BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 30 June 2013

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பில் முதன்முறையாக ஒரு தமிழர்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நீதியரசர் சதாசிவம் அவர்கள் இன்று குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜியால்  நியமிக்கப்பட்டார், சுதந்திரத்துக்கு பிறகான 65 ஆண்டுகளில் முதன் முறையாக ஒரு தமிழர் இந்த பதவியை ஏற்றுள்ளார்.
அதிகாரத்துக்கு அஞ்சாயம் நேர்மையுடனும் பொறுப்புடனும் தீர்ப்புகள் வழங்கியவர் என்பதற்கு ஒரு உதாரணம் ஒரு தலித் பஞ்சாயத்து தலைவராவது என்று சாதிவெறியுடன் மேலவளைவு முருகேசன் அவர்களும் பிறரும் கொல்லப்பட்ட வழக்கில் 17 கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்ததோடு, குற்றம் சாட்டப்பட்டிருந்த மொத்தம் 41 பேர்களில் எஞ்சிய 24 பேர்களுக்கும் குற்றச் செயலில் பங்கிருந்ததற்கு உரிய சாட்சியங்கள் இருந்தும் அவர்களுக்குத் தண்டனை வழங்க இயலாமற் போனதற்கு தமிழக அரசு முறைப்படி மேல் முறையீடு செய்யாததே காரணம் என்பதையும் தீர்ப்பில் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

# பெருமை கொள்வோம் ஒரு நேர்மையான தமிழர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்று, ஒரு லைக் போட்டு அவரை வாழ்த்துவோம்

Judge P.Sathasivam was appointed as Supreme court chief justice by the President of India, Pranab Mukherjee. Judge P.Sathasivam is the first tamil reached the Supreme court chief justice post.

லியாண்டர் பயஸ் மீதான செக் மோசடி வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸுக்கு எதிரான, செக் மோசடி வழக்கை, மும்பை உயர் நீதிம்னறம் நேற்று தள்ளுபடி செய்தது. மும்பை டிசைனர் முஸ்தபா இஷா என்பவர் பயஸின் வீட்டிற்கு டிசைன் பணி செய்ததற்கு கொடுக்கப்பட்ட 10 இலட்சம் மற்றும் 5 இலட்சம் செக் வங்கியில் பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆகிவிட்டதால் பயஸிடம்
முறையிட்டும் எந்த பலனும் ஏற்படாததால் வழக்கு தொடர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

மனு விசாரணைக்கு வந்த நாளில், முஸ்தஃபா வக்கீல் விசாரணைக்கு ஆஜராகததால், மாஜிஸ்திரேட் வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து முஸ்தஃபா, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. ஆனால், மனுதாரரோ அவரது வக்கீலோ விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே, நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.

# வழக்கு போட்டுவிட்டு ஆஜர் ஆகாமல் அப்படி என்ன வேலையாம் அவருக்கு?

Mumbai High Court dismisses cheque bounce case against Leander Paes as the  petitioner parties had not shown readiness to proceed further.

எங்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டோம் - உத்ரகாண்ட் அரசு

எங்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டோம் என உத்ரகாண்ட் வெள்ளச்சேதம் குறித்து மாநில அரசு அறிக்கை.


வெள்ள அபாயம் மற்றும் பேரழிவு குறித்த எச்சரிக்கை மாநில அரசுக்கு வெள்ளம் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் கிடைத்தது என்றும் மாநில அரசால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்துவிட்டோம் என்றும் இன்று கூடிய உத்ரகாண்ட் மாநில் அரசின் உயர்மட்ட குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசு தரப்பில் சார் தாம் யாத்ரா(பத்ரிநாத், துவாரகா, பூரி மற்றும் இராமேஸ்வரம் செல்லும் ஆன்மீக பயணம்) நான்கு நாட்களுக்கு தள்ளி வைக்கும் படி அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

# வெள்ள அழிவை விட வெள்ளம் அழிவை பயன்படுத்தி பயணிகளிடம் கொள்ளையடித்ததையும் கற்பழித்ததையும் தான் பொறுக்கவே முடியலை


The Uttarakhand government has said that it did everything it could after the weather department had issued a warning on heavy rains in the state.

