நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை 'போகோ ஹராம்' என்ற தீவிரவாத அமைப்பு கடத்தி சென்றிருப்பது உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. நைஜீரிய ராணுவத்தால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதை தொடர்ந்து அவர்களை மீட்க அமெரிக்கா ராணுவம் களமிறங்கியுள்ளது.
இந்த நிலையில் நேற்று போகோ ஹராம் தீவிரவாதிகள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், கடத்தப்பட்ட மாணவிகளில் 130 பேர் மட்டும் அதில் தோன்றினர். அதில், அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாற்றப்பட்டிருந்தனர். அவர்கள் உடல் முழுவதும் மறைத்த நிலையில் நீண்ட 'பர்தா' போன்ற உடை அணிந்திருந்தனர்.
வீடியோவில் தீவிரவாதிகளின் தலைவன் அபுபக்கர் ஷெகாவு தோன்றி பேசினான். அதில், "கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எங்களது இயக்கத்தை சேர்ந்த தோழர்களை (தீவிரவாதிகளை) உடனடியாக விடுவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் மாணவிகளை விடுதலை செய்ய முடியாது" என திட்டவட்டமாக கூறினார். ஆனால், இதற்கு நைஜீரியா அரசு மறுத்து விட்டது. தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என உள்துறை மந்திரி அப்பா மோரோ தெரிவித்துள்ளார்.
வீடியோவில் தோன்றிய அபுபக்கர் ஷெகாவு, "அல்லா மீது ஆணையாக கூறுகிறேன். எங்கள் தோழர்களை விடுவிக்கும் வரை, இந்த பெண்களை நீங்கள் மறுபடியும் பார்க்க முடியாது." என்று திட்டவட்டமாக கூறியதை அடுத்து நைஜீரியாவில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
போகோ ஹராம் என்றால், 'மேற்கத்திய கல்வி தடை செய்யப்பட்டுள்ளது' என்று பொருள். இந்த தீவிரவாத அமைப்பு, பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல கூடாது, திருமணம் செய்து கொண்டு செல்ல வேண்டும் என கூறியிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று போகோ ஹராம் தீவிரவாதிகள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், கடத்தப்பட்ட மாணவிகளில் 130 பேர் மட்டும் அதில் தோன்றினர். அதில், அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாற்றப்பட்டிருந்தனர். அவர்கள் உடல் முழுவதும் மறைத்த நிலையில் நீண்ட 'பர்தா' போன்ற உடை அணிந்திருந்தனர்.
வீடியோவில் தீவிரவாதிகளின் தலைவன் அபுபக்கர் ஷெகாவு தோன்றி பேசினான். அதில், "கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எங்களது இயக்கத்தை சேர்ந்த தோழர்களை (தீவிரவாதிகளை) உடனடியாக விடுவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் மாணவிகளை விடுதலை செய்ய முடியாது" என திட்டவட்டமாக கூறினார். ஆனால், இதற்கு நைஜீரியா அரசு மறுத்து விட்டது. தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என உள்துறை மந்திரி அப்பா மோரோ தெரிவித்துள்ளார்.
வீடியோவில் தோன்றிய அபுபக்கர் ஷெகாவு, "அல்லா மீது ஆணையாக கூறுகிறேன். எங்கள் தோழர்களை விடுவிக்கும் வரை, இந்த பெண்களை நீங்கள் மறுபடியும் பார்க்க முடியாது." என்று திட்டவட்டமாக கூறியதை அடுத்து நைஜீரியாவில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
போகோ ஹராம் என்றால், 'மேற்கத்திய கல்வி தடை செய்யப்பட்டுள்ளது' என்று பொருள். இந்த தீவிரவாத அமைப்பு, பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல கூடாது, திருமணம் செய்து கொண்டு செல்ல வேண்டும் என கூறியிருக்கிறது.