BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 20 July 2014

புகை பழக்கத்தால் இறந்த கணவர் ! மனைவிக்கு சிகரெட் நிறுவனம் இழப்பீடு தர கோர்ட் உத்தரவு ...

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் சிந்தியா ராபின்சன் . இவரது கணவர் மைக்கேல் ஜான்சன் . இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு கேன்சர் நோயினால் இறந்தார் . இவர் அதிகப்படியான புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் , இவருக்கு கேன்சர் நோய் வந்தது . தனது கணவர் சிகரெட் குடிப்பதால் தான் இறந்தார் என்ற விரக்தியில் , அமெரிக்காவின் இரண்டாவது பெரிய சிகரெட் நிறுவனமான ஆ.ஜெ . ரெனால்ட்ஸ் மீது வழக்கு தொடுத்தார் .

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி , சிகரெட் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அந்த நிறுவனம் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவில்லை என்றும் , அந்த நிறுவனம் இவருக்கு இழப்பீடு தொகையாக 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது . மேலும் இந்த தீர்ப்பு மற்ற நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கும் என்றார் .

இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த நிறுவனம் மேல் முறையீடு செய்ய உள்ளது .

இன்றைய சிறப்பு செய்திகள் Satrumun Special News

பெண்களிற்கு மிகவும் பிடித்தது 'கிஸ்' தானாம், 'கிஸ்' தர மறந்துவிடாதீர்கள் ஆண்களே!
http://www.satrumun.net/2014/07/ladies-like-this-much.html

சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மூலம் அரசியலுக்கு வர உள்ளார் விஜய்
http://www.satrumun.net/2014/07/blog-post_5632.html

பெங்களூரு - கற்பழிப்பின் தலைநகராகிறதா தகவல் தொழில்நுட்ப தலைநகரம்?
http://www.satrumun.net/2014/07/blog-post_1071.html

டீக்கடையில் வேலை செய்து பிரபல நட்சத்திரமான "காதல்" தண்டபாணி மரணம்
http://www.satrumun.net/2014/07/kadhal-dhandapani-passed-away.html

தியேட்டர்கள் அழிஞ்சா நாம ஏன் கவலைப்படணும்? : சேரன் ஆவேசம்!
http://goo.gl/OYOsN2

நாங்கள் குறைவாக தான் ரேப் பண்ணி உள்ளோம் , முலாயமின் முட்டாள்தனமான பேச்சு
http://www.satrumun.net/2014/07/blog-post_3828.html

மோடி ஏன் தன்னுடைய வெளிநாட்டு பயணங்களில் பத்திரிக்கையாளர்களை அழைத்துச் செல்லவில்லை ??
http://www.satrumun.net/2014/07/blog-post_2886.html

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்துடன் உலகத்தில் எய்ட்ஸ் நோயை அழிப்பதற்கான மருந்தும் அழிந்து விட்டதா - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ..
http://www.satrumun.net/2014/07/blog-post_7873.html

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இறந்த பயணிகளின் உடல்களை தூக்கிச் சென்ற கிளர்ச்சியாளர்கள் !!
http://www.satrumun.net/2014/07/blog-post_7731.html

மரணத்தை வென்று மறுபிறவி எடுத்து பிறந்தவர் ரொனால்டோ
http://www.satrumun.net/2014/07/blog-post_4511.html

ஆம் ஆத்மி கட்சி பாஜகவின் "பி-டீம்" , சொல்லுகிறது காங்கிரஸ் !!
http://www.satrumun.net/2014/07/blog-post_4817.html

இனி ரேஷன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்டுகள்
http://www.satrumun.net/2014/07/blog-post_6278.html

மலேசியன் ஏர்லைன்ஸ் தாக்குதல் பற்றி மோடியின் கருத்து
http://www.satrumun.net/2014/07/blog-post_20.html

பெண்களிற்கு மிகவும் பிடித்தது 'கிஸ்' தானாம், 'கிஸ்' தர மறந்துவிடாதீர்கள் ஆண்களே!

