BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 17 September 2014

பேஸ்புக் சோதனை செய்து கொண்டு இருக்கும் புதிய அப்ளிகேஷன் !!

இப்போது வந்துள்ள செய்திகளின்படி பேஸ்புக்கில் ஷேர் செய்திட மொமண்ட்ஸ் என்னும் புதிய அப் ஒன்றை தனது பணியாளர்களிடம் சோதனை செய்து கொண்டு இருக்கிறது . பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதிகள் குளறுபடி ஆக இருந்தாலும் , நமது பதிவுகளை நம்மால் கன்ட்ரோல் செய்யும் வசதி இருக்கிறது .

நமக்கு வேண்டியவற்றை எளிதாக ஷேர் செய்யவும் , இன்னும் இயக்கப் பூர்வமாக இருக்கவும் உருவாக்கப்படுவது தான் இந்த மொமண்ட்ஸ்
அப்ளிகேஷன் . அதன் முக்கிய பயன் , நமக்கு வேண்டியவற்றை வேகமாகவும் சரியாகவும் பகிருவதே ஆகும் . இந்த அப் மூலம் நமக்கு வேண்டியவற்றை நமக்கு தேவைப்படுபவர்களிடம் வேண்டிய இடைவெளியில் பகிர்ந்து கொள்ள முடியும் .

இந்த அப்ளிகேஷன் வெளிவருமா அல்லது பல அப்ளிகேஷன் போல வெளிவராமல் போய்விடுமா என்று தெரியவில்லை . ஆனால் இது குறித்து பேஸ்புக் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை .

இந்திய கோடிஸ்வரர்களின் பட்டியல்

கடந்த ஆண்டு 103 கோடீஸ்வர பணக்காரர்களை கொண்டிருந்த இந்தியாவுக்கு இந்த முறை 100 பேர் மட்டுமே உள்ளனர். எனினும், அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம் வழங்கப்பட்டிருக்கிறது

நிர்வாண தெரபி தெரியுமா ?? ஆபாச படங்களுக்கு அடிக்ட் ஆனவர்களுக்கு நிர்வாண தெரபி அளித்து குணமாக்கும் பெண் !!



அமெரிக்காவின் நியுயார்க்கைச் சேர்ந்த 28 வயது பெண் சாரா வைட் . இவர் இன்டர்நெட்டில் ஆபாச படங்களுக்கு அடிமை ஆனவர்களுக்கும் , வாழ்க்கை உறவுமுறைகளில் பிரச்சனை உள்ளவர்களுக்கும் தனது நிர்வாண தெரபி மூலம் சிகிச்சை அளித்து வருகிறார் . இவர் இதுவரை ஆன்லைனில் ஆயிரக்கணக்கான மக்களுக்கும் பிரபலமானவர்களுக்கும் சிகிச்சை அளித்து உள்ளார் .



அது என்ன நிர்வாண தெரபி ??


இந்த தெரபியில் சிகிச்சைக்கு வருபவர் வெப் கேமரா முன் அமர்ந்து இருப்பார் . இவரும் அந்த வெப் கேமராவில் அவருடன் இணைந்து இருப்பார் . இருவரும் நிர்வாணமாக ஆகிவிடுவர் . சிகிச்சைக்கு வருபவர் அவர்கள் உடம்பில் எங்கே வேண்டுமானாலும் கை வைத்து கொள்ளலாம் . சாரா சின்ன சின்ன தொடுதலின் மூலம் அவர்களுக்கு உணர்ச்சியை ஊட்டுவார் .



இதன் மூலம் சிகிச்சைக்கு வருபவர்கள் வசதியாக உணர்வுடன் , அவர்கள் மனது தெளிவாக யோசிக்க முடிகிறது . மேலும் இருவரும் நிர்வாணமாக இருப்பதால் இருவருக்கும் ஒரு நல்ல உறவு ஏற்படுகிறது . இதன் மூலம் அவரால் தகுந்த சிகிச்சை அளிக்க முடிகிறது .


இது குறித்து அவர் கூறுகையில் , " ஒரு ஆண் மூட் ஏறும் போது தான் அவரிடம் ஒரு வெளிப்படையான மனது உண்டாகிறது . சில மருத்துவர்களிடம் அவர்களால் வெளிப்படையாக பேச இயலாது . ஆனால் இந்த் தெரபியில் அவர்களால் அடி மனதில் இருந்து பேச முடிகிறது . சில ஆண்கள் யாரிடமும் சொல்லாத சில விஷயங்களையும் என்னிடம் கூறி இருக்கின்றனர் " என்றார் .

ஆனால் அவர் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை வைத்து இருப்பதாகவும் , அவர் ஒரு செக்ஸ் பொம்மை இல்லை என்றும் அழுத்தமாக கூறினார் . 

பென்டிரைவை வேகமாகவும் , பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது எப்படி



பென்டிரைவில் நீண்டநேரம் தரவுகளை பரிமாற்றம் செய்வதை தடுக்கும் வழிகள் பென்டிரைவ் என்பது கணினி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.ஆகும். இத்தகைய பென்டிரைவ்கள் (pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி? உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்

* உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E) கொடுத்து MY COMPUTER செல்லவும்.

* அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்துறி properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

* தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேர்ந்தெடுக்கவும்.

* பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.

* அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.

* அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.
இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்

உங்கள் முகம் எப்படி இருக்கிறது ?? உங்கள் முகத்தை பார்த்து உங்கள் வயதை கணிக்கும் இணையதளம் !!



முகம் அழகாக இருக்க வேண்டும் அனைவரும் விரும்புவர் . ஆனால் முகம் அமைவது இயற்கை . சிலருக்கு வயது அதிகமாக இருந்தாலும் , சிறு வயதினரைப் போல முகம் இருக்கும் . சிலருக்கு இளம் வயதிலே முதுமை அடைந்தது போல இருப்பர் .

