BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 25 July 2014

கொசுக்களை விரட்ட இனி குட்நைட் , ஆல் அவுட் வேண்டாம் ! ஒரு மொபைல் அப்ளிகேஷன் போதும் !!



இப்போது கொசுக்கள் தொல்லை அதிகடித்து கொண்டே இருக்கிறது . மக்களும் கொசுக்களின் தொல்லையில் இருந்து வெளியேற ஸ்பிரே மற்றும் பல வழிகளை கையாண்டு வருகின்றனர் . ஆனால் இப்போதுள்ள மாடர்ன் உலகில் கொசுவை விரட்ட உங்களிடம் ஒரு மொபைல் போன் இருந்தால் போதும் . அந்த மொபைலில் ஒரு இலவச அப் இருந்தால் கொசுக்களை நீங்களும் விரட்டலாம் .


அந்த அப்ளிகேஷன் பெயர் , " அண்டி மஸ்கிட்டோ சோனிக் ரிப்பெல்லர் "

இந்த அப்ளிகேஷன் கொசுக்களை விரட்டியடிக்கும் மீயொலி அதிர்வெண்களில் அலை எழுப்புவதால் , இந்த சத்தங்களை கேட்கும் கொசுக்களை தூரமாக சென்று விடும்  . மேலும் இந்த ஒலி கொசுக்களின் எதிரிகளான ட்ராகன் பிளை மற்றும் வவ்வால் போன்றவற்றின் ஒலிகளை ஒத்து இருக்கும் . ஒரு முறை ஒரு ஆண் கொசுவிடம் துணை வைத்துக் கொண்ட பெண் கொசு அடுத்த முறை ஆண் கொசுக்களிடம் இருந்து விலகியே இருக்கும் . எனவே ஆண் கொசு போன்று ஒலி எழுப்புவதால் பெண் கொசுக்கள் நம் பக்கம் வராது .



இந்த அப்ளிகேஷன் மீயோலி அதிர்வெண்களில் சத்தம் எழுப்புவதால் மனிதர்களுக்கு இந்த சத்தம் தொல்லை கொடுக்காது என்று கூறி இருந்தனர் , ஆனால் இதை உபயோகப்படுத்திய சிலர் இதில் இருந்த சத்தம் தொல்லையாக இருப்பதாக தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர் .

இந்த அப்ளிகேஷன் 100 சதவீதம் கொசுக்களை விரட்டும் என்று சொல்ல முடியாது . உலகில் 3,500 வகையான கொசுக்கள் உள்ளன . அவை அனைத்தையும் இந்த அப் விரட்டும் என நாம் எதிர்பார்க்கக் கூடாது .  

நீங்கள் ஓட ஓட துணிகளை துவைக்கும் புது வாஷிங் மெஷின் !!



உங்கள் வீட்டில் உள்ள வாஷிங் மெஷினால் அதிக கரண்ட் பில் வருகிறது என்று நினைத்து கவலையா ?? தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என நினைத்து செய்ய முடியாமல் இருப்பவரா நீங்கள் ??

மேலே உள்ள இரண்டு பிரச்சனைகளுக்கும் ஓரே தீர்வை கண்டுபிடித்துள்ளார் தென் கொரிய ஆராய்சியாளர் ஒருவர் . பெரிய வட்ட வடிவில் உள்ள ஒரு இயந்திரத்தை சி ஹூயாங் ரியு என்பவர் 2014 ஆம் ஆண்டின் எலக்ட்ரோலஃஸ் என்னும் நிறுவனத்தின் போட்டிக்காக வடிவமைத்துள்ளார் . இந்த இயந்திரத்தை ட்ரெட் மில் மற்றும் வாஷிங் மெஷினின் கோட்பாட்டினால் உருவாக்கி உள்ளார் .



