BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 4 July 2014

விஜய் அஜித் சேர்ந்து நடிக்கும் படம்




தமிழ் சினிமாவில் எப்போதும் எலியும் பூனையுமாக இருப்பவர்கள் யார் என்றால் அது விஜய், அஜித் ரசிகர்கள் தான். அவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் எதிரிகளாகவே இருக்கிறார்கள். இதற்கு முற்றுபுள்ளி வைப்பது அவர்கள் கடமை ஆகும். அதற்கான வாய்ப்பும் கிடைத்து உள்ளது. விஜய் இப்போது நடித்து வரும் படம் கத்தி. இதில் ஒரு காட்சியில் முக்கியமான சினிமா பிரபலம் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தார்கள். அதற்காக பாலிவுட் நட்சத்திரங்களை அனுகி, பிறகு ஏன் அஜித் நடிக்க கூடாது என்று எண்ணினார்கள். விஜய் இதற்கு சரி என்று சொல்லி விட்டார். தலயின் சம்மதத்துக்காக காத்து இருக்கிறார்கள். தனது ரசிகர்களின் நலன் விரும்பியாக இருக்கும் அஜித் இதற்கு சம்மதித்தால் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல மாற்றம் ஏற்படலாம்.


இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தால் அது நல்ல படமாக மட்டும் இல்லாமல் அவரது ரசிகர்களுக்கு நல்ல பாடமாகவும் இருக்கும்.

இந்த கால்பந்து உலக கோப்பையில் 10 மோசமான ஹேர் ஸ்டைல்கள்

இப்போது கால்பந்து உலக கோப்பை நடந்து வரும் வேளையில் இதில் பத்து மோசமான ஹேர்ஸ்டைல்கள் யாருடையது என்று பார்ப்போம்.



10. பால் போக்பா (பிரான்ஸ்)



 9. அஸ்சோ எக்கேட்டோ (கேமரூன்)



 8. கையில் பெக்கர்மேன் (அமெரிக்கா)



7. சேரே டை (ஐவரி கோஸ்ட்)



6. அர்டுரோ விடால் (சிலி)


5. அசாமோ கியான் (கானா)



4. பாகாரி சாக்னா (பிரான்ஸ்)


3. ஜெர்வின்ஹோ ( ஐவரி கோஸ்ட்)





2. ரால் மெய்ர்லஸ் (போர்ச்சுகல்)



1. ரோட்ரிகோ பலேசியோ (அர்ஜெண்டினா)




முதல்வர் வீட்டில் 31 ஏ.சி, 25 ஹீட்டர், 15 கூலர்கள் : புதுப்பிக்க 35 இலட்சம்



டில்லியில் 15 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் ஷீலா தீட்சித். இவர் பதவியில் இருந்த போது ஒரு வீட்டில் தங்கி இருந்தார். அதனை பற்றிய தகவலை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஒருவர் கேட்டு இருந்தார். அந்த தகவல்கள் நமக்கு அதிர்ச்சி தருபவையாக இருந்தது. முதல்வரின் குடும்பம் இருந்த வீட்டில் அவர்களது குடும்பத்திற்கு மட்டும் 31 ஏசிகள், 25 ஹீட்டர்கள், 15 கூலர்கள் இருந்து உள்ளன.


இன்னும் பல மக்களின் வீட்டில் விசிறி கூட இல்லை, சிலருக்கு வீடே இல்லை. ஆனால் மக்கள் பணமோ இங்கு வீணாக போய் கொண்டு இருக்கிறது. இந்த வீட்டு மின் பயன்பாட்டில் சில மாற்றங்களை செய்வதற்கு மட்டு 17 இலட்சம் ஆகியது. இப்போது இந்த வீட்டிற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வர இருக்கிறார். அதற்காக வீட்டை புதுபிப்பதற்கு மட்டும் 35 இலட்சம் ஆகி உள்ளது. காசு பணம் துட்டு மணி மணி மணி

கட்டிட விபத்து மீட்பு பணி நிறைவடைந்தது : 61 பேர் பலி, 27 பேர் காப்பாற்றப்பட்டனர்

கடந்த சனிகிழமை அன்று சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது .அதில் பலர் சிக்கி கொண்டு உயிருக்கு போராடி வந்தனர். மீட்பு பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது . அது இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் மீட்பு குழுவினர் முக்கிய பங்கு வகித்தனர். இறுதியான தகவலின் படி 61 பேர் பலியாகினர் மற்றும் 27 பேர் காப்பாற்றபட்டனர். பல கைகளும் கால்களும் தனி தனியாக அழுகி கிடந்தன.



