BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 9 August 2014

உங்கள் குழந்தைகளுக்கு பிலாஸ்டிக் டிபன் பாக்ஸில் உணவு கொடுக்குறீர்களா ?? - அதிர்ச்சி ரிப்போர்ட் !!



குழந்தைகளுக்கு எப்போதும் வண்ணமயமாக இருப்பது பிடிக்கும் . அதனால் இவர்களை மயக்கி தங்கள் வியாபாராத்தை அதிகரித்துக் கொள்ள பல நிறுவனங்கள் முயன்று பல நிறங்களில் டிபன் பாக்ஸை அறிமுகம் செய்துள்ளது . நம்முடைய செல்லக் குழந்தைகள் ஆசை ஆசையாக கேட்ட டிபன் பாக்ஸில் தான் அவர்களுக்கு பல நோய்களை கொடுக்கும் ஆபத்தும் ஒழிந்து கொண்டு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா ??

சமீப காலத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இது போன்ற டிபன் பாக்ஸ் செய்கின்ற பிளாஸ்டிக் போன்ற பொருட்களினால் நமது குழந்தைகளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுவது மட்டும் இல்லாமல் , அவர்களுக்கு டையாபடிஸ் , நெஞ்சு வலி போன்ற நோய்களும் வருகிறது .

இந்த பிளாஸ்டிக்கில் பிஸ்பெனால் - எ (பிபிஎ ) என்னும் தீங்கு விளைவிக்கும் ரசாயம் இருக்கிறது . இது பெரியவர்களுக்கு நரம்பியல் சிதைவுக் கோளாறுகள் ஏற்படுத்துகிறது . மேலும் பல கோளாறுகளை உண்டாக்குகிறது .

பெண்களுக்கு பெண்மை அடைவதற்கும் , பெண் அம்சங்களை பெறுவதற்கும் உதவும் ஈஸ்ட்ரோஜென் என்னும் இயக்குநீர் உண்டாவதை தடுக்கும் . சிறுவயதில் மகளிர் இந்த பிபிஎ என்னும் இரசாயத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால் , அது அவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் பல பாதிப்புகளை உண்டாக்கும் .  மேலும் இந்த பிபிஎ மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து உள்ளது .

இதை பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறை தலைவர் வி என் மிஷ்ரா தெரிவித்தார் .

அமெரிக்காவின் சில இடங்களில் குழந்தைகளுக்கான பொருட்கள் தயாரிப்பதில் இந்த பிபிஎ என்னும் இரசாயனம் தடை செய்யப்பட்டுள்ளது .

இணையதள புகைப்பட போட்டியின் இறுதியில் உள்ள 5 புகைப்படங்கள்








இனி மாம்பழத்தில் கொட்டை இருக்காதாம் ! கண்டுபிடித்தனர் இந்திய ஆராய்சியாளர்கள் !!


இப்போது அனைத்து பழங்களும் சீட்லெஸ் , அதாவது கொட்டை இல்லாமல் கிடைக்கும் முறையில் ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர் . அந்த வகையில் இப்போது மாம்பழத்திலும் கொட்டை இல்லாத மாம்பழத்தை இந்திய ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் .

பீகார் விவசாய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்சியாளர்கள் , ரத்னா மற்றும் அல்போன்சா என்னும் மாம்பழ வகைகளின் கலப்பினத்தில் இருந்து இந்த விதை இல்லாத மாம்பழத்தைக் கண்டு பிடித்துள்ளனர் .

இந்த புது ரக மாம்பழத்திற்கு சிந்து என்று பெயரிட்டுள்ளனர் .

நீங்கள் என்ன தான் மாம்ப்ழத்தை விரும்பி சாப்பிட்டாலும் , இறுதியில் மாம்பழத்தின் கொட்டையை சப்புக் கொட்டி சாப்பிடும் அளவுக்கு எதுவும் இருக்காது .

விண்ணில் செலுத்தப்பட்ட வைரம் கீழே விழுந்தது !! தேடி எடுப்பவர்களுக்கு வைரம் சொந்தம் !!