\
இன்றைய காலகட்டத்தில் கிஸ் அடிப்பது என்பது காதலர்கள் , கணவன் மனைவிகள், உறவுகள், நட்புகள் இடையே அன்பு பரிமாற்றத்தின் வெளிப்பாடாக காணப்படுகிறது. சமீபகாலங்களில் காதலர்கள்,கணவன் மனைவி மட்டுமின்றி நண்பர்களிடையேயும் முத்தம் கொடுக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது, அந்தவகையிலே முத்தம் கொடுப்போரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

முத்தம் பற்றி சமீபத்தில் நியூயார்க் நகரத்தின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றின் முடிவு அனைவரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. என்ன ஆச்சரியம் என்றால் முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவமே, தங்கள் துணையின் முத்தத்திற்கு பெண்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

காதலை, அன்பை உறுதிப்படுத்தவும் நீண்ட உறவைப் புதுப்பிக்கவும் முத்தம் கொடுக்கின்றனராம். ஆண்களை பொறுத்தவரை முத்தம் என்பது ஆசை அதிகரிக்கும் போது வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகவே கருதுகிறார்களாம். முத்தமே இல்லாத உடலுறவைக் கூட ஆண்களால் நிகழ்த்தி விட முடியும். ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

தங்கள் துணையுடனான‌ வாழ்க்கை காலம் நீள நீள முத்தத்தின் முக்கியத்துவம் ஆண்களிடம் குறைகிறது. ஆனால் பெண்களிடம் அது மேலும் மேலும் அதிகரிக்கிறது. ஆண்களே உங்கள் கவனம் முத்தத்தில் இருந்தால் பெண்கள் உங்களை சுற்றி சுற்றி வருவார்கள் , தாமதம் வேண்டாம். தயக்கம் வேண்டாம். உங்கள் துணையின் நேசத்தை அவ்வப்போது முத்தம் கொடுத்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

சாதாரண நேரங்களில் முத்தமிடுவதற்கு ஏற்ற இடம் என்றால் அது நெற்றி, கன்னங்கள், பின் கழுத்து, முன் கழுத்து, உதடுகள், வாய்,. கண்கள், உள்ளங்கை, தோள்கள், அதே செக்ஸ் உறவு நேரங்களில் முத்தமிட ஏற்ற இடம் என்று எதுவுமில்லை, எல்லா இடங்களுமே முத்தமிட ஏற்ற இடங்கள் தான்.

மோடி ஏன் தன்னுடைய வெளிநாட்டு பயணங்களில் பத்திரிக்கையாளர்களை அழைத்துச் செல்லவில்லை ??


மோடி பதவியேற்றபின் இரண்டு முறை வெளிநாட்டு பயணங்கள் சென்றுள்ளார் . முதலில் பூடானிற்கும் பின்னர் பிரேசிலுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் . இரண்டு பயணங்களிலும் பத்திரிக்கையாளர்கள் யாரையும் அழைத்துச் செல்லாமல் , அரசி ஊடகமான தூர்தர்ஷன் மற்றும் ஏர் இந்தியா வனொளியில் பணியாற்றும் 4 பேரை மட்டும் அழைத்துச் சென்றார் .

ஏன் பிரதமர் மோடி அவ்வாறு செய்தார் என்பதற்கான காரணங்கள் வெளிவந்துள்ளனர் .

1 ) தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் , செய்தியாளர்கள் பிரதமர் அருகில் இருந்தால் தான் செய்தியை சேர்க்க முடியும் என்று இல்லை . இருந்த இடத்தில் இருந்தவாறே அங்கே நடப்பது குறித்த செய்திகளை அறியலாம் . எனவே தகவல் தொழில்நுட்பத்தில் அதிக நம்பிக்கை கொண்ட மோடி பத்திரிக்கையாளர்களை தவிர்த்து உள்ளார் .

