BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 18 May 2013

தடையை மீறி மெரினாவில் மாணவர்கள் பேரணி, 50க்கும் மேற்பட்டோர் கைது

தடையை மீறி மெரினாவில் மாணவர்கள் பேரணி, 50க்கும் மேற்பட்டோர் கைது

இலங்கை முள்ளிவாய்க்காலில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதன் 4ம் ஆண்டு நினைவாக இன்று மெரினாவில் Students' Federation For Free Eelam அமைப்பினர் பேரணி ஏற்பாடு செய்திருந்தனர், ஆனால் இன்று பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் மாணவர் ஜோ பிரிட்டோ, தமிழ் உட்பட நிர்வாகிகளை நிகழ்ச்சியை ரத்து செய்ய கோரினர், ஆனால் இன்று மாலை  சென்னை மெரினாவில் தடையை மீறி பேரணியாக சென்ற மாணவர் கூட்டமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர் காவல்துறையினர்.

JKLF மாலிக் கலந்து கொள்ள கடலூரில் நடைபெறும் நாம் தமிழர் கூட்டம். பொதுக்கூட்டத்துக்கு தடை

ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனியின் (JKLF) முகமது யாசின் மாலிக் கலந்து கொள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெறும் நாம் தமிழர் கூட்டம். பொதுக்கூட்டத்துக்கு தடை

கடலூரில் மே18 இன எழுச்சி நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது, இந்நிலையில் நீதிமன்றத்தில் காவல்துறை போட்ட வழக்கினால் பேரணிக்கு தடைவிதிக்கப்பட்டது, இன்று காலை பொதுக்கூட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  கல்யாண மண்டபத்தில் உள் அரங்கில் கூட்டம் நடைபெறுகிறது இதில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனியின் (JKLF) முகமது யாசின் மாலிக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மாலை பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வாங்கும் பொறுட்டு கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் நாம் தமிழர் அமைப்பின் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

#அம்மா அம்மா என்று சீமான் உருகினார், நீ போ சும்மா சும்மா என்கிறார் அம்மா


ஈழத்தமிழர் படுகொலை, காங்கிரஸ் சத்தியமூர்த்தி பவனுக்குப் பூட்டு போட 5 பேர் கைது

இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 2 லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்க காரணமான காங்கிரஸ் கட்சியை தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இதற்காக தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு பூட்டு போடும் போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பது இந்து மக்கள் கட்சியின் அறிவித்திருந்தனர்.

 இதன்படி நேற்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் எஸ்.ஆர்.குமாரவேல் தலைமையில் 5 பேர் பூட்டுடன் சென்னை சத்தியமூர்த்தி பவன் நோக்கி சென்றனர். ஆனால் அவர்களை அண்ணாசாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எஸ்.ஆர்.குமாரவேல், தென் சென்னை மாவட்ட செயலாளர் கே.பூபாலன், கோபிகுமார், நாராயணன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரபாகரன் படத்துக்கு தடை, கடலூரில் நாம் தமிழர் கட்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு தடை, SFFE மெரினா கூட்டத்துக்கு தடை, ஒரிஜினல் முகம் காட்டும் ஈழத்தாய் ஜெயலலிதா.


பிரபாகரன் படத்துக்கு தடை, கடலூரில் நாம் தமிழர் கட்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு தடை, SFFE மெரினா கூட்டத்துக்கு தடை, ஒரிஜினல் முகம் காட்டும் ஈழத்தாய் ஜெயலலிதா.

ஈழத்தமிழர்களுக்கும் புலிகளுக்கும் அதிக ஆதரவளித்த எம்ஜிஆர் காலத்து அதிமுக கட்சியும் ஆட்சியும் ஜெயலலிதா கைக்கு வந்த பின் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்தனர். 2009ல் தேர்தலின் போது மட்டும் நாங்கள் வெற்றி பெற்றால் ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்று தருவோம் என்று கூறியும் தோல்வி அடைந்தனர். அதன் பின் அமைதியாக இருந்த ஜெயலலிதாவை கருணாநிதியின் தொடர்நாடகங்களாலும் ஈழம் தொடர்பான போராட்டங்களை நேரடியாகவும், நயவஞ்சகமாகவும் நசுக்கிய கருணாநிதியினால் வெறுப்புற்றிருந்த தமிழ் ஆர்வலர் இயக்கங்கள் ஆதரித்தன.

சட்டசபையில் இலங்கைக்கு எதிரான தீர்மாணம், இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சென்னயில் ஆட மறுப்பு, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கிளம்பி மாணவர் போராட்டங்களை அதிரடியாக ஒடுக்காமல் கையாண்டது என ஜெயலலிதா அரசு சற்று ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடு எடுத்ததாக  ஒரு கருத்தை உருவாக்கிய நேரத்தில் இன்றைய முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு கூட்டங்களை நடத்துபவர்களுக்கு காவல்துறையிடமிருந்து ரத்து செய்ய சொல்லு அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. கடலூரில் இன்று நாம் தமிழர் கட்சி நடத்துவதாக இருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன. இன்றைய கூட்டங்களில் பிரபாகரன் மற்றும் புலிகள் தொடர்பான எந்த படங்களையும் பேனரையும் அனுமதிக்காமல் நீக்க சொல்லியுள்ளது காவல்துறை.