லண்டன் நகைக்கடையான் 77 டைமண்ட்ஸ் தன் கடையின் விளம்பரத்திற்காக கெயின்ஸ்பாரோஹ் என்னும் இடத்தில் இருந்து 10 லட்சம் மதிப்புள்ள வைரம் ஒன்றை ஒரு பெட்டிக்குள் வைத்து , ஹிலியம் பலுனுடன் கட்டி மேல் நோக்கி பறக்க விடப்பட்டது .

மேல் நோக்கிப் பறந்த அந்த வைரம் , விண்வெளி விளிம்பில் பலூன் வெடித்தது . இதனால் மேலே இருந்து கீழே விழுந்தது வைரம் . இங்கிலாந்து சிவில் போக்குவரத்து ஆணையத்தின் உதவியுடன் அது கிழே விழுந்த இடத்தை அறிந்தனர் . அது கெயின்ஸ்பாரோஹ்  இடத்தில் இருந்து ஐந்து மைல் தூரத்தில் விழுந்து இருப்பதாக கூறுகின்றனர் .

மேலும் அந்த வைரத்தை எடுப்பவர்களுக்கு அந்த வைரம் சொந்தம் என்றும் அறிவித்துள்ளனர் .

நடிகர்களும் அவர்களின் வித்தியாசமான மற்றும் சிரிப்பூட்டும் பயங்களும் !!! இதுக்கெல்லாம பயப்படுவாங்க ??




எல்லாருக்கும் பயம் என்பது பொதுவாக இருக்க தான் செய்கிறது . ஆனால் பயம் என்பது எதன் மீது இருக்கிறது என்பது தான் ஒவ்வொரு நபருக்கும் ஏற்ப மாறிக் கொண்டு இருக்கிறது . ஆனால் சில நடிகர்கள் எதற்கெல்லாம் பயப்படுகிறார்கள் என்று பார்த்தால் உங்களுக்கு சிரிப்பு வரும் . இதுக்கெல்லாம பயப்படுவாங்களா என்றும் யோசிக்கவும் தோனும் .


1 ) அர்ஜுன் கபூர்  - சீலிங் பேன்

இதனால் இவர் வீட்டில் சீலிங் பேனே கிடையாதாம் .



2) பமிலா அண்டர்சன் - கண்ணாடி

இவருக்கு கண்ணாடி என்றாலே பிடிக்காதாம் . இவருடைய உருவத்தை இவருக்கு கண்ணாடியில் பார்ப்பதும் பிடிக்காதாம் . உலகமே இவர் அழகில் மயங்கும் போது இவருக்கு இவரை பார்க்க பிடிக்காதாம்



3) செலினா ஜெட்லி - பட்டாம்பூச்சி

பாலிவுட் நடிகையான இவருக்கு அழகான பட்டாம்பூச்சியைக் கண்டால் பயமாம் .


4 ) ஸ்கார்லெட் ஜொஹன்சன் - பறவைகள்

இவருக்கு பறவைகளின் சிறகுகள் எழுப்பும் ஒலியும் , அலகும் இவருக்கு பயத்தை ஏற்படுத்துமாம்



5 ) ஒப்ரா வின்ப்ரே - சுவிங் கம்



6 ) ஜானி டிப் - கோமாளி



7 ) மேகன் பாஸ் - பாக்டரியா மற்றும் கிருமிகள்

இவர் பாக்டரியா மற்றும் கிருமிகள் மீது உள்ள பயத்தால் இவர் பொது குளியலறையை பயன்படுத்த மாட்டாராம் .


இன்று விஜய் ரசிகர்களால் மறக்க முடியாத நாளாம்


கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் தலைவா படம் ரிலீஸ் ஆனது, தமிழகத்திலு, புதுச்சேரியிலும் தவிர. இது விஜய் ரசிகர்களுக்கு மிகவும் கவலையை உண்டாக்கியது. உலகமே தங்களுக்கு பிடித்த நடிகரின் படத்தை பார்க்கிறது ஆனால் ஒரு ரசிகனாக நம்மலால் பார்க்க முடியவில்லையே என்று . சில தீவிர ரசிகர்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் ஆந்திராவுக்கும் சென்று படத்தை பார்த்து விட்டு வந்தார்கள். அனைவருக்கும் தெரியும் இந்த படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளிவராததற்கு முக்கிய காரணம் ஜெயலலிதா அரசு தான் என்று . பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்த படம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று வெளிவந்தது. 

