BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 15 July 2014

முடிந்த கால்பந்து உலக கோப்பையில் சிறந்த 11 பேரை கொண்ட அணி


இந்த உலக கோப்பையின் முடிவில் அவர்கள் ஆடியதை வைத்து ஒரு சிறந்த அணியை உருவாக்க வேண்டுமானால் அதில் இந்த 11 நபர்கள் இருக்க வேண்டும்.

கோல்கீப்பர் : 



மேன்வல் நுயர் (ஜெர்மனி)




பின்கள வீரர்கள் :



பிலிப் லாம் (ஜெர்மனி)




ரான் விளார் (நெதர்லாந்து)



மேட் ஹம்மல்ஸ் (ஜெர்மனி)



டேலி பிளைன்ட் (நெதர்லாந்து)




டிபன்சிவ் நடுகள வீரர்கள் 


டோனி க்ரூஸ் (ஜெர்மனி)




ஜேவியர் மேஸ்கரானோ (அர்ஜெண்டினா)




அட்டாக்கிங் நடுகள வீரர்கள் 


அர்ஜென் ராபன் (நெதர்லாந்து)



லியோனல் மெஸ்ஸி (அர்ஜெண்டினா)





ஜேம்ஸ் ரோட்ரிகஸ் (கொலம்பியா)





                                                            ஸ்ட்ரைகர் 


தாமஸ் முல்லர் (ஜெர்மனி)




மொபைல் மற்றும் நான் வெஜ் வகை உணவுகள் கற்பழிப்புக்கு வழிவகுக்குமாம் !!! சொல்லுகிறார் பீகார் அமைச்சர் ...



இந்தியாவில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் இந்த வேளையில் , ஒவ்வொரு அமைச்சரும் இப்போது அதற்கான காரணங்கள் என்ற வகையில் ஒவ்வொரு நாளும் ஒன்றை சொல்லிக் கொண்டு இருக்கின்றனர் . இப்போது அந்த வகையில் மொபைல் மற்றும் நான் வெஜ் வகை உணவுகள் கற்பழிப்புக்கு வழிவகுக்கும் என்று பீகார் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார் . 

பீகார் கலை, கலாச்சாரம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் பினய் பீஹாரி கூறுகையில் ,  "பல மாணவர்கள் மொபைல்களை தவறாக பயன்படுத்துகின்றனர் . ஆபாச படங்கள் மற்றும் இரட்டை அர்த்த பாடல்களை கேட்டு மனதை பாழாக்கி இருக்கின்றனர் . அசைவ உணவுகள் மாணவர்களிடையே ஒரு கடும் மனதை உருவாக்குகிறது " என்றார்  . மேலும் அவர் இரண்டு மாணவர்களை பள்ளியில் மொபைலில் ஆபாச படங்கள் பார்த்து கொண்டு இருக்கும் போது பிடித்தேன் என்றார்  . மேலும் இந்த பள்ளிகளில் அதிகாரிகள் அனைவரும் அடிக்கடி சோதனை செய்து மொபைல் பயன்படுத்தும் மாணவர்களை பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார் . 


"விவசாயி ஆகி விடாதே" தற்கொலைக்கு முன் ஒரு தந்தையின் கடைசி வார்த்தைகள்




ஒரு விவசாயின் சாவு மீண்டும் நம்மை கண்ணீர் சிந்த வைத்து உள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் இந்த விவசாயி . இவர் விவசாயத்தினால் பல கடன்களுக்கு ஆளாகி விட்டார். இதனால் அவர் மிகவும் மனமுடைந்து விட்டார். தனது மகனை பள்ளிக்கு பார்க்க சென்றார் . அவனை பார்த்து விட்டு "நீ ஒரு விவசாயி ஆகி விடாதே" என்று மனமுடைந்து கூறியுள்ளார் . பின்பு தனது மகனின் கல்வி குறித்து ஆசிரியரிடம் கேட்டு விட்டு வீடு திரும்பினார். வீட்டிற்கு சென்ற அவர் வீட்டில் தூக்கு மாட்டி இறந்து விட்டார். அவரது மகனின் எதிர்காலம் இப்போது சோகம் ஆகி விட்டது.


