BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 26 February 2014

மோடியை தரக்குறைவாக விமர்சித்த சல்மான் குர்ஷித், கடும் கோபம் அடைந்த பா.ஜ.க


மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் செவ்வாய்க் கிழமை நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார். "குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு கலவரம் நடந்து கொண்டிருந்தது. யார், யாரோ அப்பாவி மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போது, மோடி அவற்றை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்? மோடியால் கலவரத்தை தடுக்க முடியவில்லை. கலவரத்தை தடுக்காத நரேந்திர மோடி செயல் திறனற்றவர் (impotent)" என்று அவர் கூறியது, பா.ஜ.க.வினரை கடும் கோபமடைய செய்துள்ளது.

"இத்தகைய விமர்சனத்தை நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருப்பவர் முன்வைத்துள்ளது வருந்தத்தக்கது மட்டுமல்ல, வெட்கப்பட வேண்டியதும் கூட. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். இத்தகைய தரக்குறைவான வார்த்தையை சல்மான் குர்ஷித் பயன்படுத்தியிருப்பதை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அனுமதிப்பாரா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

படியில் பயணம் செய்ததை தட்டிக்கேட்டதால், பேருந்து கண்ணாடியை உடைத்து அராஜகம் செய்த கல்லூரி மாணவர்கள், பேருந்திற்குள் இருந்த பயணி ஒருவரின் மேல் கல் பட்டு காயம்



சென்னை திருவொற்றியூரில் இருந்து அண்ணா சதுக்கத்துக்கு செவ்வாய்க்கிழமை காலையில் மாநகர பேருந்து 28எம் புறப்பட்டது.  பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவர்கள் படிக் கட்டில் தொங்கிக் கொண்டும், பேருந்தின் பக்கவாட்டில் தட்டி ஓசை எழுப்பி பாட்டு பாடிக்கொண்டும் வந்தனர். அந்த மாணவர்களை உள்ளே ஏறும்படி நடத்துநர் கண்டித்து இருக்கிறார்.
ஆனால், மாணவர்கள் அவர் பேச்சை கேட்கவில்லை.

வண்ணாரப்பேட்டை பழைய தபால் நிலையம் அருகே பேருந்து வந்தபோது, போக்குவரத்து நெரிசலில் பேருந்து மெதுவாகச் சென்ற போது, படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்தவர்களை உள்ளே வரும்படி மீண்டும் நடத்துநர் கூறினார்.  ஆத்திரம் அடைந்த மாணவர்கள் சிலர் மெதுவாக சென்ற பேருந்தில் இருந்து கீழே குதித்து தரையில் கிடந்த ஒரு கல்லை எடுத்து பேருந்தின் பின்பக்க கண்ணாடியில் எறிந்தனர். இதில் கண்ணாடி உடைந்து விழுந்தது. உடைந்த கண்ணாடி வழியாக பேருந்துக்குள் இருந்த பயணிகள் மீதும் மாணவர்கள் கற்களை எறிந்தனர்.

இதில் பேருந்துக்குள் இருந்த  செல்வி (32) என்பவரின் தலையில் கல் பட்டு ரத்தம் வடிந்தது. வலியில் அவர் துடித்ததை பார்த்து கல்லெறிந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

சென்னையில் 'நமோ நடமாடும் மீன் கடை' திறப்பினால் வியாபாரம் கெடுவதாகக் கூறி பெண்கள் கடும் எதிர்ப்பு


பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பெயரில் ‘நமோ நடமாடும் மீன் கடை’ சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. இங்கு ஒரு கிலோ வஞ்சிரம் (உயிருடன்) மீன் ரூ.500-க்கு விற்கப்படுகிறது. கடைத் திறப்பு விழாவில், கலந்து கொண்டு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்  இல.கணேசன் மீன் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்பொழுது அவர், "நரேந்திரமோடி பிரதமரானதும் மீனவர்களுக்காக தனித்துறை ஏற்படுத்தப்படும். மற்ற கட்சியினர் வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர். பாஜகவால் மட்டும்தான் செயல்படுத்த முடியும். நாங்கள் கடலை தெய்வமாகக் கருதுகிறோம். கடல் மீது சத்தியம் செய்து சொல்கிறேன், பாஜக ஆட்சிக்கு வந்தால், மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். " என்று அவர் கூறினார்.

 நமோ நடமாடும் மீன் கடையில் விற்பனை நடந்தபோது, பட்டினப்பாக்கம் கடற்கரையில் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்கள் திடீரென விழா நடைபெற்ற இடத்துக்கு வந்து, ‘எங்கள் வியாபாரத்தைக் கெடுக்காதீர்கள்’ என்று பலமாகக் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் சமாதானப்படுத்தினார்.

