பொருட்களின் விலை குறைக்கப்பட உள்ளது.

#நோட் பண்ணுங்கப்பா, நோட் பண்ணுங்க‌

11) ஃபிரிட்ஜ், செல்போன், கம்யூட்டர்,லேப்டாப்,கேட்ஜட் , தீப்பெட்டிகளின் வரி குறைக்கப்பட உள்ளது.

#அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டில் இலவசமாகவே தரப்போறாங்க‌

புதிய எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டாலும் விலைவாசி குறைய ஏதுவான திட்டங்கள் இல்லையென பலராலும் விமர்சிக்கப்படுகிறது

சரவணன் மீனாட்சியின் ரகசிய திருமண போட்டக்கள் வெளிவந்தது எப்படி




சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் திரையில் பிரபலமானவர்கள் செந்தில் என்னும் சரவணனும் , ஸ்ரீஜா என்னும் மீனாட்சியும். இந்த நாடகத்தின் மூலம் இவர்கள் இருவரும் சரவணன் மீனாட்சி என்றே அழைக்கப்பட்டு வந்தார்கள். இவர்கள் இருவரும் திருப்பதியில் ரகசிய திருமண செய்த் கொண்டதாக தகவல்கள் வந்தன. அது உண்மையா என்று தெரியாமல் இருந்து வந்தது . பின்பு அதனை நடிகர் பாலாஜி தனது பேஸ்புக் அக்கவுண்டில் உறுதி செய்தார்.

இந்த திருமணத்திற்கு அவர்களது நெருங்கிய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள். இது திருப்பதியில் நடந்தது. அவர்களது திருமண அறிவிப்பை ,திருமண வெட்டிங் முடிந்த பின்பு அனைவருக்கும் தெரிவிக்கலாம் என்று இருந்தார்கள். ஆனால் அதற்குள் செந்திலின் டிரைவர் அவர்களின் திருமண போட்டக்களை இன்டெர்னெட்டில் விட்டு விட்டார். இந்த போட்டக்கள் காட்டு தீயாக சமூக வலைதலங்களில் பரவியது.

அதற்குள் விஜய் டிவி இவர்களது திருமணம் பற்றி நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு வருகிறார்கள்.

உலக கோப்பை இறுதி போட்டியால் புறக்கணிக்கபட்ட மோடி




மோடி பிரேசிலில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் செல்ல இருக்கிறார் . பிரேசில் செல்லும் வழியில் ஜெர்மணியின் பிராங்க்பிரட் நகரில் ஓய்வு எடுப்பது வழக்கம் . இந்நிலையில் ஏஞ்சலா மெர்கெல் இரவு உணவிற்கு அழைப்பு கொடுத்ததால் பெர்லின் நகரத்திற்கு செல்ல தன் திட்டங்களை மாற்றி அமைத்தார் மோடி .

ஆனால் இப்போது ஜெர்மனி அணி உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளதால் ஏஞ்சலோ மெர்கெல் அங்கு செல்ல உள்ளார். அதுவும் 13 ஆம் தேதி இரவு தான் நடக்க உள்ளது.இதற்கு முன்பு அவர் ஜெர்மனி அணியின் முதல் போட்டியை பார்க்க சென்றார். மோடியா அல்லது கால்பந்தா என்ற இறுதி போட்டியில் அவர் கால்பந்தை தேர்ந்தெடுத்து உள்ளார். மோடியும் இவரை தவிர வேறு யாரையும் சந்திக்க தயாராக இல்லை. இதனால் இந்த சந்திப்பு முற்றிலுமாக கைவிடப்பட்டு உள்ளது. 

எனவே கால்பந்து இறுதி போட்டியினால் மோடி புறகணிக்கப்பட்டு விட்டார். 

பட்ஜெட் தாக்கலின் போது பிரேக் எடுத்து புதுமையான சாதனை படைத்தார் அருண் ஜெட்லி

2014-15 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இது சுதந்திர இந்தியாவின் 16வது பட்ஜெட் ஆகும் மற்றும் மோடி அரசின் முதல் பட்ஜெட் ஆகும். இதனை அருண் ஜெட்லி 11 மணிக்கு தாக்கல் செய்து, படிக்க தொடங்கினார். நின்று கொண்டே படித்ததால் அவரது உடல் சோர்வுற்றது. இதனால் 5 நிமிடம் ஒய்வு எடுத்து கொள்கிறேன்  என்று சபாநாயகரிடம் கேட்டார். அவரும் இதற்கு அனுமதி தந்தார். இதனால் அவை 11.45 மணியில் இருந்து 11.50 வரை ஒத்திவைக்கப்பட்டது.