இந்த நாள் குறித்து விஜய் ரசிகர் ஒருவர் செய்த பதிவு , 

ஆகஸ்ட் 9,

இது விஜய் ரசிகர்களால் மறக்க முடியாத நாள். 
ஒரு நடிகனை பார்த்து அரசாங்கமே பயந்த நாள்.
சாதாரண ரசிகனை வெறியனாக மாற்றிய நாள்.
ஒரு நடிகனை தலைவனாக உயர்த்திய நாள்.
இது தமிழ் சினிமாவின் கருப்பு தினம்.

படம் வெளிவராததால் விஜய் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது போல தங்கள் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தராமல் ஒரு படத்துக்கு முக்கியத்துவம் தந்தால் உங்கள் வாழ்க்கையில் என்றுமே கருப்பு தினம் தான் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் விரும்பிய பீரோவை இனி நீங்களே டிசைன் செய்து பெற்றுக் கொள்ளலாம் !! அதுவும் பொபைலில் !!



வீடு கட்டுவதை நாம் எவ்வாறு பார்த்து பார்த்துக் கட்டுகிறோமோ அதேப் போன்று நமது வீட்டிற்குள் இருக்கும் பீரோவும் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம் . ஒருவேளை அந்த பீரோவை நமது ஆசைக்கேற்ப நாமை டிசைன் செய்தி கொள்ளலாம் என்றால் எப்படி இருக்கும் . இது தான் உங்கள் ஆசை என்றால் , உங்கள் ஆசையை எளிதாக நிறைவேற்றி விடலாம் . ஆம் , உங்கள் பீரோவை டிசைன் செய்ய மொபைலில் புதிய அப்ளிகேஷன் வந்துள்ளது .

இந்த் அப்ளிகேஷனை அர்பன் லேடர் என்னும் மரச்சாமான் செய்யும் நிறுவனம் தயாரித்துள்ளது . இந்த அப் மூலம் உங்களுக்குப் பிடித்த பீரோவை டிசைன் செய்து , நீங்கள் நிறுவனத்திற்கு அனுப்பலாம் . பின்னர் அவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள் . இந்த டிசைனை நீங்கள் ஆப்-லைனில் செய்யலாம் . ஆனால் விலை மற்றும் மற்ற தகவல்கள் பெற நெட் தேவை .

இந்த அப்ளிகேஷனின் பெயர் அர்பன் ஸ்டோரேஜ் .

ராஜீவ் காந்தி வீட்டில் விடுதலை புலிகள் உளவாளி இருந்து உள்ளார்




இந்திய ஆட்சிப் பணியில் 36 ஆண்டுகள் பணியாற்றிய ஆர்.டி.பிரதான், 1998 முதல் 2003 வரை சோனியா காந்தியின் அலுவலகப் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். அவர் எழுதிய ‘மை இயர்ஸ் வித் ராஜீவ் அண்ட் சோனியா’ என்ற புத்தகம் அண்மையில் வெளியானது. இதில் ராஜீவ் காந்தி கொலை பற்றிய முக்கியமான செய்தியும் வந்து உள்ளது.

1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி தமிழகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜீவ் காந்தி தற்கொலைப்படை தாக்குதலால் உயிரிழந்தார். இது விடுதலை புலிகள் நடத்திய தாக்குதல் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உளவாளி ஒருவர் ஊடுருவி யுள்ளார்.  அவர் ராஜீவ் காந்தி பற்றிய முக்கியமான செய்திகளை விடுதலை புலிகளுக்கு அனுப்பியிருக்க கூடும் என கூறியுள்ளார். இதே கருத்தை தான சோனியாவும் கொண்டுள்ளார் என உறுதியாக கூறுகிறார். 

தல அஜித்தின் 56 வது படத்தின் தகவல்கள் வந்தன




அஜித் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது அஜித்தின் 55 வது படமாகும். அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை கெளதம் மேனன் இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இதற்கு அடுத்து தலயின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளார்கள்.

