BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 30 July 2014

வாட்சப்பில் குரூப் ஒன்றை உருவாக்குங்கள் , பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் புது யோசனை !!



பாராளுமன்றம் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வராமல் இருக்கும் பிரச்சனையை சமாளிக்க பிரதமர் புது யோசனை ஒன்றை கூறியுள்ளார் . பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இருக்கும் வகையில் ஒரு குரூப் ஒன்றை உருவாக்க வேண்டும் . இந்த குரூப் மூலம் உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராளுமன்ற நேரம் குறித்து அறிவிக்கப்படும் . இந்த அறிவிக்கும் செயலை வெங்கையா நாயுடு அவர்கள் பார்த்துக் கொள்வார் .


மோடி அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை குறித்து அவ்வளவு திருப்தி இல்லை . எனவே அனைத்து உறுப்பினர்களையும் நேர்மையாக இருக்கும் படியும் , வியாழக்கிழமை கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார் .

மேலும் கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பேஸ்புக் புரோபைல் குறித்தும் கேட்டு அறிந்துள்ளார் .

இஸ்ரேலின் போர் நிறுத்த அறிவிப்பை நிராகரித்தது ஹமாஸ் அமைப்பு !!



இன்று இஸ்ரேல் ராணுவம் 4 மணி நேர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது . காஸாவில் கடலோர பகுதிகளில் நடந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 1,302 எட்டிய போதும் ஹமாஸ் அமைப்பினர் இந்த போர் நிறுத்த அறிவிப்பை நிராகரித்துள்ளனர் .

இது தொடர்பாக ஹமாஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் , " இந்த போர் நிறுத்தம் ஒரு வெத்து அறிவிப்பு .இஸ்ரேல் போர் நடத்தும் இடங்களில் தொடர்ந்து  தாக்குதல் நடத்தி கொண்டு இருக்கின்றனர் . எனவே  இந்த 4  மணி நேர போர் நிறுத்த அறிவிப்பால் எந்த ஒரு  உபயோகமும் இல்லை" என்றார் .








ராகுல் தடுத்ததால் தான் சோனியா பிரதமர் ஆகவில்லை - புது குண்டை தூக்கிப் போடும் முன்னால் அமைச்சர் நட்வார் சிங் !!


2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைப் பிடித்த போது , சோனியா காந்தி பிரதமர் ஆகாமல் பிரதமர் ஆகும் வாய்ப்பை மன்மோகன் சிங் அவர்களுக்கு விட்டுக் கொடுத்தார் . பின்னர் தன் உள்ளுணர்வு கூறியதால் தான் , தான் பிரதமர் ஆகவில்லை என சோனியா கூறினார் .

ஆனால் இன்று பேட்டி அளித்த நட்வார் சிங் , இதை அனைத்தையும் மறுத்துள்ளார் . அவர் கூறுகையில் , " ராகுல் காந்தி தன் அப்பாவைப் போல அம்மாவையும் இழந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் . அதனால் சோனியா பதவியை ஏற்காமல் இருக்க தான் அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக ராகுல் காந்தி கூறினார் . மேலும் தனது அம்மாவிற்கு பிரதமர் பதவியை உதறித் தள்ள 24 மணி நேரம் கெடு விதித்தார் ராகுல் " என்றார் .

மேலும் ஒருமுறை நட்வார் சிங்கை , சோனியா மற்றும் பிரியங்கா காந்தி வீட்டிற்கு அழைத்து அவர் எழுதும் சுயசரிதையில் இது குறித்து எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர் என்றும் கூறினார் .


சிறுமியைக் கற்பழித்தவர்களை அடித்துக் கொன்ற கிராம மக்கள் !!


மேற்கு வங்கத்தின் , காலியாபாசார் என்னும் கிராமத்தில் ஏழு வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு , கொல்லப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்குவது போல் தொங்கவிட்டு இருந்தனர் . இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தின் படாவுனில் இரட்டை சகோதரிகளுக்கு நடந்த கொடூர சம்பவத்தை ஒத்து இருந்தது .



