BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 8 May 2014

சிபிஐ கூடுதல் இயக்குநராகப் பொறுப்பேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் சஸ்பெண்ட் !!

சிபிஐ கூடுதல் இயக்குநராக பெண் ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் இன்று பொறுப்பேற்றார்.
( http://www.satrumun.net/2014/05/blog-post_1659.html )
ஆனால்  பொறுப்பேற்றுக்கொண்ட சில மணி நேரங்களில் அவரை பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதற்குக் காரணமாக சிபிஐ பணியில் சேருவதற்கான தமிழக அரசின் முறையான அனுமதியை அவர் பெறவில்லை என்று  கூறப்பட்டுள்ளது.

மோடி பொழுது போக்குகாக, தன் உறவினரின் டீக்கடையில் இருந்தவரே தவிர, உண்மையில் டீ விற்கவில்லை- காங்கிரஸ்


பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான மோடி தான் ஒரு காலத்தில் தேநீர் விற்றவர் என்று கூறி வருகிறார். ஆனால் உண்மையில் அவர் தேநீர் விற்றவர் அல்ல என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சக்திசிங் கோஹில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''மோடி ஒரு தேநீர் வியாபாரி அல்ல. அவர் பொழுது போக்கிற்காக தேநீர் கடைக்கு சென்றுள்ளார். அவருடைய உறவினர் ஒருவர் அந்த கேண்டீனை குத்தகைக்கு எடுத்திருந்தார். கஞ்சா விற்பனை செய்ததால் அந்த கடையின் உரிமம் பறிபோனது. இப்படியிருக்க, தேநீர் விற்பனை செய்ததாக மோடி பேசுவது மிகப்பெரிய பொய்யாகும். இந்த தகவலை ஒரு ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரெண்டு என்னிடம் தெரிவித்தார்” என்று கூறினார்.

சி.பி.ஐ கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்றார் அர்ச்சனா ராமசுந்தரம்


தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றிய அர்ச்சனா ராமசுந்தரம், மத்திய புலனாய்வு துறையின் (சி.பி.ஐ.) கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார். சி.பி.ஐ. அமைப்பின் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

1980-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் மதுரையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கி, நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., வேலூர் டி.ஐ.ஜி, உட்பட தமிழக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். இவர் ஏற்கனவே சி.பி.ஐ. யில் டி.ஐ.ஜி மற்றும் முதல் பெண் இணை-இயக்குனர் பொறுப்புகளை வகித்தவர். பல்வேறு பொருளாதார குற்றங்களை திறமையாக கையாண்டுள்ளார். குறிப்பாக முத்திரை தாள் மோசடி வழக்கை புலன் விசாரணை செய்து பல அதிகாரிகளின் பாராட்டையும் பெற்றவர். இந்த பதவிக்கு டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரத்தை, சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா பரிந்துரை செய்திருந்தார். இதனை ஏற்று மத்திய அமைச்சரவையில் பிரதமர் தலைமையிலான நியமன குழு இதற்கான ஒப்புதலை வழங்கியது.

இவரது நியமனத்தை எதிர்த்து பத்திரிகையாளர் வினித் நரேன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

தேர்தல் ஆணையத்தை எதிர்த்து பாஜக தர்ணா !!

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் . இன்று வாரணாசியில் மூன்று நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்து இருந்தனர் . ஆனால் தேர்தல் ஆணையம் கங்கை கரையில் வணங்கவும் , ஒரு சிறிய உணவகத்தில் கட்சி தொண்டர்களுடன் ஒரு கூட்டத்திற்கும் மட்டும் அனுமதி அளித்தனர் . அதுவும் இன்று அதிகாலையில் தான் தகவல் தந்ததால் அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்தது பாஜக . இதனால் இன்று வாரணாசியில் தர்ணா நடத்தினர் பாஜக கட்சியினர் .


இந்த தர்ணாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் . தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர் .

குஜராத்தில் 40 சதவீத மக்களுக்கு குடிப்பதற்கும், பாசனத்திற்கும் தண்ணீர் இல்லை- மோடியை சோனியா கடும் தாக்கு

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்தபோது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆந்திர முதல் மந்திரியை அவமானப்படுத்தினார் என்று பேசினார். அவரது கருத்து காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மோடி கீழ்த்தரமான அரசியல் செய்வதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரில் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

“வாஜ்பாய் மற்றும் பிற முன்னாள் பிரதமர்கள், அந்த பதவியின் கண்ணியத்தை கடைப்பிடித்தனர். ஆனால், ராஜீவ் காந்தியை மோடி அவமதித்து பேசியிருப்பது மிகவும் அற்பத்தனமானது.

