BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 17 July 2014

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மீது தாக்குதல் , 295 பேரின் நிலை என்ன ???




மலேசியன் ஏர்லைன்ஸை சேர்ந்த போயிங் 777 என்னும் விமானம் நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டெர்டம் என்னும் ஊரில் இருந்து மலேசியாவில் உள்ள கோலாலம்பூரை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாரதவிதமாக இந்த விமானத்தில் விபத்து நடந்து உள்ளது. இதில் 280 பயணிகள் மற்றும் விமானத்தில் பணிபுரிபவர்கள் 15 பேர் உள்ளார்கள். இந்த விபத்து உக்ரைனில் நடந்து உள்ளது.


இது ரஷிய எல்லைக்கு 50 கிமீ முன்னாள் நடந்து உள்ளது. நன்றாக சென்று கொண்டு இருந்த விமானம் இங்கு வந்ததும் தாழ்வாக பறந்தது, பின்பு தீப்பிடித்து வெடித்து சிதறியது. இந்த விமானம் ஏதோ ஒரு படையால் சுட்டு தாக்கப்பட்டு உள்ளதை உக்ரைன் அரசு உறுதிபடுத்தி உள்ளது. எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் வரவில்லை.



இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

லெஸ்பியன் தோழி பிரிந்ததால் ஆத்திரம், ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பெண், குமரி மாவட்டத்தில் நடந்த கூத்து- தடுக்க கோரி வழக்கு பதிவு
http://www.satrumun.net/2014/07/lesbian-partner-angry-and-spread-photos.html

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மீண்டும் விபத்து , 280 பயணிகளின் நிலை என்ன ?
http://www.satrumun.net/2014/07/280.html

உண்மையை சொன்னதற்காக பெண் டாக்டரின் ஆடைகளை அவிழ்த்த கும்பல்
http://www.satrumun.net/2014/07/blog-post_828.html

விஜய்க்கு வழங்கப்பட்ட அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தில் புதிய திருப்பம்
http://www.satrumun.net/2014/07/blog-post_2412.html

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு!!, அதை தான் டிவியிலேயே பார்த்துவிட்டோமே
http://www.satrumun.net/2014/07/blog-post_7371.html

தினம் ஒரு கின்னஸ் சாதனை : உலகிலே நீளமான நெகங்கள் யாருக்கு - இவரெல்லாம் எப்படி பாஸ் சாப்பிடுவாரு?
http://www.satrumun.net/2014/07/blog-post_7069.html

அடுத்த சூப்பர் ஸ்டார்’ பட்டமளிப்பு விழா : அஜித்தை அழைக்க விரும்பாத விஜய்!
http://goo.gl/mTbmOG

ஒபாமாவிற்கு விஷம் கொடுத்த நடிகைக்கு சிறை தண்டனை, எத்தனை ஆண்டுகள் என்று படிக்க கிளிக்கவும்
http://www.satrumun.net/2014/07/18_17.html

பிரிக்ஸ் வங்கி உருவானது , மகிழ்ச்சியில் மோடி
http://www.satrumun.net/2014/07/blog-post_4786.html

ஜடேஜா - ஆண்டர்சன் விவகாரம் நடந்தது என்ன ??
http://www.satrumun.net/2014/07/blog-post_9446.html

மரண பயத்தை காட்டிய டெல்லி மெட்ரோ ரயில்
http://www.satrumun.net/2014/07/blog-post_8828.html

கால்பந்து தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் : ஸ்பெயின், போர்ச்சுகல் , இங்கிலாந்து அணிகள் கடும் சரிவு
http://www.satrumun.net/2014/07/blog-post_2340.html

விவசாயி ஆகி விடாதே தற்கொலைக்கு முன் ஒரு தந்தையின் கடைசி வார்த்தைகள்
http://www.satrumun.net/2014/07/blog-post_6048.html

லெஸ்பியன் தோழி பிரிந்ததால் ஆத்திரம், ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பெண், குமரி மாவட்டத்தில் நடந்த கூத்து


குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த 20 வயது  பெண்கள் இருவரும் பள்ளியில் படிக்கும்  போதே இணைபிரியா தோழிகளாக இருந்தனர்,  இருவரும் ஒரே பொறியியல் கல்லூரியில்  சேர்ந்தனர். இந்நிலையில், இவ்விரு பெண்களுக்கும் லெஸ்பியன் உறவு ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் லெஸ்பியன் உறவு கொண்டு வந்துள்ளனர்.  இந்நிலையில், ஒரு பெண்ணின் நடவடிக்கையில் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.  பெற்றோர்கள் கண்காணித்ததில் மற்றொரு பெண்ணுடன் லெஸ்பியன் உறவு பழக்கம் இருப்பது தெரிய வந்ததை அடுத்து தங்களது மகளை கண்டித்தனர். மேலும் அப்பெண்ணை வேறு கல்லூரிக்கு  மாற்றி விடுதியில் தங்க வைத்தனர். இருந்தாலும் இவ்விரு பெண்களிடையே யாருக்கும் தெரியாமல் லெஸ்பியன் பழக்கம் தொடர்ந்துள்ளது.

இதனிடையே பெற்றோர்கள் விடுதியில் இருந்து அந்த பெண்ணை அழைத்து வந்து பக்குவமாக பேசி மனதை மாற்றிவிட்டனர், இதனால் இப்பெண் தன்னுடையை தோழியிடமிருந்து விலகினார், இதனால் அதிர்ச்சி அடைந்த தோழி அப்பெண்ணின் வீட்டிற்கே சென்று தகராறில் ஈடுபட்டார், மேலும் பெற்றோர் பேச்சை கேட்டுக் கொண்டு தன்னை ஒதுக்கிய தனது லெஸ்பியன் பார்ட்னரை பழிவாங்க நினைத்தார், இந்த பெண்கள் இருவரும் லெஸ்பியன் உறவில் இருந்த போது எடுத்த ஆபாச புகைப்படங்களை பேஸ்புக் மற்றும் சில  இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தோழியின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் செய்தனர். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை  எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து தனது படங்களை இணையதளத்தில்  வெளியிட்ட அப்பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் தோழி வழக்கு தொடர்ந்துள்ளார். 

உண்மையை சொன்னதற்காக பெண் டாக்டரின் ஆடைகளை அவிழ்த்த கேவலமான கும்பல்




பெங்களூரில் உள்ள ஒரு அங்கன்வாடியில் வழங்கப்பட்டு வரும் உணவு தரமற்றவையாக இருந்து வந்தது. இது குறித்து அங்கே இருந்த சுகாதார மையத்தில் உள்ள ஒரு பெண் டாக்டர் இது குறித்து அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவரிடம் புகார் கூறினார்கள். ஆனால் இதனை அந்த அங்கன்வாடி தலைவர் நிராகரித்தார்.




அதன் பின்பு ஒரு கும்பல் வந்து அந்த டாக்டரின் ஆடைகளை அவிழ்த்து அவரை அவமானபடுத்தி உள்ளார்கள். இதனால் அந்த டாக்டர் மன வேதனை அடைந்து உள்ளார். இது குறித்து அவர் போலீஸிடம் புகார் கொடுத்து உள்ளார். போலீஸார் அந்த கும்பலில் இருந்த 5 பெண்களை கைது செய்து உள்ளார்கள்.
அவர்கள் மீது ஐபிசி 354 இன் கீழ் வழ்க்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.


நாம் எப்போது தான் திருந்த போகிறோம் என தெரியவில்லை. திருட்டு , ஊழல், கொலை, கற்பழிப்பு போன்றவற்றில் இருந்து இந்த பாரத நாடு என்று விடுபடுமோ என்று தெரியவில்லை. கடவுளாக மதிக்கப்பட வேண்டிய டாக்டருக்கே இந்த நிலைமை.



