BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 15 December 2014

உணவே மருந்து : தேவையில்லாத கெட்ட நீர் உடம்பிலிருந்து சிறுநீர் வழியாக வெளியேற

தினமும் பப்பாளிக்காயைச் சாப்பிட்டு வரலாம்.



சிறுநீர் புறவழி புண் ஆற: 5 ஆவாரம் பூ மென்று சாப்பிட்டு வர குணமாகும்.




சிறுநீரக வியாதி குணமாக: சுரக்காய்ச் சாறு, எழுமிச்சை சாறு கலந்து அருந்தி வர பலன் அடையலாம்.

இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்த ஆணையத்தின் ஆலோசனைக் குழுவில் ஜப்பானியர்

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் ஜப்பானிய சட்ட நிபுணர் ஒருவரை அதிபர் ராஜபட்ச நியமித்தார். முப்பதாண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நிகழ்ந்து வந்த சண்டையில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகமா தலைமையில் அதிபரின் சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்துக்கு ஆலோசனை வழங்க, ஏற்கெனவே வெளிநாட்டவர் 5 பேரைக் கொண்ட குழுவை ராஜபட்ச நியமித்துள்ளார். டெஸ்மண்ட் டிசில்வா, ஜெஃப்ரி நைஸ் (பிரிட்டன்), டேவிட் கிரேன் (அமெரிக்கா), அவதாஷ் கெளசல் (இந்தியா), அகமது பிலால் (பாகிஸ்தான்) ஆகிய ஐவரோடு இப்போது, ஆறாவதாக ஜப்பானைச் சேர்ந்த சட்ட நிபுணர் மோட்டூ நொகுச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கம்போடியாவில் சிறப்பு நீதிமன்றத்தில் சர்வதேச நீதிபதியாகச் செயல்பட்டவர். நெதர்லாந்தில் உள்ள வரும் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் "பாதிக்கப்பட்டோர் நிவாரண அறக்கட்டளை நிதி' நிர்வாகக் குழுவின் தலைவராக உள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது 20,000 பேருக்கு மேல் காணாமல் போனது தொடர்பாக, இலங்கை அதிபர் அமைத்துள்ள சிறப்பு ஆணையத்துக்குப் புகார்கள் வந்துள்ளன. இதில் 5,000-க்கும் மேலானவை, காணாமல் போன ராணுவத்தினர் தொடர்பான புகார்கள். போர் நடைபெற்ற வட இலங்கைப் பகுதிகளான கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் அந்த ஆணையம் பொது விசாரணைகள் மேற்கொண்டது. மேலும், கிழக்கில் மட்டக்களப்பு பகுதியிலும் பொது விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணைகளின்போது, காணாமல் போனவர்கள் குறித்து அவர்களது குடும்பத்தினர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், சுதந்திரமான ஒரு விசாரணை அமைப்பு மேலும் விசாரணை மேற்கொள்ளும்.

இறுதிப்போரின்போது மனித உரிமை மீறல்கள் இருந்தது தொடர்பான புகார்களையும் இந்த ஆணையமே விசாரிக்கும் என, அதிபர் ராஜபட்ச கடந்த ஜூலை மாதம் அறிவித்தார்.ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமானது, சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும் என அறிவித்ததைத் தொடர்ந்து, இலங்கை தனது விசாரணை ஆணையத்தை அமைத்தது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற வேண்டும் : மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் தமாகாவினர் செயல்படுவர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தமிழரின் பாரம்பரிய விளையாட்டு. இதை வெளி மாநிலத்தவரும், வெளிநாட்டவரும் விரும்பிப் பார்க்க வருகிறார்கள். தற்போது ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனுமதியைப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார். ஜி.கே.வாசனுடன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், யுவராஜா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

விருதுநகர்: விருதுநகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காமராஜரின் வழியில் தமாகாவை ஏற்படுத்தி தமிழகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்குவோம். கட்சியில் 50 லட்சம் பேரை உறுப்பினர்களாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அதனால் அரசு அதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றார்.