அந்த சிறுமி இரண்டாம் வகுப்பு படித்து வந்ததாகவும் , கடைக்கு செல்லும் போது கடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர் . அந்த சிறுமி காணாமல் போனதை அடுத்து கிராமம் எங்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது . அந்த சிறுமியின் உடல் வேப்பை மரத்தில் தொங்குவதை கண்ட கிராமத்தினர் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர் .

அப்போது அங்கே இருந்த ஒரு மந்திரவாதியுடன் அந்த சிறுமியை பார்த்ததால் அவர் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கும் என கருதிய கிராம மக்கள் , அவரையும் அவரது இரண்டு நண்பர்களையும் அடித்து நொறுக்கினர் . அடித்த அடியில் ஒருவர் இறந்தார் . மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இது குறித்து போலிஸ் ஒருவர் கூறுகையில் , " கொல்லப்பட்ட அந்த நபருக்கும் இவரின் குடும்பத்திற்கும் பகை இருந்தது . அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படும் . மேலும் அந்த சிறுமி கொல்லப்படும் முன் கற்பழிக்கப்பட்டாளா என்பது ஆட்டோப்ஸி முடிவு வந்த பின்னரே தெரியும் "
என்றார் .

கிரிக்கெட்டின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான காலிஸ் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் !!



கிரிக்கெட்டில் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான தென் ஆப்ரிக்காவின் காலிஸ் புதன்கிழமை தன்னுடைய ஓய்வை அறிவித்தார் . கடந்த வருடம் டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற காலிஸ் இப்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்தும் தன் ஓய்வை அறிவித்துள்ளார் .

ஆனால் டி-20 போட்டிகளில் கொல்கத்தா அணிக்காகவும் , சிட்னி தண்டர் அணிக்காகவும் எப்போதும் போல விளையாடுவார் .

328 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள காலிஸ் தென் ஆப்ரிக்கா அணிக்காக 11,579 ரன்களையும் , 273 விக்கெட்களையும் எடுத்துள்ளார் . டெஸ்ட் போட்டிகளில் 166 போட்டிகளில் 13,000 த்துக்கும் மேற்பட்ட ரன்களையும் 294 விக்கெட்களையும் எடுத்துள்ளார் .


இன்றைய செய்திகள் - Satrumun Special News


விஜய் அவார்ட்ஸில் விஜய்க்கு விருது வழங்கியதில் நடந்த தில்லுமுல்லுகள்

கற்பழிப்பதைப் போன்ற ஆபாச படங்களை தான் விரும்பி பார்க்கும் மாணவர்கள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !!

கால்பந்தின் நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

3 பட்ஜெட் போன்களை வெளியிட்டது சாம்சங் நிறுவனம்

என்னையை யாருமே ஹீரோவா மதிச்சதில்லைங்க - பிறந்த நாள் பார்ட்டியில் வருத்தப்பட்ட தனுஷ்

தனக்கு குழந்தை பிறக்க போவதை நேரில் காண டிக்கெட் விற்ற இங்கிலாந்து அழகி !! 

சச்சினுக்கு பாரத் ரத்னா , தியான் சந்திற்கு பதிலாக , கடைசி நேரத்தில் மாற்றிய காங்கிரஸ் அரசு !! நடந்தது என்ன ??

இரண்டாவது சுற்று விற்பனைக்கு வந்த சியோமி எம்.ஐ-3 ஐந்தே நொடியில் விற்று தீர்ந்தது .

