BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 6 July 2014

சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிக் , ரசிகர்கள் மனதை வென்றார் பெடரர் !!




இன்று நடந்த விம்பிள்டன் இறுதி போட்டியில் 6-7,6-4,7-6,5-7,6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிக் பெடரரை வெற்றி பெற்றார். இந்த போட்டியில் ஜோகோவிக் வெற்றி பெற்றாலும் ரசிகர்கள் மனதை வென்றது என்னமோ ரோஜர் பெடரர் தான். 32 வயது ஆனவரை போல் ஆடாமல் ஒரு இளைஞ்ன் ஆடுவதை போல் ஆடினார். நீண்ட இடைவேளிக்கு பிறகு பெடரர் பழைய ஆட்டத்திற்கு மாறியது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 4 வது செட்டின் போதே ஆட்டம் முடிந்து விட்டது என அனைவரும் நினைத்த போது பெடரர் புயல் போல் வந்தார். 2-5 என்ற நிலையில் இருந்து 7-5 என்று 4 வது செட்டை வென்றார்.

இருந்தாலும் 5 வது செட்டில் ஜோகோவிக்கின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்றார். ஜோகோவிக்கும் சிறப்பாக ஆடியதால் ஆட்டம் பரபரப்பாக சென்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பெடரர் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தோற்றதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

ரோஜர் இன்று ஜெயிக்காவிட்டாலும் அனைவரையும் கவர்ந்த ரோஜா அவர் தான்.

3 மணி நேரத்தில் 2 இலட்சம் சப்பாத்தி, 6 டன் குழம்பு, 5 டன் சாதம் தயாரிக்கும் கிச்சன்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அக்ஷ்யா பாத்ரா அறக்கட்டளையால் தொடங்கப்பட்டுள்ள இந்த் கிச்சனில் 3 மணி நேரத்தில்  2 இலட்சம் சப்பாத்தி, 6 டன் குழம்பு, 5 டன் சாதம் தயாரிக்கப்படுகிறது. இது தான் வட இந்தியாவின் மிக பெரிய கிச்சன் ஆகும். இதன் மூலம் 1400 பள்ளிகளில் உள்ள 1.5 இலட்சம் மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.இதனை மதிய உணவு திட்டத்தின் மூலம் வழங்குகிறார்கள். இவர்கள் இதற்காக 400 விவசாயிகளுக்கு நவீன விவசாய தொழில்நுட்பங்களை சொல்லி தந்து உள்ளார்கள் . 3000 மாணவர்களுக்கு காய்கறிகளில் உள்ள சத்துகளை பற்றி விளக்கி சொல்லி  உள்ளார்கள்.




இதனை பார்வையிடுவதற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் 16 ஆம் தேதி  வருகிறார். இதில் அவரும் ஒரு ஸ்பான்சராகும், அதனை உலக தரத்திற்கு மாற்றுவதற்கும் ஆலோசனைகளை வழங்க உள்ளார்.



இது மிகவும் பாராட்டப்படிய வேண்டிய திட்டம் ஆகும். எனவே அவர்களுக்கு நமது பாராட்டுகள்.

ஒரு பாட்டில் சரக்குக்காக 20 ஆண்களுடன் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்ட பெண்





ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பாரில் ஒரு விளையாட்டை நடத்தி வருகிறார்கள். அதாவது ஒரு பெண் அந்த பாருக்கு வரும் ஆண்களுடன் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட வேண்டும் . அவ்வாறு செய்தால் அவருக்கு சரக்கு போன்ற பொருட்களை பரிசாக தருவார்கள். அன்று அந்த பெண் 20 பேருடன் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டார். அப்போது பாட்டுக்கள் ஒடி கொண்டு இருக்கும். இந்த வீடியோவை ரீஸ் மார்டினி என்பவர் பேஸ்புக்கில் அப்லோட் செய்தார். உடனெ அந்த வீடியோ பேஸ்புக் முழுவதும் பரவியது. அதனை அப்லோட் செய்தவருக்கு 3400 பிரன்ட் ரெக்வஸ்டுகள், 147 மெசேஜுகள் என வந்ததால் இவரது அக்கவுன்டே அரை மணி நேரம் பிளாக் ஆகி விட்டது.



