BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 20 October 2014

ராஜபக்சேவுக்கு பாரத் ரத்னா கொடுக்க வேண்டுமாம் - சொல்லுகிறார் சுப்பிரமணியன் சுவாமி !!



பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி , இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார் .

அவர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் , " விடுதலைப் புலிகள் அமைப்பை அளித்தன் மூலம் நமது இந்தியா நாட்டின் பாதுகாப்பிற்கு ராஜபக்சே பெரிய பங்காற்றியுள்ளார் . எனவே அவருக்கு பாரத் ரத்னா கொடுத்து சிறப்பிக்க வேண்டும் " என எழுதியுள்ளார் .

மேலும் இந்த கடிதம் மோடியிடம் கிடைத்துவிட்டதை மோடியின் தரப்பில் உறுதி செய்யப்பட்டதாக சுப்பிரமணியன் சுவாமி கூறினார் .

15 வயது சிறுவனை கற்பழித்த மூன்று இளைஞர் மற்றும் இரண்டு சிறுவர்கள் கைது !!



அமெரிக்காவின் கெண்டக்கி மாகானத்தின் மருத்துவமனை ஒன்றில் 15 வயது மாணவன் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் . அவனை வன்புணர்வு செய்த மூன்று இளைஞர்களும் , இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் .

விசாரணையில் அவர்கள் அந்த 15 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்ததோடு மட்டுமில்லாமல் அதை வீடியோ எடுத்து மற்ற மொபைல்களுக்கு பரப்பியுள்ளனர் .டைலர் , ஜோன்ஸ் , மில்லர் என்ற அந்த மூன்று பேர் மீதும் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . மூன்று பேருக்கும் மொத்தம் 1 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . மற்ற இரண்டு சிறுவர்கள் தனியாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர் . 

வெஸ்ட் இண்டீஸ் போய்விட்டால் என்ன , நாங்கள் இருக்கிறோம் என பிசிசிஐ கவலை தீர்க்க வந்தது இலங்கை கிரிக்கெட் போர்ட் !!



கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தொடர் முழுவதும் விளையாடாமல் பாதியுடன் நாடு திரும்பியது . தீடிரென கிளம்பியதால் இந்தியாவின் பிசிசிஐ க்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது . இந்த இழப்பை ஓரளவு சரி கட்ட இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் அனுப்பினர் . அவர்களும் ஐந்து ஒருநாள் போட்டிகள் விளையாட ஒத்துக் கொண்டனர் .

இதற்கு பதிலாக அவர்கள் இந்தியாவில் அடுத்த வருடம்  நடக்க இருந்த  மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கையில் நடத்தும்படி கோரிக்கை வைத்துள்ளனர் .  இந்தியா எந்த நாட்டிற்கு சென்று போட்டிகள் விளையாடினாலும் அந்த நாட்டிற்கு பெரும் லாபம் கிடைப்பது இயல்பு . இதனால் இலங்கை இந்த கோரிக்கையை வைத்துள்ளனர் .

ஆனால் இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன பதில் சொல்லப் போகின்றனர் என தெரியவில்லை . இப்போதைக்கு இது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது .  

குஜராத்தில் தீபாவளி போனசாக 500 கார்கள் மற்றும் 200 பிளாட்டுகள் கொடுத்த முதலாளி !!



குஜராத்தின் சுராத் நகரைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் தன்னிடம் வேலை பார்க்கும் தொழிளாலர்களுக்கு தீபாவளி போனசாக 500 கார்கள் மற்றும் 200 பிளாட்டுகள் மற்றும் பல விலை உயர்ந்த ஆபரணங்களை பரிசாக கொடுத்துள்ளார் . முதலாளியின் பெயர் சாவ்ஜி பாய் .