லவ் லேண்ட் என்னும் செக்ஸ் தீம் பார்க்குகள் தென்கொரியா மற்றும் சீனாவில்

லவ் லேண்ட் என்னும் செக்ஸ் தீம் பார்க்குகள் தென்கொரியா மற்றும் சீனாவில்

இந்தியாவில் உள்ள காஜூரகோ கோவில் முழுக்க பாலியல் கலவி காட்சிகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருக்கும், அதே போன்று லவ் லேண்ட் என்னும் செக்ஸ் தீம் பார்க்குகள் தென்கொரியாவில்2004ம் ஆண்டில் ஜீஜூ தீவில் ஆரம்பிக்கப்பட்டது, இங்கு பெரிய சிற்பங்கள் பாலியல் உறவுகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகளுடன் அமைக்கப்பட்டிருந்தன, இவற்றை காணவருகின்ற காதலர்களுக்குள் இயற்கையாக இனம்புரியாத ஈர்ப்பொன்று தோன்றுவதாக கூறப்படுகிறது.

இதே போன்றதொரு லவ் லேண்ட் என்னும் தீம் பார்க் சீனாவில் சாங்கிங் என்ற இடத்தில் கட்டப்பட்டது, இது சீன சமுதாயத்தை பற்றிய தவறான எண்ணத்தை அளிக்கும் என்று கூறி சீன அரசு அதை தடைசெய்து மூடிவிட்டது, மேலும் இதை அழிக்க உத்தரவிட்டது.

# ஓவர்டோஸ் கொடுக்காமல் கோவில்களில் கோபுரங்களிலே பாலுறவு சிலைகளை வைத்து அளவாக கொண்டாடிய இனம் தமிழர் இனம்.

இந்த ஒரு படம் தவிர வேறு படங்கள் எதுவும் இணைக்க முடியாது, love land south korea மற்றும் love land china என்று கூகிள் இமேஜ்ஜில் தட்டி பார்க்கலாம்

20-20, டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் என அனைத்திலும் இந்தியா நடத்தப்போகும் உலகக்கோப்பை கிரிக்கெட்கள்

20-20, டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் என அனைத்திலும் இந்தியா நடத்தப்போகும் உலகக்கோப்பை கிரிக்கெட்கள்

2016ம் ஆண்டு 20-20 உலகக்கோப்பையையும், 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியையும் 2023ம் ஆண்டில் 50 ஓவர் உலகக்கோப்பையையும் இந்தியா நடத்தும் என்று ஐசிசி நேற்று அறிவித்துள்ளது. லண்டனில் ஐசிசியின் ஆண்டு இறுதி கூட்டத்திற்கு பின் இவைகள் அறிவிக்கப்பட்டன‌

# எவ்வளவு மேட்ச் பிக்சிங் செய்தாலும் விடாம கிரிக்கெட் பார்ப்பது இந்தியாவில் தானே

ICC announced in London after their annual meeting that India is going to conduct world cup cricket for Twenty 20 on 2016, world test championship on 2021 and 50 overs one day cricket on 2023.

தங்கம் விலை மேலும் குறையுமா?

தங்கத்தின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே வாரத்தில் 10% குறைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலின்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,997 டாலர் என்கிற அளவுக்கு விலை குறைந்தது. இதனால், 22 காரட் தங்கத்தின் விலையும் ஒரு கிராமுக்கு 2,400 ரூபாய்க்கும் கீழே சென்றது.