இது குறித்து தகவல்கள் வந்த போது அந்த மாகாணத்தின் மேயர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். விரைவில் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்ப்டும் என்றார். இந்த பெண்ணுக்கு இப்போது தான் 18 வயது ஆகிறது.


சச்சின் டெண்டுல்கர் முறியடிக்க கடினமான புதிய சாதனை படைத்தார்




 சச்சின் டெண்டுல்கர், இவர் இந்தியாவில் கடவுளாக மதிக்கப்படுபவர். சச்சின் மறுபெயர் என்னவென்றால் அது சாதனை தான். இவர் செய்யாத சாதனைகளே இல்லை. கிரிக்கெட் தெரியாதவர்களுக்கு கூட சச்சினை தெரியும். அவர் நேற்று மேலும் ஒரு புதிய சாதனையை படைத்து உள்ளார். அதாவது கடைசியாக விளையாடிய ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி, டி20 போட்டி, ஐபிஎல் போட்டி, சாம்பியன்ஸ் லீக் போட்டி, முதல் தர போட்டி மற்றும் நேற்று நடந்த காட்சி போட்டி என அனைத்திலுமே தனது  அணிக்கு வெற்றியை தேடி தந்து உள்ளார். அதன் விவரம் கீழே உள்ளது.

*. கடைசி டெஸ்ட் போட்டி : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்த போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் இதில் 74 ரன்கள் எடுத்தார்.

*. கடைசி ஒருநாள் போட்டி : பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் இதில் 52 ரன்கள் எடுத்தார்.

*. கடைசி டி20 போட்டி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் இதில் 10 ரன்கள் எடுத்தார்.

*. கடைசி ஐபிஎல் போட்டி : சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு  எதிரான இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . சச்சின்  38 ரன்கள் எடுத்தார்.

*. கடைசி சாம்பியன்ஸ் லீக் போட்டி : ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் 15 ரன்கள் எடுத்தார்.

 இத்துடன் நேற்று அவர் கடைசியாக விளையாடிய போட்டியிலும் அவரது அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சச்சின் 44 ரன்கள் எடுத்தார்.

இப்படி தான் கடைசியாக விளையாடிய எல்லா விதமான போட்டிகளிளும் வெற்றி பெற்று உள்ள சச்சினின் சாதனையை முறியடிக்க யாரவது உள்ளார்களா என்று எதிர்பார்த்து காத்திருப்போம்.

முன்னாள் முதல்வர் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளிவந்தது : குற்றத்தை ஒப்பு கொண்டார்

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருப்பவர் குமாராசாமி. இவர் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் மகனும் ஆவார். இவர் 2006 முதல் 2007 வரை கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர். இப்போது இங்கு மேல் சபை தேர்தல் நடைபெற உள்ளது. குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட விரும்பிய விஜிகவுடா பாட்டீல் என்பவர் குமாராசாமியிட அவரது கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை கேட்டு உள்ளார். அதற்கு அவர் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்கும் 1 கோடி என 40 கோடி கேட்டு உள்ளார் . பின்பு சிறிது இறங்கி வந்து 20 கோடி கேட்டு உள்ளார்.இந்த உரையாடல் தொடர்பான 35 நிமிட வீடியோ இன்று லோக்கல் சேனலில் வெளிவந்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இது குறித்து குமாராசாமியிடம் கேட்ட போது , அவர் அது தன்னுடைய குரல் தான். அது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை, தேர்தலில் ஆதரவு அளிப்பதற்கு எல்லா கட்சிகளிளும் பேரம் நடக்கும் என்றார். இதற்கு காங்கிரஸ் பாஜக போன்ற கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

குற்றம் செய்து விட்டு அதனை தவறு என்று ஒத்து கொண்டவனையாவது மன்னிக்க தோன்றும் , ஆனால் குற்றமும் செய்து விட்ட தான் செய்தது குற்றம் இல்லை என்று சொல்பவனை என்ன செய்ய தோன்றும். 