புதிய அணை ஆய்வுக்கு கேரளத்துக்கு அனுமதி : கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

முல்லைப் பெரியாறில் கேரளம் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கருணாநிதி: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய வன விலங்குகள் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இது தமிழகத்துக்குப் பாதகம் விளைவித்துவிடும் என்பதுடன் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே புறக்கணிக்கும் செயலாக அமைந்துவிடும். தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல், கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதுபோன்ற செய்திகள் வரும்போதெல்லாம் பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார். தமிழகத்தை பாதிக்கும் இதுபோன்ற பிரச்னைகளில், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோடு பிரதமரை முதல்வர் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் நல்ல விளைவுகள் ஏற்படும். ஜி.ராமகிருஷ்ணன்: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ள கேரளத்துக்கு அனுமதி வழங்கி இருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதாகும். இது தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தில் அச்சத்தை ஏற்படுத்துவதாகும். எனவே, இந்த அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தி.வேல்முருகன்: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கேரளத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையில் மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.

பயணிகள் ரயில் கட்டணம் மீண்டும் உயருகிறது

பயணிகள் ரயில் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு, நாடாளுமன்றத்தில் அடுத்த ரயில் பட்ஜெட் தாக்கலின்போது அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: ரயில்வே கொள்கைப்படி, எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்கு ஏற்ப ஆண்டுக்கு இருமுறை பயணிகள் ரயில் கட்டணமும், சரக்கு ரயில் கட்டணமும் உயர்த்தப்படும். அதன்படி, கடந்த ஜூன் மாதத்தில் பயணிகள் ரயில் கட்டணம் 4.2 சதவீதமும், சரக்கு ரயில் கட்டணம் 1.4 சதவீதமும் உயர்த்தப்பட்டன. அதன்பிறகு, இம்மாதத்தில் கட்டணம் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால், மாற்றியமைக்கப்படவில்லை. இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் மாற்றியமைக்க வேண்டிய கட்டணம் தொடர்பான அறிவிப்பு, நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது வெளியிடப்பட உள்ளது.

கடந்த 4 மாதங்களில், ரயில்வேயில் எரிபொருள்களுக்கு ஆகும் செலவு 4 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எனவே, இதற்கேற்ப கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கிறது என்றார் அவர். இதே தகவலை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பாபுவும் அண்மையில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ரயில்வேயின் சுமைகளில் சிலவற்றை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ரயில் கட்டணம் உயர்த்தப்படுமா? எனக் கேட்கிறீர்கள். இதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்பு, பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும். பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்பட மாட்டாது. ரயில்வே திட்டங்களுக்கு பெரிய அளவில் முதலீடு தேவைப்படுகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தி முடிப்பதற்கு, ரூ.6 லட்சம் கோடி முதல் ரூ.8 லட்சம் கோடி வரை நிதி தேவைப்படுகிறது. ஆனால், அதற்கான நிதி ரயில்வேயிடம் இல்லை.

ரயில்வே பட்ஜெட்டில் தங்கள் தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டம் குறித்து எம்.பிக்கள் தெரிவித்து வருகின்றனர். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.20,000 கோடி ஆகும். இதுபோன்ற காரணங்களுக்காக ரயில்வேயின் சுமைகளை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்றார் அவர். ரயில்வே துறை அமைச்சராக சுரேஷ் பிரபு பதவியேற்ற பிறகு, நிதி நெருக்கடியில் இருக்கும் ரயில்வேயை லாபகரமானதாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பயணிகள் கட்டணத்தைப் பொருத்தவரை ரூ.26,000 கோடி அளவுக்கு அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. அதேசமயம், பயணிகளின் வருகையோ கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்துள்ளது. அதாவது, கடந்த ஏப்ரல் - நவம்பர் மாதங்களுக்கு இடையேயான காலத்தில், பயணிகளின் வருகை, கடந்த ஆண்டில் இதேகால கட்டத்தில் பதிவு செய்யப்பட்டதை விட 1.43 சதவீதம் குறைவாகும். இதுபோன்ற காரணங்களால், பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

போதைப் பொருள் தவிர்ப்பு உதவி மையம் : பிரதமர் மோடி அறிவிப்பு

"இளைஞர்களிடையே பரவும் போதைப் பொருள் பழக்கத்தை தவிர்க்க சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் கூட்டாகச் செயல்பட வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு உதவ கட்டணமில்லா "உதவி மையம்' விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக வானொலியில் "மனதோடு பேசு' எனும் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: இளைஞர்களிடையே பரவும் போதைப்பழக்கம் தேசத்தின் வலியாகும். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர். அவர்கள் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். போதைப் பழக்கத்துக்கு ஆளாவதால் இருள் சூழும், அழிவும், பேரழிவும் ஏற்படும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, திரைப்பட பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பிற துறைகளில் பிரபலமானவர்களைக் கொண்டு "போதை இல்லாத இந்தியா' எனும் பிரசாரம் நடத்த முயற்சி மேற்கொள்வேன். மது இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.