அஜித்தின் 56 வது படத்தை அவருக்கு வெற்றி படத்தை தந்த வீரம் படத்தின் சிவா இயக்குகிறார். இந்த படத்தை பற்றி ஒரே வரியில் சொல்லி அஜித்திடம் ஒ.கே. வாங்கிவிட்டார் சிவா. வீரம் படத்தை போல் இதிலும் அதிகமான நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளார்கள். வீரம் படத்தை விட இந்த படம் நன்றாக இருக்க வேண்டும் என சிவா உழைத்து வருகிறார். அஜித்தின் 55 வது படம் முடிந்தவுடன் அவருக்கு ஒரு ஆபரேஷன் நடக்க உள்ளது. அதன் பிறகு  இந்த படத்தில் நடிக்க உள்ளார். 

வீ சாட் , வாட்ஸ் அப் போன்ற இன்ஸ்டான்ட் மெசெஜிங் அப்ளிகேஷன்களை பயன்படுத்த சீனாவில் புதிய கட்டுப்பாடுகள் !!!



அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த சீனாவில் , இன்னும் ஒரு கடுமையான கட்டுப்பாடை அறிவித்துள்ளது சீன அரசு . அந்த கட்டுப்பாடுகளின் படி வீ சாட் , வாட்ஸ் அப் போன்ற இன்ஸ்டான்ட் மெசெஜிங் அப்ளிகேஷன்களை பயன்படுத்துபவர்களுக்கு சில கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது .

புதிய விதிகளின் படி ,

1) தங்களுடைய உண்மையான பெயருடன் அவர்கள் இந்த அப்ளிகேஷன்களில் பதிவு செய்ய வேண்டும் .

2 ) சீனாவில் உள்ள சோஷலிஸ்ட் அமைப்பிற்கு முழு ஆதரவு தருகின்றோம் என ஒப்பந்தம் செய்ய வேண்டும் .

3) அரசிடம் இருந்து அனுமதி பெறாத எந்தவொரு அரசியல் செய்திகளையும் பரப்பக் கூடாது .

இந்த விதிமுறைகள் வீ சாட் என்னும் அப்ளிகேஷனை குறி வைத்து விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது .

போதை பொருள் சோதனைக்காக கிரிக்கெட் வீரரின் பேட்டில் ஒட்டை போடப்பட்டது




மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார் நியுசீலாந்து வீரர் ஜிம்மி நீஷம். இவர் யு.எஸ். வழியாக செல்ல நேர்ந்தது. அப்போது இவர் போதைபொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இவரது பைகளை யு.எஸ். அதிகாரிகள் சோதனை செய்து உள்ளார்கள். அதன் பிறகு இவர் விளையாடுவதற்கு மைதானத்துக்கு வந்து விட்டார்.

அப்போது தான்  தெரிந்து உள்ளதால் அந்த அதிகாரிகள் இவரது பேட்டையும் ஒட்டை போட்டு சோதனை செய்து உள்ளார்கள். இவரிடம் எதுவும் கேட்காமல் பேட்டை வீணாக்கி உள்ளார்கள். இது யு.எஸ். அதிகாரிகள் மீது விமர்சனத்தை ஏற்றி உள்ளது. இந்த தகவல்களை நீஷம் தனது டிவிட்டர் அக்கவுன்டில் தெரிவித்து உள்ளார். 

ஆப்கனிஸ்தானில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட இந்திய அரசு $ 1 மில்லியன் டாலர் ஒதுக்கியது !!

ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் கனவுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக ஆப்கானிஸ்தானில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட இந்திய அரசு ஒரு மில்லியன் டாலர் கொடுத்த உதவியுள்ளது .

இது குறித்து கடிதம் ஒன்றை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு இந்தியா அனுப்பியுள்ளது . அந்த கடிதத்தில் , விளையாட்டுகளான கிரிக்கெட்டும் , கால்பந்தும் இருநாட்டு இளைஞர்களை வேறு எதுவும் இணைக்காதது போல் இணைத்துள்ளது என்று எழுதி இருந்தது .

இது குறித்து ஆப்கானிஸ்தான் பிரதமர் ஹமீது கர்சாயும் நன்றி தெரிவித்துள்ளார் .