இங்கிலாந்தில் குண்டு பெண்கள் அழகி போட்டி நடைபெற்றது

ஷாலினி 3 மாதங்கள் கர்பமாக உள்ளதை உறுதி செய்தார் "தல" அஜீத்

பாறையில் சிக்கி பரிதாபமாக பலியான இன்ஜினியரிங் மாணவர்

கும்பகோணம் தீ விபத்து : விபத்து முதல் தீர்ப்பு வரை

மீசை பிரச்சனையால் ராணுவ வீரரின் காதை வெட்டிய கொடூரர்கள்

இங்கிலாந்தில் குண்டு பெண்கள் அழகி போட்டி நடைபெற்றது







இங்கிலாந்து நாட்டில் குண்டு பெண்களுக்கு என ஒரு அழகி போட்டி நடைபெற்றது. இது பலரையும் கவரும் விதமாக இருந்தது. இந்த போட்டியில் 30 பெண்கள் கலந்து கொண்டார்கள். அவர்கள் கவுண், நீச்சல் ஆடை என அவர்களுக்கு பிடித்த ஆடையில் வந்து கலக்கினார்கள். இதில் பிலேக் என்னும் 24 வயது பெண் பலரையும் கவர்ந்தார். மஞ்சள் நிற நீச்சல் ஆடையில் வந்த இவர் பலரையும்  கவர்ந்து முதல் இடத்தை பிடித்தார். 2 வது இடத்தை 21 வயது பெண் ரியோ பெற்றார். 


அதில் வென்ற அந்த பெண்கள் குண்டாக இருப்பதற்காக பெருமைபடுவதாகவும், போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் மிகவும் தைரியசாலிகள் என்று கூறினார்கள்.





விஜய் அவார்ட்ஸில் விஜய்க்கு விருது வழங்கியதில் நடந்த தில்லுமுல்லுகள்




விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி 2006 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.


" தேசிய விருது என்பது ஜனாதிபதி விருது
   விஜய் டிவி விருது என்பது ஜனங்களின் விருது "

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விருது பெற்ற போது கவிஞர் வைரமுத்து கூறிய கவிதை இது. ஆனால் அது போல் நடப்பது உண்மை தானா என சந்தேகம் எழுந்து உள்ளது. வைரமுத்து கூறியது போல் இதனை ஜனங்களின் விருது என்றே எடுத்துக்கொள்வோம். அப்படியானால் இந்த விருதை தேர்தெடுப்பதில் முக்கிய பங்கு மக்களுக்கு தானே இருக்க வேண்டும். ஆனால் மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு என 5 விருதுகள் தான தரப்பட்டுள்ளன.

அவை மக்களை கவர்ந்த நாயகன், நாயகி, படம் ,இயக்குனர், பாடல் என இந்த 5 நபர்களை தேந்தெடுக்கும் உரிமை தான் மக்களிடம் உள்ளது. மீதி எல்லாம் அவர்கள் வைத்து உள்ள ஜூரிகள் தேர்தெடுப்பார்கள். ஆனால் மக்கள் தேர்தெடுப்பதில் பல தில்லுமுல்லுகள் நடப்பது தெரிய வந்து உள்ளது.இந்த முறை மக்களுக்கு பிடித்த நாயகன் விருது இளைய தளபதி விஜய்க்கு சென்றது. ஆனால் இது மக்கள் தேர்ந்தெடுத்த விருதா அல்லது விஜய் டிவி தேர்தெடுத்த விருதா என்பதில் சந்தேகம் எழுந்து உள்ளது.

இந்த விருது விஜய்யிடம் கொடுக்கப்பட்ட போது விஜய் சில வார்த்தைகள் பேசினார். அப்போது மேடையில் கோபி விஜய்யிடம் ஒரு மாதத்திற்கு முன்பு விஜய் டிவி இயக்குனர் மகேந்திரன் சார் உங்களை அழைத்தபோது நீங்கள் வரமுடியாது போல சொன்னீங்களாமே ஏன் ? அதற்கு நம் விஜய் சொல்வாரு ஆமாம் முதல்ல வரலைனு சொன்னேன் அப்பறம் அவர் தலைவா படத்துக்காக விருது தரோம்னு சொன்னாரு . ஒரு வெற்றி படத்துக்கு என்ன அழைத்து இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் சூழ்நிலைகளால்  வெற்றி பெறாத ஒரு படத்துக்கு விருது தருகிறோம் என அழைத்தது அவரை கவர்ந்தது. அதனால் வந்ததாக கூறினார்.