வட்ட வடிவில் உள்ள இந்த இயந்திரத்தில் ஒருவர் ஓட ஆரம்பித்தால் அவர் ஓடுவதன் மூலம் உருவாகும் இயக்க ஆற்றலால் வாஷிங் மெஷின் செயல்படும் . மீதி ஆற்றல் பிற்கால உபயோகத்திற்காக சேமித்து வைக்கப்படும் . இந்த இயந்திரத்தை " வீல் " என பெயரிட்டுள்ளார் . இதில் சோலார் பேனல் பொறுத்தப்பட்டுள்ளதால் ட்ரெட் மில்லாக இதை உபயோகப்படுத்தாத போது சூரிய ஒளி மூலம் உபயோகப்படுத்தலாம் .

  

உள்ளாடை மாற்றாமல் இருந்ததால் வெடிக்காமல் போன வெடிகுண்டு !! வெடி குண்டு வெறும் குண்டு ஆன கதை ..


2009 ஆம் ஆண்டு உமர் அப்துல்முத்தலாம் என்னும் நைஜீரிய பயணி டெட்ராய்ட் விமானத்திற்குள் வெடிகுண்டு ஒன்றைக் கொண்டு வந்து அமெரிக்க அதிகாரிகளுக்கு பரபரப்பை ஏற்படுத்தினார் . ஆனால் அந்த வெடிகுண்டு வெடிக்காமல் போனதால் பயணிகள் தப்பித்தனர் . அவர் மட்டும் லேசான காயங்களுடன் அவதிப்பட்டார் .

இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , அந்த நபர் உள்ளாடைக்குள் வெடி குண்டை வைத்து உள்ளே கொண்டு வந்தார் . அவர் அந்த உள்ளாடையை தொடர்ந்து இரண்டு வாரங்களாக பயன்படுத்தியதால் , அந்த குண்டு அழுக்கடந்து வெடிக்காமல் விட்டது . அவரின் இந்த கெட்ட பழக்கத்துக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார் .


மூன்று வயது குழந்தையைக் காணோம் என்று கூறி வந்த தாய் , பின்னர் நான் தான் கொலை செய்தேன் என்று ஒத்துக் கொண்ட சம்பவம் !!


ரோஸ்தீப் அடிகோயா என்னும் பெண் தன்னுடைய மூன்று வயது மகனை குத்திக் கொன்று விட்டு , தனது மகனை காணவில்லை என்று போலிசிடம் தகவல் கொடுத்தார் . அந்த குழந்தயை தேடும் முயற்சியில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஈடுபட்டனர் , இப்போது அந்த பெண் , நான் தான் என் குழந்தையைக் கொலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார் .


ரோஸ்தீப் அடிகோயா , 34 வயதுடைய அந்த பெண் தன்னுடைய மகனை பொறுமையிழந்து கடுமையாக தாக்கியுள்ளார் . அப்போது அந்த குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை . அதையும் பொருட்படுத்தாமல் கடுமையாக அடித்துள்ளார் . அந்த் குழந்தைக்கு உடம்பில் 40க்கும் மேற்பட்ட காயங்களும் , பல கொடூரமான உட்காயங்களும் ஏற்பட்டன . தழும்புகள் வெளியே தெரிந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை . இதனால் அந்த அப்பாவி குழந்தை இரண்டு நாளில் இறந்தது . நான்காவது நாளில் தன்னுடைய மகன் காணவில்லை என்று போலிசிடம் தகவல் கொடுத்தார் .


இவ்வாறு தகவல் கொடுத்ததால் பல சமூக சேவகர்கள் அந்த குழந்தையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர் . தன்னுடைய குழந்தை இறந்ததை அறிந்த அந்த பெண் , ஒரு பெட்டியில் போட்டு தன்னுடைய சகோதரியின் வீட்டிற்கு பின்னால் உள்ள புதருக்குள் மறைத்து வைத்து விட்டார் .