கட்டிட விபத்தில் புதிய திருப்பம் : கை , காலுக்கு உடல் கிடைக்கவில்லை

கடந்த வாரம் சனிக்கிழமை அன்று மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.  இதில் பலர் சிக்கி கொண்டனர். ஒரு வாரமாக நடைபெற்ற மீட்பு பணியில் 61 பேர் பலியாகினர் மற்றும் 27 பேர் உயிருடன் காப்பாற்றபட்டனர் என்னும் தகவல் வந்தது. ஆனால் இப்போது அதில் புதிய மாற்றம் வந்து உள்ளது. 60 உடல்களை போஸ்ட்மார்டம் செய்து விட்டார்கள். ஆனால் மீதம் உள்ள ஒன்றுக்கு உடல் கிடைக்கவில்லை. அவர்களிடம் ஒருவரின் கையும் காலும் உள்ளது. ஆனால் அதனுடைய உடல் இல்லை. அதனால் அது யார் என்பது தெரியவில்லை.



ஒருவரின் உடல் கிடைக்காததால் பலி எண்ணிக்கை 61 இல் இருந்து 60 ஆக குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கை கால்கள் யாருடையது என்று தெரியாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள்.

கூடுதல் காலம் ஒட்டி வாழ்ந்த இரட்டையர்கள் : கின்னஸ் சாதனை செய்ய வாய்ப்பு

அமெரிக்காவை சேர்ந்த டோனி, ரோனி என்னும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் புதிய சாதனை படைத்து உள்ளார்கள் . இவர்கள் ஒட்டிபிறந்த சகோதரர்களில் அதிக காலம் வாழ்ந்த்வர்கள் என்னும் புதிய சாதனையை படைத்து உள்ளார்.  இதற்கு முன் இந்த சாதனை தாய்லாந்து நாட்டை சேர்ந்த சாங்க் , இங்க் சகோதரர்களிடம் இருந்தது. 11 மே, 1811இல்  பிறந்த இவர்கள் 62 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தார்கள்.



இந்த டோனி, ரோனி சகோதரர்கள் அக்டோபர் 28 ஆம் தேதி 1951 ஆம் ஆண்டு பிறந்தவர்கள். இவர்கள் இப்போது 62 ஆண்டுகள் 8 மாதங்கள் 8 நாட்கள் இணை பிரியாமல் வாழ்ந்து உள்ளார்கள். இதனை அவர்கள் உற்சாகத்தோடு கொண்டாடினார்கள். இந்த நாளுக்கு அவர்கள் சிறு வயதில் இருந்தே ஏங்கி வந்ததாக கூறினார்கள். இவர்கள் தம்பியும் அவரது மனைவியும் இவர்களை பார்த்து கொண்டு இவர்களுக்கு தேவையானதை செய்து வருகிறார்கள். இந்த அக்டோபரில் இவர்கள் பிறந்த நாள் வந்தால் இவர்கள் சாதனை கின்னஸ் புத்தகத்திற்கு எடுத்து செல்லப்ப்டும்.



சூர்யாவின் அடுத்த படம் "மாஸ்" : எ வெங்கட் பிரபு டைட்டில்

சூர்யா இப்போது நடித்து முடித்து இருக்கும் படம் அஞ்சான். இந்த படத்தை லிங்குசாமி இயக்கி இருக்கிறார். இந்த படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டீசர் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் வெளிவந்தது. அதனை தொடர்ந்து சூர்யா அடுத்து நடிக்க இருக்கும் படம் "மாஸ்". இது வெங்கட் பிரபுவின் படம் ஆகும்.




வெங்கட் பிரபுவுக்கு எல்லா படமுமே ஹிட் தான். இவர் முதல் முறையாக சூர்யாவுடன் ஜோடி சேருகிறார். இந்த படத்தில் நயந்தாரா , எமி ஜாக்சன் என 2 ஹீரோயின்கள். நடிகர் பசுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் காரைக்குடியில் நடக்கிறது.

கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற போகிறேன் : உலகின் நம்பர் 1 ஆல் ரவுண்டர் மிரட்டல்

வங்கதேச கிரிக்கெட் அணி என்றாலே நம் அனைவரின் நினைவிற்கும் வரும் வீரர் அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தான். இவர் உலக அளவில் மிக சிறந்த ஆல் ரவுண்டர். இந்த முறை கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்டார். அவர் இப்போது கரீபியன் கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் சென்று உள்ளார். அவை வரும் 11 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடக்கும். ஆனால் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடக்கும் பயிற்சி முகாமில் அனைத்து வீரர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அந்த அணியின் பயிற்சியாளர் சண்டிகா தெரிவித்து இருந்தார். இதனால் ஷாகிப் பாதியிலையே இதில் இருந்து விலக வேண்டி வரும். இதனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலக போவதாக மிரட்டல் விடுத்து உள்ளார்.



இது ஒரு நல்ல வீரரின் பதில் இவ்விதமாக இருக்காது. ஒரு வீரர் எப்போதுமே தனது நாடுக்கு விளையாடுவதையே சிறப்பாக நினைக்க வேண்டும் . ஆனால் எல்லாம் இப்போது பணத்திற்காக விளையாட மாறி விட்டார்கள். இவர் ஏற்கனவே கிரிக்கெட் போட்டியின் போது தவறாக நடந்து கொண்டதற்காக சில ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டார்.


இவரை அணியில் இருந்து தூக்கி இது போன்ற வீரகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

மீண்டும் ஒரு விபத்து :பில்டிங்கும் வீக்கு, பேஸ்மென்ட்டும் வீக்கு




திருவள்ளுர் மாவட்டம் உப்பரப்பாளயத்தில் சுற்று சுவர் இடிந்து விழுந்து 11 பேர் பலியாகினர். அந்த ஊரில் உள்ள ஒரு சேமிப்பு கிடங்கின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இதில் அந்த கிடங்கு அருகே குடிசை போட்டு வாழ்ந்து வந்த 11 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் . இதில் குழந்தைகள் உள்பட 10 பேர் இன்னும் சிக்கி இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. இதில் நாகராஜன் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்.

மீட்பு குழுவினரும் தீயணைப்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மவுலிவாக்கம் கட்டிட விபத்து நடந்து மீட்பு பணி முடிந்து 2 நாட்கள் கூட ஆகாத நிலையில் இந்த விபத்து நடந்து உள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இப்போ வர கட்டிடம் எல்லாம், பில்டிங்கும் வீக்கா இருக்கு, பேஸ்மென்ட்டும் வீக்கா இருக்கு

4 பட்ஜெட் போன்களை வெளியிட்டது சாம்சங் நிறுவனம் !!!


முன்னனி நிறுவனமான சாம்சங் ஸ்மார்ட் போன்களை அனைவரும் வாங்கும் வகையில் 4 பட்ஜெட் போன்களை வெளியிட்டுள்ளது . கேலக்ஸி கோர் - 2 , கேலக்ஸி ஸ்டார் - 2 , கேலக்ஸி ஏஸ் - 4 , கேலக்ஸி யங் - 2 என 4 ஸ்மார்ட் போன்களை மார்க்கெட்டில் விட்டுள்ளது .

இது அனைவரும் வாங்கும் வகையில் இருக்கும் என அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம் . அதன் விலை பின்வருமாறு :

கேலக்ஸி யங் - 2     -   ரூ. 8,044

கேலக்ஸி ஏஸ் - 4    -   ரூ. 17,794

கேலக்ஸி கோர் - 2  -  ரூ. 14,544

இன்னும் யங் -2 விலையை அறிமுகப்படுத்தவில்லை .




கிளர்ச்சியாளர்கள் நோன்பு இருந்த போதும் எங்களுக்கு உணவு கொடுத்தார்கள் - இந்தியா திரும்பிய நர்சு உருக்கமான பேட்டி !!



