BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 28 January 2014

அழகிரி உருவ பொம்மைகள் சென்னையில் கொளுத்தப்பட்டது

கருணாநிதி, இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து, அழகிரி, தன்னிடம், ஸ்டாலின் இன்னும் 4 மாதங்களில் இறந்து விடுவார் என்றும், அவரை தகாத வார்த்தைகளை கூறி திட்டியதாகவும், தெரிவித்து இருந்தார். அவருடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை அடுத்து, ஸ்டாலின் ஆதரவாளர்கள், அழகிரி மேல் ஆத்திரம் அடைந்தனர். இன்று சென்னையில் சில இடங்களில், ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஒரு ஐம்பது பேர், அழகிரியின் உருவ பொம்மைகளை கொளுத்தினர். மேலும், அழகிரியை எதிர்த்து அவதூறான வார்த்தைகளில் கோஷம் எழுப்பினர். உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்த போவதாக, முன்னதாகவே ஊடகங்களுக்கு அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

தன் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்த அழகிரி, "கலைஞர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும், நாங்கள் எல்லாம் இறந்த பின்பு தான், அவர் இந்த உலகத்தை விட்டு போக வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே ஆசை.",  என்றும் கூறினார்.

தலைவருக்கு முன்னாடி நாங்கள் சாகணும் - அழகிரி ஆதங்க பேட்டி



ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களில் சாகப்போகிறார் என்று அழகிரி கருணாநிதியிடம் கூறியதாகவும் தகாத வார்த்தைகளால் வெறுப்புடன் பேசியதாகவும் திமுக தலைவர் கருணாநிதி தன் மகன் மீது குற்றம் சுமத்தி இன்று மாலை சென்னையில் பேட்டி அளித்தார்.

சென்னையில் முஸ்லிம்கள் நடத்திய சிறை நிரப்பு போராட்டம்

                                                 


முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பில் மத்தியில் 10 சதவீதமும், மாநிலத்தில் 7 சதவீதமும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை எழும்பூரில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதையொட்டி இன்று நடத்தப்பட்ட அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆயிரக்கணக்கான பேர் திரண்டனர்.  போராட்டத்தில் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டம் அதிகமானதால் லட்சுமி ருக்குமணி சாலையில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது. இதனால் எழும்பூரை சுற்றியுள்ள பிறசாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாநில தலைவர் ஜெய்னூல் ஆபுதீன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது



ஆம் ஆத்மி கட்சி, ஒரு கோடியே ஐந்து லட்சம் உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கட்சி ஆரம்பித்த ஒரே ஆண்டில் டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி, பிற மாநிலங்களிலும் தனது கட்சியினைப் பலப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஜனவரி 26ம் தேதிக்குள் தங்களது கட்சியில் சுமார் ஒருகோடி உறுப்பினர்களை இணைப்பதை இலக்காகக் கொண்டு செயல் பட்டு வந்தது. கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 98.46 லட்சமாக இருந்தது. ஏற்கனவே இருந்த பழைய உறுப்பினர்கள் எண்ணிக்கையையும் சேர்த்து, மொத்தம் ஒரு கோடியே ஐந்து லட்சம் பேர் கட்சியில் இருப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மியின் தற்போதைய உறுப்பினர்களில் அதிகமானவர்கள் கிராமப் புறத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆம் ஆத்மியின் கொள்கைகளை பின்பற்றாதவர்கள் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப் படுவர் என ஆம் ஆத்மி எச்சரித்துள்ளது. 

புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடரும் எனவும் ஆம் ஆத்மி கூறியுள்ளது.

யாராவது அப்பாவை அடிப்பாங்களா? உங்க அப்பாவை நீங்க அடிப்பீங்களா? - மு.க.அழகிரி ஆதங்கம்

இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கருணாநிதி, தன்னைப் பற்றியும் ஸ்டாலினைப் பற்றியும் வெறுக்கத்தக்க வகையில் அழகிரி பேசினார் என்றும் ஸ்டாலின் இன்னும் 3 மாதத்தில் இறந்து போய்விடுவார் என்றும் அழகிரி கூறியதை எப்படி ஒரு தகப்பனார் பொறுத்துக் கொள்வார் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். அந்த குற்றச்சாட்டிற்கு, பதிலடி கொடுத்திருக்கிறார் அழகிரி.