அதன் பின்பு தொடங்கிய போது அருண் ஜெட்லி பட்ஜெட்டை அமர்ந்து கொண்டே படித்தார். இது ஒரு புதுமையான சாதனை ஆகும். இது வரை தாக்கல் செய்யப்பட்டு உள்ள 15 ப்ட்ஜெட்டுகளில் எதிலும் இடையில் இடைவேளி எடுக்கப்பட்டது இல்லை மற்றும்  எந்த  நிதி அமைச்சரும் பட்ஜெட்டை உட்கார்ந்து கொண்டு படிக்கவில்லை.

இதனை காங்கிரஸ் எதிர்க்கிறது ,இவரை விட முதியோர்கள் கூட நின்று கொண்டு தான் பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளார்கள் என்று கூறி உள்ளார்கள் . அட மங்குனி காங்கிரஸ்காரர்களே அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டை ஆராயாமல் அவர் எப்படி தாக்கல் செய்தார் என்று ஆய்வு செய்து கொண்டு உள்ளார்கள்.

மோடி தனது முதல் வாக்குறுதியை நிறைவேற்ற உள்ளார்




நரேந்திர மோடி நம் எல்லோருக்கும் பிரதமர் மட்டும் தான், ஆனால் வாரணாசி மக்களுக்கு பிரதமர் என்பதையும் தாண்டி அந்த தொகுதியின் எம்.பி.யும் கூட. எனவே அந்த தொகுதி மக்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடமையும் மோடியிடம் உள்ளது. அந்த தொகுதி மக்களுக்கு அவர் கொடுத்த முக்கியமான வாக்குறுதி , புனித நதியான கங்கையை சுத்தப்படுதுவது என்பது தான். 

சொன்ன வாக்கு தவறாமல் அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டார். தனது அமைச்சரவை அமைத்த போதே கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கு என தனி துறையை உருவாக்கி உமா பாரதியை அதற்கு அமைச்சராக்கி, அதற்கான நடவடிக்கையிலும் இறங்க சொன்னார். இன்று மோடி அரசின் முதல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கு ரூ.2037 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும் இருந்து இதற்கான நிதியை வாங்க உள்ளார்கள். 

இதோடு விவசாயிகளின் நீண்ட நாள் கனவான நதிகளை இணைக்கும் திட்டத்தை ஆய்வு செய்வதற்கும் மட்டும் 100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து தொடர் : தோனியால் முறியடிக்க காத்து இருக்கும் 2 சாதனைகள்

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் ஆஷஸ் போட்டிகளை போன்று அதிக எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. இதில் தோனியால் முறியடிக்க வேண்டிய 2 சாதனைகள் உள்ளன. அவை என்னென்ன சாதனைகள் என்று பார்ப்போம்,



* இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்னும் சாதனை . இந்த சாதனை இப்போது முன்னால் கேப்டன் சுனில் கவாஸ்கர் வசம் உள்ளது. அவர் 14 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து உள்ளார் .இதற்கு அடுத்து அஜித் வடேகர் 11 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து உள்ளார். இபபோது உள்ள தோனி 10 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து உள்ளார். இந்த தொடரில் 5 போட்டிகள் உள்ளதால் 15 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் என்னும் சாதனையை படைக்க உள்ளார்.


* இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருந்து அதிக வீரர்களை வீழ்த்தி உள்ளவர் என்னும் சாதனை இப்போது இங்கிலாந்து அணியின் ஆலன் நாட் வசம் உள்ளது. இவர் 16 போட்டிகளில் விளையாடி 54 பேரை வீழ்த்தி உள்ளார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி 16 போட்டிகளில் விளையாடி 50 பேரை வீழ்த்தி உள்ளார். இந்த தொடரில் மேலும் 5 பேரை வீழ்த்தி விட்டால் தோனி புதிய சாதனை நிகழ்த்த உள்ளார்.

தோனி இந்த 2 சாதனைகளோடு நிறுத்தி கொள்ளாமல் இந்திய அணியை தொடரை வெல்ல வைத்து சாதனை படைக்க வேண்டும். இந்த சாதனை தான் அனைவராலும் பாராட்டப்படும்.

அஞ்சான் பட பாடலை வெளியிட இருக்கிறார் உலக நாயகன் கமலஹாசன்


சூர்யா இப்போது நடித்து வெளிவர இருக்கும் படம் அஞ்சான் ஆகும். இதில் சூர்யா ,சம்ந்தா ஆகியோர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை லிங்குசாமி இயக்கி உள்ளார் . இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் பெரும் ஆதரவை பெற்று வந்தது. அதன் பின் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் இந்த டீசர் வெளிவந்தது . இதுவும் நல்ல ஆதரவை பெற்றது.



