ஆம் ஆத்மி கட்சியில் சில நாட்களுக்கு முன்பு இணைந்த அணு உலை எதிர்ப்பாளர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் மற்றும் குழு உறுப்பினர் ஜேசுராஜ் ஆகிய இருவரும் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் கிறிஸ்டினா சாமி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், உதயகுமார், ஜேசுராஜ் ஆகிய இருவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது குறித்து ஆம் ஆத்மி கட்சி மேலிடத்தில் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.