உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில், ராகுல் காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மியின் குமார் விஷ்வாஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்க படுகிறது.
இந்நிலையில், அமேதி தொகுதியில், இன்று பேரணியில் பேசிய குமார் விஷ்வாஸ், "நான் ஒன்றும், தலித் வீடுகளுக்கு சென்று அவர்கள் வீட்டில் சாப்பாடு சாப்பிட்டு விட்டு, தொலைகாட்சி சேனல்களை வர வழைத்து, விளம்பரம் தேடி கொள்ள மாட்டேன். ராகுல் காந்திதான் அது போல் போஸ் கொடுத்து கொள்வார், அவரின் தாயோ, மகாராணி போல் வலம் வந்து கொண்டிருக்கிறார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வருகிறார். நம் நாட்டில் உள்ள மருத்துவர்களையே இவர் நம்பாத போது, இவரை எப்படி நம்புவது?" என கடுமையாக ராகுலையும், சோனியாவையும் குற்றம் சாட்டி பேசியுள்ளார்.
மேலும் பேசிய குமார் விஷ்வாஸ், காங்கிரஸ் கட்சியினர் என்னை ஜோக்கர் என்று அழைக்கின்றனர். நான் ஜோக்கர் தான், ஆனால், இவர்களை போல் நாட்டினை விற்று விடமாட்டேன் என்று திடமாக கூறினார்.
இந்நிலையில், அமேதி தொகுதியில், இன்று பேரணியில் பேசிய குமார் விஷ்வாஸ், "நான் ஒன்றும், தலித் வீடுகளுக்கு சென்று அவர்கள் வீட்டில் சாப்பாடு சாப்பிட்டு விட்டு, தொலைகாட்சி சேனல்களை வர வழைத்து, விளம்பரம் தேடி கொள்ள மாட்டேன். ராகுல் காந்திதான் அது போல் போஸ் கொடுத்து கொள்வார், அவரின் தாயோ, மகாராணி போல் வலம் வந்து கொண்டிருக்கிறார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வருகிறார். நம் நாட்டில் உள்ள மருத்துவர்களையே இவர் நம்பாத போது, இவரை எப்படி நம்புவது?" என கடுமையாக ராகுலையும், சோனியாவையும் குற்றம் சாட்டி பேசியுள்ளார்.
மேலும் பேசிய குமார் விஷ்வாஸ், காங்கிரஸ் கட்சியினர் என்னை ஜோக்கர் என்று அழைக்கின்றனர். நான் ஜோக்கர் தான், ஆனால், இவர்களை போல் நாட்டினை விற்று விடமாட்டேன் என்று திடமாக கூறினார்.