இந்த விருது வழங்கும் விழா நடந்தது ஜுலை 5 ஆம் தேதி , விஜய்யை அழைத்தது ஒரு மாதத்துக்கு முன்பு. ஆனால் இந்த மக்களுக்கு பிடித்த நாயகனை தேர்தெடுக்கும் வோட்டிங் ஜுன் 27 முதல் தான் தொடங்கியது. அதாவது ஒரு விருதை தேர்ந்தெடுத்து விட்டு வெறும் கண்துடைப்புக்காக இந்த வோட்டிங்கை நடத்தி உள்ளார்கள் என்று விஜய் டிவி மீது குற்றச்சாட்டு உள்ளது.

அப்புறம் என்ன இதுக்கு வோட்டிங் நடத்தினீர்கள் ??

சொல்லுங்கள் விஜய் டிவி சொல்லுங்கள் ??

மீசை பிரச்சனையால் ராணுவ வீரரின் காதை வெட்டிய கொடூரர்கள்




பீஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ராமானுஜ் வர்மா. இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர். அவர் வீடு நோக்கி நடந்து கொண்டு இருந்தார்கள். அப்போது அவரை 2 சகோதரர்கள் வழி மறித்து பிரச்சனை செய்து உள்ளார்கள். எல்லை மீறி வர்மாவை தாக்கவும் செய்து உள்ளார்கள். அது மட்டுமில்லாமல் அடுத்தமுறை இவர்கள் வர்மாவை பார்க்கும் போது அவரது மீசை இருக்க கூடாது என மிரட்டி உள்ளார்கள். இல்லையென்றால் அவர்களே மீசையை எடுத்துவிடுவதாக கூறி உள்ளார்கள்.


ஆனால் வர்மா இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை . அவர்களை எதிர்த்து உள்ளார், இதனால் கோபமான அவர்கள் சில கூட்டாளிகளை சேர்த்து கொண்டு வர்மாவை கடுமையாக தாக்கி உள்ளார்கள் . அதோடு விட்டுவிடாமல் அவரது காதை அறுத்து விட்டு அவரது பைக்கையும் திருடி சென்று உள்ளார்கள். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


என்ன கொடுமை சார் இது !!

கும்பகோணம் தீ விபத்து : விபத்து முதல் தீர்ப்பு வரை





உலகில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய இந்த விபத்து நடந்த நாள் 2004 ஆம் ஆண்டு ஜுலை 24 ஆம் தேதி ஆகும். தங்கள் போகப் போகிறது என தெரியாமல் அழகிய சிரிப்புடன்  பிஞ்சு குழந்தைகள் எப்போதும் போல் பள்ளிக்கு வந்தார்கள். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி தான் அது. இந்த பள்ளியில் அன்று மதிய உணவிற்காக சமையல் செய்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சமையல் அறையில் பிடித்த தீ, பள்ளி கட்டிடத்திற்கும் வேகமாக பரவியது.மாடியில் உள்ள கூரையின் கீழ் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் வகுப்பு நடந்து கொண்டு இருந்தது. தீ வேகமாக பரவியது. வகுப்பறை பூட்டப்பட்டு இருந்ததால் அங்கு யாரும் வெளியேற முடியவில்லை.



இதனால் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர், 18 குழந்தைகள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர் . இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் குறுகலான அந்த கட்டிடத்தில் ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி, சரஸ்வதி நர்சரி பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா மகளிர் உயர்நிலைப்பள்ளி என 3 பள்ளிகள் இயங்கி வந்தது. 3 பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 700 மாணவ–மாணவிகள் படித்து வந்தனர். அங்கு போதிய பாதுகாப்பு வசதியும், தீயணைப்பு கருவிகளும் இல்லாதது தெரியவந்தது.