தன்னிடம் வேலைப் பார்க்கும் 1200 பேருக்கு இவர் இந்த அதிர்ச்சி பரிசை அளித்துள்ளார் . தன்னிடம் வேலைப் பார்ப்பதில் கார் இல்லாத 491 பேருக்கு காரைப் பரிசாக கொடுத்துள்ளார் . வீடு இல்லாத 200 பேருக்கு பிளாட் அளித்துள்ளார் . கிட்டத்தட்ட 525 தொழிலாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை பரிசாக அளித்துள்ளார் .

இது குறித்து சாவ்ஜி பாய் கூறுகையில் , " நாங்கள் 1200 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு இலக்கு கொடுத்தோம் , அந்த இலக்கை முடித்தவர்களுக்கு நாங்கள் பரிசு அளிக்கிறோம் " என்றார் . 

ஸ்பான்சர் கிடைக்காமல் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி !!




இந்தியர்களாகிய நாம் அனைவருக்கும் தெரிந்த விளையாட்டு எது வென்றால் அது கிரிக்கெட்டாக தான் இருக்கும் . அதனை தவிர நம்க்கு எந்த விளையாட்டும் தெரியாது. நமது மக்கள் தான் அப்படி என்றால் நமது அரசாங்கம் அதற்கு மேல். அவர்களும் கிரிக்கெட்டை மற்றும் தான் ஆதரிக்கிறார்கள். சமீபத்தில் தான் ஆசிய விளையாட்டு போட்டிகள் முடிந்தன.

அதில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பில்லை என இந்தியா தனது வாள்வீச்சு வீர்ர்களை அனுப்பவில்லை. இது நமது வீரர்கள் மீது நமது அரசு வைத்து இருக்கும் நம்பிக்கை. இதற்கு அடுத்து ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அதில் தமிழகத்தை சேர்ந்த பவானி தேவி வெள்ளி பதக்கம் வென்றார்.

அவர் தனது சொந்த செலவில் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்த சீசனில் அவர் பெற்று வரும் தொடர் வெற்றிகள் காரணமாக அவர் தரவரிசையில் 315 வது இடத்தில் இருந்து 77 வது இடத்துக்கு முன்னேறினார். இன்னும் சில இடங்கள் முன்னேறி 32 வது இடத்துக்குள் வந்துவிட்டால் அவரால் நேரடியாக 2016 ஒலிம்பிக்கில் பங்குபெற முடியும். அதற்கு அடுத்து வரும் போட்டிகளில் அவர் பங்கேற்று வந்தாலே போதும். அடுத்து அக்டோபர் 27 ஆம் தேதி உலக வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்கு ஸ்பான்சர் இல்லாமல் அவர் தவித்து வருகிறார். ஏற்கனவே ஆசிய போட்டிகளில் பங்கேற்றதற்கே 70 ஆயிரத்துக்கு மேல் செலவு ஆகி விட்டது. இப்போது உலக சாம்பியன்ஷிப்பில் பங்குபெற வேண்டுமானால் 3 இலட்சத்துக்கு மேல் செலவு ஆகும் . அதற்கு உரிய ஸ்பான்சர் இல்லாமல் தவித்து வருகிறார். இவருக்கு உதவ நினைப்பவர்கள் இந்த எண்ணில்  9962742561 தொடர்பு கொள்ளலாம்.

லார்ட்ஸ் மைதானத்தில் சட்டையை கழற்றியது தவறு என ஒப்பு கொண்ட கங்குலி



2002 ஆம் ஆண்டு இங்கிலாந்து உடனான தொடரின் போது கங்குலியின் தலைமையில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதும் இந்திய கேப்டன் கங்குலி தனது சட்டையை கழற்றி வெற்றியை கொண்டாடினார்.இந்த வெற்றி கொண்டாட்டம் உலகம் முழுவதும் பிரபலமானது. அனைவருக்கும் கங்குலி என்றாலே இந்த வெற்றி கொண்டாட்டம் தான் நியாபத்துக்கு வரும். அதனாலே அவருக்கு பல ரசிகர்கள் சேர்ந்தார்கள். இன்று கூகுளில் சென்று லார்ட்ஸ் மைதானம் என டைப் செய்தால் கங்குலி தனது சட்டையை அவிழ்க்கும் போட்டோ வரும்.