இது ஒரு விவசாயி நிலை இல்லை , இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் நிலை இது தான். அடுத்த வேலை சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். பலரும் இன்று விவசாயத்தை துறந்து வேறு வேலை பார்க்க சென்று விட்டார்கள். இன்னும் விவசாயத்தை நம்பி கொண்டு இருந்தால் , அவர்களது குடும்பம் விஷம் குடித்து தான் சாவ வேண்டும் என கருதுகிறார்கள்.


இதே நிலை நீடித்தால் நம் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இது எல்லாத்திற்கு யார் காரணம் என்றால் நம் அரசு தான். நாம் வாழ்வதோ விவசாய பூமி. நம் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் விவசாயிகளாக இருந்தவர்கள். ஆனால் அப்போது அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நிலைமை இந்தளவுக்கு மோசமாக வந்தும் நம் அரசு திருந்தவில்லை. ஒரு விவசாயி இன்று தனது உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கே திணறுகிறான்.

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி , இன்று குறைகளை சொல்வதற்காக கடவுளிடமே சென்று விடுகிறார்கள்.

இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் கர்பமாக உள்ளார் , இரட்டை குழந்தைகள்




ஒருவரது திருமணத்தை அதிகம் பேர் டிவியில் பார்த்தார்கள் என்றால் அது இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனின் திருமணமாக தான் இருக்கும். இவர் இப்போது நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சுற்றுபயணம் சென்று உள்ளார். இப்போது இவர் கர்பமாக உள்ளதாக செய்திகள் வர தொடங்கியுள்ளது. இவருக்கு ஏற்கன்வே ஜார்ஜ் என்னும் குழந்தை உள்ளது. அண்மையில் இவர் உடல்நிலை பரிசோதனை செய்து கொண்டார் , அதில் இவர் கர்பமாக உள்ளதாகவும், அதுவும் இரட்டை குழ்ந்தைகள் என்றும் கூறப்பட்டு உள்ளது.



அதுவும் அவை பெண் குழந்தைகள் என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்த செய்தியால் கேத் மிடில்டன் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இந்த தகவலை எல்லாம் இவரே கூறியதாக கூறப்பட்டு வருகிறது. இந்த செய்திகள் உண்மையா அல்லது புரளியா என்று தெரியவில்லை. இன்னும் அரண்மனையில் இருந்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை.

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news


நம்பர் நடிகையால் தற்கொலைக்கு முயன்ற அரசியல் வாரிசு நடிகர், தகவல்கள் லீக் ஆனது எப்படி?
http://www.satrumun.net/2014/07/number-actress-lover-suicide-attempt.html

மொட்டை மாடியில் செக்ஸில் ஈடுபட்ட ஜோடி கைது
http://www.satrumun.net/2014/07/blog-post_4383.html

ஜெர்மனி வீரர்களுடன் அவர்களது காதலிகளும் களத்தில் இறங்கிய முத்தக் காட்சிகள் !!!
http://www.satrumun.net/2014/07/blog-post_8219.html

எந்த தமிழ் நடிகனும் உப்பு போட்டு சாப்புடறது இல்லை, சேரன் நிறுவன தொடக்க விழாவில் இயக்குனர் கடும் தாக்கு
இவர் மட்டும் அம்மா சால்ட் போட்டு சாப்புடறாருங்க‌
http://goo.gl/yPMYMP

ராகுல் காந்தியை காங்கிரஸை விட்டு விரட்ட திட்டம்
http://www.satrumun.net/2014/07/blog-post_4762.html

சச்சின் ஷரபோவா விவகாரத்தில் புதிய திருப்பம் !!
http://www.satrumun.net/2014/07/blog-post_6847.html

கோல்டன் பால் வாங்க மெஸ்ஸி தகுதியானவர் இல்லை : மாரடோனா பரபரப்பு பேச்சு !!
http://www.satrumun.net/2014/07/blog-post_15.html

நீங்க பலி கொடுப்பதற்கு சேரன் தான் கிடைத்தாரா? அதிர வைத்த அமீர் பேச்சு
http://goo.gl/900Zf0

ஏழைகளுக்கு அப்பார்ட்மெண்ட் , தமிழக முதல்வரின் புதிய திட்டம்
http://www.satrumun.net/2014/07/blog-post_6296.html