இப்போது இந்த படத்தின் இசை ஜுலை 22 ஆம் தேதி வெளிவர உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்க உள்ளது . இந்த படத்தின் பாடலை உலக நாயகன் கமலஹாசன் வெளியிட உள்ளார். படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

பிரியாணிக்காக சண்டை போட்ட முன்னால் காங்கிரசு எம்.பி யின் மகன் !!



முன்னால் காங்கிரஸ் எம்.பி விஷ்வநாத் என்பவரின் மகன் புர்வாஜ் பிரதாப் . இவர் மைசூரில் நண்பர்களுடன் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார் . அந்த ஓட்டலில் பிரியாணி கேட்டார் . அங்கே பணி செய்பவர் பிரியாணி இல்லை என்று சொன்னதால் அங்கே உள்ளவரிடம் தகராறில் ஈடுபட்டாட் புர்வாஜ் . தகராற்றில் அங்கே உள்ள சில பொருட்களையும் , ஒரு குடிசையின் மீதும் தீ வைத்துள்ளனர் .

ஒரு பிரியாணிக்காக இவ்ளோ கலவரமா ??

தமிழகத்தில் இனி 14 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி




மோடி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட்டில் இளைஞர்களை கவரும் புதிய திட்டம் வந்து உள்ளது. அதில் ஏ1 மற்றும் ஏ தர ரயில் நிலையங்களில் இலவச வை பை வசதியை அமைத்து தர உள்ளார்கள். இதில் தமிழகத்தில் எந்தெந்த ரயில் நிலையங்கள் அடங்கும் என்கிற அறிவிப்பு உள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 14 ரயில் நிலையங்கள் அடங்கும். அவை,

ஏ1 வசதி கொண்ட ரயில் நிலையங்கள்,

* சென்னை சென்ட்ரல்

* சென்னை எக்மோர்

* கோவை

* மதுரை

ஏ வசதி கொண்ட ரயில் நிலையங்கள்,

* திருச்சி

* நெல்லை

* தூத்துக்குடி

* திண்டுக்கல்

* விழுப்புரம்

* தஞ்சை

* சேலம்

* ஈரோடு

* திருப்பூர்

* மேட்டுப்பாளையம்

இந்த 14 ரயில் நிலையங்களில் இனி இலவச இன்டெர்னெட் வசதி கிடைக்க உள்ளது. செல்போன் , லேப்டாப் வைத்து இருப்பவர்களுக்கு இனி நன்றாக பொழுது போகும்.

மத்திய நிதி பட்ஜெட்டில் ரஜினியும் 1 கோடி தர உள்ளார்




மோடி அரசின் முதல் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இதில் முன்னால் பிரதமர் வாஜ்பாயின் கனவு திட்டமான நதிகள் இணைப்பு திட்டத்துக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்து உள்ளது. இந்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு காவிரி பிரச்சனை ஏற்பட்ட போது தமிழ் திரையுலக பிரபலங்கள் போராட்டத்தில் இறங்கினர். அதில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , நதிகளை இணைக்க அரசு முன்வந்தால் அதற்கு 1 கோடி தருவதாக கூறினார். இப்போது மத்திய அரசு முன்வந்து உள்ளது. ரஜினி பணம் தருவார் என்று எதிர்பார்க்கலாம்.

சிகிச்சைக்காக கேரளா வருகிறார் நெய்மர் ??


பிரேசிலின் நட்சத்திர வீரரான நெய்மர் கொலம்பியா அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் காயம் ஏற்பட்டது , இதனால் அவர் அரையிறுதிப் போட்டியில் விளையாடவில்லை . இவரது இழப்பினால் பிரேசில் அணி ஒரு மோசமான தோல்வியை சந்தித்தது .

இவருக்கு காலிறுதிப் போட்டியில் கொலம்பியா அணி வீரர் ஜுவான் முழங்கால் மூலம் முதுகில் தாக்கியதால் முதுகெலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது . இதனை ஆயுர்வேத முறைகளால் சரி படுத்த முடியும் என்றும் , அதனால் அவர் கேரளா வருகிறார் என்றும் தகவல்கள் வருகின்றது .

 .


