லோக்பால் மசோதா தாக்கல் செய்யபடாததை அடுத்து, தான் கூறியவாறே பதவியை ராஜினாமா செய்தார் டெல்லி முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால்.
லஞ்சத்தை ஒழிக்க ஒரு முறை அல்ல, ஆயிரம் முறை பதவியை துறக்க தான் தயார் என்று அவர் கூறியுள்ளார். லோக்பால் மசோதா தாக்கல் செய்யபட கூடாது என, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த மசோதா இன்று நிறைவேற்ற படவில்லை. இதை பற்றி கேஜ்ரிவால் பேசும் போது, "இந்த மசோதாவால், தன் தலைவர்கள் சிறைக்கு செல்லபடும் என்பது அவர்களுக்கு தெரியும். " என எதிர்ப்பு தெரிவித்தவர்களை பற்றி கூறினார்.