நாட்டின் வளமான பண்பாடு மற்றும் உயர்பண்புடைமையை மோடி மனதில் கொள்ள வேண்டும். இதுபோன்ற கீழ்த்தரமான சிந்தனையும் வார்த்தைகளும் அவருக்கு தகுதியானதல்ல. இவ்வாறு அவர் பேசினால் அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பதை நீங்களே அறிந்துகொள்ள முடியும்.

குஜராத் வளர்ச்சியடைந்ததாக அவர் தவறான தகவல்களை கொடுத்து வருகிறார். அங்குள்ள 40 சதவீத மக்களுக்கு குடிப்பதற்கும் பாசனத்திற்கும் தண்ணீர் இல்லை” என்று சோனியா பேசினார்.

நிஞ்சா நத்தையோட மின்னல் வேகத்தை பாருங்கள்

நத்தை போல மெதுவா நடந்து வராதே என்று சொல்வார்கள், நத்தை என்றாலே அதனுடைய மெதுவான நகர்வு தான் நினைவுக்கு வரும், இங்கே மண்புழுவை வேட்டையாடும் நத்தையின் வேகத்தை கீழுள்ள வீடியோவில் பாருங்கள்




 இந்த நிஞ்சா நத்தையை லைக் செய்தால் இந்த பக்கத்தை ஷேர் செய்யுங்கள்

ஒண்டிக்கு ஒண்டி வரியா? மோடிக்கு சவால் விடும் அர்விந்த் கெஜ்ரிவால்

ஒண்டிக்கு ஒண்டி வரியா? மோடிக்கு சவால் விடும் அர்விந்த் கெஜ்ரிவால்

பொதுமக்கள் முன்னிலையில் பொது மேடையில் மக்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க மோடி தயாராக உள்ளாரா? காசி மக்கள்  இருவரிடமும் நேரடியாக கேள்விகள் கேட்கட்டும், இடத்தையும் நேரத்தையும் மோடியே சொல்லட்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மோடி பற்றிய செய்திகள், மோடியின் பேட்டிகள் எல்லாமே பெய்ட் நியூஸ் எனப்படும் காசு கொடுத்து போடப்படும் நிகழ்ச்சிகள் என்றும் பொதுமக்கள் முன்னிலையில் நேரடியாக இம்மாதிரி கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மோடி ஏன் தயங்குகிறார் என தமிழக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கேரளாவில் முழு அடைப்பு: தமிழக  பேருந்துகள் எல்லையில்  நிறுத்தம்

முல்லை பெரியாறு விவகாரத்தில், தமிழகத்திற்கு சாதகமாக  வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, தமிழக விவசாயிகள் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். ஆனால் கேரள பகுதியில் உள்ள விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்க்கும் வகையில் கேரள பகுதியில் உள்ள பல்வேறு அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அதன்படி இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. கேரள பகுதியில் பந்த் நீடிப்பதால் தமிழக பேருந்துகள் அனைத்தும் கூடலூர் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பயணிகள் நடந்து கேரள பகுதிக்கு செல்கின்றனர்.

குமுளி, இடுக்கி பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த கம்பம், கூடலூர், லோயர் கேம்ப் பகுதி தொழிலாளர்களே வேலை செய்து வருகின்றனர். ஆனால் இன்று பேருந்துகள், லாரி, ஆட்டோக்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் ஓடாததால் தொழிலாளர்கள் தவித்தனர். மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.

எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு முதலே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கேரளா பகுதியான வண்டிபெரியாறு, குமுளி, இடுக்கி மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அப்பகுதியில் பலத்த மழை பெய்துவருவதால் போராட்டக்காரர்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

கேரளாவில் உள்ள தேக்கடி, மூணாறு பகுதி சிறந்த சுற்றுலா தலமாகும். தற்போது முழு அடைப்பு காரணமாக இங்கு படகு சவாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன, ஓட்டல்களும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க நல்ல வாய்ப்பு உள்ளது: ப.சிதம்பரம்


கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க காங்கிரசுக்கு மிகவும் நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம், இதுபற்றி மேலும் கூறியதாவது:-

1989 தேர்தலில் 190 தொகுதிகளில் வெற்றி பெற்றும், எதிர்க்கட்சி வரிசையில் உட்கார தலைவர் ராஜீவ் காந்தி முடிவு செய்தார். அதற்குப் பிறகு ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலை இப்போது உள்ளது. காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமைக்க நல்ல வாய்ப்பு உள்ளது. எந்த கட்சியாக இருந்தாலும் நிலையான அரசை உருவாக்க முன்வருவதுடன், பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். பொறுப்பை தட்டிக்கழித்து தப்பிக்க முடியாது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நாட்டில் தேர்தல் நடத்த முடியாது. காங்கிரஸ் அந்த நிலையில் இருந்தால் ஆட்சியமைக்க முன்வரும்.