கோயில் உண்டியல்களில் பணத்தைப் போடுவதைவிட, நியாயமாக வருமான வரி செலுத்துங்கள், அதிக பலன் கிடைக்கும்


வருமான வரித்துறை அலுவலகம் சார்பில், இரண்டு நாள் தேசிய கலை விழா, சென்னையில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நேர்மையாக வரி செலுத்துபவர் என்ற பாராட்டை வருமான வரித்துறையிடமிருந்து பெற்று வருபவர்கள் நடிகர்கள் ரஜினியும் கமலும் ஆவர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியபோது, "கடவுளுக்கு, உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட, வருமான வரி செலுத்தினால், நாட்டு மக்களுக்கு உடனடியாக பயன் கிடைக்கும். நான் நேர்மையாக வரி செலுத்தி வருகிறேன். சிலர், வரிகட்டும் போதும் மட்டும், வீரபாண்டிய கட்டபொம்மன் போல, பேச முயல்கின்றனர். அதற்கு முன் சில விஷயங்களை யோசிக்க வேண்டும். வரியினால், நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களால், பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை நினைத்து பார்த்தால், வரியின் முக்கியத்துவமும், நாட்டு நலத் திட்டங்களுக்கு உதவியதில், வரி செலுத்துவோரின் பங்கும் தெரியும் வரும்,'' என்று தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் சொல்வது 'சபாஷ்' என நீங்கள் நினைத்தால், லைக் போடுங்கள்!

கேலி செய்து, கையைப் பிடித்து இழுத்தபோது செருப்பால் அடித்த உமாவை நாங்கள் பழி தீர்த்தோம், கொலையாளிகள் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம்

மேற்கு வங்கத்தை சேர்த்த கட்டிட தொழிலாளிகள், உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதாகி இருக்கின்றனர். கொலையாளிகள் கொடுத்த வாக்குமூலத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:

நாங்கள் கடந்த ஒரு ஆண்டாக சிறுசேரி சிப்காட் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு தினமும் ரூ.500 கூலி கிடைக்கும். தினமும் இரவு வேலை முடிந்ததும் மது அருந்துவோம். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நாங்கள் போதையில் சிப்காட் வளாகத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தோம். அப்போது நள்ளிரவு நேரம். உமா மகேஸ்வரி ரோட்டில் தனியாக நடந்து வந்துகொண்டிருந்த் போது, அவரை பார்த்ததும் நாங்கள் கிண்டல் செய்து, இந்தி சினிமா பாட்டை பாடி அவரது கையைப்பிடித்து இழுத்தோம். இதில் கோபம் அடைந்த உமா மகேஸ்வரி, எங்களை செருப்பால் அடித்தார். இதை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் பார்த்து கூட்டமாக கூடினார்கள். இதனால் நாங்கள் தப்பி ஓடிவிட்டோம். உமாமகேஸ்வரி, எங்களை தாக்கியது எங்களுக்குள் ஒரு வெறியை உண்டாக்கியது. அவரை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று உறுதி எடுத்தோம். எங்கள் சபதம் நிறைவேறும் விதமாக 13-ந்தேதி அன்று இரவு உமா மகேஸ்வரி தனியாக நடந்து வந்தார். போதை மயக்கத்தில் இருந்த நாங்கள், அவரை அடித்து உதைத்து கீழே தள்ளினோம். பின்னர் அவரது வாயை பொத்தி அலாக்காக குண்டுகட்டாக தூக்கினோம். அருகில் உள்ள புதர் மறைவுக்கு தூக்கிச் சென்றோம். அவர் கூச்சல்போட்டு கத்தி கலாட்டா செய்தார். இதனால் அவரது வாயை பொத்திக்கொண்டும், கை, கால்களை அமுக்கி பிடித்துக்கொண்டும் அவரை பலாத்காரம் செய்தோம். இதனால்,  உமா மகேஸ்வரி மயக்கமானார்.

அடுத்து அவரை அப்படியே விட்டுவிட்டு போவதா, அல்லது கொலை செய்வதா என்று யோசித்தபடி இருந்தோம். இதற்குள் உமா மகேஸ்வரி மயக்கம் தெளிந்து கூச்சல் போட்டார். எங்களது முகத்தில் எச்சில் துப்பினார். அவரை உயிரோடு விட்டால் எங்களை போலீசில் சிக்கவைத்துவிடுவார் என்று பயந்து, நாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது அடிவயிற்றில் குத்தினோம். அவரது உயிர் போகவில்லை. இதனால் கழுத்தை அறுத்தோம். பின்னர் உமா மகேஸ்வரியின் உடலை அங்கேயே போட்டுவிட்டு, தப்பிவிட்டோம்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த கொலையாளிகள், இவ்வாறு தங்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

உமா மகேஸ்வரி கொலை வழக்கில், கொலையாளிகள் பிடிப்பட்டனர்


டிசிஎஸ் நிறுவன பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில், கண்காணிப்பு கேமரா உதவியால், கொலையாளிகளை கைது செய்ததாக சி.பி.சி.ஐ,டி. ஐ.ஜி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

நேற்று உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் கொல்கத்தா விரைந்துள்ளனர்.

