BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 13 October 2014

மைல் கல்லிலுள்ள இன்னொரு செய்தி



சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல, இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம். மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க...
 
  • மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை
  •  பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை
  • நீலம், வெள்ளை கலர் இருந்தால் மாவட்டசாலை
  • பிங்க் அல்லது கருப்பு, வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை.

அதிசயங்களை அறிந்து கொள்வோம்



  •  ரோலர் கோஸ்டர்சில் பயணம் செய்பவர்களுக்கு மூளையில் ரத்த    அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  •  நீல நிற கண்களை உடையவர்களுக்கு இருட்டில் மற்றவர்களைவிட பார்வைத்திறன் அதிகம்.
  • சிறிதளவு மதுவை தேளின் மீது விட்டால் போதும் அது மது மய்க்கமடைந்து இறந்து விடும்.
  • வெங்காயம் உரிக்கும் போது  சூயிங்கம் மென்றால் கண்ணில் கண்ணீர் வராது.
  • உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அதேப்போல் மின்சாரமும் 33 சதவீதம் அமெரிக்கர்கள் பயன்படுத்துகின்றனர்.
  • ஒருமணி நேரம் காதில் இயர்போன் அணிந்து பாட்டு கேட்டால் காதில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.
  • வலது கைப்பழக்கம் உள்ளவர்கள், இடது கைப்பழ்க்கம் உள்ளவர்களை விட சராசரியாக் 9 வருடங்கள் அதிகம் உயிர்வாழ்வர்.
  • ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தபட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.
  • நமது மூக்கு உடலில் “ஏர் கண்டீசன்” போன்று செயல்படுகிறது, இது உடலுக்குள் குளிர்க்காற்றை வெப்பப்படுத்தி அனுப்புகிறது. வெப்பகாற்றை குளிரூட்டி அனுப்புகிறது. காற்றில் உள்ள மாசுக்களைத் தடுத்து தூயக்காற்றை உள்ளே அனுப்பும் வடிகட்டியாக செயல்படுகிறது.
  • நமது மூளை சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரை விட, மிகவும் சக்தி வாய்ந்தது. மூளை 100 பில்லியன் நரம்பு செல்களால் உருவானதாகும்.
  • நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல்களை பார்க்கும் போது, நமது விழித்திரையானது சாதாரண நிலையை விட 45 சதவீத அளவில் விரிந்து விடுகிறது.
  • தேன் எளிதில் ஜீரணமாவதற்கு காரணம், அது ஏற்கனவே தேனிக்களால் ஜீரணமாக்கப்பட்டிருப்பதுதான்.
  • டைட்டானிக் கப்பல் தயாரிக்க வெறும் 7 மில்லியன் டாலர் மட்டும்தான், ஆனால் படம் எடுக்க 200 மில்லியன் டாலர் செலவானது.
  • மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத ஒரே ஒரு பகுதி கண்ணின் கருவிழி மட்டுமே.
  • உலக அளவில் மனிதனின் இறப்பிற்கு அதிகளவில் காரணமாக இருப்பது கொசுக்கள்தான்.

மாலை செய்திகள் - Latest News

1) வைகோ உள்ளிட்ட 9 பேர் மீது ஜெயலலிதாவின் முந்தைய‌ ஆட்சிகாலத்தில் போட்ட பொடா வழக்கு ரத்து- சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

POTA case on Vaiko and other 9 persons has been dismissed by Chennai High court

2) ஆந்திராவில் விசாகப்பட்டினம் அருகே கரை கடந்த ஹூட் ஹூட் புயலால் இது வரை 21 பேர் பலி

Hudhud damaged Vishaka and Odisha and 21 people are dead.

3) சென்னையில் சுப்ரமணிய சுவாமி வீடு முற்றுகை - த.வா.க தலைவர் வேல்முருகன் உட்பட பலர் கைது!

TVK leader Panruti Velmurugan arrested when protested against Subramaniya Swamy in his house in chennai


4) மீனவர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் - பழ.நெடுமாறன் 
இலங்கை அரசின் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மீனவர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் - பழ.நெடுமாறன் கருத்து

Pazha.Nedumaran requested government to give permissions to use Guns by the fishermen to protest against attacking Singhala navy 

5) ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற எவ்வித ஆட்சேபணையும் இல்லை - கர்நாடக அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ்

Karnataka minister K.J.George said that they do not have any objections to change the ADMK supremo J.Jayalalitha to chennai prisions.

6) பள்ளிகூட நோட்டுப் புத்தகங்களில் ஜெயலலிதா உருவப்படத்தை அகற்ற வேண்டும்! ராமதாஸ் அறிக்கை!

Dr.Ramadoss said that Jayalalitha name should be removed from the scholl children notebooks

7)
தமிழக அரசின் மின்வாரியம், போக்குவரத்து, கூட்டுறவு போன்ற பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவு

Tamilnadu state government announced 20% bonus for Electricity Board, Transport corporation, etc...

அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்



நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தலை முதல் பாதம் வரை மென்மை, பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் தேங்காய், நம்மை தன்னம்பிக்கையுடன் நடைபோட வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
  • வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும்.
  •  வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.

கிருமி தொற்றால் வரும் பாதிப்புக்கு தேன் சிறந்த மருந்து


கெட்டுப்போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப்போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும்கூட. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளதில் நீங்கி விடும். குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும்.

இது தவிர, சுவாசக்கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள், தாகம், வாந்தி-பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் போன்றவையும் குணமாகின்றன. இரவில் படுப்பதற்கு முன்பு பாலில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும். மறுநாள் நன்றாக பசிக்கவும் செய்யும். ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர்கள் பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது.

குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது. நீங்களும் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிட படிப்படியாக ஸ்லிம் ஆக மாறலாம்.

மருத்துவ குறிப்புகள்

  • பலா பிஞ்சினை அதிகமாக உண்பதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படும். பலாப் பழத்தை அளவுடன்தான் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால், வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் ஏற்படுத்தும்.
  • பலாப் பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். குடல்வால் அலற்சி அதாவது அப்பன்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப் பழத்தை சாப்பிடவே கூடாது.
  • பலாக் கொட்டையை சுட்டு சாப்பிட்டால் அல்லு மாந்தம், மலச்சிக்கல், புளியேப்பம், கல் போன்று வயிறு கட்டிப்படல் ஏற்படும்.
  • பலாப் பிஞ்சினை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.
  • சிறிது தண்ணீ­ரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டிகொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

  • வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
  • உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

  • வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

  • ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media