சால்ட் பெப்பர் ஸ்டைல் இனி இல்லை, ஒரு வாரத்தில் இளைஞனாக மாறப்போகும் தல அஜித்
http://www.satrumun.net/2014/07/blog-post_1608.html

தோனியிடம் பாரட்டு வாங்கிய வீரர்கள்
http://www.satrumun.net/2014/07/blog-post_2464.html

பாலியல் வன்முறையில் ஈடுபடும் மைனர் சிறுவர்களை , மேஜர்களாக கருதி தண்டனை கொடுங்கள் : மத்திய அமைச்சர் கோரிக்கை
http://www.satrumun.net/2014/07/blog-post_8017.html

இன்னும் 75 நாளில் மங்கல்யான் செவ்வாய் கிரகத்தைச் சென்று அடையும் !!
http://www.satrumun.net/2014/07/75.html

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கூடுதலாக 3,745 கோடி ரூபாய் அபராதம் !!
http://www.satrumun.net/2014/07/3745.html

பிரிக்ஸ் மாநாடு இன்று தொடக்கம் !! புதிய வங்கியை இந்தியாவில் அமைக்க மோடி முயற்சி !
http://www.satrumun.net/2014/07/blog-post_9758.html

போலீஸ் தடுத்தும் நிறுத்தாமல் மொட்டை மாடியில் செக்ஸில் ஈடுபட்ட ஜோடி கைது





அமெரிக்காவில் உள்ள ஒரு ஹோட்டலின் மொட்டை மாடியில் செக்ஸில் ஈடுபட்டதற்காக ஒரு ஜோடி கைது செய்யப்பட்டு உள்ளது. அவர்களின் பெயர் மைக்கெல் ஷு மற்றும் நிக்கோல் ஜெர்மாக் .அந்த ஆணிற்கு 38 வயதும் அந்த பெண்ணிற்கு 27 வயது ஆகிறது. அவர்கள் இருவரும் அங்கு உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று அங்கு செக்ஸில் ஈடுபட்டு உள்ளார்கள். இதனை பார்த்த யாரோ புகார் தெரிவித்து உள்ளார்கள்.உடனே அங்கு வந்து பார்த்தவர்கள் அவர்களை நிறுத்துமாறு கூறி உள்ளார்கள். ஆனால் அவர் சொல்லி 20 நொடிகளுக்கு நிறுத்தவில்லை.


போலீஸ் வந்த போது அந்த பெண் கருப்பு நிற ஆடையை போர்த்தி இருந்தார். அந்த ஆண் எந்த நிற ஆடை அணிந்து இருந்தார் என்று தெரியவில்லை. உடனடியாக போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தார்கள். பிறகு அந்த ஜோடி பெயிலில் வெளியே வந்தது.

ஏழைகளுக்கு அப்பார்ட்மெண்ட் கட்டி தர உள்ளார் தமிழக முதல்வர்





நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்பது தான் தேர்தல் சமயத்தில் பல கட்சிகளின் வாக்குறுதியாக இருக்கும் .பிறகு ஆட்சிக்கு வந்த பிறகு அதனை மறந்து விடுவார்கள் . ஆனால் தமிழக முதல்வர் கொடுத்த வாக்கை மறக்கவில்லை. இப்போது அவர் ஏழைகளுக்கு கட்டிட வீடுகள் கட்டு தரும் முடிவில் உள்ளார். அரசு சார்பில் புதிய வீட்டு மனைகளும், புதிய அடுக்குமாடி வீடுகளும் ஏழைகளுக்காக கட்டி தரப்படும் என்றார்.

இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் இன்று பேரவையில் அறிவித்தார். திருச்சி மாவட்டம் நவல்பட்டில் 63 ஏக்கரில் 20 கோடி ரூபாய் செலவில் 1360 வீட்டு மனைகள் அமைக்க உள்ளார்கள். மோடி அரசு 2022 க்குள் அனைவருக்கும் வீடு என்று அறிவித்து உள்ளது. எனவே மத்திய மாநில அரசுகளின் தொலைநோக்கு திட்டம் 2023 என்னும் திட்டத்தின் கீழ் 825 கோடி ரூபாய் செலவில் 10000 அடுக்குமாடிகள் கட்ட உள்ளார்கள். இதற்கான செலவில் 50 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும், 10 சதவீதம் வீட்டின் உரிமையாளரும் ஏற்று கொள்ள வேண்டும்.