இதனை போலிஸ் விசாரணையின் போது அந்த பெண் ஒத்துக் கொண்டுள்ளார் . இந்த சம்பவம் அந்த குழந்தையைக் காணும் என்ற போது தேடும் பணியில் ஈடுபட்ட சமூக சேவகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news


செக்ஸ் ஆர்வத்துக்கு வேட்டு வைப்பது எது? அதிர்ச்சி தகவல்கள்
http://www.satrumun.net/2014/07/what-screw-your-life.html

விஜய் அவார்டை கழுவி கழுவி ஊற்றிவிட்டு சேனல் மாற்றாமல் பார்ப்பது வழக்கம்.
விஜய் அவார்ட்ஸ் ஜோக்ஸ்
http://www.satrumun.net/2014/07/vijay-awards-jokes.html

ஒலிம்பிக் தங்கமகன் மீண்டும் தங்கம் வென்றார் !!
http://www.satrumun.net/2014/07/blog-post_37.html

வணக்கம் ப்ரோ… நான் விஜய் பேசுறேன் : ‘சூப்பர் ஸ்டார்’ விழாவுக்காக ஆள் பிடிக்கும் விஜய்!
http://goo.gl/cxHsTj

அஜித்திற்கு பேஸ்புக்கில் வந்த பிரச்சனை என்ன ??
http://www.satrumun.net/2014/07/blog-post_45.html

அடுத்த விமான விபத்து இந்தியாவில் நடந்தது
http://www.satrumun.net/2014/07/blog-post_56.html

உலகில் முதல் முறையாக மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது
http://www.satrumun.net/2014/07/blog-post_0.html

இனி கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை
http://www.satrumun.net/2014/07/blog-post_60.html

நான் இந்தியர் இல்லையா? டிவி பேட்டியின் போது தேம்பி தேம்பி அழுத சானியா மிர்சா
http://www.satrumun.net/2014/07/blog-post_98.html

தண்டனை பெற்றார் கிரிக்கெட் வீரர் ஜடேஜா
http://www.satrumun.net/2014/07/blog-post_97.html

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுகிறார் ??
http://www.satrumun.net/2014/07/blog-post_71.html

‘கிசுகிசு ‘ வந்தாத்தான் நீங்க பெரிய ஹீரோ : புது ஹீரோவுக்கு டிப்ஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!
http://goo.gl/nP9zWs

வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணம் விரைவில் இந்தியாவுக்கு வர இருக்கிறது
http://www.satrumun.net/2014/07/blog-post_34.html

செக்ஸ் ஆர்வத்துக்கு வேட்டு வைப்பது எது? அதிர்ச்சி தகவல்கள்


30 வயதிலிருந்து 40 வயது வரை தான் மனித வாழ்வில் செக்ஸ் உறவின் உச்சகட்டம் எனலாம், திருமணம் ஆகியிருந்தாலும் உடலுறவு குறித்து புரிதல் கிடைத்து நிதானமாக ஆண்களும் பெண்களும் உடலுறவு கொள்வது இந்த வயதில் தான். ஆனால் தற்போதைய ஆராய்ச்சியில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கணவன் மனைவி ஆகியோரின் தவிர்க்க முடியாத வேலைப்பளுவினால் 30 வயதில் இருந்து 40 வயதிற்குட்பட்ட கணவன் மனைவிகள் தங்களின் சந்தோசமான செக்ஸ் வாழ்க்கையை தொலைத்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்கள், பெண்கள் என இருவருமே சம்பாதிக்கும் ஆசை தான் அவர்களின் செக்ஸ் ஆர்வத்துக்கு வேட்டு வைத்துக்கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் காரணிகள் மற்றும் எந்தெந்த வயதில் என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும் என்பது பற்றியும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஆண்-பெண் இருவரில் யாருக்கு செக்ஸ் ஆர்வம் அதிகம் என்று ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் பல வியப்பூட்டும் தகவல்கள் தெரியவந்தன.