2 ) இது போன்ற இடங்களுக்கு 30 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவதால் , மற்ற 100 பேர் புறக்கணிக்கப்படுகிறார்கள் .

3) மேலும் வேறு எதாவது பெரிய அறிவிப்பாக இருந்தால் , மோடி அதனை இந்தியாவுக்கு வந்த பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறுவார் . எனவே அவருடன் வெளிநாட்டுப் பயணங்களில் அவர் பத்திரிக்கையாளரை அழைத்துச் செல்லவில்லை .

இதை மோடி அவர்களே ஒரு மூத்த பத்திரிக்கையாளரிடம் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .


பெங்களூரு - இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் , பாலியல் கொடுமைகளின் தலைநகரம் ஆகி வருகிறதா ???



பெங்களூரில் நடந்த ஆறு வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்முறை இந்தியா முழுக்க அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது . இதைப் போன்று கடந்த 15 நாட்களில் 12 பாலியல் கொடுமைகள் பெங்களூரில் நடந்துள்ளது . ஆனால் அரசு நடவடிக்கையை அதிகரிக்காமல் இன்னும் மெதுவாகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது .

ஆறு வயது சிறுமிக்கு நடந்த இந்த கொடுமையை முதலில் காவல்துறையினர் அந்த கண்டு கொள்ளவில்லை . பின்னர் சிறுமியின் பெற்றோர் மற்ற பெற்றோர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தியப் பின்னர் தான் காவல்துறையினர் தீவிரமாக இறங்கினர் . முதலில் வெளி நபர் தான் இதை செய்த்தாக தெரிவித்தனர் . ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர் ஒருவரை குற்றவாளியாக கைக் காட்டியது . இது போன்று அந்த பள்ளியில் இருந்து மூன்று முறை குழந்தைகளை கொடுமை செய்ததாக பூகார் கொடுத்த போதும் காவல்துறையினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை .


மாநில அரசும் இப்போதுள்ள பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளிக்காமல் , இதற்கு முந்தைய அரசு இவ்வாறான பிரச்சனைகளை சரியாக சமாளிக்கவில்லை என்று குறை கொண்டு இருக்கின்றனர் . இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரு இப்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடமாக இருக்கிறது . 

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இறந்த பயணிகளின் உடல்களை தூக்கிச் சென்ற கிளர்ச்சியாளர்கள் !!



மலேசிய வெடித்து விழுந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை கிளர்சியாளர்கள் தூக்கிச் சென்று விட்டதாக உக்ரேன் அவசர உதவி மைய அதிகாரிகள் தெரிவித்தனர் . '

அங்கே இருந்த பத்திரிக்கை நிரூபர் ஒருவர் கூறுகையில், சனிக்கிழமை அவர் கிளர்சியாளர்கள் உடல்களை வண்டியில் ஏற்றுவதை பார்த்ததாக கூறினார் . இன்று அவர் எந்த உடல்களையும் பார்க்கவில்லை என்றும் உடல்களின் பாகங்களை மட்டும் பணியாளர்கள் தேடிக் கொண்டு இருப்பதாக கூறினார் .

உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட பணியாளர் கூறுகையில் , அவர்கள் எங்களை மிரட்டியதால் உடலை ஒப்படைத்து விட்டோம் . அவர்களிடம் ஆயுதம் இருந்ததால் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றார் .

உடலை எதற்காக எடுத்துச் சென்றுள்ளனர் என்பது பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை .

டீக்கடையில் வேலை செய்து பிரபல நட்சத்திரமான "காதல்" தண்டபாணி மரணம்


'காதல்' படத்தில் சந்தியாவின் தந்தையாக வில்லனாக நடித்தவர் தண்டபானி, இவர் இப்படத்தில் நடித்து பிரபலமானதன் மூலம் காதல் தண்டபாணி என்று அழைக்கப்பட்டார்.