அரசு அதிகாரிகளுக்கு 10,000 டேப்ளட்களை வழங்க உள்ளது ஆந்திர அரசு !!



ஆந்திர பிரதேசம் இரண்டாகப் பிரிந்த பின்னர் , பல சலுகைகளை பெற்று வந்தாலும் , மாநிலம் பிரிக்கப்பட்டது அதற்கு பெரிய இழப்பாகவே இருந்தது . இரு மாநிலங்களும் வளர்ச்சி பெற பல திட்டங்களை அறிவித்து வருகின்றனர் . இந்நிலையில் ஆந்திர முதல்வர் அரசு அதிகாரிகளுக்கு 10,000 டேப்ளட் வழங்க இருப்பதை அறிவித்துள்ளார் .

ஆந்திர முதல்வர் , சந்திரபாபு நாயுடு கூறுகையில் , தொழில் நுட்பத்தை நல்வழியில் பயன்படுத்தி நமது மாநிலத்தை முன்னேற்ற வேண்டும் . எனவே ஒரு முன்னெடுப்பாக அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் டேப்ளட் பிசி வழங்கப்படும் என்றார் .

40வது மாடியின் விளிம்பில் மயிர்கூச்செரியும் சாகசம் செய்யபோய் தடுமாறி விழுந்து உயிர் திரும்பிய அதிசயம் [வீடியோ]


24 வயது ரஷ்யர் செர்ஜி(Sergey) மயிர்கூச்செரியும் சாகசங்களை உயரமான கட்டிடங்களின் விளிம்புகளில் செய்பவர், இஸ்ரேலில் உள்ள அஷோத்தில் உள்ள 40 மாடி கட்டிடத்தின் விளிம்பில் 150 மீட்டர் உயத்தில் backflip  எனப்படும் பின்பக்கமாக டைவ் அடித்து நிற்க  முயற்சித்த போது தடுமாறியதில் 40 மாடியின் உச்சியிலிருந்து கீழே விழ இருந்தார், தட்டுதடுமாறி கட்டையை பிடித்து மேலேறினார். [வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது]

மரணத்தை முத்தமிட்டு வந்தாலும் அதே வீடியோவில் சிரித்துக்கொண்டே மீண்டும் ஒரு முறை சரியாக முயற்சிக்கப்போவதாக கூறினார் (அதே போன்றே முயற்சித்து சரியாக செய்துள்ளார் மற்றொரு வீடியோவில்)

அவரது ஃபேஸ்புக் பக்கமான "Jumping Buddha" வில் மரணத்தின் விளிம்பில் செய்துள்ள சாகசங்கள் படங்களாக உள்ளன.




இனிமேல் சைக்கிளை பேக்கில் வைத்து கொண்டு போகலாம் !!


எத்தனை வகை வகையான வண்டிகள் வந்தாலும் நமக்கு சைக்கிளில் செல்வது என்றால் ஒரு த்ரில்லான அனுபவம் தான் . ஆனால் இன்று என்னவோ தெரியவில்லை சைக்கிள் ஒட்டுவது என்பது சிறுவர்களுக்கான விஷயம் என்று ஆகி விட்டது . ஆனால் இன்னும் சைக்கிள் பிரியர்கள் இருக்க தான் செய்கிறார்கள் . அவர்களுக்காக தயாரிக்கப்பட்டது தான் இந்த "கிட் பைக்" . பெங்களூரு கம்பெனி ஒன்றான லுசிட் டிசைன் என்னும் நிறுவனம் வடிவமைத்துள்ளது .

இந்த சைக்கிளின் சிறப்பு என்னவென்றால் உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் இதை சைக்கிளாக மாற்றிக் கொள்ளலாம் . இல்லை என்றால் அதை ஒரு பேக்கில் வைத்துக் கொண்டு செல்லலாம் .

இந்த சைக்கிளாக மாற்ற எளிமையானது . வெறும் அலுமினிய குழாய்களை ஒன்றாக இணைத்தால் போதுமானது . இந்த சைக்கிள் இப்போது ஆரம்ப நிலையில் தான் உள்ளது . 