இந்த ஆய்வு 30 வயது முதல் 50 வயது வரை உடைய ஆண் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அதில் 30 வயதுப் பெண்களில் 85 சதவீதம் பேரிடம் செக்ஸ் ஆர்வம் அதிகமிருப்பதாக தெரியவந்தது. ஆனால் 30 வயதுடைய ஆண்களில் 75 சதவீதம் பேர்தான் அதிக செக்ஸ் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

செக்ஸ் உறவில் அதிக ஆர்வம் இருந்தாலும் அதிக வேலைப்பளுவினால் சோர்வடைந்து விடுவதாகவும் மாதம் ஒரு முறைதான் கணவருடன் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது என்றும் பல பெண்கள் கூறியுள்ளனர்.

கணவன் மனைவி இருவருமே நீண்ட நேரம் வேலை செய்வதாலும் வேலைக்கு செல்லும் பயண நேரம், வேலைக்காரணமான‌ மனஅழுத்தம், பணக்கவலை எல்லாம் தங்களின் செக்ஸ் வாழ்க்கையை வீணாக்கி வருகிறது என்றும் கணக்கெடுப்பில் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு பற்றி கருத்து கூறிய டாக்டர்30 வயதில் இருந்து 40 வயது வரை பெண்களின் செக்ஸ் ஆசைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மாறாக ஆண்களின் ஆசைகள் குறைந்து கொண்டே போகிறது. அதுதான்  பெண்களின் வேதனைக்கு காரணம்' என்கிறார்.

மேலும் ஓரிரண்டு குழந்தை பெற்றவுடன் இந்த குழந்தைகளே போதுமென்று உடல்உறவை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் தம்பதியினர் முடிவு செய்கிறார்கள். 40 வயதில் பெண்கள் அதிக செக்ஸ் ஆர்வத்துக்கு உள்ளாகிறார்கள். அப்போது அவர்களின் குழந்தைகளும் பருவம் அடையும் நிலைக்கு வளர்ந்திருப்பார்கள். அதனால் உறவை தவிர்க்கிறார்கள்.

30 வயதில் பெண்களுக்கு செக்ஸ் ஆர்வம் அதிகம் ஏற்படுகிறது ஆனால் இந்த வயது ஆண்களுக்கு சம்பாதிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி மிகுந்து விடுகிறது. அதனால் 30 வயது ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையத் தொடங்குகிறது.

40 வயதில் பெண்களுக்கு செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது. மேலும் குழந்தைகள் பெரியவர்களாகி இருப்பதும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையும் பெண்களின் செக்ஸ் உணர்வை குறைக்கிறது.

ஆனால் ஆண்கள் 40 வயதில் வேலை, தொழிலில் செட்டில் ஆகி நல்ல வருமானத்தை ஈட்டுவதால் டென்சன் இன்றி இருக்கிறார்கள், இதனால் செக்ஸ் உணர்வு அதிகரிக்கிறது.

50 வயதில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள். இதுவும் பெண்களின் செக்ஸ் உணர்வை குறைக்கிறது.

ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு 50 வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்  பாதிப்புகளின்செட்டில் ஆகிவிடுகிறார்கள். இருந்தாலும் குறையும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதற்காக அதிக நேரத்தையும், கவனத்தையும் செலவிடுவதால் உணர்வு குறைகிறது.

30வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்கும் தம்பதிகள் புரிதலுடன் செக்ஸ் உறவை நன்றாக அனுபவித்து கொள்ள வேண்டும், இந்த வயதை விட்டுவிட்டால் அதற்கு பின் உடலும் மனமும் செக்ஸ் உறவுக்கு அனுமதிக்காது என்பதை புரிந்துகொண்டு செக்ஸ் உறவை அனுபவியுங்கள்.

ஒலிம்பிக் தங்கமகன் மீண்டும் தங்கம் வென்றார் !!



இந்தியாவின் அபினவ் பிந்த்ரா 10 மீட்டர் துப்பாகிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் . இவர் 2008 ஆம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .


அடுத்த விமான விபத்து இந்தியாவில் நடந்தது





முன்பெல்லாம் பலரின் ஆசை ஒருமுறையாவது ஆகாயத்தில் பறந்து விட வேண்டும் என்பதாக தான் இருக்கும். ஆனால் இப்போது விமானத்தில் பயணம் செய்வதற்கே பயமாக இருக்கிறது. ஏனென்றால் விமான விபத்து அதிகரித்து வருகிறது. முதலில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போனது, அடுத்து மலேசியன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது, அடுத்து தைவானில் ஒரு விமான விபத்து நடந்தது. இவை அனைத்தும் இவை அனைத்தும் இந்த ஆண்டு நடந்தது.


இப்போது அடுத்த விபத்து நடந்து விட்டது , அதுவும் இந்தியாவில் நடந்து உள்ளது. இந்தியான் ஏர் போர்ஸ் விமானத்தில் இந்த விபத்து நடந்து உள்ளது. பரேலியில் இருந்து அலகாபாத் சென்று கொண்டு இருந்த போது லக்னவ் அருகே நடந்தது. இதில் 7 பேர் இறந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

அமெரிக்கா பயணத்திற்காக மோடிக்கு புது புது ஆடைகள்


நமது பிரதமர் மோடியை இந்தியாவின் ஸ்டைல் பிரதமர் என்றே கூறலாம். ஏனென்றால் தனது ஆடைகளுக்கு அவர் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அவர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளார். மற்ற சிறிய நாடுகள் என்றாலே கெத்தாக செல்லும் மோடி அமெரிக்காவிற்கு அதுவும் இந்திய பிரதமராக செல்கிறார் என்றால் எப்படி செல்வார் என யோசித்து பாருங்கள்.


இவரது ஆடைகளை வடிவமைப்பதற்கு பிரபல ஆடை வடிவமைப்பாளர் டிராய் கோஸ்டாவிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டு விட்டது. அப்படியே ஆடையே இல்லாத சில இந்தியர்களுக்கு சேர்த்து ஆர்டர் கொடுங்க மோடிஜி.








டிவி பேட்டியின் போது தேம்பி தேம்பி அழுத சானியா மிர்சா




புதிதாக பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தின் தூதுவராக அந்த மாநிலத்தின் சானியா மிர்சா அறிவிக்கப்பட்டார் . இந்த அறிவிப்பை அடுத்து பாஜக வின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான லட்சுமணன் , சானியா மிர்சா பாகிஸ்தானின் மருமகள் , அவர் எப்படி தூதுவராக நியமிக்கப்படலாம் என்று கேட்டு சர்ச்சை ஏற்படுத்தினார் . மேலும் , சானியா மஹாராஷ்டிராவில் பிறந்து, ஹைதராபாத்தில்  வளர்ந்தார் . இப்போது பாகிஸ்தானியை திருமணம் செய்துள்ளார் . ஒரு வெளி ஆளுக்கு எப்படி மாநில தூதுவர் பதவி கொடுக்கலாம் என்று கேள்வி எழுப்பினார் .

இது குறித்து விளக்கம் அளித்த சானியா கூறுகையில் , நான் தூதுவராக நியமிக்கப்பட்டதை ஊடகங்கள் பிரச்சினையாக மாற்றி நேரத்தை வீணடிப்பது எனக்கு வேதனை அளிக்கிறது . நான் பாகிஸ்தானியை திருமணம் செய்து இருந்தாலும் , நான் இந்தியன் தான் . என் வாழ்க்கை முடியும் வரை நான் இந்தியனாக தான் இருப்பேன் என்றார் .மேலும் தனது தாத்தா , பெரிய தாத்தா பெயர்களை கூறி அவர்கள் செய்த பணிகளை கூறினார் . தனது குடும்பம் கடந்த 100 ஆண்டுகளாக ஹதராபாத்திற்காக உழைத்து வந்ததாகவும் , தன்னை வெளி ஆள் என்று கூறுபவர்களுக்கு கண்டனங்களை தெரிவிப்பதாகவும் கூறினார் .