இது தொடர்பாக அந்த பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிசாமி, பள்ளி தாளாளரான அவரது மனைவி சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எம்.பழனிச்சாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் பி.பழனிச்சாமி, ஆர்.பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், தாசில்தார் பரமசிவம், பொறியாளர் ஜெயசந்திரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் முருகன், தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன் ஆகிய 24 பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.அதில் 3 பேர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கபட்டனர்.


இந்த வழக்கு பத்து ஆண்டு விசாரணைக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதில் குற்றம்சாட்டப்பட்ட 21 பேரில் 10 பேர்  குற்றவாளிகள் என்றும், 11 பேர் குற்றமற்றவர்கள் என்றும் விடுதலை செய்யப்பட்டனர். பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், அவரது மனைவியும், பள்ளி தாளாளருமான சரஸ்வதிக்கு உள்பட 8 பேருக்கும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. என்ஜினீயர் ஜெயச் சந்திரனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.  ரூ. 52 லட்சத்து 57 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையில் உயிரிழந்த 94 மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 50 ஆயிரமும், படுகாயம் அடைந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 25 ஆயிரமும், லேசான காயம் அடைந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 15 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


என்ன தண்டனை கொடுத்தாலும் அந்த 94 உயிர்கள் திரும்பி வரபோவதில்லை. இனியாவது இது போல தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ளலாம்.



பாறையில் சிக்கி பரிதாபமாக பலியான இன்ஜினியரிங் மாணவர்





கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நேரு என்பவரின் மகன் கணேஷ் , இவருக்கு 22 வயது ஆகிறது. இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் இன்ஜினியர்ங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். விடுமுறையை கொண்டாட அவரது நண்பன் ஜெகன் வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு கணேஷ், ஜெகன் மற்றும் ஜெகனின் நண்பன் ஆகியோர் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்று உள்ளார்கள். அவர்கள் இரவு வரை ஆனந்தமாக குளித்து கொண்டு இருந்தார்கள். கொஞ்சம் நேரம் கழித்து பார்த்த போது கணேஷை காணவில்லை. நண்பர்கள் தேடி உள்ளார்கள் ஆனால் கணேஷ் கிடைக்கவில்லை.



உடனடியாக அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீஸார், தீயணைப்பு துறையினரை வரவைத்தனர். அவர்கள் ஆற்றில் இறங்கி தேடினார்கள். அப்போது பாறைகளுக்கு இடையே சிக்கி கணேஷ் பலியாகி இருந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கால்பந்தின் நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை





கால்பந்தில் அதிக ரசிகர்களை கொண்ட வீரர்கள் என்றால் இப்போதைக்கு அது போர்ச்சுகல் அணி வீரர் ரோனால்டோவும், அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியும் தான். மெஸ்ஸி உலக கோப்பை வெல்ல முடியாமல் போனதற்கு உலக கால்பந்து ரசிகர்கள் அனைவரும் கவலைபட்டனர். அதில் இருந்து மீண்டு அவர் தனது கிளப் அணியான பார்சிலோனாவுக்கு நன்றாக விளையாட வேண்டும் என்று இருந்தார். ஆனால் அதற்குள் அவருக்கு புதிய பிரச்சனை வந்து விட்டது.




2006-09 ஆண்டு காலகட்டத்தில் தவறான கணக்கை கொடுத்து ஸ்பெயின் அரசிடம் வரி கட்டாமல் மெஸ்ஸி குடும்பம் இருந்து உள்ளது என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இருந்து மெஸ்ஸியை விடுவிக்க கோர்ட் தயாராக இல்லை. மெஸ்ஸி தரப்பில் வாதாடிய வக்கீல் இதற்கும் மெஸ்ஸிக்கும் எந்த சம்மதமும் இல்லை , இவை அனைத்துக்கும் காரணம் மெஸ்ஸியின் தந்தை தான் என கூறினார். இந்த குற்றம் நிருபிக்கப்பட்டால் மெஸ்ஸிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் , 32 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்படும். இது அவரது கால்பந்து வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டு வந்து விடலாம். 

