2008ஆம் ஆண்டு தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குமார் விஷ்வாஸ், "கேரள நர்சுகள் கருப்பானவர்கள். இதனால் அவர்களை சிஸ்டர் என்று கூப்பிட்டனர். இந்தப் பெண்களில் பலர் ஃபேஸ்புக்கில் தங்களது படங்களைக் கூட போட மாட்டார்கள்." என்று பேசியிருந்தார். இதன் வீடியோ சமீபத்தில் வெளியாகி, கேரள மக்களிடம் கடும் எதிர்ப்பை சந்தித்து இருந்தது.
குமார் விஷ்வாஸ் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்கக் வேண்டுமென்று, கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், தான் 2008ல் கூறியிருந்த கருத்துகாக மன்னிப்பு கோரிய குமார் விஷ்வாஸ், "நான் கவி சம்மேளன் நிகழ்ச்சியில் பேசிய பழைய வீடியோவை பார்த்து கேரளாவில் உள்ள எனது நண்பர்கள் பலரின் மனம் புண்பட்டுள்ளது என்று கேள்விப்பட்டேன். யார் மனதையும் வேண்டும் என்றே நான் புண்படுத்தியதில்லை. மதம், பகுதி, ஜாதி அடிப்படையில் பிரிவினை ஏற்படுத்துவதை நான் விரும்புவதில்லை. இருப்பினும் எனது வார்த்தைகள் யார் மனதையாவது காயப்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்." என்றார்.
"
குமார் விஷ்வாஸ் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்கக் வேண்டுமென்று, கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், தான் 2008ல் கூறியிருந்த கருத்துகாக மன்னிப்பு கோரிய குமார் விஷ்வாஸ், "நான் கவி சம்மேளன் நிகழ்ச்சியில் பேசிய பழைய வீடியோவை பார்த்து கேரளாவில் உள்ள எனது நண்பர்கள் பலரின் மனம் புண்பட்டுள்ளது என்று கேள்விப்பட்டேன். யார் மனதையும் வேண்டும் என்றே நான் புண்படுத்தியதில்லை. மதம், பகுதி, ஜாதி அடிப்படையில் பிரிவினை ஏற்படுத்துவதை நான் விரும்புவதில்லை. இருப்பினும் எனது வார்த்தைகள் யார் மனதையாவது காயப்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்." என்றார்.
"