இந்த சைக்கிள் விற்பனைக்கு வந்தவுடன் இதில் ஏறி ஒரு ரவுண்டு போக வேண்டும் . 

ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரியும் மூவரில் ஒருவர் இந்தியன் !!

உலகின் முன்னனி நிறுவனங்களின் ஒன்றான ஆப்பிளில் பணிபுரியும் மூன்று பொறியாளர்களில் ஒருவர் இந்தியராக இருக்கிறார் . மேலும் $ 171 பில்லியன் மதிப்புள்ள அந்த நிறுவனத்தின் மென்பொருள் தேவை , சேவை மற்று ஆதரவு வேலையை இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் தான் அதிக அளவில் செய்து வருகின்றனர் .

இந்த ஆய்வை எச்.எப்.எஸ் ஆய்வு நிறுவனம் நடத்தியுள்ளது . இந்த நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் கூறுகையில் , " மூன்றில் ஒருவராக இருக்கும் இந்தியர்கள் ஒன்று எச்-1 -பி விசா வைத்து இருப்பார்கள் அல்லது கிரின் கார்டு வைத்து இருக்கிறார்கள் . மேலும் இந்த ஆய்வில் ஆப்பில் நிறுவனம் இந்தியாவின் 5 ஐடி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது " என்றார் .

ஆனால் அந்த நிறுவனங்களின் பெயரை தெரிவிக்க மறுத்துவிட்டார் . விப்ரோ , இன்போசிஸ் , டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் ஆப்பிளுடன் இணைந்து பணியாற்றுவதாக தெரிகிறது .

Apple Inc is famous for its mac book, iphone and ipad. Apple produce excellent user interface and leading smart phone seller. one third of its employees are Indians

உக்ரேனில் நடந்த போரில் 4 மாதத்தில் 1,543 கொல்லப்பட்டுள்ளனர் - ஐநா தகவல் !!



கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய போரில் , உக்ரேன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடந்தது . இந்த போரில் இதுவரை 1,543 பேர் இறந்துள்ளதாக ஐநா அதிகாரி இவான் சிமானோவிக் கூறினார் .

அவர் கூறுகையில் , இறந்த 1,543 பேரில் பொது மக்கள் , இராணுவ வீரர்கள் , கிளர்ச்சியாளர்கள் என அனைவரும் அடங்குவர் . ஒவ்வொரு நாளும் 50 பேர் இறந்துள்ளனர் . இந்த போருக்காக உக்ரேன் அதிக விலையைக் கொடுத்துள்ளனர் . கிழக்கு பகுதி மக்கள் அதிக அளவு உயிர் இழந்தாலும் , அதற்கான எதிர்வினையை மொத்த மக்களும் அனுபவித்து வருகின்றனர் " என்றார் .


உலகின் சிறந்த கால்பந்து வீரர்களும், அவர்களது காதலிகளும்


* பால்கோ - டாரன்  (கொலம்பியா)





* மீசட் ஒசில் - கேப்ரிஸ்டோ (ஜெர்மனி)




* ஸ்டீபன் ஜெரார்டு - அலெக்ஸ் ஜெரார்டு (இங்கிலாந்து)





*  செர்ஜியோ ராமோஸ் - பிளர் ருபியோ (ஸ்பெயின்)





* நெய்மர் - புருனா (பிரேசில்) 




* கெதிரா - லெனா (ஜெர்மனி)




*  கேசிலஸ் - சாரா (ஸ்பெயின்) 



* பிக்யு - ஷகிரா (ஸ்பெயின்)




* ரோனால்டோ - இரினா (போர்ச்சுகல்)




* லியோனல் மெஸ்ஸி - அன்டொனெல்லோ (அர்ஜெண்டினா) 










மவுனம் கலைத்தார் சச்சின், பாராளுமன்றம் வராததற்கு விளக்கம் தந்தார்




கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சினுக்கு கவுரவமாக எம்.பி. பதவியை காங்கிரஸ் அரசு தந்தது. ஆனால் அதனை எதற்கும் பயன்படுத்தாமல் இருந்தார். ஆனால் அதற்குரிய சம்பளத்தை மட்டும் வாங்கி கொண்டார். கடந்த வருடம் முழுவதும் அவர் பாராளுமன்றம் வந்ததற்கான அடையாளமே இல்லை. இது பலராலும் விமர்ச்சிக்கப்பட்டது.