அப்படி முகத்தை பார்த்து நமது வயதை கணிக்கிறது இணையதளம் ஒன்று . அந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் முகத்தை அப்லோட் செய்ய வேண்டும் . அப்லோட் செய்யும் போட்டோவில் உங்கள் முடி பின்னுக்கு இழுக்கப்பட்டு இருக்க வேண்டும் , சிரிக்காமல் இருக்க வேண்டும் . முக்கியமாக மேக் அப் எதுவும் போடாமல் இருக்க வேண்டும் .

உங்கள் முகவயதை கணிப்பதற்கு முன்  உங்களின் உண்மை வயது , உங்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றி கேட்டு அறிந்து கொள்ளும் .

இந்த இணையதளம் சில பிரபலகளை வைத்து பரிசியோதித்த போது கிட்டத்தட்ட சரியான வயதை கணித்தது .

அந்த இணையதளத்தின் பெயர் http://facemyage.com

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

பெண்கள் செக்ஸ் உறவு கொள்ள விரும்பும் டாப் 10 நேரங்கள் (Situations)
http://www.satrumun.net/2014/09/top-10-situations-that-make-women-want.html

தினமும் ஒரு பெண்ணை கரெக்ட் செய்து அவரது வீட்டில் தங்கும் வீடில்லாத ஏழை !!
http://www.satrumun.net/2014/09/beggar-who-corrects-a-woman-every-night.html

இதுதான் 'ஐ' படத்தோட கதையாம்!
http://goo.gl/CnXMrQ

மீண்டும் சாதித்தது சியோமி !!3.4 விநாடிகளில் 40,000 மொபைல்களை விற்றது ..
http://www.satrumun.net/2014/09/xiamoi-mobile-sells-40000-units-in-3.4-seconds.html

மரியா ஷரபோவாவுக்கு காதல் தோல்வி
http://www.satrumun.net/2014/09/sharapova-love-breaks-up.html

சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ், இன்று முதல் ஆரம்பம்
http://www.satrumun.net/2014/09/chennai-super-kings-vs-kolkata-knight.html

கூகுளின் ஆண்ட்ராய்ட் ஒன் மொபைல் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !!
http://www.satrumun.net/2014/09/things-you-must-know-about-android-one.html

இந்திய பெண் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிம்னாஸ்டிக் வீரர் மற்றும் அவரது பயிற்சியாளர் !!
http://www.satrumun.net/2014/09/indian-coach-and-player-accused-of-sexual-harrasment.html

தமிழின் தொன்மையும், சிறப்பும்
http://www.satrumun.net/2014/09/blog-post_496.html

நினைவு கூர்வோம் பெரியாரை, பெரியார் கடந்து வந்த பாதைகள்
http://www.satrumun.net/2014/09/blog-post_28.html

மோடி தனது பிறந்த நாளை இன்று எப்படி கொண்டாடினார் தெரியுமா?
http://www.satrumun.net/2014/09/how-modi-celebrated-his-birthday-today.html

சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட புதிய விருத‌
http://www.satrumun.net/2014/09/next-big-award-for-sachin-tendulkar.html

உலகின் மிக சிறிய புத்தகத்தை மனிதனின் உடம்பில் எங்கு வைக்கலாம் தெரியுமா? ஆச்சரியம்!
http://www.satrumun.net/2014/09/worlds-smallest-book.html

தாய்லாந்தில் 2ம் நூற்றாண்டிலேயே தமிழ், ஆதாரங்கள் கிடைத்தன‌
http://www.satrumun.net/2014/09/blog-post_81.html

தமிழ் இலக்கியங்களில் ஓசோன்
http://www.satrumun.net/2014/09/blog-post_80.html

வ. உ .சி, யின் தமிழ் பற்று
http://www.satrumun.net/2014/09/blog-post_413.html

சொல்வளம் : தமிழ் மொழி வளம்
http://www.satrumun.net/2014/09/blog-post_55.html

உலகில் டாப் 200 பல்கலைக்கழகங்களில் , இந்தியாவில் இருந்து ஒன்று கூட இடம் பெறவில்லை !!
http://www.satrumun.net/2014/09/no-indian-universities-top-200-list.html

பெண்கள் செக்ஸ் உறவு கொள்ள விரும்பும் டாப் 10 நேரங்கள் (Situations)


10. கிரியேட்டிவ் ஆக இருக்கும் போது
உங்கள் மனைவி மகிழ்ச்சியாக கிரியேட்டிவ் ஆக சமையலறையிலோ, பெயிண்டிங்கோ, அழகுபடுத்தலோ செய்திருந்தால் மறந்துவிடாதீர்கள், உங்களுக்கு ஒரு நல்ல செக்ஸ் உறவு அமையலாம்.

9. நீண்ட நாட்கள் பெண்கள் தனிமையில் இருந்திருந்தால் விரும்பும் ஆணுடன் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்களாம்

8. நீண்ட நாள் நெருக்கமான நட்பில் இருந்து செக்ஸ் உறவு கொள்ளாமல் இருந்தால் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்களாம்

7. பெரும்பாலான பெண்கள் ப்ளூபிலிம் படம் பார்த்தால் அவர்களுக்கு செக்ஸ் உறவு கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள், அதே சமயம் இலை மறை காயாக திரைப்படங்களில் வரும் செக்ஸ் காட்சிகளை காணும் போது செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்கள்

6. மகிழ்ச்சியாக பார்ட்டிகளில் கலந்து கொண்டு துணையுடன் நடனமாடும் போது செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்கள்.