இன்று முதல் தினம் ஒரு கின்னஸ் சாதனை : உலகிலே நீளமான நெகங்கள் யாருக்கு




நாம் நம் நெகங்களை பராமரிப்பதற்கு என்று அவ்வளவாக அக்கறை எடுத்து கொள்வதில்லை . ஆனால் அது ஒரு முக்கியமான வேலை ஆகும். நம் நெகங்களை எப்போதும் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். அது தான் உடலுக்கு நல்லது. நம் பெற்றோர்கள் நாம் நெகங்களை அதிகமாக வைத்து இருந்தால் நம்மை திட்டுவார்கள் . ஆனால் இங்கே ஒருவர் 9.85 மீட்டருக்கு தனது நெகங்களை வைத்து உள்ளார், அதற்காக யாரும் அவரை திட்டவில்லை. பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

அவர் வேறு யாரும் இல்லை, அவர் தான் மெல்வின் போத்தே . இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். இவருக்கு உலகிலேயே நீளமான நெகங்கள் உள்ளன. இவரது நெகங்கள் 9.85 மீட்டர் உள்ளது . இதன் மூலம் இவர் ஒரு கின்னஸ் சாதனை புரிந்து உள்ளார். இவருக்கு நமது பாராட்டுகள். இவர் 2009 ஆம் ஆண்டு இறந்து விட்டார்.

கேப்டன் பொறுப்பு : தோனிக்கு டிராவிட் ஆதரவு




கேப்டன் பொறுப்புக்கு தோனி தகுதியானவர் இல்லை , கோலி தான் தகுதியானவர் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஐயன் சேப்பல் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டிராவிட் கூறி இருந்தார். கேப்டன் பொறுப்பிற்கு தோனி தான் தகுதியானவர் , கோலி கேப்டன் ஆவதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்றார்.


கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி 12 ஒவர்சீஸ் டெஸ்டுகளில் விளையாடி உள்ளது . அதில் 10 இல் தோல்வியையும் 2இல் டிராவும் கண்டு உள்ளது. ஆனால் இதுவரை ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை. இதற்கு முக்கிய காரணம் தோனி தான் என கருத்து நிலவுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் டிராவிட் தோனிக்கு ஆதரவாக உள்ளார்.


ஒரு இளம் அணியை வைத்து கொண்டு தோனி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். விரைவில் அவர் வெற்றி பாதையில் செல்வார் என கூறினார். இங்கிலாந்தில் உள்ள ஆடுகளத்திற்கு ஏற்ப அஷ்வின்னுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

அந்த ஆண்டவனே நம்ம பக்கம் தான் என மகிழ்ச்சியில் இருக்கிறார் தோனி !!

ஒபாமாவிற்கு விஷம் கொடுத்த நடிகைக்கு 18 ஆண்டுகள் சிறை




அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு கடந்த ஆண்டு மே மாதம் ஒரு விஷம் தடவிய கடிதம் வந்தது. அதனை அனுப்பியவர்  ஷனான் கெஸ் ரிச்சர்ட்சன் என்னும் 36 வயது மிக்க நடிகை ஆவார். இவர் டிவி தொடர்களில் நடித்து வருபவர். இந்த கடிதத்தில் ரிசின் என்னும் கொடிய வகை விஷம்  இருந்தது. இதனால் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் அந்த விஷத்தை அவர் வைத்து இருந்தது உண்மை தான் , ஆனால் அதனை அவர் தடவவில்லை என்றும் அதனை தடவியவர் அவர் கணவர் என்றும் குற்றம்சாட்டினார்.


இவ்வாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெரிவித்தார். அதன் பிறகு விசாரணை நடந்து வந்தது . விசாரணையில் அவர் கூறியது பொய் என்பது தெரிய வந்தது. விஷத்தையும் அவர் தான் தடவி உள்ளார். இவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

சோனியா காந்தியின் பேரனும் பாராளுமன்றத்திற்கு வந்தார்




காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தின் ஆதிக்கம் தான் தொடர்ந்து வருகிறது . அதனை ஆழ்ந்தவர்கள் முழுவதும் நேரு குடுமபத்தினர் தான். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி , ராகுல் காந்தியை தொடர்ந்து 5 வது தலைமுறையாக பிரியங்கா காந்தியின் மகன் ரைஹான் நேற்று  பாராளுமன்றத்திற்கு வந்தார். இவர் பிரியங்கா காந்தி வதோராவின் மகன் ஆவார்.