இது தொடர்பாக பிரேசில் மருத்துவர்கள் கேரள முதலைமைச்சர் ஒம்மன் சாண்டியுடன் பேசியதாக கூறப்படுகிறது . ஆனால் இதை முற்றிலுமாக மறுத்தார் சாண்டி . மேலும் அவர் நெய்மருக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்களாம் என ஆராயும்படி மருத்துவர்களை கேட்டுக் கொண்டுள்ளார் . கேரள கால்பந்து ரசிகர்கள் விரும்புவதால் நெய்மருக்கு சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம் என பிரேசிலிடம் கூற உள்ளதாக தெரிகிறது

புகையிலை விற்பதை தடை செய்ய உள்ளது ஹிமாச்சல பிரதேச அரசு !!

இளைஞர்கள் உடல் நலம் சிகரெட் குடிப்பதால் கெடுவதை தடுக்க ஹிமாச்சல பிரதேச அரசு புதிய முயற்சியாக , சிகரெட்டை லூசில் விற்பதை தடை செய்ய உள்ளனர் .

இது குறித்து , அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகையில் , தனியாக வாங்கும் சிகரெட்டில் எந்தவொரு அபாய எச்சரிக்கை இல்லாத்தால் அதை தடை செய்ய உள்ளோம் . மீறி விற்பவர்களுக்கு கடுமையான அபாரதம் விதிக்கப்படும் . வாட் வரி உயர்த்தப்படும் . ஆனால் வாட் வரி அதிகமாக உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் தான் , சிகரெட் தயாரிப்பும் அதிகப்படியாக இருக்கிறது என்றார் .

அசுஸ் நிறுவனம் தனது புதிய மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது .

கடந்த ஐந்து மாதங்கள் முன் வெளியான மோட்டோ மொபைல்கள் மக்களிடயே பெரும் வரவேற்பை பெற்றது . இதற்கு போட்டியாக அசுஸ் நிறுவனம் தனது ஜென்போன் சீரியஸ் மொபைல்களை நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்தது .

இந்த சீரியஸில் ஜென்போன் 4 , 5 , 6 , 7 என நான்கு  போன்களை அறிமுகப்படுத்தி உள்ளனர் .

அதன் விலை கீழ் வருமாறு !!

ஜென்போன் 4 - ₹ 6,999
ஜென்போன் 5 - ₹ 9,999
ஜென்போன் 6 - ₹ 16,999


வெளிநாட்டு விண்களங்களை ஏவுவதன் மூலம் இந்தியாவுக்கு கிடைத்த வருமானம் 40 மில்லியன் யுரோ ??


அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதெந்த்ரா சிங் கூறுகையில் , கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்தியா இருவரை 15 வெளிநாட்டு விண்களங்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது . அதன் மூலம் இந்தியாவுக்கு வருமானமாக 40 மில்லியன் யுரோ கிடைத்துள்ளது என்றார் . 

மேலும் இந்தியாவின் இஸ்ரோ 2020 ஆம் ஆண்டு வரையிலான அனைத்து திட்டங்களும் நன்றாக திட்டமிடப்பட்டு இருக்கின்றன . இந்தியா மார்ஸ் கிரகத்துக்கான திட்டத்தை ரூபாய்.389 கோடி ரூபாய் செலவில் செய்துள்ளது என்றார் . 

இந்த மார்ஸ் கிரகத்திற்கான விண்களம் கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது . 

பொங்கள் இலவச வேட்டி சேலை வழங்க 486.36 கோடி நிதி வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவு !!



தமிழர்கள் திருநாளாம் பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை ஆகியவற்றை வழங்கிட 486.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் . இதன் முதல் கட்டமாக நெசவாளர் சங்கங்களுக்கு முன்பணமாக 240.55 கோடி ரூபாய் முன்பணமாக வழங்கப்பட உள்ளது .

இதுகுறித்து வெளிவந்த தமிழக அரசின் அறிவிப்பில் , " 1982 ஆம் ஆண்டு பருவமழை பொய்த்ததால் , விவசாயிகளின் வாழ்வு மேம்பட , மற்றும் வறட்சியைப் போக்க புரட்சி தலைவர் அவர்களினால் தொடங்கப்பட்டது இலவச வேட்டி சேலை திட்டம் . கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இந்த வேட்டி சேலைகளை உருவாக்கும் பணிகள் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டன .

மேலும் இந்தாண்டு பெண்களின் விருப்பத்திற்கேற்ப ஆடைகளின் வண்ண்ங்களில் மாற்றமும் , வடிவமைப்பில் மாற்றமும் செய்ய கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . சேலைகள் கடந்த ஆண்டைப் போலவே பாலிகாட் சேலைகளை உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்  .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media