இது ஒரே ஒரு தேர்தல் அல்ல; பல்வேறு மாநிலங்களின் தேர்தல். பல்வேறு கட்சிகளின் இறுதி வெற்றி நிலவரங்களை வைத்து பார்க்க வேண்டும். காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பதை முன்கூட்டியே கணிக்கக் கூடாது. ஒவ்வொரு கட்சியும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன்தான் தேர்தலை சந்திக்கின்றன. காங்கிரசும் அதே நம்பிக்கையுடன் உள்ளது.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

நைஜீரியாவில் சுமார் 300 பள்ளி மாணவிகள் கடத்தல், அவர்களை மீட்க அமெரிக்கா, சீனா, பிரிட்டன் உதவி

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக ‘போகோஹாரம்’ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேற்கத்திய கலாசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவர்கள் விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவிகள் சுமார் 300 பேரை கடத்தி சென்றனர். கடந்த 3 வாரத்துக்கு மேலாகியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அப்பெண்களை, பாலியல் தொழிலுக்கு விற்கப்போவதாகவும் தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று போகோஹாரம் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த வடக்கு நைஜீரியாவில் ஹில்லி ருவோஷா என்ற கிராமத்தில் 2 வாகனங்கள் மற்றும் லாரிகளில் தீவிரவாதிகள் புகுந்தனர். வீடுகளுக்குள் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் வெளியே இழுத்து வந்தனர். பின்னர் இவர்களில் 8 சிறுமிகளை இழுத்து சென்று லாரிகளில் ஏற்றி கடத்தி சென்றனர். இதனால் பதட்டம் அடைந்த மக்கள் சிறுமிகளை மீட்க வாகனங்களின் பின்னால் ஓடினார்கள். ஆனால் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதிகள் தப்பி சென்று விட்டனர். கடத்தப்பட்ட சிறுமிகள் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள்.

இந்நிலையில்,  அமெரிக்காவின் உதவியை அதிபர் குட்லக் ஜோனாதன் நாடினார். அதை அமெரிக்க அதிபர் ஒபாமா ஏற்றுக் கொண்டார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘‘கடத்தப்பட்ட மாணவிகளை அடிமைகளாக விற்க போவதாக தீவிரவாதிகளின் தலைவர் பேசிய பேச்சு இதயத்தை நொறுக்குவது போல் உள்ளது. சர்வதேச அளவில் மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் இதுபோன்ற கொடூரத் தனத்தை சகித்து கொள்ள முடியாது. எனவே கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க அமெரிக்கா ராணுவ வீரர்களுடன் ஆன ஒரு குழுவை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது’’ என்றார்.

இளம் மாணவிகளை மீட்கும் பணியில் உயர் தொழில்நுட்ப உதவிகளை செய்ய உள்ளதாக சீனா மற்றும் பிரிட்டன் நாடுகளும் தெரிவித்துள்ளன. இது குறித்து சீன அரசு செய்தி நிறுவனம் சினுவா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நைஜீரிய இளம்பெண்களை மீட்கும் பணியில் சீனா உதவ இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விகாரத்தில் சீன செயற்கைகோள்கள் கண்டறியும் தகவல்களை நைஜீரிய பாதுகாப்பு ஏஜென்சிகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜோனத்தானிடம் சீன அதிபர் லீ கெகியாங் கூறியுள்ளார்.

இதேபோல் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும் நைஜீரியாவுக்கு உதவ முன்வந்துள்ளார்.

குண்டுவெடிப்புக்கும், வழுக்கை தலை நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிய வந்தது


சென்னை சென்ட்ரலில் உள்ள‌ நடைமேடை 9ல் நின்று கொண்டிருந்த பெங்களூர்-குவாத்திரயிலில் க்டந்த 1ம் தேதி  இரட்டை குண்டு வெடிப்பு நடந்தது. இது தொடர்பாக  தீவிரவாதிகளை பிடிப்பதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்தபோது, குண்டு வெடிப்பதற்கு 7 நிமிடங்களுக்கு முன்னர் வழுக்கை தலை நபர் ஒருவர் வேகமாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் காட்சி பதிவாகி இருந்தது. இவர் மீது சந்தேகம் இருப்பதாக சிபிசிஐடி ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.

விசாரணைக்குப்பின் ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் கூறும்போது, “கேமராவில் சிக்கிய சந்தேக நபர் யார் என்பதை உறுதி செய்துவிட்டோம். கேரளத்தை சேர்ந்த அவரது பெயர் உள்ளிட்ட மற்ற விவரங்களை வெளியிட விரும்பவில்லை. குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் அவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை” என்றார்.