தனக்கு குழந்தை பிறக்க போவதை நேரில் காண டிக்கெட் விற்ற இங்கிலாந்து மாடல் !!



ஜொசி கன்னிங்காம் என்னும் இங்கிலாந்து மாடல் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் . இவர் இப்போது தனக்கு குழந்தை பிறக்கப் போவதை நேரில் காண்பிக்க இருப்பதாகவும் , அதற்காக டிக்கெட்கள் விற்க போவதாகவும் தெரிவித்தார் . இதற்கு என 4 டிக்கெட்கள் ஒதுக்கினார் . ஒதுக்கப்பட்ட 15 ஆம் நிமிடத்திலேயே 4 டிக்கெட்களும் விற்கப்பட்டது . விற்பனை மூலம் அவருக்கு இந்திய ரூபாயின்படி 25 இலட்சம் கிடைத்துள்ளது .



இவருக்கு பிறக்கப் போகும் மூன்றாவது குழந்தை இது . இந்த குழந்தையைக் கரு கலைக்கப் போவதாக இதற்கு முன் அறிவித்து இருந்தார் . ஆனால் இப்போது அவரின் முடிவை மாற்றி உள்ளார் .

இரண்டு டிக்கெட்கள் 10,000 யுரோக்களில் விற்கப்பட்டது . இந்த டிக்கெட்களை வைத்து இருப்பவர்கள் குழந்தை பிறப்பதை வீடியோ எடுக்க உரிமை உண்டு .

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் உயிர் பிழைத்த நாயை தத்து எடுத்த நடிகர் சத்யராஜ்





சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள ஒரு கட்டிடம் கடந்த மாதம் 28 ஆம் தேதி அன்று இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை செய்து கொண்டு இருந்த 61 பேர் பலியாகினர். இது 11 மாடி கட்டிடம் என்பதால் மீட்பு பணிகள் ஒரு வாரம் நடந்தது. இதில் சுமார் 25 பேர் மட்டும் மீட்கப்பட்டனர். அது மட்டுமில்லாமல் இதில் 2 நாய்களும் ஒரு காக்காவும் மீட்கப்பட்டன. அவை புளுகிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.


அதில் ஒரு நாயை ஏற்கனவே ஒரு நபர் தத்து எடுத்து சென்று விட்டார். இப்போது இன்னொரு நாயை நடிகர் சத்தியராஜ் தத்து எடுத்து கொண்டார். தங்கள் வீட்டில் ஏற்கனவே பல வெளிநாட்டு நாய்கள் இருப்பதாகவும் அதனுடன் சேர்த்து இதனை வளர்க்க போவதாகவும் கூறினார். அது மட்டுமில்லாமல் பலரும் தெரு நாய்களை தத்து எடுக்க வேண்டும் என்றார். இந்த செயலை அங்கு இருந்த பொது மக்கள் பாராட்டினர்.

கோவாவில் 40 சதவீத மாணவர்கள் , கற்பழிப்பதைப் போன்ற ஆபாச படங்களை தான் விரும்பி பார்க்கின்றனர் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !!



இப்போது ஆபாச படங்கள் இணையங்களில் அனைவருக்கும் எளிதாக கிடைப்பதால் அதனை பார்க்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது . இவர்களில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்பழிப்பதைப் போன்ற ஆபாச வீடியோக்களை தான் விரும்பி பார்க்கின்றனர் . இந்த 40 சதவீதத்தினரும் மொத்தமாக ஒரு நாளைக்கு 86 , 000 கற்பழிப்பு வீடியோக்கள் பார்ப்பதாக கூறியுள்ளனர் . இவர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக மாதத்திற்கு 28 கற்பழிப்பு ஆபாச வீடியோக்களை பார்ப்பதாக கூறி உள்ளனர் .


