BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 27 February 2014

நாகர்கோவிலில் இரண்டாம் வகுப்பு மாணவி கற்பழிப்பு


நாகர்கோவிலை சேர்ந்த சிறுமி ஒருவர் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 22–ந் தேதி பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த லாலு(வயது 20) என்பவர் சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் தகாத முறையில் நடந்தார். இதனால் சிறுமி அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் இருந்து தப்பிக்க போராடிய போது, வாலிபர் சிறுமியின் வாயை பொத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் தெரிய வந்ததும், சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட லாலு மீது 2012–ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி லாலுவை தேடி வருகின்றனர்.

நாட்டின் முதல் அஞ்சல் துறை ஏடிஎம் சென்னையில் திறப்பு


நாட்டிலேயே முதலாவது அஞ்சல் துறை ஏ.டி.எம் ஒன்றை சென்னையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். சென்னை தியாகாரய நகர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில், இந்த ஏடிஎம்-ஐ திறந்து வைத்துப் பேசிய அவர் கூறியதாவது:

" இந்த புதிய முயற்சியில் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, இணையம் வழியான மைய வங்கி சேவையை அஞ்சல் துறை துவக்கியுள்ளது. இதன்மூலம் அஞ்சல் துறையில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் இதுபோன்ற ஏடிஎம் மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம்.

விரைவில் நாடு முழுவதும் 1,55,000 மையங்கள் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும். இந்த ஏடிஎம் சேவையைப் பயன்படுத்துவதற்கு வசதிகள் செய்யப்படும். நாடு முழுவதும் 2015ம் ஆண்டுக்குள் இதைச் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வங்கிக் கணக்குகளுக்கும் அஞ்சல் துறை ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் பெறும் வசதிக்காக வங்கிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்." 

சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் 100 பேர் கைது


சத்தியமூர்த்தி பவனில் கல் வீசி தாக்குதல், ராஜீவ் சிலை உடைப்பு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து, வளசர வாக்கம் சின்ன போரூர் பகுதியில் உள்ள 'நாம் தமிழர்' கட்சி தலைவர் சீமான் வீட்டை முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர்.

வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்கள், அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

ராஜீவ் சிலை உடைப்பை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சியினர், வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக கிடைக்கப் தகவலின் அடிப்படையில், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் கமிஷனர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

சிமென்ட் சிலைகள் உடைக்கப்பட்டதால், வெண்கலத்தில் மறுபடியும் ராஜீவ் காந்திக்கு சிலை


வேப்பேரி போலீஸ் நிலையம் அருகில் மற்றும் புரசைவாக்கம், பட்டாளம் ஆகிய 3 இடங்களில் இருந்த ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலைகளை நேற்று இரவு மர்ம ஆசாமிகள் உடைத்துள்ளனர். உடைக்கப்பட்ட 3 இடங்களிலும் ராஜீவ் காந்தியின் வெண்கல சிலை அமைக்கப்படும் என்று வட சென்னை மாவட்ட காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ பேசிய போது, "ராஜீவ் சிலைகள் உடைக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். சிலைகளை உடைத்துவிட்டதால் உணர்வுகளை அழித்துவிட முடியாது. தற்போது உடைக்கப்பட்டது சிமெண்டு சிலைகள். இனி அதே இடத்தில் வட சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவின் வெண்கல உருவசிலை அமைக்கப்படும்." என்று அவர் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி சிலை உடைப்பு: பெரம்பூரில் காங்கிரசார் மறியல்


பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் இரண்டு இடங்களில் ராஜீவ் காந்தி சிலைகள் உடைக்கப்பட்டன. இதுபற்றி அறிந்ததும்,  இன்று காலை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுமார் 500–க்கும் மேற்பட்டோர் அந்த இடம் அருகே திரண்டனர். சிலையை உடைந்தவர்களை கைது செய்யக்கோரி அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர் சாலையில் படுத்து மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாமல் சீமானை கைது செய்கக் கோரி கோஷமிட்டு சாலையில் அமர்ந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

எம்.ஜி.ஆர். சமாதி இரட்டை இலைச் சின்னத்தை துணியைப் போட்டு மூடக் கோரி திமுக வழக்கு


சென்னை கடற்கரையில் உள்ள‌ எம்.ஜி.ஆர் நினைவிடத்தில், அதிமுக அரசு அமைத்துள்ள இரட்டை இலை சின்னம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதை திரையைப் போட்டு மூட உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில்,

இந்த இரட்டை இலை சின்னத்தை அகற்றக்கோரி ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ள சூழ்நிலையில் இந்த சின்னம் வாக்காளர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த சின்னத்தை திரையிட்டு மூடுவதற்கு தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். இதற்கான செலவினை அதிமுகவிடம் இருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media