5. மாதவிலக்கிற்கு பின் 14 நாட்கள் கழித்து பெண்களுக்கு செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்கள், ஏனெனில் அந்நேரம் தான் கரு உருவாக ஏதுவான நாள் என்பதால் உடலே செக்ஸ் உறவுக்கு தூண்டுகிறது.

4. பொறாமை, ஆச்சரியமாக உள்ளாதா? ஆம் வேறு பெண்கள் தங்கள் கணவனையோ காதலனையோ நெருங்க முயலும் போதும் கணவனோ காதலனோ வேறு பெண்கள் மீது விருப்பம் காட்டும் போதோ பெண்கள் ஆண்களுடன் செக்ஸ் உறவு கொள்ள விரும்புகிறார்கள், தங்கள் கணவனிடம் நீ என்னுடன் தான் இருக்கிறாய் என்று நிரூபிக்க செய்ய முயலும் செயல் இது.

3. மன அழுத்தத்தில் பெண்கள் இருக்கும் போது ஆண்களுடன் செக்ஸ் உறவு கொள்ள விரும்புகிறார்கள், செக்ஸ் உறவு கொண்டால் மன அழுத்தம் குறைவதாக பெண்கள் நம்புகிறார்கள்

2.மகிழ்ச்சியான தருணங்களில், பிறந்த நாள், வேலையில் சில வெற்றிகளை ஈட்டும் நாளில், கர்ப்பம் அடைந்ததை கேட்ட நாள் போன்ற மகிழ்ச்சியான தருணங்களில் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்கள்

1. நீண்ட சண்டைக்கு பிறகு, கணவருடன் நீண்ட விவாதங்கள், சண்டைக்கு பிறகு பெண்கள் செக்ஸ் உறவு கொள்ளா விரும்புகிறார்கள்.

சச்சினை யார் என்று தெரியாது என்று சொன்ன மரியா ஷரபோவாவுக்கு காதல் தோல்வி





ரஷியாவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவை பலருக்கும் தெரியும். இவர் டென்னிஸ் ஆடும் திறமையை விட இவரது அழகுக்கு இருக்கும் ரசிகர்கள் அதிகம். இவர் தனது அழகின் மூலம் பிரபலமானவர். சச்சினை யார் என்றே தெரியாது என்று சொன்னதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர்.

இவர் பல்கோரியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் டிமிட்ரோவை காதலித்து வந்தார். இவரும் டென்னிஸ் வீரர் என்பதால் இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. டிமிட்ரோவ் ஷரபோவாவை விட 4 வயது இளையவர். ஆனால் அது அவர்களுக்குள் பெரிய பிரச்சனையாக இல்லை. கடந்த 2012 ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்தார்கள். ஷரபோவா போட்டியின் போது டிமிட்ரோவ் வருவார், டிமிட்ரோவ் போட்டியின் போது ஷரபோவா சென்று பார்ப்பார். இருவரும் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோடி சேர்ந்து ஆட போவதாகவும் செய்திகள் வந்தன.

இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிய போவதாக செய்திகள் வந்துள்ளது. இருவரும் தங்கள் விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவதற்காக பிரிய போவதாக செய்திகள் வந்துள்ளது. இது குறித்து அவர்கள் இருவரிடமும் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

தமிழின் தொன்மையும், சிறப்பும்


உலகில் முதல், முதல் மக்கள் தோன்றிய நாடு தமிழகமும், அதனையடுத்திருந்த கடல் கொண்ட தென்னாடுமே என நில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காவிரிப்பூம்பட்டிணத்தில் நிலத்து நின்று வாழும் தமிழ் மக்களை "பதியெழ அறியாப் பழங்குடியினர்" என இளங்கோவடிகள் கூறுகிறார், இதற்கு உரை கூற வந்த அடியார்க்கு நல்லார்
 
"படைப்புக் காலந்தொட்டே வாழுங் குடியினர்" எனக் கூறியிருக்கிறார்.

தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது

"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியினர்"

என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார். இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தையக மக்கள் பேசிய மொழியே தமிழ் மொழியாகும்.

தமிழ் மொழியின் காலத்தை எவரும் கணித்துக் கூறுவதற்கில்லை, ஏனெனில் அது ஓரு காலங்கடந்த மொழி, அதற்கு வரலாறு இல்லை. எனவே அதன் தொன்மையை ஆராய்ந்து கூறுவதற்கில்லை. எனினும் காவியமும், ஓவியமும், காவிரியும், வைகையும், கட்டிடமும், சிற்பமும், கல்வெட்டும், புதை பொருட்களும் ஓருவாறு தமிழ் மொழியின் தொன்மையை உலகிற்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

மோடி தனது பிறந்த நாளை இன்று எப்படி கொண்டாடினார்




இந்திய பிரதமர் மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள் . இன்று காலை முதல் வேலையாக அவர் தனது தாயை காந்திநகரில் சந்தித்து ஆசி பெற்றார். மோடி வழக்கம் போல் அவருக்கு பிடித்த குர்தா ஆடையை அணிந்து இருந்தார். தனது தாயின் பாதங்களை தொட்டு ஆசிர்வாதம் வாங்கி கொண்டார். இருவரும் 15 நிமிடங்கள் பேசி கொண்டார்கள். மோடி செல்லும் போது அவரது தாய் ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக 5 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

அகமதாபாத்தில் இருந்து காந்திநகருக்கு மோடி எந்த பாதுகாப்பும் இல்லாமல் வந்தார். பிரதமர் ஆன பிறகு அவர் முதல் முறையாக குஜராத்துக்கு வருகிறார். அதன் பிறகு தொலைபேசி மூலம் அவருக்கு பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். சமர்மதி ஆஷ்ரம் அருகே இரவு விருந்து நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ள சீன அதிபர் ஜீ ஜின்பிங் கலந்து கொள்கிறார். இதில் குஜராத்தி உணவு பரிமாறப்பட உள்ளது.