சிக்கி கொண்டவர்களை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மீட்பு பணிகள் மெதுவாக நடந்தது. உயிர் இழந்தவர்களில் 10 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை.

அரசின் அலட்சியத்திற்கு நாம் கொடுத்த விலை 61 உயிர்கள்.

டில்லியில் உள்ள விஐபி களின் கார்களில் குண்டு வெடிக்கும் அபாயம் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது !!



டில்லி போலிசாருக்கு இந்திய உளவுத் துறையிடம் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது . அமைச்சர்கள் மற்றும் விஐபி நபர்களின் வாகனங்களில் குண்டு வைக்க இந்திய முஜாய்தின் இயக்கம் மற்றும் ஜம்மூ காஷ்மீரில் உள்ள இயக்கங்கள் திட்டம் போட்டு வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

மேலும் 100 க்கும் மேற்பட்ட ஹோட்டகளை சோதனையிட உத்தரவிட்டுள்ளனர் . மேலும் முக்கிய நபர்களின் வருகையின் போது கட்டிட பணிகளை நிறுத்தவும் முடிவு செய்துள்ளனர் .

இந்த எச்சரிக்கையால் டில்லி போலிசார் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . மேலும் பல பாதுகாப்பு திட்டங்களை போட்டு அதன்படி நடந்து வருகின்றனர் .

ஷரபோவா சச்சின் விவகாரம், நீங்கள் அறியாத பதிவுகள்





சச்சின் விம்பிள்டன் பார்பதற்காக அங்கு சென்று இருந்தார். கால்பந்து வீரர் டேவிட் பெக்காமுடன் சேர்ந்து ஆட்டத்தை கண்டு ரசித்தார். மரியா ஷரபோவா ஆட்டம் முடிந்த பிறகு அந்த இருக்கையில் அமர்ந்து ஆட்டத்தை ரசித்தவர்கள் யார் என்று தெரியுமா என்றார்கள். அவர் பெக்காம் என்றார். சச்சினை பற்றி கேட்ட போது ,சச்சின் யார் என்றே தெரியாது என்றார். இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. சின்ன பிள்ளைகளுக்கு கூட தெரியும் சச்சினை ,ஷரபோவாவிற்கு எப்படி தெரியாமல் இருக்கும் என அவரது ரசிகர்கள் கோபத்தில் இறங்கினார்கள்.




ஷரபோவாவின் பேஸ்புக் பக்கத்திற்கு சென்று அவரை கேவலமாக திட்டினார்கள். பேஸ்புக் டிவிட்டர் அதிகம் போட பட்ட பதிவு யார் இந்த ஷரபோவா ? அவரை கலாய்த்து பல ட்ரோல்கள் வந்த வண்ணம் உள்ளன.இது இந்தியர்கள் நம்மை நாமே அசிங்க படுத்தி கொள்வது போல் உள்ளது. இது நாம் வெட்க பட வேண்டிய செயல் ஆகும் . ஒரு ரஷிய நாட்டு வீரங்கனைக்கு சச்சினை பற்றி தெரியாததில் ஒன்றும் தப்பு இல்லை. அவர்கள் கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாதவர்கள். நமக்கு கிரிக்கெட் தவிர வேறு எதுவும் தெரியாது. நமது நாட்டு ஹாக்கி,கால்பந்து அணிகளின் கேப்டன்கள் கூட தெரியாது. உண்மையில் நாம் தான் கேவலமானவர்கள்.





இப்படி இருந்தாலும் ஷரபோவாவுக்கு ஆதரவாகவும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் நடுநிலமையுடன் பேசுவர்கள். இந்த விஷயத்தில் நமக்கு கவலை அளிப்பது சச்சின் இந்த விவகாரத்தில் தலையிடாதது. சச்சின் நினைத்து இருந்தால் இந்த விஷயம் பெரிதாகாமல் தடுத்து இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இனியாவது சச்சின் விரைந்து செயல்பட்டு இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். அப்போது தான் இந்தியாவின் மானம் காப்பாற்றப்படும்.


ஈராக்கில் இந்திய நர்சுகளை கடத்திச் சென்றது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு !!



ஈராக்கில் சன்னி பிரிவைச் சார்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஷியா முஸ்லிம் அரசை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர் .  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மோசுல் மற்றும் திக்ரிட் உட்பட பல நகரங்களை கைப்பற்றியது . கைப்பற்றிய நகரங்களை ஒன்றாக இணைத்து தனி இஸ்லாமிய நாடு என்று அறிவித்தனர் .