ஈராக்கில் கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்து இருந்த இந்திய நர்சுகளை முந்தைய தினம் விடுவித்தனர் . நேற்று அவர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியா வந்தனர் . பின்னர் அவர் அவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .


திரும்பி வந்த அவர்கள் அளித்த பேட்டியில் , பெரும்பாலானோர் கூறியது , " ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் எங்களை துன்புறுத்தவில்லை " என்று தான் கூறினர் . கேரளத்தைச் சேர்ந்த சாண்ட்ரா செபாஸ்டியன் கூறுகையில் , " ஈராக்கிற்கு திரும்பி செல்லும் பேச்சுக்கே இடமில்லை , எங்கள் உயிரை பணயம் வைக்க நாங்கள் தயாராக இல்லை என்றார் . மேலும் கிளர்ச்சியாளர்கள் அவர்களை சகோதரிகள் என்று தான் அழைத்ததாக கூறினார் .

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மெரீனா ஜோஸ் என்னும் நர்ஸ் கூறுகையில் , " கிளர்ச்சியாளர்கள் எங்களை துன்புறுத்தவில்லை . அவர்கள் ரமலானுக்கு நோன்பு இருந்த போதும் எங்களுக்கு உண்ண உணவு கொடுத்தார்கள் . அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் . உயிருடன் இந்தியா திரும்புவோம் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை . எங்களை பத்திரமாக மீட்ட மத்திய அரசு , மாநில அரசு , அதிகாரிகள் , ஊடகங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் " என்றார் .



வீக் எண்ட் ஸ்பெசல் ரீடிங் - Week end speacial reading

10 செக்ஸ் உண்மைகள்...

செக்ஸின் போது 12 சதவீத பெண்கள் செல்போனை பயன்படுத்தி பேசிக்கொண்டு இருக்க ஆண்களோ
மேலும் படிக்க‌
http://www.satrumun.net/2014/07/10.html

7 இலட்சம் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டது பேஸ்புக், ஏன்?
http://www.satrumun.net/2014/07/7_5.html


இடிந்து விழுந்த கட்டிடத்தை பற்றி நீங்கள் அறியாத செய்திகள் : வீடு வாங்கியோர் நிலை என்ன ??
http://www.satrumun.net/2014/06/blog-post_5388.html


ஒரு விந்தணுவில் எத்தனை MB டேட்டா உள்ளது தெரியுமா?
http://www.satrumun.net/2014/07/how-much-data-it-can-hold.html


மரிய ஷரபோவாவை திட்டும் நமக்கு உலகசாம்பியன் மரிய இருதயத்தை தெரியுமா?
http://www.satrumun.net/2014/07/do-you-know-who-is-mariya-irudhayam.html

ஒரே கணவருடன் ஒரே படுக்கையில் முதலிரவு கொண்டாடிய இரட்டை சகோதரிகள்
http://www.satrumun.net/2014/07/blog-post_1563.html

கேத்ரினா கைஃபை முந்திய தீபிகா படுகோன், உலகின் 100 செக்ஸியான பெண்கள்
http://www.satrumun.net/2014/07/blog-post_6299.html

அமெரிக்காவின் மோசமான அதிபர் ஒபாமா : அதிர்ச்சி தகவல்
http://www.satrumun.net/2014/07/blog-post_3714.html


சிக்கன் 65 யை கண்டுபிடித்தது யாரு ??
http://www.satrumun.net/2014/07/65.html

மரிய ஷரபோவாவை திட்டும் நமக்கு உலகசாம்பியன் மரிய இருதயத்தை தெரியுமா?