அம்மா அடுக்குமாடி கட்டித்தரது  எல்லாம் ஒகே தான், அப்படியே அது இடிந்து விழாமையும் பார்த்துக்கோங்க !!

நம்பர் நடிகையால் தற்கொலைக்கு முயன்ற அரசியல் வாரிசு நடிகர், தகவல்கள் லீக் ஆனது எப்படி?


நம்பர் நடிகை மீது தென்னிந்திய திரை உலகத்திற்கு எப்போதுமே ஒரு கிரேஸ் உண்டு, விரல் நடிகருடனான காதல் முறிந்து ரப்பர் டான்சர் கம் இயக்குனருடன் காதலில் மூழ்கி திளைத்து திருமணம் செய்து கொள்ள திரையுலகையே விட்டு விலகினார். டான்சர் நடிகரோ டாட்டா காண்பித்து விட மீண்டும் திரைக்கு வந்த நடிகைக்கு வாய்ப்புகள் குவிந்தன. நடிகை வம்பு நடிகரையும், ரப்பர் டான்சரையும் சீரியசாக தான் காதலித்தார், ஆனால் அவர்கள் தான் நம்பர் நடிகையை கைவிட்டுவிட்டார்கள்.

அரசியல் வாரிசு நடிகர் ஒரு அப்பாவி, பயங்கர சென்ட்டி பார்ட்டி, சின்னப்புள்ள மனசு, மூன்று ஷா நடிகையிடம்  காதலில் மூழ்கி திளைத்த போது வீட்டில் கடுமையான எதிர்ப்பு வந்தது, அப்போதும் கோவித்துக்கொண்டு வீட்டுக்கு போகாமால் ஆபிசிலே உண்ணாவிரதம் இருந்து பார்த்தார், அப்போதும் தற்கொலை முயற்சி டகால்ட்டி எல்லாம் செய்து பார்த்தார். இந்த பஞ்சாயத்தை செட்டில் செய்வதற்கே வாரிசின் அப்பாவுக்கு பெரிய வேலை ஆகிப்போனது.

நம்பர் நடிகையுடன் ஒரு படம் நடிக்க ஆரம்பித்த போதே குடும்பத்தினர் பயந்தனர், அடுத்த படமும் நம்பர் நடிகையுடன் என அறிவிப்பு வந்த நேரத்தில் தான் அரசியல் வாரிசு நடிகர் நம்பர் நடிகையுடன் காதலில் மூழ்கி திளைப்பது தெரிய வந்தது. இம்முறை நம்பர் நடிகை உஷாராக தன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு வாரிசை கழற்றிவிட குழந்தை மனசு வாரிசோ தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குமுதம் ரிப்போர்ட்டரில் நேற்று அட்டை செய்தியாக இதை வெளியிட்டுவிட கமுக்கமாக ஆஸ்பத்திரியில் வைத்து வைத்தியம் பார்த்த செய்தி எப்படி வெளியே போனது என்று நேற்றிலிருந்து விசாரணை நடக்கிறதாம். ஆஸ்பத்திரி ரிப்போர்ட்டை வைத்து உறுதி செய்தே செய்தி வெளியிட்டுள்ளோம் என பத்திரிக்கை தரப்பு கூறுகின்றது, ஆஸ்பத்திரியா? அல்லது உடனிருந்த நான்கு நண்பர்களில் ஒருவரா? யார் இந்த செய்தியை லீக் செய்தது என்று விசாரணை நடத்திக்கொண்டுள்ளார்களாம் குடும்பத்தினர்.

ஒரு வாரத்தில் இளைஞனாக மாறப்போகும் தல அஜித்




அஜித் என்றாலே சால்ட் அன்ட் பெப்பர் லுக் தான் . அவர் அந்த லுக்கில் நடித்த எல்லா படங்களுமே மெகா ஹிட் தான். மங்காத்தா, ஆரம்பம், வீரம் போன்ற படங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. இப்போது அவர் நடித்து வரும் படம் கௌதம் மேனன் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத படம். அதில் அஜித்திற்கு 2 வேடங்கள். ஒரு வேடம் வழக்கம் போல் அவரது சால்ட் அன்ட் பெப்பர் லுக். மற்றொரு வேடம் அவர் ஒரு இளைஞனாக வருவது போல்.