கிரிக்கெட்டில் சச்சின் கடவுளாக மதிக்கப்பட்டாலும், பாராளுமன்றத்தில் அவர் சாதாரண உறுப்பினர் தான். 2012 இல் ராஜ்ய சபா எம்.பி. ஆன சச்சின் இது வரை 3 முறை தான் ராஜ்ய சபாவிற்கு வந்து உள்ளார். ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்க இந்த பதவிகள் தரப்படுகிறது ஆனால் அவர்கள் இந்த பதவிகளை மதிப்பதே இல்லை.

இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்த சச்சின் தனது மவுனத்தை கலைத்தார். சச்சின் யாரையும் அவமதிப்பதற்காக இதனை செய்யவில்லை. சச்சினின் அண்ணன் அஜித்துக்கு பைபாஸ் சர்ஜரி செய்து உள்ளதால் சச்சின் அந்த கவலையில் இருந்து வந்தார். அதனால் அவரால் ராஜ்ய சபாவிற்கு வரமுடியவில்லை என விளக்கம் தந்து உள்ளார்.

அஜித்துக்கு கடந்த வாரம் தான் சர்ஜரி செய்யப்பட்டது, சச்சின் ஆனால் 2 ஆண்டுகளில் 3 முறை தான் வந்து உள்ளார். ராஜ்ய சபாவிற்கு வர முடியாத சச்சினால் ஐ.பி.எல்.லுக்கு செல்ல் முடிகிறது. தனக்கு இருந்த மரியாதை நிலைத்து இருக்க சச்சின் எம்.பி. பதவியை கொடுக்கும் போதே வேண்டாம் என கூறி இருக்க வேண்டும். இல்லையெனில் ஒழுங்காக செயல்பட்டு இருக்க வேண்டும். 

இன்றைய செய்திகள் - Satrumun Special daily News

மகளை கற்பழித்து , 4 மாத கர்ப்பிணி ஆக்கி, கொலை செய்த கொடூர தந்தை

எச்சரிக்கை ரிப்போர்ட் -  " பேஸ்புக் கலரை மாற்றுங்கள் " என்ற லிங்கை கிளிக்கினால் வரும் ஆபத்து, 

வெளியானது அஞ்சான் பட டிரெய்லர் [வீடியோ இணைப்பு]

பணத்துக்கும் , நிர்வாண வீடியோவுக்கும் ஆசைப்பட்டு ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானிடம் விற்ற ராணுவ வீரன் http://www.satrumun.net/2014/08/blog-post_74.html

மோட்டோ இ" க்கு போட்டியாக அட்டகாசமான வசதிகளுடன் அசுஸ் நிறுவனத்தின் ஜென்போன்-4, விலை 5,999 மட்டுமே .

வாட்ஸ்அப்பால் அடிவாங்கிய எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப்பை தடுக்க வழிகளை மேற்கொள்ள உள்ளது இந்தியாவின் டிராய் அமைப்பு !!

ஜீ... இது 'வேலையில்லா பட்டதாரி' கதை மாதிரியே இருக்கே..? : 'பொறியாளன்' டைரக்டருக்கு வந்த நெருக்கடி!

அதிவேக சதம் அடித்து சாதனை புரிந்த போதும் , அணியால் வெல்ல முடியவில்லை

இந்திய கிரிக்கெட் அணியை கலாய்த்து வந்த ஜோக்ஸ் போட்டோக்கள்

சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட மகளை 10 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த பெற்றோர்கள் !!

தென் கொரிய துறைமுகத்தில் அநாதையாக கடந்த இந்தியாவின் ஏவுகணை - இந்தியாக்கு ஏற்பட்ட களங்கம் .

இந்திய அணி கேப்டன் தோனியை பற்றி மற்ற வீரர்கள் கருத்து

A Facebook virus spread through links, this links request you to click to change the theme of the face book. Indian crticket team getting slap from England. Whats up reduced the usage of SMS, India troy is trying to put new. 

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media