BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 29 January 2014

டெல்லியில் நிர்பயா கற்பழிக்கப் பட்டதற்கு காரணம் அவரே தான்

பெண்கள் கற்பழிக்க படுவதற்கு காரணங்கள் மூன்று:

1. அவர்கள் அணியும் அரைகுறை ஆடைகள்
2. அவர்களின் உடல் ரீதியான அங்க அசைவுகள்
3. பாதுகாப்பு இல்லாத இடங்களுக்கு அவர்கள் செல்வது

இவ்வாறு கூறியவர், மஹாராஷ்டிரா மாநில பெண்கள் ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் ஆஷா மிர்ஜே கூறியுள்ளார்.

டெல்லியில், கடந்த வருடம் டிசம்பர் மாதம், நிர்பயா என்ற பெண்,  தன் ஆண் நண்பருடன் திரைப்படம் பார்த்து விட்டு வரும் போது, ஒரு பேருந்திற்குள் கூட்டாக கற்பழிக்கப் பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். நிர்பயா எதற்காக இரவு வேளையில் வெளியே செல்ல வேண்டும்? அந்த பெண் மீது தான் குற்றம் என்றும், அவர் கற்பழிக்கப் பட்டதற்கு காரணம் அவரே தான் எனவும் ஆஷா மிர்ஜே கூறியுள்ளார்.

மிர்ஜேவின் இந்த கருத்திற்கு கடும் எதிர்ப்புகள், கண்டனங்கள் நாடு முழுவதும் எழுந்திருக்கின்றன.

நீங்களும் உங்கள் கண்டனத்தை, 'கமென்ட்'டில் தெரிவியுங்கள்!

விதியே விதியே என்செய்ய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை - வீணாகிப்போன முத்துகுமாரின் தியாகம் -

வீணாகிப்போன முத்துகுமாரின் தியாகம் - விதியே விதியே என்செய்ய நினைத்திட்டாய் என்  தமிழ் சாதியை

2009ம் ஆண்டு இதே நாள், சென்னை சாஸ்திரி பவன் எதிரில் ஒரு இளைஞன் தன் உடலில் பெட்ரோலை ஊற்றி எரித்துக்கொண்டான், அவன் ஒன்றும் சாதாரண இளைஞனோ உணர்ச்சிவயப்பட்ட இளைஞனோ அல்ல என்பது அவன் எழுதியிருந்த அந்த மரண சாசனத்தில் தெரிந்தது.

தன்னை 7 மாதங்கள் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி கற்பழித்தார் என குற்றச்சாட்டு அளித்த பெண்

ஜெய்பூரில், 22 வயது பெண் ஒருவர், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான மோஹன்டி என்பவர், தன்னை ஏழு மாதங்கள் கற்பழித்ததாக மேஜிஸ்ட்ரேட் முன்பு தன் குற்றச்சாட்டை நேற்று பதிவு செய்தார். ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற உதவுவதாக கூறி தன்னை மோஹன்டி கற்பழித்தார் என்று அப்பெண் கூறியுள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையே பேசி கொண்ட தொலைபேசி அழைப்புகள் மற்றும், சென்னை, ஆக்ரா, கோவா மற்றும் பாரத்பூரில் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்த் பதிவுகளை ஆதாரங்களாக வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

குற்றம் சாட்டப் பட்ட மோஹன்டியால் தனக்கு ஆபத்து ஏதாவது நேரிட வாய்ப்புள்ளது என்று, தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அப்பெண் கேட்டு கொண்டுள்ளார்.

மோடிக்கு ஆதரவு அளிப்பாரா சூப்பர் ஸ்டார்?

சேலத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த பா.ஜ.க தலைவர் இல. கணேசன்,  பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருந்தார். அப்பொழுது நிருபர்களிடம் பேசுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம், நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு தேர்தல் நெருங்கும் சமயத்தில் கேட்போம், அவரும் நிச்சயம் ஆதரவு தருவார் என கூறினார்.

மேலும், தே.மு.தி.க.வுடனும் கூட்டணி பற்றிய பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம், அவர்கள் எங்களுக்கு ஆதரவு தருவதற்கான சூழல்கள் பிரகாசமாக உள்ளன எனவும் தெரிவித்து இருந்தார்.

தமிழகத்தில் பலமான கூட்டணியை அமைப்போம் என்றும்,  16 சதவீத அளவுக்கு மோடிக்கு ஆதரவு தமிழகத்தில் காணப்படுகிறது, அதை இன்னும் பலப்படுத்த முயற்சிக்கிறோம் என்றும் இல.கணேசன் கூறியுள்ளார்.

திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட இருக்கிறாரா?

மு.க. அழகிரியை நிரந்தரமாக நீக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அழகிரிக்கு,  'உங்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்க கூடாது?' என்பதற்கான விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பும் திட்டத்தில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது.

கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக, அழகிரியை திமுகவில் இருந்து, தற்காலிகமாக நீக்குவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர்  அன்பழகன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த கருணாநிதி, அழகிரி தன்னிடம் தகாத வார்த்தைகளை கூறிவிட்டு, ஸ்டாலின் இன்னும் 3-4 மாதங்களில் இறந்துவிடுவார் என்று கூறியதாக உருக்கமாக பேட்டி அளித்தார். இதனைத் தொடர்ந்து அழகிரியை கட்சியை விட்டே நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுகவினர் சில இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் கட்சியை விட்டே அழகிரியை நிரந்தரமாக நீக்கும் முடிவிற்கு திமுக வந்ததாக தெரிகிறது.  இதனால் "கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ஏன் உங்களை கட்சியைவிட்டு நீக்கக் கூடாது?" என விளக்கம் கேட்டு திமுக தலைமை  அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதி நாடகத்திற்கு எல்லாம் தே.மு.தி.க அடி பணியாது

உளுந்தூர்பேட்டை அருகே தேமுதிக மாநாடு நடைபெற உள்ளது. அம்மாநாட்டுப் பணிகளை அக்கட்சி தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பார்வையிட்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், கருணாநிதி நடத்தும் குடும்ப நாடகத்தை நாங்கள் நம்பவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் திமுக தலைவர் ஒரு மூத்த அரசியல்வாதி, மிகப் பெரிய தலைவர் என்றெல்லாம் பெயரெடுத்தவர், அவர் தன் வீட்டுக்குள் பேச வேண்டியதை வெளியில் பேசுகிறார். அதற்கு அவரது மகனும் ஊடகங்களிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு குடும்பத்தின் டிராமா வெட்ட வெளிச்சமாக தமிழக மக்களுக்கு தெரிந்துகொண்டிருக்கிறது. இதன் மூலம் அனுதாபத்தை பெற வேண்டும், யாரையாவது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பது அவர்களின் எண்ணமா? ஆனால் எந்தவித டிராமாவுக்கும் தே.மு.தி.க. அடி பணியாது. எல்லா டிராமாவையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பார்த்து கொண்டுதான் இருக்கிறார். இதற்கான முடிவு என்ன என்பதை வரும் 2ம் தேதி நடக்கும் மாநாட்டில் மக்கள் முன்பு அவர் தெரிவிப்பார் என்றார் பிரேமலதா.

அண்ணன் உருவ பொம்மையை எரிக்கக் கூடாது! - ஸ்டாலின் அறிக்கை

பிறந்தவர்கள் அனைவரும் இறந்து தானே ஆக வேண்டும்
நான் செத்துடுவேன் என்று அழகிரி சொன்னதை பெரிதாக எடுக்கவில்லை.
அண்ணன் உருவ பொம்மையை எரிக்கக் கூடாது! - ஸ்டாலின் அறிக்கை

பாஜக கூட்டணியில் பாமக? இறுதிகட்ட பேச்சுவார்த்தை



மு.க.ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம் - அழகிரி மீது பயம்?



சாந்தன், முருகன், பேரறிவாளனின் தூக்கு இன்று ரத்தாகுமா?



முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனுக்கு 1998ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் கருணை மனு, 2011ல் தான், அப்பொழுது இருந்த குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலால் நிராகரிக்கப்பட்டது.

கால தாமதமாக கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் தங்கள் தண்டனையை குறைக்குமாறு அந்த 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

சமீபத்தில், சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 15 பேரின் மரண தண்டனையை, அவர்களின் கருணை மனுக்கள் காலதாமதமாக நிராகரிக்கப்பட்டதால்,  உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. அதே போன்று முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

சல்மான்கான் படங்களைப் புறக்கணியுங்கள்!

பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளரான மோடி, 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்காக, மன்னிப்பு எதுவும் கேட்க தேவையில்லை என்று நடிகர் சல்மான் கான் கூறியிருந்தார். சல்மான்கானின் இந்த கருத்து முஸ்லிம்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராகப் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

"மோடி மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்று சல்மான் கூறியிருப்பது, இஸ்லாமியர்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. குஜராத் கலவரத்தின் போது பெண்களும், குழந்தைகளும் அடைந்த வேதனையை அவர் அறிவாரா? அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் ஏதாவது உதவிக்கரம் நீட்டினாரா? சல்மான்கான் நடித்த படங்களை பார்க்காமல் முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை இந்த புறக்கணிப்பை நீட்டிக்க வேண்டும்." என்று இஸ்லாமிய மதக் குருமார்கள் நேற்று சல்மான்கானுக்கு எதிரான ஒரு கூட்டு அறிவிப்பில் தெரிவித்து இருந்தனர்.

பேட்டி முடிந்தவுடன் அழுத 'அஞ்சா நெஞ்சன்'அழகிரி

திமுக தலைவர் கருணாநிதி தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை அபாண்டம் என கூறி நிராகரித்த அழகிரி, "தலைவர் 100 ஆண்டுகள் வாழ வேண்டும். நாங்கள் எல்லாம் இறந்த பின் தான், அவர் இந்த உலகத்தை விட்டு போக வேண்டும். எங்கள் பிணத்தின் மீது தான் அவரது கண்ணீர் விழ வேண்டும்" என்று ஆவேசமாக பேசி தனது பேட்டியை நேற்று மாலை முடித்தார்.

பேட்டியை முடித்து விட்டு, வீட்டிற்குள் சென்ற அழகிரி, கண்ணீர் வடித்துள்ளார். அவரது மனைவி காந்தியும், மகன் துரை தயாநிதியும் அழகிரியை அணைத்தபடி, ஆறுதல் கூறி, தேற்றி உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர். அழகிரி அழுததை பார்த்த அவரது குடும்பத்தினர், சோகமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.உள்ளே சென்ற பிறகும், அழகிரி சோகத்தில் மூழ்கி இருந்து, எதுவும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் அரை மணி நேரம் கழித்த பிறகே, வெளியே வந்து, தன்னை காண வந்த ஆதரவாளர்களை சந்தித்து விட்டு, மறுபடியும் வீட்டிற்குள் சென்று விட்டார்.

மதுரையில் நாளை நடக்கவிருக்கும் அழகிரி பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் என்ன?

அழகிரி ஆதரவாளர்கள், அவரின் பிறந்தநாள் விழாவை உற்சாகமாக கொண்டாட தீவிரமாக ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். மதுரையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அணிவகுத்து வந்து அழகிரிக்கு 63–வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க, 1000–க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 20 ஆயிரம் தொண்டர்கள் வருவார்கள் என்று ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்து மதுரை நகரில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

மதுரை சத்ய சாய் நகரில் உள்ள அவரது வீடு முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. பிறந்தநாள் விழா நடைபெறும் ராஜா முத்தையா மன்றத்திலும் அலங்கார ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.அந்த மன்றத்தில் தான் காலை 9 மணிக்கு மு.க.அழகிரி தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதன் பிறகு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட இருக்கின்றன.

பிறந்தநாள் விழாவை முடித்து விட்டு, அதற்கு மறுநாள், அழகிரி பத்திரிக்கையாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

1984 சீக்கியர் படுகொலை, 2002 கலவரம் பற்றி ராகுல் கூறியது தவறு: அருண் ஜெட்லி

டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டியளித்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, சீக்கியர் படுகொலை நடந்த போது, அதை அப்பொழுது இருந்த ராஜீவ் காந்தி அரசு தடுக்க முயன்றது. 2002ல் நடந்த குஜராத் கலவரத்தை மோடி அரசே தலைமை தாங்கி நிகழ்த்தியது என்று கூறினார்.இதற்கு பா.ஜ.க மூத்த தலைவர் அருண் ஜேட்லி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

1984ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதியன்று இந்திரவின் உடல் வைக்கப்பட்டிருந்த எய்எம்ஸ் மருத்துவமனையில் இருந்து வன்முறை வெடித்தது. காங்கிரஸ் தலைவர்களே வன்முறைக்கு தலைமை தாங்கினர். ஆயிரக்கணக்கான இடங்களில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எந்த ஒரு இடத்திலும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. எவர் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால் 2002 குஜராத் கலவரத்தின் போது ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கலவரக்காரர்கள் 300க்கும் மேற்பட்டோர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கானோருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதனால்,1984ஆம் ஆண்டு சீக்கியர் கொலையில் ராஜிவ் அரசு பங்கெடுக்கவில்லை என்று எப்படித்தான் ராகுல் காந்தி சொல்கிறாரோ என தெரியவில்லை என்று ஜேட்லி கூறினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media