சால்ட் அன்ட் பெப்பர் லுக் அஜித்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இப்போது அவர் இளைஞனாக மாற வேண்டும் அதற்காக கௌதம் மேனன் ஒரு வாரம் அவகாசம் கொடுத்து உள்ளார். அதற்குள் இவர் டை அடித்து விட்டு இளைஞனாக மாற வேண்டும். நீண்ட இடைவேளிக்கு பிறகு அஜித்தை பழைய வேடத்தில் பார்க்க போவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

எப்ப தல வர ??? ஐ ஆம் வெய்டிங்  !!

தோனியிடம் பாரட்டு வாங்கிய வீரர்கள்





இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்தது. இங்கிலாந்தின் வெற்றியை தடுத்தவர்கள் என்றால் அது ஜடேஜா, பின்னி , புவனேஷ் குமாராக தான் இருக்கும். அவர்களை இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பாராட்டியுள்ளார். அணிக்கு தேவையான போது நிலைத்து நின்று ஆடிய இவர்களுக்கு தனது வாழ்த்துகளை கூறியுள்ளார். நெருக்கடி சமயங்களில் சமாளிக்கும் அனுபவம் அணியில் இல்லாவிட்டாலும் இந்த வீரர்கள் பொறுப்புடன் விளையாடி அணியை தோல்வியில் இருந்து மீட்டுள்ளனர்.


இந்த போட்டியில் இருந்து தங்கள் தவறுகளை திருத்தி கொள்வோம் என்றார். இனி வரும் போட்டிகளில் உள்ள பிட்சுகள் பின்னிக்கு ஆதரவாக இருக்க கூடியவை என்பதால் அவருக்கு அதிக ஒவர்கள் கொடுக்கப்படும் என்றார். இந்திய எந்த தோல்வியும் பெறாமல் இந்த தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில் தோற்றால் தோனியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து வரலாம்.

ராகுல் காந்தியை காங்கிரஸை விட்டு விரட்ட திட்டம்





தற்போது நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை கண்டிடாத படு தோல்வியடைந்தது. அவர்களால் எதிர்கட்சி தலைவர் பதவியை கூட பெறமுடியவில்லை. அத்ற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் அரசின் முந்தைய ஆட்சி தான் என கூறப்பட்டது. ஊழலகளால் மக்கள் காங்கிரஸ் கட்சியை வெறுத்து விட்டனர் . ஆனால் இதற்கு இன்னொரு முக்கிய காரணம் ராகுல் காந்தியின் அணுகுமுறை தான் என்று காங்கிரஸ் கட்சிக்குள்ளையே அவருக்கு எதிர்ப்பு உள்ளது. தான் என்ன செய்கிறோம் என்ன பேசுகிறோம் என தெரியாமல் இருப்பவர் ராகுல் காந்தி. அவரால் எப்படி காங்கிரஸ் கட்சியை நல்ல நிலைக்கு எடுத்து செல்ல முடியும் என்று ஒரு கூட்டம் கிளம்பி உள்ளது.


இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவருமான போனி பிரசாத் வர்மா கருத்து தெரிவித்து உள்ளார். ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரம்கட்ட ஒரு கூட்டம் கிளம்பியிள்ளதாக கூறியுள்ளார். அவர்கள் காந்தி குடும்பத்தை ஒரம்கட்ட நினைப்பவர்கள், அவர்கள் வேறு கட்சியுடன் தொடர்பு வைத்து உள்ளார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.


காங்கிரஸ் கட்சி நல்ல நிலைக்கு வருவதற்கு போனி விடமாட்டார் போல.

சச்சின் ஷரபோவா விவகாரத்தில் புதிய திருப்பம் !!






சச்சின் விம்பிள்டன் பார்பதற்காக அங்கு சென்று இருந்தார். கால்பந்து வீரர் டேவிட் பெக்காமுடன் சேர்ந்து ஆட்டத்தை கண்டு ரசித்தார். மரியா ஷரபோவா ஆட்டம் முடிந்த பிறகு அந்த இருக்கையில் அமர்ந்து ஆட்டத்தை ரசித்தவர்கள் யார் என்று தெரியுமா என்றார்கள். அவர் பெக்காம் என்றார். சச்சினை பற்றி கேட்ட போது ,சச்சின் யார் என்றே தெரியாது என்றார். இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. சின்ன பிள்ளைகளுக்கு கூட தெரியும் சச்சினை ,ஷரபோவாவிற்கு எப்படி தெரியாமல் இருக்கும் என அவரது ரசிகர்கள் கோபத்தில் இறங்கினார்கள்.


