BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 9 March 2014

கணவர், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் நிலையம் முன்பு இளம் பெண்ணும், தாயும் போராட்டம்



விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஹேமா என்பவர், வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய தன் கணவரையும், மாமியாரையும் கைது செய்ய வேண்டுமென்று, காவல் நிலையத்திற்கு முன்பு தன் தாயுடன்அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

தன் கணவர், மாமியார் மீது வரதட்சணை கேட்டதாக மகளிர் காவல் நிலையத்தில் ஹேமா புகார் கொடுத்திருந்தார். ஆனால், அவர்கள் முன் ஜாமீன் பெற்றிருந்ததால், போலீசாரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

அதனால், ஹேமாவும், அவரது தாயார் அன்னமும் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய வாசலில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹேமா, "வரதட்சணை கேட்டு என்னை அடித்து தாய் வீட்டுக்கு கணவரும், மாமியாரும் அனுப்பிவிட்டனர். அவர்கள் மீண்டும் என்னை அழைத்து செல்வார்கள் என்று நினைத்திருந்துபோது விவாகரத்து கேட்டு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டடது. இதனால் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் அவர்களை போலீசார் கைது செய்யவில்லை. எனவே, கணவர் மூர்த்தி, மாமியார் அமுதா ஆகியோரை கைது செய்யும் வரை தர்ணா போராட்டத்தை கைவிட மாட்டேன்." என தெரிவித்தார்.

இச்சம்பவத்தால்ல் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 1½ மணி நேரத்துக்கு பின்னர் போலீசார் இருவரிடமும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்து, அவர்களை எஸ்.பி அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media