தனது இந்த செயல் தவறானது என 12 ஆண்டுகள் கழித்து கங்குலி கூறியுள்ளார். நம்மிடம் பல திறமைகள் உள்ளது ஆனால் அவை எல்லாம் முடங்கி கிடக்கிறது. ஆக்ரோஷமாக செயல்பட்டால் தான் அந்த திறமை வெளிப்படும் என நம்பினேன். அதனால் தான் ஆக்ரோஷமாக செயல்பட்டேன். நெருக்கடியில் இருந்து விடுபட்ட வேகத்தில் வெற்றியை அவ்வாறு கொண்டாடிவிட்டேன் . அது இப்போது தவறு என உணர்கிறேன் என்றார் சவுரவ் கங்குலி.

2015 கிரிக்கெட் உலக கோப்பையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதி போட்டியில் பங்கேற்க போகிறதாம் - கணித்துள்ளார் பல முறை கோப்பை வென்றவர் ..



அடுத்த கிரிக்கெட் உலக கோப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. இது நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இந்த உலக கோப்பையின் இறுதி போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்காக தொடர்ந்து 2 உலக கோப்பைகளை பெற்று தந்தவர். வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள இந்த இரண்டு அணிகளும் மோதினால் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என பாண்டிங் நினைக்கிறார். சொந்த மண்ணில் ஆட்டம் நடைபெறுவதால் கிளார்க் கட்டாயம் சாம்பியன் பட்டத்தை வென்று தருவார் என கூறுகிறார். 50 ஒவர் போட்டிகளில் அதிரடி ஆட்டகாரர்கள் ஆட்டத்தை மாற்றுவர்களா இருப்பார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு டெவிட் வார்னர் இருப்பார் என பாண்டிங் கூறினார். உலக கோப்பை எப்போது வருமோ என எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகிவிட்டது.


இந்த தீபாவளிக்கு எத்தனை பேர் இணையதளத்தில் டிக்கெட் புக் செய்துள்ளார்கள் ??





தீபாவளி விழா வந்துவிட்டது. கடந்த வெள்ளிகிழமையில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர். வெள்ளிகிழமையில் இருந்து இந்த வாரம் ஞாயிற்றுகிழமை திரும்பி செல்வதற்கு வரை சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளார்கள். இது பேருந்தில் மட்டும் ஆகும். இதற்காக பல சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது வரை அதிக கூட்டம் வரவில்லை. இன்று மற்றும் நாளையும் அதிக கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தை கட்டுபடுத்த அதிக அளவு போக்குவரட்த்து அதிகாரிகளை நியமித்து உள்ளார்கள். இது மட்டும் இல்லாமல் ரிசர்வ் செய்யாமல் தினமும் 10 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள். இந்த முறை அதிக மக்கள் இணையம் வழியாக தான் முன்பதிவு செய்துள்ளார்கள். இணையத்தை எல்லா மக்களும் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள் என்பதை இது தெளீவாக காட்டுகிறது. 

இப்படி செய்துவிட்டாரே ரஜினி !!


ரஜினிக்கு என தமிழகத்தில் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அவர் அரசியலுக்கு வரவேண்டும் என எல்லாரும் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர் எப்பொழுதும் போல் எந்த கருத்தும் சொல்லாமல் தவிர்த்து வந்தார். அவர் எந்த கட்சிக்கு வாக்களிக்க சொல்கிறாரோ அவர்களுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். ரஜினி நல்ல குணமும் கொண்டவர். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வார்.