ஷரபோவாவின் பேஸ்புக் பக்கத்திற்கு சென்று அவரை கேவலமாக திட்டினார்கள். பேஸ்புக் டிவிட்டர் அதிகம் போட பட்ட பதிவு யார் இந்த ஷரபோவா ? அவரை கலாய்த்து பல ட்ரோல்கள் வந்த வண்ணம் இருந்தன. இப்போது முதல் முறையாக இந்த விவகாரத்தில் ஒரு விளையாட்டு வீராங்கனை ஷரபோவாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா தான். அவர் கூறியது,


கிரிக்கெட் 12 நாடுகளில் விளையாடபடுகிறது, டென்னிஸ் 200 நாடுகளிலும், பேட்மிண்டன் 150 நாடுகளிலும் விளையாடபடுகிறது. அதனால் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கிரிக்கெட் என்ற விளையாட்டு இருப்பதே பலருக்கு தெரியாது .எனவே ஷரபோவாவின் கருத்தில் எந்த தவறும் இல்லை. தனக்கு கூட மாரடொனா, மெஸ்ஸியை தவிர எந்த கால்பந்து வீரரையும் தெரியாது என்று கூறினார்.

பாலியல் வன்முறையில் ஈடுபடும் சிறுவர்களை , வயதுக்கு வந்த இளைஞர்களாக கருதி தண்டனை கொடுங்கள் : மத்திய அமைச்சர் மேனகா காந்தி !!



மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான மேனகா காந்தி , நேற்று அளித்த பேட்டியில் " கொடிய குற்றங்கள் செய்த சிறுவர்களை வயதுக்கு வந்த இளைஞர்களாக கருதி தண்டனை அளிக்க வேண்டும் " என்றார் .

அவர் கூறுகையில் , " காவல் துறையினர் அளித்த அறிக்கையின் படி 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்களை 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களே செய்துள்ளனர் . இந்த 16 வயது சிறுவர்கள் தங்களுக்கு சட்டத்தில் கடுமையான தண்டனை எதுவும் இல்லை என்பதை அறிந்து கொண்டு தைரியமாக குற்றங்கள் செய்கின்றனர் . இந்த வழக்குகளில் அவர்களை வயதுக்கு வந்த இளைஞர்களாக பார்த்து தண்டனை கொடுத்தால் , அது அவர்களுக்கு பயத்தை அளிக்கும் " என்றார் .

முந்தைய ஆட்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான கிரிஷ்னா திராத் இதே கோரிக்கையை முன்வைத்தார் . ஆனால் பல அரசு சாரா அமைப்புகள் மற்றும் , குழந்தைகள் அமைப்பு இது குழந்தைகளின் உரிமைக்கு எதிரானதாக இருக்கும் என கடும் எதிர்ப்பை தெரிவித்தனர் .

பிரிக்ஸ் மாநாடு இன்று தொடக்கம் !! புதிய வங்கியை இந்தியாவில் அமைக்க மோடி முயற்சி !!


இன்று பிரேசிலில் பிரிக்ஸ் மாநாடு தொடங்க உள்ளது . இந்த பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்களாக பிரேசில் , ரஷ்யா , இந்தியா , சீனா , தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இருக்கின்றன . இந்த உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் நேற்று பிரேசில் வந்து சேர்ந்தனர் . மாநாட்டிலும் , மேலும் அந்த அந்த நாடுகளின் தலைவர்களுடனும் மோடி தனியே சந்தித்து பேச உள்ளார் . சீனாவின் அதிபருடன் இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவதை குறித்து பேச உள்ளார் .

மேலும் கடந்த பிரிக்ஸ் மாநாட்டில் , உறுப்பு நாடுகள் இணைந்து ஒரு மேம்படுத்தப்பட்ட வங்கியை தொடங்க திட்டமிட்டு இருந்தனர் . இந்த வங்கியின் மூலம் உறுப்பு நாடுகள் வளரும் நாடுகளின் திட்டங்களுக்கு கடனுதவி அளிக்கப்படும் . இந்த புதிய மேம்பாட்டு வங்கியின் தலைமையகத்தை டில்லியில் நிறுவதை குறித்து மோடி இன்று பேச உள்ளார் . இதனால் இந்தியாவுக்கு உலக நாடுகளின் மத்தியில் மதிப்பு கூடும்  . 