"என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு பொதுச் செயலாளர் அன்று ஒரு காரணம் கூறினார். இன்று, தலைவர் ஒரு காரணம் கூறுகிறார். அப்படியென்றால், அன்பழகன் கூறியது தவறா? ஸ்டாலினை பற்றி பேசியதால் நீக்கம் என்கிறார்கள். ஸ்டாலின் எனது தம்பிதானே. எனது தம்பியை பற்றி நான் பேசக்கூடாதா? ஸ்டாலினை பற்றி பேசினால் கட்சியில் இருந்து நீக்கி விடுவார்களா? சரி, இந்த விளக்கத்தை ஏன் நான் பேசிய அன்றே சொல்லவில்லை. இன்று ஏன் சொல்கிறார்கள் என மக்கள் கேட்கிறார்கள். ",  என்று அழகிரி கூறியுள்ளார்.

உங்கள் அப்பாவை அடித்தீர்கள் என்று சொல்லபடுகிறதே? என்ற கேள்விக்கு, "யாராவது அப்பாவை அடிப்பாங்களா? உங்க அப்பாவை நீங்க அடிப்பீங்களா? என்று பதில் கேள்வி கேட்டிருந்தார்.

ஸ்டாலின் செத்துவிடுவார் என கருணாநிதியிடம் கூறிய மு.க.அழகிரி

ஸ்டாலின் செத்துவிடுவார் என கருணாநிதியிடம் கூறிய மு.க.அழகிரி

மகன் அழகிரி மீது கருணாநிதியே கூறிய கடும் குற்றச்சாட்டு

கருணாநிதியை கண்ணத்தில் அறைந்தாரா அழகிரி?

இன்று பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்த பல அதிர்ச்சி தகவல்கள்

கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி சில நாட்களுக்கு முன் திமுகவை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார், வழக்கமாக ஸ்டாலின் அழகிரி சகோதர யுத்தம் தான் நடைபெறும், ஆனால் இம்முறை கருணாநிதி அழகிரி அப்பா-மகன் யுத்தம் நடந்துள்ளது. ஹாங்காங்கில் விடுமுறை முடித்து வந்த அழகிரி நேராக கோபாலபுரம் சென்று தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது குறித்து கருணாநிதியுடன் வாதிட்டதாக தெரியவந்தது. உடனடியாக அழகிரி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

இது முன்பு நடந்ததை போல லுல்லுலாயி சஸ்பெண்ட் ஆக இல்லாமல் இருந்ததும் அழகிரியும் தொடர்ந்து பேட்டிகள் கொடுப்பதும் நேரடியாகவே கருணாநிதியை ப்லாக்மெயில் செய்கிறார்கள் என்றும்,திமுக தோற்கும் என்றும் பேட்டிகள் அளித்ததும் கழக காசில் முறைகேடுகள் நடக்கின்றன, ஆயிரம் கோடி எங்கே என்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை குறிவைத்து பேசியதை அடுத்து சண்டை உண்மையான சண்டை தான் என்று உணரப்பட்டது.

ஆனால் அன்று அதிகாலையில் அழகிரி-கருணாநிதி சந்திப்பில் என்ன நடந்தது என்று தகவல்கள் கிசுகிசுக்களாக பரவின, தினமணி போன்ற பத்திரிக்கையிலேயே பெயர் குறிப்பிடாமல் ஆனால் புரிந்து கொளும் படியாக திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி கண்ணத்தில் அறைந்துவிட்டார் என்று பொருளில் ஒரு பத்தி செய்தி வெளியானது, இது குறித்து செய்தியின் உண்மை தன்மையை உறுதி செய்ய முயன்றபோது குழப்பமான தகவல்கள் கிடைத்ததால் நடந்ததை சற்றுமுன் செய்திகளால் உறுதியாக கூற முடியவில்லை