இந்த கணிப்பை கர்நாடகாவைச் சேர்ந்த " ரெஸ்குயு " என்னும் நிறுவனம் நடத்தியது . இந்த கணிப்பை கோவாவில் உள்ள 10 கல்லூரிகளில் நடத்தி உள்ளனர் . மேலும் இந்த கணிப்பை   கற்பழிப்பதைப் போன்ற ஆபாச வீடியோக்கள் பார்க்கும் சதவீதத்தை , நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைகளுடன் ஒப்பிட்டு பார்க்க முயற்சி செய்தனர் .

அதன்படி இந்த படங்களைப் பார்க்கும் 76 சதவீத மாணவர்களுக்கு யாரையாவது கற்பழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது . இவ்வாறு விபரீதத்திற்கு செல்லும் இவர்கள் அடுத்து குழந்தைகளின் ஆபாச படங்களைப் பார்க்கின்றனர் .

இப்போது புரிந்து விட்டதா , நம் நாட்டில் ஏன் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்று . அரசு இதைக் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . 

ஷாலினி 3 மாதங்கள் கர்பமாக உள்ளதை உறுதி செய்தார் தல


தல அஜித்திற்கு 1999 ஆம் ஆண்டு வந்த "அமர்களம்" படத்தில் நடித்த போது நடிகை ஷாலினியுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தார்கள். ஆனால் இதற்கு அவர்கள் வீடுகளில் எதிர்ப்பு இருந்து. ஏனென்றால் அஜித் ஒரு பிராமின் மற்றும் ஷாலின் ஒரு கிறித்துவ பெண். இதனால் அவர்கள் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பையும் மீறி 2000 ஆம் ஆண்டில் ஷாலினியை திருமணம் செய்து கொண்டார். அதில் இருந்து ஷாலினி நடிப்பதை நிறுத்தி விட்டார். 8 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவளின் பெயர் அனோஷ்கா. அவரது பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்திற்கு 50 ஆயிரம் லைக்குகளுக்கு மேல் உள்ளது.




இப்போது இந்த தம்பதிகளுக்கு அடுத்த குழந்தை பிறக்க உள்ளது. ஆமாம் 6 வருடங்கள் கழித்து நடிகை ஷாலினி கர்பமாக உள்ளார். அவர் இப்போது 3 மாத கர்ப்பிணி . மகள் அனோஷ்காவுடன் விளையாடுவதற்கு அடுத்த குட்டி பாப்பா வர போகும் தகவலை தல அஜித் உறுதி செய்தார்.


அடுத்து குட்டி தல வருதுடோய் !!

3 பட்ஜெட் போன்களை வெளியிட்டது சாம்சங் நிறுவனம்


சாம்சங் நிறுவனம் நேற்று முன்தினம் மூன்று பட்ஜெட் போன்களை வெளியிட்டது. அவை,


சாம்சங் மெட்ரோ 312 - ரூ . 2480



சாம்சங் குரு மியூசிக் 2 - ரூ. 1785





சாம்சங் கேலக்ஸி ஏஸ் என்.எக்ஸ்.டி. - ரூ. 7335



இரண்டாவது சுற்று விற்பனைக்கு வந்த சியோமி எம்.ஐ-3 ஐந்தே நொடியில் விற்று தீர்ந்தது .


சீனாவின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் சியோமி எம்.ஐ 3 சில நாட்களுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது . முதல் சுற்று விற்பனைக்கு வந்த சில நிமிடங்களிலே அனைத்து விற்றுத் தீர்த்தது  .

இரண்டாம் சுற்று விற்பனைக்கு வந்த இந்த மொபைல் வந்த 5 ஆம் நொடியிலேயே அனைத்து மொபைல்களும் தீர்ந்தது . இந்த மொபைலை பிளிப்கார்ட் நிறுவனத்தில் மட்டுமே பெற முடியும் . முதலில் 2 நிமிடத்திற்குள் விற்றுத் தீர்க்கப்பட்டது என்று கூறினர் . இப்போது வெறும் 5 நொடியில் அனைத்து மொபைல்களும் தீர்ந்ததாக சியோமி நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

போன சுற்றில் 10,000 த்துக்கும் குறைவான மொபைல்கள் தான் விற்பனைக்கு வந்தாலும் , ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகள் செய்யப்பட்டன . இந்த் சுற்றில் எத்தனை மொபைல்கள் விற்பனைக்கு வந்தன என்பது தெரியவில்லை .