டாலர் மதிப்பு அதிகரித்ததும் நியூயார்க்கின் மிகப் பெரிய கோல்டு இ.டி.எஃப். நிறுவனமான எஸ்.பி.டி.ஆர். கோல்டு இ.டி.எஃப். ஃபண்ட் இந்த ஆண்டில் இதுவரை 381 டன் அளவுக்கு தங்கத்தை விற்பனை செய்துள்ளது. மேலும், தங்கத்தை அதிகமாக வாங்கும் சீனா மற்றும் இந்தியாவில் தேவை சமீபகாலமாக குறைந்து வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகைகள் மீது கடன் தருவதைக் குறைத்ததும், தங்கத்தின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்தம் சீனாவில் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாலும் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் தங்கம் விலை இறங்கியபோது போட்டி போட்டு வாங்கிய இந்தியர்கள் தற்போது மேலும் தங்கம் விலை குறையும் என காத்திருக்கின்றார்கள்.

நீங்கள் தங்கம் விலை மேலும் குறைய காத்திருக்கிறீர்களா? அல்லது குறைந்த வரை லாபம், மேலும் அதிகரிக்கும் முன் வாங்கிவிடலாம் என்று தங்கம் வாங்குறீரா? கமெண்ட்டில் தெரிவியுங்கள்

Even gold rate decreased more than 10% in resent days, people are not showing interest to buy gold as many expect the gold rate will further go down.

தொலைகாட்சி விவாதங்களை தடை செய்யும் முஸ்லீம் அமைப்புகள் - கவலை தெரிவிக்கும் ஆளூர் ஷாநவாஸ்

முஸ்லீம் சமூகம் தொடர்பான எந்த விவாதத்தையும் தடை செய்யும் முஸ்லீம் சமூகத்தினரை குறித்து கவலை தெரிவிக்கும் ஆளூர் ஷானவாஸ்.

தாலி தேவையா? இல்லையா? என்று ஒரு தொலைக்காட்சி விவாதம் நடத்த முடியும் ஆனால் பர்தா தேவையா இல்லையா என்று விவாதம் நடத்தினால் அந்த விவாதத்தை பார்க்காமல் கூட வெறும் முன்னோட்ட காட்சிகளை வைத்து நிகழ்ச்சியை தடை செய்வார்கள், இதனால் பர்தா ஏன் போட வேண்டும் என்று அவர்களுக்கு இருக்கும் கருத்தை கூட பொதுவெளியில் வைக்கும் வாய்ப்பை தவற விடுகிறார்கள், அது மட்டுமின்றி முஸ்லீம் அமைப்புகளின் இம்மாதிரி நடவடிக்கைகள் முஸ்லீம் அமைப்புகளை ஒரு கடும் போக்கு சமூதாயமாக காட்டுகிறது. இது குறித்து ஆளூர் ஷானவாஸ் எழுதிய கருத்துகள் கீழே.

இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது என்றே தெரியவில்லை.

சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு புதிய தலைமுறை டிவியின் 'ரெளத்ரம் பழகு' நிகழ்ச்சியில், தலாக் சர்ச்சை பற்றியும் பதர் சயீதின் முறையீடு பற்றியும் ஒரு முழுமையான அலசல் ஒளிபரப்பாக இருந்தது. அதற்கான முன்னோட்டம் கூட நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்டபடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை.

தலாக் குறித்து பொது வெளியில் எதிர்மறையான கருத்துக்கள் தீவிரமாக பரப்பப்பட்டு வரும் இவ்வேளையில், பதர் சயீதின் கலகக்குரல் அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இந்நிலையில் ஊடகங்கள் இப்பிரச்சனையை கூர்ந்து கவனிக்கத் தொடங்கியுள்ளன. அண்மையில் ஜூனியர் விகடன் போன்ற இதழ்களில் கூட இதுகுறித்த கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அதன் தொடர்ச்சியாகவே புதிய தலைமுறை டிவியிலும் இப்பிரச்சனை எடுத்துக் கொள்ளப்பட்டது.