இந்நிலையில் இன்று கருணாநிதியின் பேட்டி வெளியாகியுள்ளது, அதில் தான் மு.க.அழகிரி தன்னை ஒருமையில் திட்டியதாகவும், மு.க.ஸ்டாலின் இன்னும் சில மாதங்களில் செத்துவிடுவார் என்று கூறியதாகவும் தன் மகன் மீதே குற்றம் சாட்டியுள்ளார். வைகோவை கட்சியை விட்டு நீக்கம் செய்ய முனைந்த போதும் கருணாநிதியை வைகோவுக்கு ஆதரவாக புலிகள் கொலை செய்ய திட்டமிட்டதாக கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அளித்த பேட்டியில்

மு.க.அழகிரிக்கு  தி.மு. கழகத்தின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீது ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது என்றும் உச்ச கட்டமாக கடந்த 24ஆம் தேதியன்று விடியற் காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றி புகார் கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத் தக்க வார்த்தைகளை யெல்லாம் மளமளவென்று பேசி என்னைக் கொதிப்படைய
வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார்.

எந்த தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று யாரும் கருத முடியாது. நான் கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக் கொண்டேன்.

மேலும் அழகிரியின் ஆட்கள் பிசிஆர் கட்சியிலே உள்ள மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மூர்த்தி அவர்கள் மீது பி.சி.ஆர். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலீசாருக்கு எழுதிக் கொடுத்தவரை, கட்சித் தலைவர் என்ற முறையில் நான் விசாரிப்பதும், கண்டிப்பதும் எப்படி குற்றமாகும் என்பதையும் உங்கள் யோசனைக்கே விட்டு விடுகிறேன்.

அவர் மீது கட்சியின் சட்டதிட்டபடி பொதுச் செயலாளர் அவர்கள் கண்டனமும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்

என் மகன்கள் ஸ்டாலின் ஆனாலும், அழகிரி ஆனாலும் மகன்கள் என்ற உறவு நிலையிலே அல்ல; கட்சி உறுப்பினர்கள் என்ற முறையிலே கூட அவர்களில் ஒருவர் நான்கு மாதங்களில் செத்து விடுவார் என்று கட்சித் தலைவனாகிய எனக்கு முன்னாலேயே உரத்த குரலில், ஆரூடம் கணிப்பது யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

அதிமுக விற்கும், ஸ்டாலினுக்கும் ரகசிய உடன்பாடு உண்டு- அழகிரி



திமுக கட்சியின் சொத்து கணக்கில் ஏகப்பட்ட முறைகேடுகள் இருக்கிறது என்றும், அதை பற்றி தான் விரைவில் வெளியிட போவதாகவும் கூறியிருக்கிறார் அழகிரி. மேலும்  ஊடகங்களிடம் பேசிய அவர், "திமுக தலைவரை நான் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக,  ஸ்டாலினுடன் இருக்கும் தரக்குறைவான ஆட்கள் வதந்திகளை பரப்புகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு என்மீதும், என் குடும்பத்தை சேர்ந்தோர் மீதும்  வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால் ஸ்டாலின் மீது வழக்கு போடப்பட்டதா? அவருக்கும், அதிமுகவிற்கும் ரகசிய உடன்பாடுகள் இருக்கின்றது. ஸ்டாலினும் அந்த அம்மாவை விமர்சித்து அல்லது அவருக்கு எதிராக ஏதாவது பேசியிருப்பாரா? என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் அழகிரி.

"என்மீதும், என் ஆதரவாளர்கள் மீதும் புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கும் பேராசிரியர், ஸ்டாலின் மீதான புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பதில்லை?" என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் அழகிரி.

சென்னையில் ‘பஸ் டே’ கொண்டாட்டத்தில் மாணவர்கள், காவல் துறை இடையே மோதல்

அயனாவரத்தில் இருந்து பெசன்ட்நகருக்கு 23-சி மாநகரப் பேருந்து நேற்று காலை சென்று கொண்டிருந்தது. பேருந்து, அண்ணா மேம்பாலம் அருகே வந்த போது,  அப்போது அங் கிருந்த நந்தனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பஸ்ஸை மறித்து, பயணிகளை கீழே இறக்கிவிட்ட னர். பின்னர் மாலைகள் மற்றும் பெயர் பலகைகளுடன் 'பஸ் டே' கொண்டாட அனைவரும் பேருந்தில் ஏறினர். பேருந்துக்கு முன்பு மாலைகளை கட்டினர்.