நினைவு கூர்வோம்

பல நூற்றாண்டு கால வரலாற்றை வெறும் இருபது வருடங்களில் நிகழ்த்திக்காட்டிய வரலாற்றுத் தேடல், மனிதகுல வரலாற்றில் தன் மக்களின் விடியலுக்காகப் போராடிய மாபெரும் வீரர், இந்திய விடுதலையில் பங்காற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராயிருந்து, மதுவிலக்குக் கொள்கைகளை காந்திக்கு எடுத்துரைத்து, சுயமரியாதை இயக்கம் கட்டமைத்து, சீர்திருத்த திருமணம் என்ற ஒரு புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை சட்டமாக்கி, தன் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வகைசெய்த பகுத்தறிவு பகலவன், திராவிடம் என்கிற பல நூற்றாண்டு கால வரலாற்றின் ‘வெற்றி நாயகன்’என இன்னும் சொல்லிக்கொண்டே போகக்கூடிய அரும்பணியை ஆற்றிய மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’ என்றால் அது மிகையாகாது.

பெரியார் கடந்து வந்த காலவரிசை:
1879 – செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார். பெற்றோர்: சின்னத்தாயம்மை-வெங்கட்ட நாயக்கர்
1885 – திண்ணைப்பள்ளியில் சேர்ந்தார்.
1891 – பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார்
1892 – வாணிபத்தில் ஈடுபட்டார்
1898 – நாகம்மையாரை (அகவை-13) மணந்தார்.
1902 – கலப்புத்திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமயத்தினர், சாதியினருடன் சேர்ந்து விருந்துண்டார்.
1904 – ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார். (அக்குழந்தை ஐந்தாம் மாதத்தில் இறந்தது. பின்னர் குழந்தையே இல்லை.)
1904 – காசிக்கு சென்று ஒரு நாத்திகவாதியாக திரும்பினார்.
1907 – பேராய இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோட்டில் கக்கல் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து மீட்புப்பணியாற்றினார்.
1909 – எதிர்ப்புக்கிடையில் தங்கையின் மகளுக்கு கைம்மைத் திருமணம் செய்துவைத்தார்.
1919 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
1922 – மெட்ராஸ் ப்ரிசிடென்ஸி காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.
1925 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
1924 – வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.
1925 – காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.
1929 – ஐரோப்பா, ரஷ்யா, மற்றும் மலேஷியா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயணம்.
1929 – தன்னுடைய பேருக்கு பின்னால் இருந்த ‘நாயக்கர்’ என்ற பட்டத்தைத் துறந்தார்.
1933 – பெரியாரின் துணைவியாராகிய நாகம்மையார் மரணம்.
1938 – தமிழர்கள் வாழும் நாடு தமிழர்கே என முழங்கினார். நவம்பர் 13 ஆம் தேதி 1938ல் 5000க்கு மேற்ப்பட்ட பெண்கள் கலந்துகொண்ட தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டிலிலேயே "பெரியார்" என்ற பெயரால் அழைக்கப்படார். (குடி அரசு இதழில் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று தான் 18.12.1927 வரை குறிக்கப்பட்டு இருந்தது. 25.12.1927 குடிஅரசு இதழ் முதல் நாயக்கர் பட்டம் வெட்டப்பட்டது)
1939 – நீதி கட்சி தலைவரானார்.
1944 – நீதி கட்சியின் பெயர் ‘திராவிட கழகம்’ என மாற்றப்பட்டது.
1948 – ஜூலை 9, ஆம் தேதி பெரியார் மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டார்.
1949 – பெரியார் மற்றும் கா.ந.அண்ணாதுரையிடையே பிளவு ஏற்பட்டு ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டது.
1973 – பெரியார் டிசம்பர் 24 ஆம் தேதி, தனது 94 வது வயதில் காலமானார்.

நினைவகங்கள்: தமிழக அரசு பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. இங்கு தந்தை பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் தந்தைபெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தந்தை பெரியார் அவர்களின் உட்கார்ந்த நிலையிலான நான்கு அடி உயர திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் உள்ளது. நூல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கருக்கு புதிய விருது வழங்கப்பட்டுள்ளது




செப்டம்பர் 17 ,  1972 ஆம் ஆண்டு ஜியண்ட்ஸ் இன்டெர்னேஷனல் என்னும் அமைப்பு நானா சுதாசமாவால் தொடங்கப்பட்டது.  நமது சமூகத்தில் நல்லது செய்வதற்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. 35 ஆண்டுகளாக மக்களுக்காகவே உழைத்து வருகிறார்கள். சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படும் போது மக்களை காப்பாற்றுவதில் இவர்கள் பங்கு மிக முக்கியமானது ஆகும். பெண் குழந்தைகளை காப்பாற்றுவது, சுற்றுசூழலை பாதுகாப்பது முதலியவற்றிலும் இவர்கள் சிறப்பு பணியாற்றி வருகிறார்கள்.

இந்த அமைப்பு இந்தியாவில் 600 கிளைகளையும், அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் போன்ற நாடுகளிளும் தனது கிளைகளை கொண்டுள்ளது. இந்த அமைப்பு சமுதாயத்தில் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் நபருக்கு விருது வழங்கி வருகிறது. அதன்படி விளையாட்டு துறையில் சிறந்த விளங்கியதற்காக சச்சின் டெண்டுல்கருக்கு விருது வழங்க உள்ளார்கள். இந்த விருதை பாஜக வின் தலைவர் அமித் ஷா வழங்க உள்ளார்.

தினமும் ஒரு பெண்ணை கரெக்ட் செய்து அவரது வீட்டில் தங்கும் வீடில்லாத ஏழை !!