அவரை பாஜகவில் சேர்த்து 2016 தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்னும் முடிவில் இருந்தது பாஜக.  பாஜகவுக்கு தமிழகத்தில் ஆதரவு அதிகரித்து கொண்டே வருகிறது. ரஜினியும் சேர்ந்தால் அவர்களால் கட்டாயம் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால் அதில் புதிய பிரச்சனை வந்துவிட்டது. சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 4 வருட சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார். அவர் வெளியே வந்ததற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் ஏன் ஊழல் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்படியெனில் அவர் பதவிக்கு வந்தாலும் ஊழலுக்கு ஆதரவாக தான் செயல்படுவாரா என மக்கள் நினைப்பார்கள். எனவே ரஜினி தேவையில்லாத இந்த வாழ்த்தை தவிர்த்து இருக்கலாம். இனியாவது சரியாக நடந்து கொள்ளட்டும்.

நோட்டா என்னாச்சு ?? மக்களிடையே ஆதரவு இல்லையா ??



யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என புதிய முறை தேர்தல்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. வேட்பாளர்களில் யாரையும் எனக்கு பிடிக்கவில்லை என்றால் பலரால் வாக்களிக்காமல் இருந்து விடுகிரார்கள். அவர்களது வாக்கு வீணாகி விடுகிறது. அல்லது அதனை கள்ள ஒட்டுக்கு பயன்படுத்தி விடுகிறார்கள். இதனை தடுக்கவே 49-0 என்னும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அது சரியாகவில்லை என்பதால் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. அது சிறிது சிறிதாக ஆதரவு அதிகரித்து வந்தது. நடந்து முடிந்த மஹாராஷ்டிரா ஹரியானா தேர்தலில் அதிகளவிலான மக்கள் நோட்டாவை தேர்தெடுக்கவில்லை. மகாராஷ்டிராவில் 4,60,741 வாக்காளர்களும், ஹரியானாவில்53,381 வாக்காளர்களும் நோட்டாவை தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.

தமிழகத்தில் ஜெயலலிதாவை பாஜக எதிர்க்கும் - தலைமை அறிவிப்பு

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதில் 2 முறை ஜாமீன் கேட்டும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அதன் பிறகு இறுதியாக அக்டோபர் 17 ஆம் தேதி அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இது தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


சிறையில் இருந்து வெளியில் வந்த ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி வாழ்த்து தெரிவித்து இருந்தார். விரைவில் அவர் முதல்வர் பதவியில் மீண்டும் அமர வேண்டும் என கூறி இருந்தார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சைய கிளப்பியது. பாஜகவை சேர்ந்த ஒரு மத்திய அமைச்சர் எப்படி ஒரு ஊழல் குற்றவாளிக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கலாம். அப்படியெனில் பாஜகவும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக உள்ளதா சந்தேகம் எழுந்தது. இதற்கு பாஜக மூத்த தலைவர் முரளிதர் ராவ் பதிலளித்தார். மேனகா காந்தியின் கருத்துக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுகவை பாஜக முழுமையாக எதிர்க்கிறது என கூறியுள்ளார்


இலங்கை புறக்கணிப்பு கோரி தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

இலங்கை புறக்கணிப்பு கோரி பத்திரிக்கையாளர் சந்திப்பு -19.10.2014
2009 ஆம் ஆண்டு ஈழ போரின் பொழுது 1,80,000 தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இனவெறி அரசாங்கம், 1948- ல் தொடங்கிய தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலையை இன்று வரை தொடர்ந்து நடத்தி வருகிறது. இனப்படுகொலை நாடான இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று 8 கோடி தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக சட்டமன்ற தீர்மானத்தை அமல்படுத்தாத இந்திய அரசாங்கத்தினை கண்டிக்கின்றோம் .
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்களில் இலங்கை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த சூழலில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தங்கள் வணிகர் பேரவையை சேர்ந்த 6000 வணிகர் சங்கங்களை சேர்ந்த 50 லட்சம் கடைகளில் 'தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை பொருட்களை விற்கமாட்டோம் என்று ' தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைக்கும் அதன் தலைவர் வெள்ளையன் அய்யா அவர்களுக்கும் எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் .
இனபடுகொலை இலங்கை பொருட்களை இந்த கடையில் விற்கமாட்டோம்' என்ற வாசகம் பொருந்திய ஸ்டிக்கர் ஒவ்வொரு கடைகளுக்கு முன்பும் ஒட்டப்படும் .
வரும் 26.10.2014 அன்று சென்னையில் உள்ள இலங்கை வர்த்தக நிறுவனமான 'டம்
ரூ பர்னிச்சர்'ன் ஆறு கிளைகள் முன்பும் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெரும்.
சிங்கள இனவெறியன் ராஜபக்சேவின் பினாமியான லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவர இருக்கும் கத்தி திரைபடத்தை தமிழர்கள் யாரும் பார்க்க வேண்டாம் என்று தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள இந்திய இலங்கை உடனான கிரிக்கெட் போட்டியை பிசிசிஐ உடனே ரத்து செய்ய வேண்டும் . அப்படி ரத்து செய்யாத பட்சத்தில்
2013. 2014 ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகளின் பொழுது எப்படி தொடர் போராட்டத்தினால் இலங்கை வீரர்களை தடை செய்தோமோ அதே போல் செய்ய நேரிடும் என்பதை BCCI நிர்வாகத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம் .
பாதிக்க பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க தமிழக மக்களை ஒன்று திரட்டி இலங்கை புறக்கணிப்பை முழுமையாக சாத்தியப் படுத்துவோம் . 

தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு

கத்தி பட ட்ரெயிலரை கலாய்த்து வந்த ட்ரோல்கள் !! எப்படியெல்லாம் கலாக்கீறாய்ங்க ??


கத்தி ட்ரெயிலர் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த வேளையில் நேற்று ட்ரெயிலர் வந்தது . எப்போதும் போல இந்த ட்ரெயிலரையும் இணையத்தில் கலாய்க்க தொடங்கிவிட்டனர் . அப்படி வந்த சில ட்ரோல்கள் இதோ ( இரண்டாவது படம் பயங்கர சிரிப்பை வரவழக்கும் ) .
















நீண்ட நாள் வாழ – நான்கு உணவுகள்


வண்ண வண்ணக் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு வகைகளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது, அவை நம் உடலுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். 

1. நெல்லிக்காய் : இளம் பச்சை நிற நெல்லிக்காயை இருப்பது வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட். கான்சரை எதிர்க்கும் ஆற்றலுள்ளது. இது கொழுப்பை கரைக்க உதவும், இதில் சர்க்கரை அளவு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

2. திராட்சைப்பழம் : இதன் புளிப்புச் சுவையின் பின்னனியில் இருப்பது ஆன்டி ஆக்ஸிடென்ட்தான். சர்க்கரை வியாதிக்கு மிகவும் நல்லது.

3. பூண்டு : வெண்மையும் தூய சக்தி பூண்டு, இதைச் சாப்பிட்டால் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம், ஆனால் இதிலிருக்கும் அசிலின், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் உடையது. கான்சரை தவிர்க்க, கெட்ட கொழுப்பை அகற்ற, இதய நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள என்று பூண்டின் நன்மைகள் கணக்கில் அடங்காது. தினமும் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய்கள் நமக்கு நிரந்திரப் பகைதான்.

4. காபி : டார்க் பிரவுனைக் காபி கலர் என்றே தான் சொல்வோம். தினமும் இரண்டு கப் காபி தரும் எனர்ஜி என்பது அதை பருகி மகிழ்பவர்களுக்குத் தான் தெரியும். இதிலிருக்கும் பாலிபெனால் நம்மை சுறுசுறுப்பாக்கும். சர்க்கரை நோய், இதயம் சம்மந்தப்பட்ட வியாதிகளை தடுக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தொப்பையை குறைக்க வழி

  • உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.
  • பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை வி...ட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.
  • எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.
  • காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.
  • இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.
  • உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.
  • தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.
  • எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

உணவே மருந்து : நுங்கு


நுங்கு என்ன சத்துக்கள் ? வைட்டமின் பி, சி சத்துக்கள்

பலன்கள் : கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. 

சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது. அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே தனிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். கோடையில் வேர்குரு. தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media