கோல்டன் பால் வாங்க மெஸ்ஸி தகுதியானவர் இல்லை : மாரடோனா பரபரப்பு பேச்சு !!



உலக கோப்பை கால்பந்து தொடர் நிறைவு பெற்றது . இந்த தொடரின் அதிக கோல் அடித்த வீரருக்கான விருதை கொலம்பியா அணியின் ஜெம்ஸ் ரோட்ரிகஸ் வென்றார் . சிறந்த வீரருக்காக கொடுக்கப்படும் கோல்டன் பால் விருதை மெஸ்ஸி கைப்பற்றினார் .

இந்நிலையில் அர்ஜெண்டினா அணியின் முன்னால் நட்சத்திர வீரர் மாரடோனா கூறுகையில் , " நான் மெஸ்ஸிக்கு வானத்தையும் கொடுத்து இருப்பேன் , ஆனால் இந்த விருதுக்கு அவர் தகுதியானவர் இல்லை , இது எல்லாம் சிலர் விளம்பரத்துக்காக அவரை ஜெயிக்க வேண்டும் எனக் கருதி , அந்த விருதை அவரிடம் கொடுத்துள்ளனர் . இது நியாயமற்றது . மேலும் ரோட்ரிகஸ் தான் இந்த தொடரின் சிறந்த வீரர் " என்றார் .

அர்ஜெண்டினா சார்பாக லீக் போட்டிகளில் ஜொலித்த மெஸ்ஸி , 4 கோல்களை அடித்தார் . பின்னர் விளையாடிய நாக் அவுட் போட்டியில் கோல் எதுவும் அடிக்கவில்லை . ஆனால் அனைத்து போட்டிகளிலும் தன்னால் முடிந்த வரை கோல் போட முயன்றார் . ஆனால் எதிரணியினர் அவருக்கென்று தனி திட்டம் வகுத்ததால் அவரால் அதை உடைக்க முடியவில்லை . இந்நிலையில் மரடோனாவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கூடுதலாக 3,745 கோடி ரூபாய் அபராதம் !!



கிரிஷ்ணா - கோதாவரி படுக்கையில் , இயற்கை எரிவாயுவை எடுப்பதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட குறைவான எரிவாயுவை உற்பத்தி செய்ததற்காக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு 3,745 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது .

ஏற்கனவே அவர்களுக்கு கடந்த 4 நிதி ஆண்டுகளில் , ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட மொத்த அபராத தொகை 14 ஆயிரத்து 280 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது .

5 மாநிலங்களில் புதிய ஆளுநர் நியமனம் செய்ய உத்தரவு !!



குஜராத் , உத்தர பிரதேசம் , மேற்கு வங்களம் , சத்தீஷ்கர் , மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமிக்கும் படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் .

புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு மத்திய அமைச்சரவையில் இடம் பெறாத மூத்த தலைவர்களுக்கு ஆளுநர் பதவியை பெற்று தந்து அவர்களை மன நிறைவு அடைய செய்வதற்காக சில மாநிலங்களின் ஆளுநர்களை பதவி விலகும்படி கேட்டுக் கொண்டது . இதன்படி குஜராத் , உத்தர பிரதேசம் , மேற்கு வங்களம் , சத்தீஷ்கர் , மற்றும் நாகலாந்து ஆகிய ஐந்து மாநிலங்களின் ஆளுநர்கள் ராஜினாமா செய்தனர் . சில மாநிலங்களின் ஆளுநர்கள் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டனர் .

புதிய ஆளுநர்கள் பட்டியல் வருமாறு

குஜராத்                            ஓம்பிரகாஷ் கோஹ்லி

உத்தர பிரதேசம்          ராம்நாயக்

மேற்கு வங்களம்        கேசரிநாத் திரிபாதி

சத்தீஷ்கர்                       பல்ராம் தாஸ்

நாகலாந்து                     பத்மநாப பாலகிருஷ்ணா ஆச்சர்யா
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media