நியுயார்க்கின் தெரு ஓரங்களில் வசித்து வருபவர் 26 வயதான ஜோ . இவர் வீடு இல்லாமல் எந்த வேலைக்கு போகாமல் இருந்தாலும் , அவரது தோற்றத்தை வைத்து பார்த்தால் அவரை ஏழை என்று கூற முடியாது . மிக அழகான தோற்றம் கொண்ட அவர் , முடியை நன்றாக சீவி இருந்தார் . அவர் தினமும் தங்குவதற்கு தினமும் ஒரு பெண்ணை கரெக்ட் செய்து அவரது வீட்டிற்கு சென்று விடுவாராம் .

அவரிடம் மொத்தமே 4 ஆடைகள் தான் இருக்கிறதாம் . இரவில் பெண்களுடன் இருக்கும் அவர் , காலையில் முடிந்த அளவு இலவச பொருட்களை தேடி அழைவாராம் . பெரிய மால்களுக்கு சென்று ஹேர் ஜெல் போன்றவற்றை முயற்சி செய்து பார்ப்பது போல நன்றாக உபயோகித்து விட்டு வெளியே வந்து விடுவார் . மற்ற நேரம் பிச்சை எடுப்பாராம் .

பெண்களிடம் யாராக இருந்தாலும் தைரியமாக சென்று ஐ லவ் யு என்று கூறி அவருடன் அந்த இரவை கழித்து விடுவாராம் . பல நேரங்களில் இது அவருக்கு கை கொடுக்கும் அல்லது அவரை வம்பில் மாட்ட வைத்து விடும் . இது குறித்து அவர் தெரிவிக்கையில் , " இந்த நகரத்தில் எட்டு மில்லியன் மக்கள் இருக்கின்றனர் . எனவே நான் நினைக்கும் போதெல்லாம் ஒரு பெண்ணுடன் இருப்பேன் " என்றார் .


அவருக்கு போதை பழக்கம் இருக்கிறது . இந்த பழக்கத்தால் தான் அவரது அம்மா அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார் . ஆனால் இதை யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று அவரே கூறியுள்ளார் . 

மோடிக்கு பிடித்தமான 5 உணவுகள்

* கிலி ஹுய் கிச்சடி



* தோக்லா




* கந்வி



* மாங்காய் பச்சடி



* பாதாம்-பிஸ்தா ஐஸ்கீரிம்


உலகின் மிக சிறிய புத்தகத்தை மனிதனின் முடிக்குள் வைத்து விடலாம் !!



கனடாவில் உள்ள இரண்டு சகோதரர்கள் உலகின் மிக சிறிய புத்தகத்தை உருவாக்கியுள்ளனர் . இந்த புத்தகத்தை வாசிக்க மைக்ரோஸ்கோப் தேவை . இந்த புத்தகத்தின் பெயர் டென்னி டெட் பிரம் டர்னிப் டவுன் . இந்த புத்தகத்தை ஒரு முடிக்குள் அடைத்து வைத்து விடலாம் .


இந்த புத்தகத்தை தயாரிக்க அவர்கள் 15,000 டாலர்கள் செலவு செய்துள்ளனர் . இந்த புத்தகத்தை அவர்கள் துய்மையான கிரிஸ்டலின் சில்லிகானால் உருவாக்கி உள்ளனர் .

இந்த புத்தகத்தை எழுதியவர் மால்கம் டக்லஸ் சாப்ளின் . இதனை வெளியிட்டவர் இவரின் சகோதரர் ராபர்ட் . இந்த புத்தகம் கின்னஸ் சாதனைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது . பட்டியலில் இடம் பெற்ற பின்னர் ராபர்ட் தனது சகோதரனின் புத்தகத்தை பெரிய அளவில் வெளியிட நன்கொடை திரட்டி , அந்த புத்தகத்தை வெளியிட்டார் .

தாய்லாந்தில் தமிழ்

 தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழி எழுத்து படிந்த மட்பாண்டம். தாய்லாந்து(தாய்) மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்.. தாய்லாந்து நம் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது, அக்காலத்தில் தமிழ் மொழியில் இருந்து பலச் சொற்கள் தாய்லாந்து மொழிக்குத் தருவிக்கப்பட்டன. தாய்லாந்து மொழி தமிழ் மொழியின் துணையோடு தான் வளர்ச்சிக் கண்டிருக்கக் கூடும்.

அதில் சிலச் சொற்கள் பின்வருமாறு,
-------------------------------------------------
1. தங்கம் -> தொங்கம்
2. கப்பல் -> கம்பன்
3. மாலை -> மாலே
4. கிராம்பு -> கிலாம்பு
5. கிண்டி -> கெண்டி
6. அப்பா -> பா
7. தாத்தா -> தா
8. அம்மா -> மே, தான்தா
9. பட்டணம் -> பட்டோம்
10. ஆசிரியர் -> ஆசான்
11. பாட்டன் -> பா, புட்டன்
12. திருப்பாவை -> திரிபவாய்
13. வீதி -> வீதி
14. மூக்கு -> சாமுக்
15. நெற்றி -> நெத்தர்
16. கை -> கை
17. கால் -> கா
18. பால் -> பன்
19. கங்கை -> கோங்கா
20. தொலைபேசி -> தொரசாப்
21. தொலைக்காட்சி -> தொரதாட்
22. குலம் -> குல்
23. நங்கை -> நங்
24. துவரை -> துவா
25. சிற்பம் -> சில்பா
26. நாழிகை -> நாளிகா
27. வானரம் -> வானரா
28. வேளை -> வேளா
29. மல்லி -> மல்லி
30. நெய் -> நெய்யி
31. கருணை -> கருணா
32. விநாடி -> விநாடி
33. பேய்/பிசாசு -> பிச/பிசாத்
34. கணம் -> கணா
35. விதி -> விதி
36. போய் -> பாய்
37. சந்திரன் -> சாந்
38. ரோகம் -> ரூகி
39. தூக்கு -> தூக்
40. மாங்காய் -> மாங்க்
41. மேகம் -> மேக்,மீக்
42. பிரான், -> எம்பிரான் பிரா
43. யோனி -> யூனி
44. சிந்தனை -> சிந்தனக்கம், சிந்தனா
45. சங்கு -> சான்க்
46. தானம் -> தார்ன்
47. பிரேதம் -> பிரீதி
48. நகரம் -> நகான்
49. பார்வை -> பார்வே
50. ஆதித்தன் -> ஆதித்
51. உலகம் -> லூகா
52. மரியாதை -> மார-யார்ட்
53. தாது -> தாட்
54. உலோகம் -> லூகா
55. குரோதம் -> குரோதீ
56. சாமி -> சாமி
57. பார்யாள் -> பார்ய
58. திருவெம்பாவை -> த்ரீயம்பவாய