இவர் படங்களில் நடிப்பதற்கு முன் டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார், இயக்குனர் பாலாஜி சக்திவேல் இவரை கண்டுபிடித்து திரைப்படத்தில் நடிக்க வைத்தார், இவரது டிரேட் மார்க் குரலும், இயல்பான நடிப்பும் நிறைய படங்களில் நடிக்கை வைத்தது.

இன்று காலை மாரடைப்பு ஏற்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்துடன் உலகத்தில் எய்ட்ஸ் நோயை அழிப்பதற்கான மருந்தும் அழிந்து விட்டதா - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ..


மலேசியன் ஏர்லைன்ஸை சேர்ந்த விமானம் ஒன்று தாக்குதல் படையால் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது . இந்த விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் இறந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .

அந்த விமானத்தில் உலக புகழ் பெற்ற ஆராய்ச்சியாளர் மற்றும் சர்வதேச எய்ட்ஸ் சங்கத்தின் முன்னால் தலைவராக இருந்த ஜோப் லேங்கும் பயணம் செய்துள்ளார் . அவர் மெல்பர்னில் நடைபெற உள்ள எய்ட்ஸ் - 2014 என்னும் கலந்தாய்வில் கல்ந்து கொள்ள விமானத்தில் பயணம் செய்தார் . இவருடன் எத்த்னை நபர்கள் பயணித்தனர் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை . சிட்னியில் உள்ள அதிகாரிகளின் கணிப்பு படி 100 ஆராய்சியாளர்கள் பயணித்திருக்கலாம் .

ட்ரெவர் ஸ்டெடான் என்னும் மற்றுமொரு எய்ட்ஸ் ஆராய்சியாளர்  கூறுகையில் , " அந்த விமானத்தில் புகழ்பெற்ற மற்றும் தேர்ச்சி பெற்ற ஆராய்சியாளர்கள் இருந்தனர் . அவர்களிடம் எய்ட்ஸ் நோய்க்கான மருந்து இருந்திருக்கலாம் , ஆனால் அதை உறுதியாக கூற முடியாது என்றார் .

மற்றுமொரு பிரபல ஆராய்சியாளர் கூறுகையில் , " ஒரு துறையில் பிரபலமான ஒருவரை இழக்கையில் , அந்த இழப்பு அந்த துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் . அவருடைய அறிவை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது . நாங்கள் உலக தலைவர் ஒருவரையும் , இளம் ஆராய்ச்சியாளர்களையும் இழந்து உள்ளோம் என்றார் .

ஜோப் லேங்கின் இறப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . எய்ட்ஸ் நோயை எதிர்க்கும் மருந்தை கண்டுபிடிக்க அவர் ஆற்றிய பணிகள் நிறைய உள்ளது . எய்ட்ஸ் நோயின் சிகிச்சைக்காக தனது வாழ்வை அர்பணித்து இருந்தார் . அவர் இந்த ஆராய்ச்சியில் 1983 முதல் ஈடுபட்டு வருகிறார் .

இவருடைய இழப்பு ஆராய்சியாளர்கள் வட்டாரத்தில் பெரும் சோகத்தை உண்டாக்கி இருந்தாலும் , அவர்கள் துவண்டு விடக் கூடாது , அவரின் ஆராய்சிகளை வைத்து அவரது கனவு மருந்தான எய்ட்ஸ் நோய்க்கு எதிரான மருந்தை கண்டுபிடித்து அவரது கனவை நனவாக்க வேண்டும் . 

ஆம் ஆத்மி கட்சி பாஜகவின் "பி-டீம்" , சொல்லுகிறது காங்கிரஸ் !!



டில்லியில் யார் அடுத்து ஆட்சி அமைப்பது என்பதற்கு பாஜக , காங்கிரஸ் , ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது . இந்நிலையில் ஒவ்வொரு கட்சியும் இன்னொரு கட்சியை தாக்கி குறை சொல்லிக் கொண்டே இருக்கின்றனர் . நேற்று காங்கிரஸ் தலைவர்களுல் ஒருவரான ஹருன் யுஸப் ,  ஆம் ஆத்மி கட்சி பாஜகவின் "பி-டீம்" என்றார் .

