BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 26 May 2014

பள்ளி பாடப்புத்தகத்தில் மோடியின் வாழ்க்கை வரலாறு


நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றுள்ள நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்க்க மத்திய பிரதேச பாரதீய ஜனதா அரசு ஆலோசித்து வருகிறது.

இது குறித்து மத்தியபிரதேச மாநில கல்வித்துறை அமைச்சர் பராஸ் ஜெயின் கூறுகையில், ‘‘மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி பாடத்தில் மோடியின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க உள்ளோம். இது குறித்து அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை செய்து வருகிறோம். விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை போலவே மோடியின் வாழ்க்கை வரலாறு இளைஞர்களின் மனதில் தூண்டுதலை ஏற்படுத்தும் ’’ என்று கூறினார்.

இதில் அரசு முடிவு எடுக்கும் பட்சத்தில் 3–ம் வகுப்பு முதல் 6–ம் வகுப்பு வரை உள்ள பாடத்தில் மோடியின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்படும் என்று நம்ப படுகிறது.

மோடியின் வாழ்க்கை வரலாறு பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படுவது குறித்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்!

சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதிய விபத்து:பலியானோர் குடும்பத்திற்கு மோடி ஆறுதல்


உத்தரபிரதேச மாநிலத்தில் சரக்கு ரயில் மீது கோரக்பூர் விரைவு ரயில் மோதியதில் 20 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சன் கபிர் நகர் மாவட்டத்தில் நின்றிருந்த சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் வேகமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நரேந்திர மோடி, இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கேபினட் செயலாளரை உடனடியாக தொடர்பு கொண்ட அவர், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான உதவிகளை செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஒரு லட்சம், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என வடகிழக்கு ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

விஜய் பிறந்த நாளான ஜுன் 22ம் தேதி 'கத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது!


 'ஜில்லா' படத்தினைத் தொடர்ந்து விஜய் நடிப்பில்,  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'கத்தி' ப‌டத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது.

விஜய்யுடன் சமந்தா, சதீஷ், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பவர் அனிருத். சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. இதுவரை சுமார் 60% படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் நிலையில், படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் தளத்தில், "விஜய்யின் பிறந்த நாளான ஜுன் 22ம் தேதி 'கத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும்" என கூறியிருக்கிறார்.

மத்திய அமைச்சர்களாக 23 பேரும், மத்திய இணையமைச்சர்களாக 22 பேரும் பதவியேற்பு


நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடி தலைமையிலான அமைச்சரவையில்,  மத்திய அமைச்சர்களாக 23 பேரும், மத்திய இணையமைச்சர்களாக 22 பேரும் என மொத்தம் 45 பேர் பதவியேற்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய இணையமைச்சர்களாக பதவியேற்றனர்.

நரேந்திர மோடியுடன் பதவியேற்ற அமைச்சர்களின் விவரம்:

1) ராஜ்நாத் சிங்

2) சுஷ்மா ஸ்வராஜ்

3) அருண் ஜேட்லி

4) வெங்கையா நாயுடு

5) நிதின் கட்கரி

6) சதானந்த கவுடா

7) உமா பாரதி

8) டாக்டர் நஜ்மா ஹேப்துல்லா

9) கோபி நாத் ராவ் முண்டே

10) ராம்விலாஸ் பாஸ்வான்

11) கல்ராஜ் மிஷ்ரா

12) மேனகா காந்தி

13) ஆனந்த் குமார்

14) ரவி சங்கர் பிரசாத்

15) அசோக் கஜபதி ராஜூ

16) அனந்த கீதி

17) ஹர்சிம்ரத் கவுர் பாதல்

18) நரேண் சிங் தோமர்

19) ஜூவல் ஓராம்

20) ராதா மோகன் சிங்

21) தாவர் சந்த் கேஹலோத்

22) ஸ்மிரிதி இராணி

23) ஹர்ஷவர்தன்

மத்திய இணையமைச்சர்கள்

1) வி.கே.சிங் (தனிப் பொறுப்பு)

2) இந்திரஜித் சிங்

3) சந்தோஷ் குமார் கங்வார்

4) ஸ்ரீபாத் எசோக் நாயக்

5) தர்மேந்திர பிரதான்

6) சரபானந்த சோனோவால்

7) பிரகாஷ் ஜவ்தேகர்

8) பியூஷ் கோயல்

9) டாக்டர். ஜித்தேந்திர சிங்

10) நிர்மாலா சீதாராமன்

11) ஜி.எம். சித்தேஷ்வரா

12) மனோஜ் சின்ஹா

13) நிஹால் சந்த்

14) உபேந்திர குஷ்வா

15) பொன்.ராதாகிருஷ்ணன்

16) கிரண் ரிஜிஜூ

17) கிருஷ்ணன் பால்

18) டாக்டர் சஞ்ஜீவ் குமார் பால்யான்

19) மன்சூக்பாய் தன்ஜிவாய் வசாவா

20) ராவ் சாஹெப் தாதா ராவ் தான்வே

21) விஷ்ணு தியோ சாய்

22) சுதர்ஷன் பகத்

மோடி பதவியேற்பு விழாவை புறக்கணித்த 5 மாநில முதல்வர்கள்


நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களின் முதல் அமைச்சர்க‌ள் புறக்கணித்து இருக்கிறார்கள்.

மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டதற்கு தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ராஜபக்சேவை அழைத்த செயல் ‘‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே அதனை தவிர்த்திருக்க வேண்டும்’’ என்று அவர் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். இதன் காரணமாக மோடி பதவி ஏற்பு விழாவில் அவர் பங்கேற்வில்லை. தமிழக அரசு சார்பிலும் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது.

கேரள மாநில முதல்வர் உம் மன்சாண்டியும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை. ‘‘முன் கூட்டியே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் பதவி ஏற்பு விழாவுக்கு வர இயலாது" என்று மோடியிடம் உம்மன் சாண்டி ஏற்கனவே தெரிவித்து விட்டார் என்று உம்மன்சாண்டியின் அலுவலக அதிகாரிகள் கூறினார்கள். இதே காரணங்களுக்காக கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொளள்வில்லை.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் ஒடிசா நிதி மந்திரி பிரதீப் அம்த பங்கேற்கிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் மோடி பதவி ஏற்பு விழாவை புறக்கணித்து உள்ளார்.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது


தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு 10 நாட்கள் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லெக்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்றும், அந்த வழக்கு முடியும் வரை சொத்துக் குவிப்பு வழக்கிற்கு தடை விதிக்காவிட்டால் அது பெரிய அளவுக்கு முன்ன‌னுமானங்களுக்கு வழி வகுக்கும் என்றும் வாதாடினார்.

சிவில் வழக்கு முடிந்த பின்னரே குற்ற வழக்கு விசாரிக்கப்படவேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் அவர் சுட்டிக்காட்டினார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு 10 நாட்கள் தடை விதித்து உத்தரவிட்டனர்

நாட்டின் 15வது பிரதமராக பதவியேற்கும் மோடி, 4000 பங்கேற்பு, மூன்றடுக்காக போலீஸ் பாதுகாப்பு

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வரும் மோடி பதவியேற்பு விழாவில், சுமார் 4,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர்.

நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். மோடியுடன் அவரது முதல் அமைச்சரவையும் பொறுப்பேற்கிறது.  சுமார் 4,000 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இவ்விழாவில் பங்கேற்க சார்க் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

நரேந்திர மோடியின் விருந்தினர்களாக அவரது தாய் ஹீராபாய் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்றுள்ளனர்.

மோடி பதவியேற்பு விழாவையொட்டி, டெல்லி போலீஸார், துணை ராணுவப் படையினர், ஆயுதம் ஏந்திய போலீஸார் மூன்றடுக்காக பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் உள் வளையம், அதிகாரிகள் அடங்கிய வெளி வளையம், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் வளையம் என மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், என்.எஸ்.ஜி. பாதுகாப்புப் படையினர், அதிரடி தாக்குதல் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். உயர் கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் மோடி, அமைச்சரவையில் ஓல்டுக்கு கெட் அவுட்

காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் மோடி, அமைச்சரவையில் ஓல்டுக்கு கெட் அவுட்

பிரதமர் பதவியேற்பதற்கு முன் இன்று காலை காந்தி நினைவிடம் இருக்கும் ராஜ்கட்டில் சென்று காந்திக்கு அஞ்சலி செலுத்தினார், முந்தைய அமைச்சரவைகள் போன்று பெரிய அமைச்சரவையாக இல்லாமல் இன்று மாலை பதவியேற்கவுள்ள அவருடன் 40 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்பார்கள் என்று தெரிகிறது, மேலும் இதில் 17 அல்லது 18  அமைச்சர்கள் மட்டுமே கேபினட் அந்தஸ்த்துடன் இருப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்த அமைச்சரின் வயதும் 75க்கு மேல் இருக்காது என்றும் நிறைய அமைச்சர்கள் மோடியுடைய வயதுடையவர்களாகவே இருப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காந்திக்கு அஞ்சலி செலுத்தியவர் காந்தியின் கொள்கைகளுக்கும் அஞ்சலி செலுத்திவிடாமல் இருக்கட்டும்
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media