அவர்கள் கைப்பற்றிய திக்ரிட் நகரில் இந்திய நர்சுகள் 46 பேர் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தனர் . திக்ரி பகுதிகளில் அரசு படையினருக்கும் , ஐ.எஸ்.ஐ.எஸ் படையினருக்கும் கடுமையான தாக்குதல் நடந்து வந்தது . ஈராக்கில் உள்ள அவர்களை இந்திய அரசு சர்வதேச செம்பிறை சங்கத்தின் உதவியுடன் தொடர்பு கொண்டது . அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தது . அவர்கள் இந்தியா திரும்ப வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோள் வைத்தனர் .

இந்நிலையில் அந்த 46 நர்சுகளை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு அடையாளம் தெரியாத இடத்திற்கு துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்றுள்ளனர் . மொசுல் நகருக்கு அழைத்து சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது . நர்சுகளில் சில பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியானது .

ஏற்கன்வே அவர்களின் பிடியில் 39 இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

கால்பந்து உலக கோப்பை : நடிகர் ஆர்யாவின் கணிப்புகள்


இப்போது அனைவருக்கும் வந்து இருக்கும் காய்ச்சல் கால்பந்து காய்ச்சல் . எங்கு பார்த்தாலும் கால்பந்து தான். இதற்கு நமது ஆர்யாவும் அடக்கம் தான். அவ்வர் கால்பந்து போட்டிகளுக்கு தீவிர ரசிகர். நேரம் கிடைத்தால் பச்சையப்பா கல்லூரிக்கு சென்று கால்பந்து விளையாடுவார். இந்த உலக கோப்பை பற்றி அவரிடம் கேட்ட போது அவர் கூறியது, கால்பந்துக்கு முக்கியத்துவம் தராத அமெரிக்காவும் இம்முறை அதற்கு முக்கியத்துவம் தந்து உள்ளது.



அவரை கவர்ந்த அணிகள் பிரான்ஸ்,ஜெர்மனி,அர்ஜெண்டினா,கொலம்பியா. அவரை கவர்ந்த வீரர்கள் அர்ஜென்டினாவின் லியொனல் மெஸ்ஸி, கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகஸ் ஆகும். அவரது கணிப்பு படி இந்த முறை இறுதி போட்டிக்கு அர்ஜென்டினாவும், கொலம்பியாவும் வரும் என்கிறார்.

சென்னையில் உள்ள 350 கட்டிடங்களின் நிலைமை என்ன ?? ஒரு மாதத்தில் தெரியும் !!



சென்னை போரூரில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்ததில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 61 பேர் இறந்துள்ளனர் . இது போன்ற இன்னொரு சம்பவம் நடக்காமல் தடுக்க சென்னையில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களை சோதனையிட சி.எம்.டி.ஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் .

 ஆய்வு செய்ய 350 கட்டிடங்களை எடுத்துள்ளனர்  சி.எம்.டி.ஏ . 19 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவிற்கு 3 பேர் வீதம் 57 பேர் தேர்வு செய்துள்ளனர் , இந்த குழுக்களுக்கான முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது .

இந்த ஆய்வு பணி  ஒரு வார காலம் நடத்தப்படும் என முடிவு செய்துள்ளனர் . எந்த எந்த அடிப்படையில் கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்துள்ளனர் . ஆய்வு பணியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர் .  இந்த ஆய்வு பணியை முடித்து அரசிடம் ஒரு மாதத்தில் அறிக்கை சமர்பிக்க உள்ளனர் . எந்த கட்டிடங்கள் தப்பும் , எந்த கட்டிடங்கள் தடை செய்யப்படும் ?? இந்த கேள்விக்கான பதிலைக் காண ஒரு மாதம் காத்திருப்போம் .

இன்று இளவரசனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்




கடந்த ஆண்டு ஜுலை மாதம் அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் இளவரசன் - திவ்யா காதல் விவகாரம். இந்த இருவரின் காதல் விவகாரம் தமிழக அரசியலில்  பரபரப்பை கிளப்பியது, ஒரு தரப்பு இது நாடகக்காதல் என்றும் மற்றொரு தரப்பு இதை சாதிவெறி என்றும் கூறியது.