அவர் கூறுகையில் , " ஆம் ஆத்மி கட்சி பாஜகவின் "பி-டீம்" , அது பாஜகவிற்கே உதவி செய்கிறது . கெஜ்ரிவால் டில்லியை பிரிக்க பார்க்கிறார் . அவர் ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபடுகிறார் " என்றார் .

மற்றுமொரு காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி கூறுகையில் , ஜன் லோக்பால் நிறைவேற்ற முடியாததாலும் , ஊழலை ஒழிக்க முடியாததாலும் , கெஜ்ரிவால் குப்பை அரசியலில் ஈடுபட ஆரம்பித்து விட்டார் . ஆம் ஆத்மி காங்கிரஸின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் கவர நினைத்தது . அது வீணாகப் போனதால் , எங்களை குறை கூற ஆரம்பித்து விட்டனர் என்றார் .

மரணத்தை வென்று மறுபிறவி எடுத்து பிறந்தவர் ரொனால்டோ





கால்பந்தில் இன்று பலருக்கு பிடித்த வீரர் யார் என்றால் அது போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸியும் தான். இதில் ரொனால்டோவுக்கு தான் ரசிகர்கள் அதிகம். இவர் கால்பந்தில் பந்தை லாவகமாக கடத்தி செல்வது இவருடைய சிறப்பு ஆகும். வெற்றியை அதிகமாக ரசித்து கொண்டாடுவர். இவரது அழகு, ஹேஸ்டைல் , சிக்ஸ் பேக் பாடிக்காகவே பல பெண்களுக்கு இவரை பிடிக்கும். ஆனால் இவர் மரணத்தை வென்றவர் என பலருக்கு தெரியாது.


இது குறித்த உண்மை இவர் தாயார் எழுதிய நூலில் இருந்து தெரிய வந்துள்ளது. ரொனால்டோ அவர் தாயின் வயிற்றில் இருக்கும் போது அவரது தாய்க்கு அவர் பிறப்பதில் விருப்பம் இல்லை . அதனால் அவரை கருவிலே அழித்து விடலாம் என நினைத்து உள்ளார். ஆனால் டாக்டர் அதற்கு சம்மதிக்க வில்லை. இதனால் மரணத்தை வென்று ரொனால்டோ பிறந்தார். இன்று அவருக்காக உயிரை கொடுப்பதற்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நாங்கள் குறைவாக தான் ரேப் பண்ணி உள்ளோம் , முலாயமின் முட்டாள்தனமான பேச்சு





நாளுக்கு நாள் இந்தியாவில் கற்பழிப்பு சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. தினம் ஒரு கற்பழிப்பு சம்பவம் இல்லாமல் செய்திகளும் , செய்திதாள்களும் வருவதில்லை. ஆனால் நாம் அதனை தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகளை எடுக்காமலே இருந்து வருகிறோம். இப்படியே சென்றால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறிவிடுமோ என்கிற அச்சம் உள்ளது. ஆனால் இது பற்றி எந்த கவலையும் இல்லாமல் முலாயம் சிங் போன்ற தலைவர்கள் முட்டாள்தனமாக சர்சைக்குரிய கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இங்கு தான் தினம் ஒரு கற்பழிப்பு நடந்து வருகிறது. இந்தியாவிலே இங்கு தான் அதிக குற்றங்கள் நடக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள முலாயம் சிங் , உபி மக்கள் தொகையில் மிக பெரிய மாநிலம். அதனால் தான் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு அதிக குற்றங்கள் நடக்கிறது என்று கூறியுள்ளார்.


தவறுகளை திருத்தி கொள்ளாமல் தவறை மறைப்பதற்கு காரணம் சொல்லி வருகிறார், இந்த லட்சனத்தில் சென்றால் நம் நிலைமை கோவிந்தா தான்.