அப்பொழுது அங்கு வந்த போலீசார், பஸ் தினம் கொண்டாட நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும், கலைந்து செல்லுங்கள் என்றும் மாணவர்களிடம் தெரிவித்தனர். மாணவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நடந்தது, அது முற்றிய நிலையில் மாணவர்களுக்கும், போலீஸாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் 100-க்கும் மேற்பட்ட போலீஸாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதையொட்டி, அண்ணா சாலையில் மாணவர்கள் திடீரென்று கீழே படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, போலீஸ் உயர் அதிகாரிகள் மாணவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த மோதல் சம்பவத்தால் அண்ணாசாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாணவர்கள் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை சரியென நினைத்தால், 'லைக்' செய்யுங்கள். இல்லையென, நினைத்தால் உங்கள் கருத்தை 'கமென்ட்' செய்யுங்கள்.

"இந்த குடும்பத்தில் நானா பிறக்க வேண்டும் என்று விரும்பினேன்?" , ராகுல் காந்தி

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்து இருந்தார். அதில் தான் வாரிசு அரசியலை எதிர்ப்பதாக கூறியிருந்தார். "இந்த குடும்பத்தில் நானா பிறக்க வேண்டும் என்று விரும்பினேன்?" என்று கேட்டிருந்தார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தான் அச்சப்படவில்லை என்றும் கூறினார்.  1984ல் நடந்த சீக்கியர்கள் படுகொலையில் சில காங்கிரஸாருக்கு தொடர்பு உண்டு என்றும், அப்பொழுது இருந்த ராஜீவ் காந்தி அரசு அந்த படுகொலைகளை தடுக்க முயன்றது என்றும்,  ஆனால் 2002ல் நடந்த கலவரத்தை நிகழ்த்தியதே மோடி தான் என்றும் குற்றம் சாட்டினார் ராகுல் காந்தி.

"பல மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வென்ற போது என்னை குறிப்பிடுவதில்லை. ஆனால் சில மாநிலங்களில் தோற்கும் போது என்னை பொறுப்பாக்குகின்றனர். 2014 தேர்தலில் காங்கிரஸ் வெல்லாவிட்டால் நானே முழு பொறுப்பு", என்றும் அப்பேட்டியில் கூறியிருந்தார்.

ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்பு தரவே, காங்கிரஸ் அவர்களுக்கு ஆதரவு தந்தது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

காங்கிரஸ் ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் வளர்ச்சியை கொண்டு வந்துள்ளதாகவும், 2014 தேர்தலில், காங்கிரஸ் நிச்சயம் வெல்லும் என்றும் கூறினார், ராகுல் காந்தி.

"நல்ல ஜோக் குடியரசு தலைவரே!" என பிரணாப்புக்கு பதிலடி கொடுத்த‌ ஆம் ஆத்மி அமைச்சர்

ஆம் ஆத்மி கட்சி, கடமை தவறியதாக கூறி சில காவல் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, டெல்லியில் 30 மணி நேர தர்ணாவில் ஈடுப்பட்டது. பின்னர், துணை நிலை ஆளுநர் அளித்த உறுதிமொழியை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

இந்நிலையில், கடந்த 25-ந் தேதி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு ஆற்றிய குடியரசு தின உரையில், ‘விளம்பரம் தேடும் நோக்கத்தில் நடத்தப்படும் கலகங்கள், ஆட்சி திறன் ஆகாது' என கேஜ்ரிவாலின் போராட்டத்தை மறைமுகமாக‌ விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார், டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி. "ஆம் ஆத்மியின் செயல்கள் கலகம் என்றால், 1984 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்களை குடியரசு தலைவர் என்னவென்று சொல்வார்? போராட்டங்கள் என்றா? நல்ல ஜோக், குடியரசுத் தலைவர் அவர்களே' எனத் தன் டிவிட்டர் வலைதள பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.

இப்பதிவிற்கு எதிர்ப்புகள் பல வந்ததாலும், சர்ச்சைக்குள்ளானதாலும், பதிவை சில மணி நேரங்களிலேயே நீக்கி விட்டார் சோம்நாத் பாரதி.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media