பிப்ரவரி 13ம் தேதி இரவு உமா மகேஸ்வரி தனியாக நடந்து வருவதைப் பார்த்த கட்டிட தொழிலாளர்கள் 5 பேர், அவரை புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் உமா மகேஸ்வரி சத்தம் போட்டும் உதவிக்கு யாரும் வர முடியவில்லை. கொலையாளிகள், உமா மகேஸ்வரியின் செல்போன், கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். கொலையாளிகளில் இருவர், கல்பாக்கம் அருகே ஒரு கடையில் பொருட்களை வாங்கிவிட்டு உமா மகேஸ்வரியின் கிரெடிட் கார்டை கொடுத்துள்ளனர். உமா மகேஸ்வரி தனது கிரெடிட் கார்டின் பின்பகுதியில் பின் நம்பரை எழுதி வைத்திருந்தது, அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.

இந்தக் கார்டு எண்ணை ஏற்கெனவே கண்காணித்து வந்த சிபிசிஐடி போலீஸார், உடனடியாக கல்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்து, அந்தக் கடைக்கு அனுப்பினர். அவர்கள் சென்று 2 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர் உத்தம்(23), ராம் மண்டல்(23) என்பது தெரிந்தது. இவர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களின் கூட்டாளிகள் 2 பேர் கொல்கத்தா தப்பிச் சென்றது தெரிந்தது. அவர்களைப் பிடிக்க 4 தனிப்படை போலீஸார் கொல்கத்தா விரைந்துள்ளனர்.

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த முடியாது: ராஜபக்சே அரசு


இலங்கையில் உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது நடந்த ஏராளமான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உலகறிந்தவை. அடுத்த மாதம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இது தொடர்பாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஒரு தீர்மானம் கொண்டு வர உள்ளன. இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமை அமைப்பின் தலைவர் நவிபிள்ளை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:-

இலங்கையில் உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களைப் பொருத்தமட்டில் இலங்கை அரசு தொடர்ந்து உண்மையை அம்பலத்துக்கு கொண்டு வரவும், நீதி வழங்கவும் தவறி வருகிறது. அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறுவது அல்லது பிற காரணங்களை சொல்வது இனியும் ஏற்கத்தக்கதல்ல என்று நம்புகிறோம். அடிப்படையில், அரசியல் தலைமையின் (அதிபர்) விருப்பம்தான் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தப் பிரச்சினையில், சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்படவேண்டும். உள்நாட்டில் நடத்தப்பட்ட விசாரணை தோல்வியுற்ற நிலையில், சர்வதேச விசாரணைதான் புலன்விசாரணையில் புதிய தகவல்களைக் கொண்டு வரும். உண்மையையும் அம்பலப்படுத்தும்.

இதற்கு பதில் அளித்து, ராஜபக்சே அரசு சார்பில், ஜெனீவாவில் அமைந்துள்ள இலங்கையின் நிரந்தர தூதரகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டதாவது:

நவி பிள்ளையின் அறிக்கை, முழு விவரமும் அறியாமல் முன்கூட்டியே புகார் கூறுவதும், அரசியல் ஆக்குவதும், ஒரு சார்பானதும் ஆகும். இலங்கை விவகாரத்தில் அவர் இதைத்தான் பின்பற்றி வருகிறார். எப்படி இருந்தாலும், இலங்கை தன் சுய நல்லிணக்க செயல்பாடுகளை தொடரும். இதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. அந்த அறிக்கையின் முடிவையும், பரிந்துரையையும் இலங்கை அரசு முழுமையாக நிராகரிக்கிறது. அது ஒருதலைப்பட்சமானது. தேவையற்றது. இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் விவகாரத்தில் தலையிடுவதும் ஆகும். அந்த அறிக்கையில், போரினால் கற்ற படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகள் அடிப்படையில் உள்நாட்டு நடவடிக்கைகள், செயல் திட்டங்கள் குறித்து போதுமான தகவல் இல்லை.

இவ்வாறு ராஜபக்சே அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது



 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media