இனி ரேஷன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்டுகள்




தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து குடும்ப அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன . இவை அனைத்தையும் ஸ்மார்ட் கார்டாக மாற்ற திட்டமிட்டு உள்ளார்கள். இந்த திட்டம் மாநில அரசின் கீழ் உள்ளது. இதனை செய்வதற்கு 73 செலவாகும்.

இதற்காக தேசிய மக்கள் தொகை கணக்கீட்டின் உதவி தேவை . அந்த பணிகள் 74 சதவீதம் முடிந்து உள்ளது. அவை முழுமையாக முடிந்தவுடன் அவர்களிடம் தேவையானவற்றை பெற்று கொள்வார்கள். இதில் மக்களின் 10 விரல் ரேகைகள் மற்றும் கண் பார்வையை பதிவு செய்ய வேண்டும்.


இந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடங்கப்படலாம்.

சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மூலம் அரசியலுக்கு வர உள்ளார் விஜய்





விஜய்க்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தனது காவலன் படம் வெளிவரும் போது அதற்கு திமுக அரசு இடையூரு செய்ததால் அவர்களுக்கு எதிராக மாறினார். அதன் பிறகு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது டெல்லி சென்று அவருக்கு ஆதரவு  தெரிவித்து விட்டு வந்தார். கடந்த ஆண்டு தனது தலைவா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுக அரசுக்கு எதராக மாறினார். அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மோடியை சந்தித்து பேசினார்.


ரசிகர் மன்றங்களாக இருந்தவைகளை மக்கள் நற்பணி மன்றமாக மாற்றினார். தனது பிறந்த நாளின் போது மக்களுக்கு நலதிட்ட உதவிகளை செய்து வந்தார். இப்போது குமுதம் நாளிதழ் மூலம் தன்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என அடையாளம் காட்டு கொண்டார். இதற்காக ஒரு விழா நடத்த திட்டமிட்டு உள்ளார்கள், இதனை ஒரு பட்டமளிப்பு விழாவாக மட்டும் நடத்தாமல் ஒரு அரசியல் விழாவாக நடத்த திட்டமிட்டு உள்ளார்கள்.


விஜய்க்கு ஆதரவாக பாஜக வினர் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. எனவே விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கலாம்.


எதிர்நீச்சல் போட்டு வந்த எங்கள் வீட்டு பிள்ளை !!!

மலேசியன் ஏர்லைன்ஸ் தாக்குதல் பற்றி மோடியின் கருத்து





கடந்த வியாழக்கிழமை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு தாக்கப்பட்டது. இதில் பயணம் செய்து கொண்டு இருந்த 298 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி கட்டைகளாக இருந்தனர். இந்த தாக்குதல் உக்ரைன் பகுதியில் நடந்தது. இதற்கு காரணமானவர்கள் யார் என்று தெரியவில்லை. இதனை செய்ததாக உக்ரைன் அரசும் ரஷிய அரசும் மாற்றி மற்றி குற்றம்சாட்டி வருகிறார்கள்.


உக்ரைனில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகனையை பயன்படுத்தும் அளவுக்கு பயிற்சி கிடையாது. எனவே இதனை செய்தது ரஷிய அரசு தான் என்கிறது உக்ரைன் அரசு. ஆனால் உக்ரைன் அரசு எல்லாத்தையும் செய்து விட்டு தேவையில்லாமல் தங்கள் மீது அபண்டமாக பழி போடுவதாக ரஷிய அரசு உக்ரைன் மீது குற்றம்சாட்டி உள்ளது. இப்படி ஒருவரை ஒருவர் மாற்றி மற்றி குற்றம்சாட்டி வருவதால் செய்தவர் யார் என்று தெரியவில்லை.


இது குறித்து மலேசிய பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் இந்த விபத்தில் உயிர் இழந்த அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். இந்த விஷயத்தில் நீதி கடைபிடிக்க பட வேண்டும். இது தொடர்பான முழுமையான விசாரணைக்கு இந்தியா உதவும் என மோடி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media