நரேந்திர மோடி பச்சை பொய்களையும், பாதி உண்மைகளையும் வைத்து வியாபாரம் செய்பவர்-ஒமர் அப்துல்லா


 ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 திருத்தி அமைக்கப்படும் என்ற மோடியின் வாக்குறுதியை குறிப்பிட்டு, ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, அவ்வாறு நடந்தால் அது இந்தியா என்ற கூட்டமைப்புக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கும் இடையே பாலமாக உள்ள அரசியல் சாசனத்தை சிதைப்பதாகிவிடும் என தெரிவித்தார்.

அதே போல், புத்த மதத்தவர் அதிகம் வசிக்கும் லடாக் பகுதிக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்படும் என்ற பாஜகவின் வாக்குறுதியையும் ஒமர் கடுமையாக விமர்சித்துள்ளார். "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஏதாவது ஒரு பகுதியை பிரிக்கும் இத்தகைய முயற்சிகள் மோசமான விளைவுகளை தரும். இதனால் மாநிலத்தில் மத அமைதிக்கு பங்கம் ஏற்படும், உறவுகளில் விரிசல் ஏற்படும். பெரும்பாலான இந்திய மக்களுக்கு இத்தகைய விளைவுகள் குறித்து இன்னும் புரிதல் ஏற்படவில்லை என தோன்றுகிறது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த போதும், சட்டப்பிரிவு 370-ஐ திருத்தி அமைப்பது பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. ஆனாலும், கூட்டணி கட்சிகளின் கொள்கைளுக்கு மரியாதை அளித்து அந்த யோசனையை வாஜ்பாய் புறக்கணித்ததார். வாஜ்பாயும் - நரேந்திர மோடியும் வெவ்வேறு சிந்தனைகள் கொண்டவர்கள் என்றார். மேலும், வாஜ்பாய் - நரேந்திர மோடி இருவரையும் சமநிலையில் வைத்து ஒப்பிட்டு பார்க்கமுடியாது. மோடி பச்சை பொய்களையும், பாதி உண்மைகளையும் வைத்து வியாபாரம் செய்பவர் என்று ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

அமேதியில் தேர்தலில் காங்கிரசு முறைகேடு செய்தது - பாஜக , ஆம் ஆத்மி இருவரும் குற்றச்சாட்டு .

அமேதி தொகுதியில் நேற்று தேர்தல் முடிந்தது . இந்த தொகுதியில் காங்கிரசு சார்பாக ராகுல் காந்தியும் , ஆம் ஆத்மி சார்பாக குமார் விஸ்வாஷும் , பாஜக சார்பாக ஸ்மிருதி இராணியும் போட்டியிட்டனர் .

பாஜக சார்பாக பதிவு செய்த வழக்கில் , பிரியங்காவின் தோழி பிரித்தி சகாய் வாக்குச்சாவடி அருகே வந்து மக்களை காங்கிரசுக்கு வாக்களிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது . பிறகு பிரித்தி சகாய் அந்த தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டார் .

ஆம் ஆத்மி குமார் விஸ்வாஷ்  41,42 ஆம் பூத்தில் கள்ள ஓட்டு நடைபெறுவதாக புகார் அளித்தார் .

ஜல்லிக்கட்டு தடைக்கு கருப்பு கொடி காட்டி அலங்காநல்லூரில் மக்கள் எதிர்ப்பு


அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. ஆண்டுதோறும் தை 3-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடை பெற்று வந்தது. அதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என பல்லாயிரம் பேர் திரண்டு வந்தனர். தமிழக அரசே ஜல்லிக் கட்டு போட்டியை அலங்காநல்லூரில் நடத்தி வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து புதன்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வெளியான சிறிது நேரத்திலேயே ஜல்லிக்கட்டு கமிட்டி முன்னாள் உறுப்பினர் கோவிந்தராஜ் தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்போர் உள்பட பலர் அலங்காநல்லூர் மைதானத்துக்கு திரண்டு வந்து, தடையைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

அதன்பின் வாடிவாசல், ஜல்லிக்கட்டு மைதானம், பார்வையாளர்கள் கேலரி, வீதிகள் என பல இடங்களில் கருப்பு கொடியை ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலங்கா நல்லூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் வாக்காளர் நேற்று மீண்டும் வாக்களித்தார் .

அக்டோபர் 25,1951   ஆம் நடந்த முதல் தேர்தலில் முதலாக வாக்களித்தவர் ஷ்யாம் சரன் நெகி . முதல் தேர்தல்  கின்னவுர் ஊரில் நடந்தது .

நேற்று கின்னவுர் ஊரில் வாக்குப்பதிவு நடந்தது . நேற்றைய தேர்தலிலும் முதல் ஆளாக வந்து வாக்களித்தார் ஷ்யாம் சரன் நெகி .

இவரை தேர்தல் ஆணையம் மக்களிடம் வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தூதராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media