இவர் அவை நடவடிக்கைகளை பார்ப்பதற்காக தனது மூன்று நண்பர்களுடன் வந்து இருந்தார். அவருக்கு இப்போது தான் 13 வயது ஆகிறது. அவர் அங்கு இருந்த பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து அமைதியாக அவை நடவடிக்கைகளை கவனித்தார். வெளியே செல்வதற்கு முன் பாட்டி சோனியா காந்தியை சந்தித்து பேசி விட்டு சென்றார். இவர் வந்த போது இவர் மாமா ராகுல் காந்தி அவையில் இல்லை. இவர் வந்ததால் காங்கிரஸ் எம்.பி. க்கள் பரபரப்புடன் காணப்பட்டனர்.

அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தில் புதிய திருப்பம்




கடந்த மாதம் குமுதம் நாளிதழ் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை யாருக்கு கொடுக்கலாம் என ஒரு மினி தேர்தலை நடத்தியது. இதில் அஜித்தை பின்னுக்கு தள்ளி இளைய தளபதி விஜய் முதல் இடம் பிடித்தார். ஆனால் இதில் உண்மையில் வென்றது அஜித் தான் இது ஒரு பொய்யான தகவல் என சர்ச்சை வெளி வந்தது. இதனால் விஜய் அஜித் ரசிகர்களுக்கு சண்டை நடந்து வந்தது. விஜய் மீது பலருக்கு ஒரு தவறான கருத்து நிலவியது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக விஜய் அவார்ட்ஸில் விஜய்யின் பேச்சு இருந்தது.


நான் என்றைக்குமே பழையதை மறக்காதவன். எனக்கு இளைய தளபதி பட்டமே போதும் , தான் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படவில்லை என்றார். ஆனால் இப்போது விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி மதுரையில் ஒரு பிராம்மண்ட விழாவை நடத்தி அதில் விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுக்க இருக்கிறார்கள். இதில் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லை.

இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் யார் என்றால் அது குமுதம் நாளிதழ் தான். பிரச்சனை வரும் என தெரிந்தும் தேவை இல்லாமல் இந்த போட்டியை நடத்தி விட்டு இப்போது அமைதி ஆகி விட்டது.

மரண பயத்தை காட்டிய டெல்லி மெட்ரோ ரயில்




இன்று டெல்லியில் ஒரு மெட்ரோ ரயில் அதன் பயணிகளுக்கு மரண பயத்தை காட்டி விட்டது. ஹூடா சிட்டி சென்டர் மற்றும் ஜெஹாங்கிர் நகர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்பட்ட ரயில்களில் கதவுகள் மூடப்படவில்லை . இதனால் பயணிகள் மிகவும் பயந்து விட்டனர். மெட்ரோ ரயில் என்பது சாதாரண ரயிகளை போன்று இருக்காது. அது செல்லும் வேகத்திற்கு வெளியே எட்டி பார்ப்பதற்கே பயமாக இருக்கும்.


இது குறித்து பயணிகள் புகார் அளித்தனர். பின்னர் அதனை பரிசோதித்த ரயில்வே அதிகாரிகள்  , சில தொழில்நுட்ப காரணங்களால் இவ்வாறு நடைபெற்று உள்ளதாக கூறினார்கள். அது சரி செய்யப்படும் என்றார்கள். இந்த ரயிலை ஓட்டிய ஒட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.


கூட்டம் ஒவரா இருக்கறதுனாள புட் போடு அடிக்க மூடாம வச்சிருப்பாங்க போல.

கால்பந்து தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் : ஸ்பெயின், போர்ச்சுகல் , இங்கிலாந்து அணிகள் கடும் சரிவு





உலக கோப்பைக்கு பிறகு முதன் முதலாக கால்பந்து தரவரிசை இன்று வெளியிடப்பட்டது . இதில் கோப்பையை வென்ற ஜெர்மனி அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. இறுதி போட்டியில் தோற்ற அர்ஜெண்டினா அணி 2வது இடத்திறகு முன்னேறியது. அரையிறுதியில் தோல்வி கண்ட நெதர்லாந்து அணி 3 வது இடத்திறகு முன்னேறியது. இதுவரை முதல் இடத்தில் இருந்து வந்த ஸ்பெயின் அணி முதல் சுற்றுளையே வெளியேறியதால் அந்த அணி 8 வது இடத்திற்கு சென்றது. முதல் சுற்றுளையே வெளியேறிய போர்ச்சுகல் அணி 11 வது இடத்திற்கும், இத்தாலி அணி 14 வது இடத்திற்கும், இங்கிலாந்து அணி 20 வது இடத்திற்கு சென்றது.