இந்த விவகாரம் குறித்து அவர் இன்று என்.டி.டிவிக்கு பேட்டியளித்தார். அப்போது இந்தியாவுக்கும் அவருக்கும் உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது என கூறி தேம்பி தேம்பி அழுதார். இந்த விவகாரத்தில் அரசியலை நுழைக்க வேண்டாம் என கேட்டு கொண்டார்.


உலகில் முதல் முறையாக மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது




உலக வரலாற்றுலையே முதல் முறையாக மலேரியா எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை பிரிட்டனை சேர்ந்த மருந்துகள் தயாரிக்கும் நிறுவனமான கிளாஸ்கோ கண்டுபிடித்து உள்ளது. இந்த மருந்துக்கு ஆர்.டி.எஸ்.எஸ் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த மருந்து ஐ.நா.வின் உலக சுகாதார மையம் மற்றும் ஐரோப்பா மெடிசன்ஸ் ஏஜென்சியின் அனுமதி பெற்ற பிறகே விற்பனைக்கு வரும்.



மலேரியா வருவதற்கு முக்கிய காரணம் கொசுக்கள் தான். ஆனால் அவை அனைத்தையும் அழிப்பது என்பது கடினமான செயல் ஆகும். இந்த மருந்தை கண்டுபிடிப்பதற்காக இந்த நிறுவனம் தனது ஆராய்ச்சியாளர்களை கொண்டு 30 ஆண்டுகள் கடுமையாக உழைத்தது . அதற்கு பலன் கிடைத்து உள்ளது.

அஜித்திற்கு பேஸ்புக்கில் வந்த பிரச்சனை என்ன ??




இன்று இருக்கும் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பிடித்த நடிகரை தெய்வமாக பார்க்கிறார்கள். ஆனால் அதே ரசிகர்களுக்கு சமமரியாதை கொடுக்கும் ஒரு நடிகர் யார் என்றால் அது நம்ம தல அஜித்தாகத்தான் இருக்கும். தன்னை பற்றி மட்டும் எண்ணாமல் தனது ரசிகர்களின் வாழ்க்கை பற்றியும் சிந்திப்பவர். அஜித் கடந்த மாதம் தான் பேஸ்புக்கிற்கு வந்தார். வந்த முதல் நாளே அவருக்கு நல்ல வரவேற்பு . ரசிகர்கள் கூட்டம் வளர தொடங்கியது.


ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை வந்த 2 வது நாளே தல பேஸ்புக்கில் இருந்து விலகிவிட்டார். அவரது பக்கத்தில் இருந்த வெரிஃபைடு டிக்கை காணவில்லை. அது இருந்தால் அந்த நபரின் உண்மையான பக்கம் என எடுத்து கொள்ளப்படும். அஜித் விலகியதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை. தல எப்போது மீண்டும் வருவார் என அவரது ரசிகர்கள் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள்.

இனி கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை





இன்று நாம் செய்திகளில் தினமும் பார்க்கும் ஒரு செய்தி கற்பழிப்பு செய்தியாக தான் இருக்கிறது . அதில் கவலைபடும் செய்தியாக இதில் பல கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் இடம்பெற்று உள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் கல்லூரி மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது தான் என்று சிலர் கூறுகிறார்கள். பாலியல் வன்முறைகளுக்கு முக்கிய காரணமே செல்போன்கள் தான் என கருத்து நிலவி வருகிறது. எனவே கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறார்கள்.


ஆனால் இது சிறந்த யோசனையாக இருக்காது. செல்போன் பயன்படுத்துவதை தடுப்பதால் மட்டும் குற்றங்களை தடுத்து விட முடியாது. ஒரு பொருளில் சில நல்ல விஷயம் இருந்தால் அதில் தீமைகள் இருப்பதும் இயல்பு தான். அதற்காக அதனை பயன்படுத்தாமல் விட்டு விட முடியுமா. நாம் அதனை சரியாக ப்யன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். செல்போன் மாணவர்களுக்கு தீமைகளை விட நன்மைகளை தான் அதிகம் தருகிறது. எனவே அவர்களது எண்ணத்தில் மாற்றம் இருக்க வேண்டும். அதற்கு நம் கல்வி திட்டத்தில் மாற்றம் இருக்க வேண்டும்.