இது ஜெயலலிதா அரசின் புதிய நிலைப்பாட்டை அல்ல பழைய நிலைப்பாட்டையே மீண்டும் எடுத்துள்ளதை காட்டுகிறது.

Students' Federation For Free Eelam இன்று மெரினா கடற்கரையில் பேரணி நிகழ்ச்சி ஏற்பாடு



இன்று மாலை நான்கு மணிக்கு Students' Federation For Free Eelam SFFE  அமைப்பின் சார்பில் இலங்கையில் நடந்த தமிழின அழிப்பு இன படுகொலைக்கு எதிரான பேரணி நடைபெறுகிறது. காவல்துறை அனுமதி மறுத்தால் போராட்டம் நடத்த முயன்றுள்ள நிலையில் மாணவர் ஜோ பிரிட்டோ மற்றும் ஏற்பாட்டளர்களுக்கு இந்நிகழ்ச்சியை ரத்து செய்ய சொல்லி காவல்துறையினர் மிரட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புக்கு
ஜோ பிரிட்டோ +919751030028
தமிழ் +919790847172

புல்லுக்கட்டு முத்தம்மா கீரோயின் மினு குரியன் ஒரு லேடி பவர் ஸ்டார்.

தமிழ் திரை உலகில் பவர்ஸ்டார் ஒரு புது ட்ரெண்டை உருவாக்கினார், அதே லைனை பிடித்து லேடி பவர்ஸ்டாராக முனைகிறார் புல்லுக்கட்டு முத்தம்மா படத்தின் கீரோயின் மினு குரியன்

புல்லுக்கட்டை ஆடு மேய்வது போல இந்தப் படத்தில் 'கீரோயினை' வில்லன் மேய்ந்திருக்கிறாராம். அதாவது 'கீரோயின்' வாழ்க்கையில் புகுந்து விளையாடி விடுகிறாராம் வில்லன்.பிறர் பொருளை அபகரிப்பவன் தன் பொருளை இழப்பான் என்பதுதான் படத்தோட ஒன் லைன் என்கிறார் டயர‌டக்கர்.

#படங்களை பார்த்து பஞ்சரானால் கம்பெனி பொறுப்பல்ல‌

#பவர்ஸ்டாருக்கு கொடுத்த ஆதரவை இந்த லேடி பவர்ஸ்டாருக்கும் தருவீர்கள் என்றால் ஒரு லைக் போடுங்கள்.

ஸ்பாட்பிக்சிங்கில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டனர் மூவரும்

ஸ்பாட்பிக்சிங்கில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டனர் மூவரும் என போலிஸ் அறிவிப்பு

ராஜஸ்தான் ராயல் அணியின் மூன்று ஆட்டக்காரர்களான ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவான் சூதாட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஸ்பாட்பிக்சிங்கில் ஈடுபட்டு அதற்கேற்றார்போல பந்து வீசியதாக கைது செய்யப்பட்டனர். மூன்று பேரும் போலிஸ் விசாரணையில் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலிஸ் அறிவித்துள்ளது.

விசாரணையில் ஒப்புக்கொள்வதெல்லாம் கோர்ட்டில் எடுபடாது என்பதால் போலிஸ் வலுவான ஆதாரங்களையும் சாட்சிகளையும் நீதிமன்றத்தில் வைக்க வேண்டும்.

#இத்தனைக்கு பிறகும் நேற்று ஐபிஎல் மேட்ச் பார்த்தோம் அல்லவா, சூதாட்டமென்ன மேலும் என்னவேண்டுமானாலும் நடக்கும்

ஈழத்தமிழர் மீதான இன அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.

2009ம் ஆண்டு இந்த நாட்களில் மே 18ம் தேதிகளில் முள்ளிவாய்க்காலில் வைத்து தமிழர்களை கொன்று குவித்த படுகொலைகள் நடந்தேறியது. சிங்கள பேரினவாத ராணுவம் பல்லாயிரம் தமிழ்மக்களையும் புலிகளின் தலைமையயும் கொடூரமாக கொன்று குவித்தது, ஆயுத உதவி, உளவு உதவி மற்றும் புலிகளை முடக்க சிங்களத்துக்கு அனைத்துவிதமான ராஜதந்திர உதவிகளையும் செய்து போரை தங்கு தடையின்றி நடத்த உதவிய காங்கிரஸ்க்கும் அதன் கூட்டணி திமுகவுக்கும்
அங்கே சிங்களவன் தமிழர்களை கொன்று குவித்த நேரத்தில் இங்கே பெரும் அளவில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை வழங்கிக்கொண்டிருந்தார்கள் தமிழர்களும்.

முள்ளிவாய்க்கால் படுகொலை முள்வேலிக்குள் முடக்கப்பட்ட எம் தமிழனத்துக்கு என்றாவது ஒருநாள் விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media