முஸ்லிம் சமூகம் குறித்த சென்சிட்டிவான ஒரு பிரச்சனையை அலசுவதால் ஏற்படும் விளைவுகளை கவனத்தில் கொண்டே புதிய தலைமுறை டீம், மிகுந்த பொறுப்புணர்வை கையாண்டது. இது தொடர்பாக என்னை அவர்கள் தொடர்பு கொண்டபோது போதிய வழிகாட்டுதல்களை வழங்கினேன். முக்கியமாக யார் யாரிடம் பேட்டி எடுத்தால் சிறப்பாக அமையும் என்ற பட்டியலையும் கொடுத்தேன். அத்தோடு என்னுடைய கருத்துக்களையும் பதிவு செய்தேன்.

தலித் மக்களின் பாதுகாப்புக்காக அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் 'வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்' எனும் உரிமையை, தவறாகப் பயன்படுத்தப் படுகிறது எனும் காரணத்தைக் காட்டி ஆதிக்கச் சாதியினர் ஒழிக்க நினைப்பது போல், முஸ்லிம்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் தனித்த உரிமையான சரீயத் சட்டத்தை, தவறாகப் பயன்படுத்தப் படுகிறது எனும் காரணத்தைக் காட்டி பதர் சயீத் ஒழிக்க நினைக்கிறார் என்று சொன்னேன். என்னைப்போலவே பலரும் தலாக் சட்டத்தின் அவசியம் பற்றியும், அதன் நோக்கங்கள் பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளனர்.

இந்நிலையில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமல் தடைபட்டுள்ளது. தடைபட்டது என்று சொல்வதை விட தடுக்கப்பட்டது என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். நிகழ்ச்சி ஏன் வரவில்லை என்று நாம் விசாரித்த போது, சில முஸ்லிம் அமைப்பினர், முன்னோட்டக் காட்சியைப் பார்த்து விட்டு டிவி நிலையத்துக்கு தொலைபேசி செய்து ஆட்சேபனை தெரிவித்ததாகவும், அதனால் டிவி நிர்வாகம் பின்வாங்கி விட்டதாகவும் அறிய முடிந்தது.

ஒரு நிகழ்ச்சியின் உள்ளடக்கம் என்னவென்றே தெரியாமல் அதன் முன்னோட்டத்தை மட்டுமே பார்த்து விட்டு அந்நிகழ்ச்சியையே முடக்க முயல்வது நியாயம்தானா? இத்தகைய அதிகாரத்தை இந்த அமைப்புகளுக்கு யார் வழங்கியது? டிவிக்காரர்களை மிரட்டும் இந்த பால்தாக்கரே தனத்துக்கு யார் முற்றுப் புள்ளி வைப்பது?

முஸ்லிம்களைப் பற்றிய நல்ல செய்திகளே ஊடகங்களில் வருவதில்லை என்று ஒருபுறம் புலம்பிக் கொண்டிருக்கிறோம். மறுபுறம் நமது அடாவடிகளால் இவ்வாறான நல்ல பதிவுகளை வரவிடாமல் தடுக்கிறோம். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது?

முஸ்லிம்களிடமும் வலுவான ஊடகங்கள் இல்லை; வலுவான ஊடகங்களிலும் முஸ்லிம்கள் குறித்த அலசல்கள் வரக்கூடாது என்றால், பொது வெளியில் இருந்து முஸ்லிம்கள் தனிமைப் படுவதை எவராலும் தடுக்க முடியாது.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. ஊடக அரசியலை தெளிவாகப் புரிந்து கொண்ட நல்ல உள்ளங்கள் அதிகம் இருப்பீர்கள். அப்படிப் பட்டவர்கள் புதிய தலைமுறை டிவியை தொடர்பு கொண்டு அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் படி வேண்டுகோள் விடுங்கள்.

தொடர்பு எண்: 044-45969500 Fax: 044-45969536

அடுத்த வார 'ரெளத்ரம் பழகு' நிகழ்ச்சியில், தலாக் குறித்த அலசல் இடம்பெறுவதும், இடம்பெறாமல் இருப்பதும் உங்கள் கைகளிலேயே உள்ளது.

ஆளூர் ஷாநவாஸ்

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media