சச்சின் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை காண அங்கு சென்று இருந்தார். கால்பந்து வீரர் டேவிட் பெக்காமுடன் சேர்ந்து ஆட்டத்தை கண்டு ரசித்தார். மரியா ஷரபோவாவின் ஆட்டம் முடிந்த பிறகு அந்த இருக்கையில் அமர்ந்து ஆட்டத்தை ரசித்தவர்கள் யார் என்று தெரியுமா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்க அவர் பெக்காம் என்றார். சச்சினை பற்றி கேட்ட போது ,சச்சின் யார் என்றே தெரியாது என்றார். இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. சின்ன பிள்ளைகளுக்கு கூட தெரியும் சச்சினை ,ஷரபோவாவிற்கு எப்படி தெரியாமல் இருக்கும் என அவரது ரசிகர்கள் கோபத்தில் இறங்கினார்கள்.

இதை அடுத்து மரிய ஷரபோவாவின் பேஸ்புக் பக்கத்திற்கு சென்று அவரை கேவலமாக திட்டினார்கள். பேஸ்புக் டிவிட்டர்களில் அவரை கலாய்த்து பல ட்ரோல்கள் வந்த வண்ணம் உள்ளன.ஒரு ரஷிய நாட்டு வீரங்கனைக்கு சச்சினை பற்றி தெரியாததில் ஒன்றும் தப்பு இல்லை. அவர்கள் கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாதவர்கள். நமக்கு கிரிக்கெட் தவிர வேறு எதுவும் தெரியாது. நமது நாட்டு ஹாக்கி,கால்பந்து அணிகளின் கேப்டன்கள் கூட தெரியாது.

9 முறை தேசிய சாம்பியனாகவும் 2 முறை உலக சாம்பியனாகவும் கேரம் விளையாட்டில் இருந்தவர் தமிழரான மரிய இருதயம். இவருக்கு இந்திய அரசின் அர்ஜூனா விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனது, ஆனால் இவரை எத்தனை பேருக்கு தெரியும்?

சென்னையில் பெரியமேடு பகுதியில் வசிக்கும் இருந்த உலக சாம்பியன் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றுகிறார். இவரது மனைவி பிலோமினா 2012ல் ஒரு சாலைவிபத்தில் மரணமடைந்தார், மரிய இருதயமும் அதே விபத்தில் கடும் காயமுற்று உயிர் பிழைத்துள்ளார். இரண்டு முறை உலகசாம்பியனான மரிய இருந்தயத்தை பிழைப்புக்காக வேலைக்கு அனுப்பியுள்ளா நாம் ஒரே ஒரு சீசனில் கிரிக்கெட் போட்டியில் விளையாடினாலும் போதும், அவர்களுக்கு பெரிய அளவில் புகழ் பணம் அனைத்தையும் கொடுக்கிறோம், ஆனால் நாம் தான் கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத நாட்டின் ஒரு வீராங்கனை சச்சினை தெரியாது என்று கூறியதற்கு இவ்வளவு கோபம் கொள்கிறோம்.

மரிய இருதயம் இது பற்றி ஒரு முறை தனது ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார், உலக சாம்பியன் ஆன உடன் பத்திரிக்கைகள் தனது சாதனையை எழுதும் என்று எதிர்பார்த்ததாகவும் ஆனால் மிகச்சிறிய அளவில் சில பத்திரிக்கைகளில் மட்டுமே வெளியானதாகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

சாதித்த தடகள வீராங்கனை சாந்தியை சாணி தட்ட அனுப்பிவிட்டோம், உலக சாம்பியனை உதவி மேலாளராக்கி ஃபைல்கள் பார்க்க அனுப்பிவிட்டோம், சாதனையாளர் குற்றாலீஸ்வரனை நீச்சலே வேண்டாம் என்று அமெரிக்காவில் சாஃப்ட்வேருக்கு அனுப்பிவிட்டோம். ஆனால் கிரிக்கெட்டில் 12 வது வீரராக ஒரு மேட்சில் பந்து பொறுக்கி போட்டாலும் அவர்களை கொண்டாடுவோம்.

மரிய இருதயத்தின் பேஸ்புக் பக்கமோ வெறும் 91 ஃபேன்களுடன் உள்ளது

https://www.facebook.com/pages/Maria-Irudayam/249489478439948
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media