கால்பந்து உலக கோப்பையில் பங்கேறகாவிட்டாலும் இந்திய அணி 151 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதனை கேட்கும் போது சோகமாக உள்ளது. 121 கோடி மக்கள் தொகையை கொண்ட நாம் முதல் 20 வது இடத்திற்கு வருவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் போல.

கனவுகளுடன் காத்திருப்போம் !!!

நித்யானந்தா சாமிக்கு ஆண்மை பரிசியோதனை நடத்த வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு !!


நித்யானந்தா சாமிக்கு எதிரான பாலியல் குற்ற வழக்கை விசாரித்து வரும் கர்நாடக போலிசார் , நித்யானந்தா சாமியின் ஆண்மை சோதனை செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்துள்ளனர் . இதனை ஏற்று செஷன்ஸ் கோர்ட் அனுமதி அளித்து இருந்தது .

ஆனால் நித்யானந்தா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் . இதனால் செஷன்ஸ் கோர்ட்டின் தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் இதை விசாரித்தது . விசாரனையின் முடிவில் , இடைக்கால தடையை நீக்கி விட்டு , நித்யானந்தா சாமியை போலிஸ் காவலில் எடுத்துவிட்டு அவருக்கு ஆண்மை பரிசோதனையை நடத்தலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .

ஜடேஜா - ஆண்டர்சன் விவகாரம் நடந்தது என்ன ??


இங்கிலாந்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் , இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் ,  ஜடேஜாவை வசைபாடிய பிறகு தொட்டு தள்ளி விட்டதாக இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் பூகார் அளித்துள்ளது .

இரண்டாம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது , இரண்டு அணி வீரர்களும் பெவிலியன் நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் போது , இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே சென்றனர் . தீடிரென ஆவேசம் அடைந்த ஆண்டர்சன் ஜடேஜாவை தொட்டு தள்ளிவிட்டுள்ளார் . இதுகுறித்து இந்திய அணியின் வீரர்கள் மற்றும் கேப்டன் தோனியிடம் கேட்டு அறிந்த பின் பூகார் அளித்ததாக இந்திய கிரிக்கெட் அணியில் மேலாளர் சுணில் தேவ் கூறினார் .

முதலில் இதனை சிறு பிரச்சனை என்று கூறி வந்த இங்கிலாந்து நிர்வாகம் , இந்திய அணி பூகார் அளித்த பின் ஜடேஜா மீது பூகார் அளிக்க பரிசீலித்து வருகிறது .

ஆனால் இங்கிலாந்து பத்திரிக்கை வட்டாரங்களோ , இங்கிலாந்தின் சீனியர் பௌளரை அணியை விட்டு வெளியேற்றுவதற்காக இவ்வாறு இந்திய அணி ஈடுபடுகிறது என்று வதந்தியைக் கிளப்பியுள்ளது .

வேட்டி விவகாரம் : தமிழர்களின் கலாச்சாரத்துக்கு எதிரான கிளப்புகளின் மேல் நடவடிக்கை - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு !!



தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும் தனியார் கிளப்களின் அனுமதி ரத்து செய்யப்படும்  எனவும் , அதற்கான மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார் .

இதுகுறித்த அறிக்கையில் தமிழக முதல்வர் அந்த சம்பவத்துக்கு தன் கண்டனத்தை பதிவு செய்தார் . மேலும் இதற்கு முன்னர் நடந்த இதுபோன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி அதற்கு அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைக் கூறினார் .

மேலும் வேட்டி கட்டியதால் அனுமதிக்கப்படாததால் , மொத்த ஆங்கிலேய அரசையும் பணிய வைத்த சர். தியாகராயர் கதையைக் கூறினார் . இது குறித்து விளக்கம் அளிக்குமாறு , தமிழக கிரிக்கெட் சங்க மன்றத்திற்கு கடிதம் அனுப்ப உத்தரவிட்டுள்ளார் .

மேலும் இது போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண , இனிமேல் இதுபோன்று தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எதிராக ஈடுபடும் மன்றங்களுக்கு அனுமதி ரத்து செய்யும் மசோதாவை விரைவில் நிறைவேற்றுவோம் என்றார் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media