நீண்ட நாள்களாக, இளைய தலைமுறையினரை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். சிலர் அழிவை ஏற்படுத்தும் புதைகுழிக்குள் விழுந்துள்ளனர். போதைப்பொருள் ஒரு பேரழிவாகும். இது மனம், சமூகம், மருத்துவம் சார்ந்த ஒரு பிரச்னையாகும். இந்தப் பிரச்னையைப் போக்க குடும்பத்தினர், நண்பர்கள், சமூகத்தினர், அரசு, சட்டத் துறையினர் என அனைவரும் கூட்டாகச் செயல்பட வேண்டும். இந்தப் பிரச்னை குறித்து ஆலோசனை வழங்க "கட்டணமில்லா உதவி மையம்' தொடங்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளேன். போதைப்பழக்கத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஓர் சிறப்பு நிகழ்ச்சியைத் தொடங்கவும் அறிவுறுத்தியுள்ளேன். போதைப்பொருள் குறித்து நான் உரையாற்றுவேன் என்று முன்னர் வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தேன். அதுதொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள், மின்னஞ்சல்கள் பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளன. அவை, போதைப்பொருளுக்கு எதிரான ஆலோசனைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்பதையே காட்டுகின்றன.

இளைஞர்கள் தங்களுக்கு போதைப் பழக்கம் இல்லை என்பதைக் கூறிகொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். போதைப்பொருளைப் பயன்படுத்துவது நவநாகரிகம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவற்றில் உண்மையில்லை. அவை உங்களை பேரழிவுக்கே அழைத்துச் செல்லும். போதைப்பொருள்களை விலைகொடுத்து வாங்கும் இளைஞர்களுக்கு அந்தப் பணம் தீவிரவாதத்துக்கு பயன்படுகிறது என்பது தெரியுமா? இந்தியாவை நேசிக்கும் நீங்கள் எப்படி தீவிரவாதத்துக்கு உதவலாம்? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கென நேரத்தை ஒதுக்கி அவர்கள் இலக்கை நிர்ணயிக்கவும், அதை அடையவும் செயல்பட வேண்டும். அவர்கள் உங்களிடம் மனம் திறந்து பேசவும், அவர்கள் தவறான பாதையில் செல்லாதவாறு இருக்கும் வகையிலும் பெற்றோர் செயல்பட வேண்டும் என்றார் மோடி. மோடி பெருமிதம்: சமீபத்தில் கண்பார்வையற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் மோடியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதை உரையின் போது குறிப்பிட்ட மோடி அந்த அணியைப் பாராட்டிப் பேசினார். அவர் மேலும் பேசியதாவது:

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், மும்பை அணியை எதிர்த்து விளையாடி ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அணி வெற்றிபெற்றது. சமீபத்தில்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்தது. அந்த மாநிலத்தின் விளையாட்டு மைதானங்கள் நீரில் மூழ்கின. இந்த இடையூறுகள் இருந்த பின்னரும் அந்த மாநில அணி கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றது. கிரிக்கெட் போட்டித் தொடரில் இது ஒரு உயர்ந்த வெற்றியாகும். அந்த அணியை நான் பாராட்டுகிறேன். ஜூன் 21}ஆம் தேதியை "சர்வதேச யோகா தினமாக' அறிவிக்க வேண்டும் என்று ஐநா சபையில் இந்தியா வலியுறுத்தியது. இத்தீர்மானத்தை ஐநா சபை ஏற்று அறிவித்துள்ளது. இதற்கு 177 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதுபோல, நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளை சர்வதேச தினமாகவும் ஐநா அறிவிக்கவுள்ளது. இத்தீர்மானத்துக்கு 166 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்றார் அவர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media