மூன்றாம் சுற்று ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடக்க இருக்கிறது .

இந்தியா விவாசாயத்தை உயிர்பிக்க மோடி வைத்து இருக்கும் 3 மந்திரங்கள்





இந்திய விவசாய குழுவின் 86 வது தொடக்க விழா நாளில் கலந்து கொண்ட மோடிக்கு அங்கு இருந்த அனைவரும் எழுந்து நின்று சிறப்பு செய்தனர். ஆனால் அவர் பெருந்தன்மையாக அந்த மரியாதை எல்லாம் இந்திய விவசாயிகளை சாரும் என்றார். இந்திய விவசாயம் இப்போது மிக மோசமான நிலையில் உள்ளது. இன்னும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்திய விவசாயத்தை உயிர்பிக்க மோடி 3 மந்திரங்களை கூறியுள்ளார்.


1.  சிறிய நிலத்தில், குறைவான நேரத்தில் அதிக விளைச்சலை கொண்டு வருவது.

2.  ஒரு சொட்டு நீருக்கு அதிக விளைச்சல். நமது நீர்பாசன முறையில் புதிய திட்டங்களை உருவாக்குமாறு விஞ்சானிகளை கேட்டு கொண்டார்.

3.  விவசாயத்தில் வேகமாகவும் விவகமாகவும் செயல்பட வேண்டும், அதற்காக தரத்தில் எந்த மாற்றமும் இருக்க கூடாது.

தியான் சந்திற்கு பதிலாக சச்சினுக்கு பாரத் ரத்னா , கடைசி நேரத்தில் மாற்றிய காங்கிரஸ் அரசு !! நடந்தது என்ன ??



மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு , சென்ற ஆண்டு பாரத் ரத்னா விருதை சச்சினுக்கு கொடுத்தனர் . இந்த முடிவு கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு . இதற்கு முன் பாரத் ரத்னாவை ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்திற்கு கொடுக்க வேண்டும் என எடுத்து அதுவே கிட்டத்தட்ட உறுதியாக இருந்தது . ஆனால் கடைசி நேரத்தில் இந்த விருதில் சச்சின் பெயர் இணைக்கப்பட்டு , சச்சினே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார் . இந்த உண்மை பிரதமர் அலுவலகத்தில் உள்ள இ-மெயில்களின் மூலம் வெளிவந்துள்ளது .



கடந்த வருடம் ஜூலை 16 ஆம் தேதி , அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களால் , பாரத் ரத்னா விருதிற்கு தியான் சந்த் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது . அதனை 9 நாட்கள் கழித்து அப்போதைய பிரதமரும் ஒப்புக் கொண்டார் . ஆகஸ்ட் மாதம் வரை தியான் சந்திற்கு தான் பாரத் ரத்னா என அந்த வட்டாரங்கள் தெரிவித்து வந்தனர் .

மேலும் புகழ்பெற்ற விஞ்ஞானி சி.என்.ராவ் அவர்களின் பெயர் பிரதமரால் அக்டோபர் 24 ஆம் தேதி ஒப்புதல் செய்யப்பட்டது . இந்நிலையில் பிரதமர் அலுவலகம் , திடீரென விளையாட்டு அமைச்சகத்திடம் , சச்சினின் பயோ டேட்டாவை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டது . மேலும் அவசர அவசரமாக நடந்த நிகழ்வுகளால் சச்சினின் பெயருக்கும் சி.என் . ராவ் அவர்களின் பெயருக்கும் ஒரே நாளில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து அனுமதி வாங்கப்பட்டது . அனுமதி வழங்கப்பட்ட அந்த நாள் தான் சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி நாளாகவும் இருந்தது .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media