எனவே அரசே கொஞ்சம் மாற்றி யோசியுங்கள் !!

வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணம் விரைவில் இந்தியாவுக்கு வர இருக்கிறது





மோடி அரசு ஆட்சி வருவதற்கு முன் அவர்கள் கொடுத்த முக்கியமான வாக்குறுதி, அவர்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணம் விரைவில் மீட்கப்படும் என கூறினார்கள். அவர்கள் இந்த விஷயத்தில் வேகமான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால் எந்த வெளிப்படை தன்மையும் இல்லை . இதுவரை என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் என யாரிடமும் தெரிவிக்கவில்லை.


இன்று மக்களவையில் பட்ஜெட் குறித்த விவாதம் நடந்த போது மத்திய நிதி அமைச்சர் இது பற்றி பேசினார். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லை என்றார். விரைவில் அவை மீட்கப்படும் என்றார். கருப்பு பணம் உள்ள வங்கிகளிடம் அதனை டெபாசிட் செய்தவர்களின் விவரங்களை வாங்கி வருகிறோம் , அதனை உடனடியாக உச்ச நீதிமன்றத்திடம் அளித்து வருவதாக கூறினார்.


கருப்பு பணத்தை மீட்டால் மட்டும் போதாது , அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தண்டனை பெற்றார் கிரிக்கெட் வீரர் ஜடேஜா





இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுடன் சண்டையில் ஈடுபட்டதால் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆட்டத்தொகையில் பாதியை அபராதமாக செலுத்த உத்தரவிட்டு உள்ளது.

முதல் டெஸ்டின் 2 ஆம் நாள் ஆட்ட இடைவேளியின் போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்டர்சன் கோபமாகி ஜடேஜாவை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்திய அணி ஆண்டர்சன் மீது புகார் அளித்து இருந்தது. பதிலுக்கு இங்கிலாந்து அணி ஜடேஜா மீது புகார் அளித்தது. இது விசாரணையில் இருந்தது .

இதில் ஜடேஜாவுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்டர்சன் மீதான விசாரணை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுகிறார் ??





இந்தியாவுக்கு பல வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்றால் அது தோனியாக தான் இருக்கும். இவர் இந்திய அணிக்காக எல்லா ஐசிசி கோப்பைகளையும் பெற்று தந்து விட்டார். டெஸ்ட் போட்டிகளிளும் இந்திய அணிக்கு முதல் இடத்தை  பெற்று தந்தார். இப்படி பல சாதனைகளை கொண்ட தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக தகவல்கள் வருகின்றன .

லார்ட்ஸ் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு வெற்றி குறித்து தோனியிடம் கேட்ட போது லார்ட்ஸில் அவர் விளையாடும் கடைசி ஆட்டமாக இது இருக்கும் என்றார். இது அவர் விரைவில் ஓய்வு அறிவிப்பை அறிவிக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் இந்திய அணி இப்போது இருக்கும் நிலையில் அவர் ஓய்வு பெறுவது சரியான முடிவாக இருக்காது. இப்போது உள்ள இந்திய அணி இளம் வீரர்களை கொண்ட அணி ஆகும். அதனை வழிநடத்துவதற்கு தோனியை விட்டால் வேறு யாரும் இல்லை.


எனவே தோனியின் சேவை இந்தியாவுக்கு தேவை !!

விஜய் அவார்ட்ஸ் ஜோக்ஸ் படங்கள்

விஜய் அவார்டை கழுவி கழுவி ஊற்றிவிட்டு சேனல் மாற்றாமல் பார்ப்பது ஃபேஸ்புக் வழக்கம்.

விஜய் அவார்ட்சை வைத்து வந்து ஃபேஸ்புக் காமெடி படங்கள்

சிரிச்சிட்டு மறக்காம ஷேர் செய்யுங்கள்




















 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media