திவ்யா இளவரசனை விட்டு பிரிந்து தனது தாயுடன் வாழப்போவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து இளவரசனை விட்டு பிரிந்து சென்றார், தந்தை தற்கொலை செய்து கொண்டதால் அனாதையாகி உள்ள தாயையும் தம்பியையும் காப்பாற்றவே தான் வீட்டிற்கு திரும்புவதாக தெரிவித்தார். இது தொடர்பாகவும் வழக்குகள் நடந்தன, இந்நிலையில் கடந்த ஜுலை 4 ஆம் தேதி அன்று இளவரசன் தருமபுரியில் உள்ள ரயில்வே லைனில் மர்மமான முறையில்  இறந்து கிடந்தார், அது கொலை என்றும் இல்லை தற்கொலை என்றும் இரு தரப்பாலும் மாறி மாறி கூறப்பட்டது.  பலமுறை இளவரசனின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது, டில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் போர்ட்மார்ட்டம் செய்தனர், அதனை அடுத்து இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என்று அரசும் மருத்துவர்களும் அறிவித்தனர், ஆனால் இது கொலை என்றும் அது  அது தொடர்பான வழக்கு இன்னும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தரும்புரியில் ஜூலை 4 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இளவரசனுக்கு அஞ்சலி செலுத்த போவதாக அறிவித்ததை அடுத்து பரபரப்பு கிளம்பியது, தருமபுரி வட்டம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது,
இன்று அவர் இறந்து ஒரு ஆண்டு ஆவதால் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அவரது தந்தை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் அவர்கள் அனுமதி வழங்கவில்லை. எனவே இந்த வழக்கும் நீதிமன்றம் சென்றது.

இப்போது சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதில் அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ,நலம் விரும்பிகள் என 50 பேருக்கு மிகாமல் செல்ல வேண்டும். அவர்கள் ஓரே வரிசையில் அனுமதிக்க படுவார்கள். அரசியல் தலைவர்களுக்கு அனுமதி இல்லை. அவர்கள் எந்த பொதுகூட்டங்களும் நடத்த கூடாது.

பிரதமர் மோடியின் அடுத்த திட்டம் !! குழந்தைகளின் இறப்பை தடுக்க புதிய மருந்து !!




குழந்தைகளின் இறப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதால் அதனை தடுக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி . இந்த திட்டத்தின் படி 13 உயிக்கொல்லி நோய்களை தடுக்கும் , 4 தடுப்பு மடுந்துகளை இலவசமாக தர உள்ளனர் .

இது பற்றி மோடி கூறுகையில் , " இந்த தடுப்பு ஊசிகளை குழ்ந்தைகளுக்கு போடுவதனால் குழந்தை இறப்பு மற்று நோயால் தாக்கப்படுவது தடுக்கப்படுகிறது . இந்த மருந்துகள் ஏற்கனவே தனியார் மையங்களில் கிடைக்கிறது , ஆனால் இதை பல பேரால் வாங்க முடியவில்லை . இந்தியா குழந்தைகளின் இறப்பை தடுக்க உறுதி பூண்டுள்ளது . குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்து வழங்குவது நாட்டின் எதிர்காலத்திற்கு நன்றாக இருக்கும் " என்றார் .


மேலும் இந்த திட்டம் மூலம் 2.7 கோடி குழந்தைகள் பயன் அடைய உள்ளனர் . இதன் மூலம் குழந்தைகளின் இறப்பை மூன்றில் இரண்டு பங்காக மாற்றவும் பயன்படும் .

முதல் பாட்டை பாட போகும் சூர்யா





சூர்யா நாயகனாக நடித்து வரும் படம் அஞ்சான். இந்த படத்தை லிங்குசாம் இயக்குகிறார். சம்ந்தா நாயகியாக நடிகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த பாடத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜுலை 17 ஆம் தேதி அன்று பிராம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்தில் பாடல் ஒன்றை பாட சூர்யா திட்டமிட்டு உள்ளார். வெள்ளிதிரையில் இது அவருக்கு முதல் பாட்டு ஆகும்.



என்வே ரஜினி,கமல்,விஜய்,தனுஷ்,சிம்பு,விஷாலை தொடர்ந்து சூர்யாவும் பாட தொடங்கியுள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது. இந்த படம் தமிழ் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து வரும் படம். இப்போது சூர்யா வேறு பாட போகிறார் என்பதால் எதிர்பார்ப்பு கூடி உள்ளது.

நடிகர்கள் பாடுவதற்கு மாறி வருகிறார்கள், இசையமப்பாளர்கள் விஜய் ஆண்டோனி ,ஜீ.வி.பிரகாஷ் போன்றோர் நடிகராக மாறி வருகிறார்கள்.


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media