தமிழ் இலக்கியங்களில் ஓசோன்

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழ் இலக்கியங்களில் ஓசோன் . தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.


புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றாக


ட்ரோபோஸ்பியர்
(troposphere)
ஸ்ட்ரோட்ஸ்பியர்
(stratosphere)
மீஸோஸ்பியர் (mesosphere)
தெர்மாஸ்பியர்
(thermosphere)
எக்ஸோஸ்பியர் (exosphere)
நத்திங்னஸ் (nothingness)
 
என அவை அமைந்துள்ளன.இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது ட்ரோபோஸ்பியர். இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான். ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி இங்கு தான் இருக்கிறது. இன்றைக்கு ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன.


"இருமுந்நீர்க் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய
ஆகாயமும்." (புறநா - 20)

என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.

"செஞ்ஞாயிற்றுச்
செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
சூழ்ந்த மண்டிலமும்
வளிதரு திசையும்
வறிதுநிலை காயமும்." (புறநா -
30)
என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

"மயங்கிருங் கருவிய
விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர்
கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்."
                                                            (புறநா -365)
 
என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றுள் "திசை" என்னும் பகுதியில் காற்று இருக்கும். "ஆகாயம்", "நீத்தம்" என்னும் பகுதிகளில் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. "நீத்தம்" என்பது இன்றைய அறிவியலார் கூறும் "வெறுமை" (நத்திங்னஸ்) என்னும் பகுதி. புவிக்கு மேல் இருக்கின்றஇரண்டாவது பகுதியான "ஸ்ட்ரோட்ஸ்பியர்" என்னும் பகுதியில் தான் "ஓசோன்" எனப்படும் காற்றுப்படலம் அமைந்துள்ளது.

இப்படலம் கதிரவனிடம் இருந்து வரும் கடும் வெப்பத்தை, தான் தாங்கிக்கொண்டு புவியில் உள்ள உயிர்கள் துன்பம் உறாமல் காத்துவருகிறது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓசோன் படலத்தைப் பற்றி 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது வியப்பை அளிக்கிறது அல்லவா?

"நிலமிசை வாழ்வர் அலமரல்
தீர
தெறுகதிர்
வெம்மை கனலி தாங்கி
காலுண வாக
சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும்
மருள." (புறநா - 43)
 
என்னும் பாடல் வரிகளின் கருத்து, "புவியில் வாழும் மக்களின் துன்பம் தீர கதிரவனின் வெப்பம் மிக்க கனலைத் தாங்கிக்கொண்டு கதிரவனோடு சேர்ந்து சுழல்கின்ற முனிவர்கள்" என்பதாகும். மேலும், முருகக் கடவுளின் ஒரு கை,

"விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது"
 
என்று திருமுருகாற்றுப்படை (107) யிலும்,

"சுடரொடு திரிதரும் முனிவரும், அமரரும் இடர்கெட அருளி நின்
இணையடி தொழுதோம்"
 
 என சிலப்பதிகாரத்திலும் (வேட்டுவ வரி - 18) இக்கருத்து கூறப்பட்டுள்ளது

 
 முனிவர்கள் என்று கூறப்பட்டதாலேயே , மற்ற மதத்தினரும்  பகுத்தறிவு  வாதிகளும் இது அறிவியல் கருத்தன்று; கற்பகமரம், காமதேனு போன்ற கற்பனைகளுள் ஒன்று தான் என்று சொல்லக் கூடும். முனிவர்கள் என்றாலும் சரி அல்லது பிறவற்றைச் சுட்டினாலும் சரி அது ஒரு பொருட்டன்று. கதிரவனின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஒரு சக்தியைப் பற்றித் தமிழர்கள் (சங்கப் புலவர்கள்) சிந்தித்திருக்கிறார்கள் என்னும் செய்தி நாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டோம் என்று நினைக்கும் போது, இந்த செந்தமிழ்நாட்டில் பிறந்ததை எண்ணி நாம் பெருமை கொள்ளவேண்டும்.அப்படிப்பட்ட நம் தமிழ் மொழியை உலகெங்கும் பரவ வழிவகை செய்ய ஒவ்வொரு தமிழனும் உறுதி ஏற்கவேண்டும் .

வ. உ .சி, யின் தமிழ் பற்று

கப்பலோட்டிய தமிழன் எனப் புகழப்படும் வ.உ.சி எனும் பெருந்தகை கூர்த்த மதி நிறைந்த வழக்குரைஞர்  ( இவர் தந்தையும் கூட வழக்கறிஞரே.. ) மட்டுமல்ல , மிகச் சிறந்த தமிழ் அறிஞருமாவார் என நான் முன்னர் சொல்லியிருந்தேன். அன்னார் எல்லாம் என்றும் தமிழுலகு முழுவதற்கும் சொந்தம் ஆனால் , இப்பேரறிவாளனை இன்று ஒரு சாதித் தலைவராகக்  குறுக்க முயற்சிப்பதில் என் ஆதங்கத்தையும் அப்போது வெளியிட்டிருந்தேன் ;
பின்னர் , அதை நான் நீக்கி விட்டபோது நீங்கள் அதெல்லாம் இருக்கட்டுமே என்று அபயம் அளித்ததால் இங்கு மீண்டும்...

நிற்க...

வ.உ.சி அவர்கள் தமிழ் மறையாம் திருக்குறள் மீது எவ்வளவு பற்று கொண்டிருந்தார்கள் என்பதை கீழே அவர் சொல்லியவை நம் மனதில் நிறுத்தும். வ.உ.சிதம்பரனார் ( 1872 - 1936 ) 'வ.உ.சி.கட்டுரைகள்' எனும் நூலில் , " பாயிர ஆராய்ச்சி " எனும் கட்டுரையிலிருந்து...

தமிழறிகளெல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும்.  1330 - குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றத் துறந்த முனிவரேயாயினும்,

என்னைப் பெற்ற தந்தயே யாயினும், யான் பெற்ற மக்களேயாயினும்,
யான் அவரைப் பூர்த்தியாய் மதிப்பதுமில்லை ; நேசிப்பதுமில்லை. "

வேறொரு இடத்தில் அவர் எழுதுகிறார்...

"ஆரியமே ஏற்றமெனும் அன்பருயர் வள்ளுவரின்
ஓரியலே கற்றாலும் ஓதாராஞ் - சீரடியில்
நூற்பொருளும் வள்ளுவர்போல் நன்குரைக்கும் நூல் ஒன்றங்
கேற்படநாம் கண்டதுண்டோ இன்று "

இப்பாடல் , வ.உ.சி யின் முதல் அரசியல் கட்டுரையான ' சுதேசாபிமானம்'
மதுரை ' விவேகபானு' எனும் திங்கள் இதழில் 1906- பிப்ரவரியில் ஏழு பக்கங்களில் வெளி வந்தது .

சொல்வளம் : தமிழ் மொழி

ஆங்கிலத்தில் வார்த்தையே இல்ல என்பதற்கு இதுவே ஆதாரம் .

அப்பா -Father
அம்மா -Mother

சகோதரன் -Brother
சகோதரி -Sister
இளைய சகோதரன் -Younger
Brother
மூத்த சகோதரன் -Elder Brother
இளைய சகோதரி -Younger Sister
மூத்த சகோதரி -Elder Sister

அண்ணன் -?
தம்பி -?
அக்கா -?
தங்கை -?

மாமா -Uncle
மாமி -Aunty

அத்தான் -?
அத்தை -?

சித்தப்பா -?
சித்தி -?
பெரியப்பா -?
பெரியம்மா -?

உலகிலேயே சொல்வளமும், பொருள்வளமும் மிக்க மொழி நம் தமிழ் மட்டும் தான்

இன்று முக்கியமான நபருக்கு பிறந்த நாள்





இன்று இந்திய பிரதமர் மோடிக்கு 64 வது பிறந்த நாள் ஆகும். ஒரு சாதாரண டீ கடை தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கி, ஒரு மாநிலத்தின் முதல்வராக உயர்ந்து இன்று 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் பிரதமர் என்னும் உயரிய பதவிக்கு சென்றுள்ளார். இவை எல்லாத்துக்கும் முக்கிய காரணம் மக்கள் அவர் மீது வைத்து உள்ள அதீத நம்பிக்கை. மோடி ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே இனி மோடியின் ஒவ்வொரு நடவடிக்கையும் உண்னிப்பாக கவனிக்கப்படும். அவர் மீது என்ன தவறு சொல்லலாம் என்று பலரும் நினைத்து வருகிறார்கள். இதையெல்லாம் தாண்டி அவர் மக்களுக்கு செய்வதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் மோடி அதற்காக சரியாக திட்டமிட்ட செயல்பட வேண்டும்.

நமது சற்றுமுன் செய்திகள் சார்பில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ், இன்று முதல் ஆரம்பம்





ஒவ்வொரு வருடமும் ஐ.பி.எல். முடிந்த சில மாதங்கள் கழித்து சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்  தொடங்கும். இதில் ஐ.பி.எல். போட்டியில் முன்னணி இடங்களை பெற்ற அணீகளும் மற்றும் ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை மற்றும் நியுசிலாந்து நாடுகளை சேர்ந்த உள்ளூர் அணீகள் இதில் கலந்து கொள்ளும். மொத்தம் பத்து அணிகள் பங்கேற்கும். அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் போட்டிகள் தொடங்குகின்றன. இவை அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பிரிவு ஏ :

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா), பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (ஆஸ்திரேலியா), டால்பின்ஸ்(தென்ஆப்பிரிக்கா)

பிரிவு பி :

கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இந்தியா), ஹோபர்ட் ஹரிகேன்ஸ் (ஆஸ்திரேலியா), கேப் கோப்ராஸ் (தென்ஆப்பிரிக்கா), பார்படோஸ் டிரைடென்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்)

மீதி 2 அணிகள் தகுதி சுற்றுகள் மூலம் உள்ளே வரும். இன்று நடக்கும் முதல் போட்டியில் ஐபில் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்  மோதுகின்றன.

கூகுளின் ஆண்ட்ராய்ட் ஒன் மொபைல் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !!



கூகுள் தன்னுடைய ஹார்ட்வேர் பார்ட்னர்களுடன் இணைந்து மூன்று ஆண்ட்ராய்ட் ஒன் மொபைல்களை வெளியிட்டது . இந்த மொபைலை வெளியிட கூகுளின் சுந்தரம் பிச்சை டில்லி வந்து இருந்தார் . மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஆண்ட்ராய்ட் ஒன் மொபைல்கள் இருக்கும் என கூகுள் நிறுவனம் அறிவித்து இருந்தது . அந்த ஆண்ட்ராய்ட் ஒன் மொபைல் குறித்து நீங்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ :

1 ) விலை குறைவு .

வெளிவந்துள்ள மூன்று மொபைல்களும் விலை குறைவாகவே உள்ளது .

ஸ்பைஸ் ஆண்ட்ராய்ட் ஒன் டிரிம் யுனோ - ரூ. 6,299
கார்பன் ஸ்பார்கல் வி                                           - ரூ. 6,399
மைக்ரோமேஸ் கேன்வாஸ் ஏ1                       -  ரூ. 6,499

2 ) ஆன்லைன் மற்றும் ஆப்லைனிலும் வாங்கலாம் .

இப்போது வெளிவருகிற மொபைல்கள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே வாங்க முடியும் . ஆனால் ஆண்ட்ராய்ட் ஒன் மொபைல்களை நீங்கள் இரண்டிலும் பெற முடியும் . ஸ்பைஸ் ஆண்ட்ராய்ட் ஒன் டிரிம் யுனோ மொபைலை பிளிப்கார்டிலும் , கார்பன் ஸ்பார்கல் வி மொபைலை ஸ்னாப்டிலிலும் , மைக்ரோமேஸ் கேன்வாஸ் ஏ1   மொபைலை அமேசான் இணையதளத்திலும் வாங்கலாம் .

3 ) மொபைல் அப்டேட்கள் :

இந்த மொபைலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் அப்டேட்கள் அனைத்தும் கூகுள் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக வரும் . எனவே அடிக்கடி அப்டேட்களை எதிர்பார்க்கலாம் .

4 ) கூகுள் நகரும் ஷோரூம்கள் :

கூகுள் 20 நகரங்களின் 600 இடங்களில் வைபி வசதியுடன் கூடிய நகரும் ஷோ ரூம்களை அமைக்க உள்ளனர் . மேலும் இந்த மொபைலின் ஆலோசகர்களாக 30,000 பேரை கூகுள் நியமித்துள்ளது .

5 ) இந்தியாவிற்கு தான் முதல் ஆண்ட்ராய்ட் ஒன்  !!

கூகுள் நிறுவனம் இந்தியாவில் தான் தனது முதல் ஆண்ட்ராய்ட் ஒன்  மொபைலை வெளியிட்டுள்ளது . இந்த வருட முடிவிற்குள் இந்தோனேஷியா , பிலிப்பைன்ஸ் உள்ளீட்ட இடங்களில் இந்த மொபைலை வெளியிட திட்டமிட்டுள்ளனர் .

பெண் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிம்னாஸ்டிக் வீரர் மற்றும் அவரது பயிற்சியாளர் !!



இந்திய சார்பாக ஆசியாப் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக்கில் பங்குபெற இருந்த வீரர் மீது பெண் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவர் பூகார் கொடுத்துள்ளார் . அந்த வீரர் மற்றும் அவரது பயிற்சியாளர் இந்திரா காந்தி உள்ளூர் மைதானத்தில் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக பூகார் அளித்துள்ளார் .

மனோஜ் ரானா ( பயிற்சியாளர் ) மற்றும் சந்தன் பதக் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . அவர்கள் இருவரும் நேற்று இரவு ஆசியாப் போட்டிகளில் கலந்து கொள்ள இன்சியான் செல்ல இருந்தனர் .

பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட அந்த வீராங்கனை இந்திய அணியில் இல்லை . அவர் குற்றவாளிகள் தன்னை மிகவும் பயமுறுத்தியதாகவும் , ஜிம்னாஸ்டிக் ஆணையம் தன்னுடைய பூகாரை இரண்டு வாரங்கள் தட்டிக் கழித்து வந்ததாகவும் பூகார் அளித்துள்ளார் . இந்த சம்பவம் செப்டம்பர் 2 ஆம் தேதி நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

உலகில் டாப் 200 பல்கலைக்கழகங்களில் , இந்தியாவில் இருந்து ஒன்று கூட இடம் பெறவில்லை !!



கியு.எஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட உலகின் டாப் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து ஒரு பல்கலைக்கழகம் கூட முதல் 200 இடங்களில் இடம்பெறவில்லை . ஐ.ஐ.டி பாம்பே 222 ஆம் இடம் பிடித்தது . ஐ.ஐ.டி டில்லி 235 ஆம் இடம் பிடித்து இருந்தது .

முதல் பத்து இடங்களில் அமெரிக்க மற்றும் இங்கிலாந்தில் இருக்கும் கல்லூரிகளே இடம் பெற்றிருந்தன . ஆசியா சார்பாக நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர் 22 ஆம் இடம் பெற்று இருந்தது .

மசாசுசட்ஸ் இன்ஸ்டிடுயுட் ஆப் டெக்னாலஜி தொடர்ந்து இரண்டாவது வருடமாக முதல் இடம் பிடித்தது . இரண்டாம் இடத்தை கேம்பிரிஜ் மற்றும் இம்பெரியல் பல்கலைக்கழகம் இரண்டும் பகிர்ந்து கொண்டுள்ளது . முதல் ஐந்து இடங்களில் 4 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளது .

டாப் 200 பட்டியலில் 31 நாடுகளில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்று உள்ளது . ஆனால் இந்தியாவில் இருந்து ஒரு பல்கலைக்கழகம் கூட இடம் பெறவில்லை என்பது சோகமான செய்தி .


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media