BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 22 June 2014

திமுகவுக்கு இனி வளர்ச்சி என்பதே கிடையாது மு.க.அழகிரி பேட்டி


திமுக தலைமையின் நடவடிக்கைகள் குறித்து இன்று பத்திரிக்கைகளுக்கு மு.க.அழகிரி அளித்த பேட்டியில் திமுக தலைமையின் நடவடிக்கைகள் கட்சியின் அழிவுப்பாதைக்கு வழி வகுப்பதாக உள்ளது. திமுக வுக்கு இனி வளர்ச்சி என்பதே கிடையாது என்றும் கூறினார்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் கட்சியில் தவறு செய்தவர்களா? என்ற கேள்விக்கு கட்சியின் தலைமை ஒரு தரப்பினருக்கு ஆதரவாக, தங்களுக்கு வேண்டாதவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றார்.

 கே.பி.ராமலிங்கம், போஸ் போன்ற உங்கள் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளார்களே? என்ற கேள்விக்கு
மேலும் எனது பிறந்த நாள் விழாவில் எனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களை நீக்குவதும் திருமண விழாவில் சந்தித்தவர்களை நீக்குவதும் கண்மூடித்தனமாக உள்ளது என்றார்.

இந்த நடவடிக்கைகள் எல்லாம்  கேலிக்கூத் தாக உள்ளது. திமுகவின் சமீபகால நடவடிக்கைகள், கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதுபோல் உள்ளது. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் தான் திமுக தோற்றுள்ளது. அதைப் பற்றி தலைமை கண்டுகொள் ளாதது ஏன் என்றார்.

என்ன நடவடிக்கை மூலம் திமுகவை வலுப்படுத்த முடியும் என்ற கேள்விக்கு  திமுகவுக்கு இனி வளர்ச்சி என்பதே இல்லை. அது முடிந்து விட்டது என்றார்.

திமுகவின் தோல்விக்கு காரணமானவர்களான கே.என்.நேரு, பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்,துரை.முருகன் உட்பட பல மாவட்ட செயலாளர்கள் இருக்க அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒன்றிய, நகர செயலாளர்கள் அளவில் நடவடிக்கை எடுத்துள்ளது கட்சித்தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மெஸ்ஸியின் லேட் கோல் ஒருவருக்கு 2லட்சம் யூரோவை காப்பாற்றியுள்ளது !!

அதெப்படி ஒருவரின் ஒரு கோல் இன்னொருவருக்கு பல லட்சம் ரூபாய்களை பெற்று தர முடியும் என எண்ணலாம் ??

உலக கோப்பை போட்டிகளில் பெட் வைப்பது சர்வ சாதரணமாய் நடக்கும் . எல்லா போட்டிகளிலும் இவ்வாறு நடப்பது சாதரணம் என்பதால் நேற்று நடந்த
 அர்ஜெண்டினா ஈரான் போட்டிகளுக்கு பெட்டிங் நடைபெற்றது . லாஸ் வெகாஸில் ஒருவர் அர்ஜெண்டினா அணி ஜெயித்துவிடும் என  2லட்சம் யூரோ பெட் கட்டினார் .

ஆனால் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை . இரண்டாவது பாதியிலும் கோல் போட இயலவில்லை . இறுதியாக எஸ்ட்ரா நிமிடத்தில் 91வது நிமிடத்தில் மெஸ்ஸி சூப்பர் கோல் அடித்து அர்ஜெண்டினா அணியை வெற்றி பெற செய்தார் .

இதனால் பெட் செய்தவருக்கும்  2லட்சம் யூரோ திரும்ப கிடைத்தது !!

கருப்பு பணம் வைத்து இருப்பவர்களின் பட்டியலை தேர்வு செய்தது ஸ்விஸ் வங்கி !!!

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் இருந்து ஸ்விஸ் வங்கியில் பண வைத்துள்ளவர்களின் மதிப்பு 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை நாம் பார்த்தோம் .

இப்போது இந்தியாவின் கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையை ஊக்குவிக்கும் விதமாக ஸ்விஸ் வங்கி அந்த வங்கியில் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தயார் செய்துள்ளது . அந்த பட்டியல் இந்திய அரசுடன் பகிரப் பட உள்ளதாக தெரிகிறது . 

ஸ்விஸ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில் " இந்த பட்டியலில் உள்ள ஒவ்வொருவரும் அறக்கட்டளை மற்றும் பல நிறுவனங்கள் மூலம் கிடைத்த வரி கட்டாத பணத்தை இங்கே சேமித்து வைத்துள்ளதாக சந்தேகிக்கப் படுகிறார்கள் " என்றார் .

மேலும் அவர் புதிய இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார் .

மோடி அரசின் அடித்த அடி !! சிலிண்டர் விலை உயர்கிறது ..

கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக பதவியேற்ற மோடி அரசு ரயில் கட்டணத்தை 14.2 சதவீதம் உயர்த்தியது . இது மக்களிடையே பெரும் களக்கத்தை ஏற்படுத்தியது . பல இடங்களில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளனர் . சிலிண்டர் விலையை மாதந்தோறும் 10 ரூபாய் உயர்த்த முடிவு செய்துள்ளனர் .
இப்போது ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் இல்லாமல் 905 ரூபாய்  ஆகவும் , மானியத்துடன் 414 ரூபாய் ஆகவும் உள்ளது . மானிய விலையுடன் சிலிண்டர் ஆண்டு ஒன்றுக்கு 12 மட்டுமே கிடைக்கும் .

இந்த அறிவிப்பு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது , இந்த விலை உயர்வை பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அதற்கு முன்பு அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சில தகவல்கள் கூறுகிறது .

மதுக்கடைகள் எதிர்த்து போராடும் இயக்கம் ஒன்றை உருவாக்கப் போகிறார் , அன்புமணி ராமதாஸ் !!


தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அன்புமணி ராமதாஸ் . இவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் . செட்டிக்கரை உள்ளீட்ட இடங்களில் நன்றி தெரிவிக்கும் போது அவர் கூறியதாவது :

" விரைவில் பாமக சார்பாக மதுக்கடைகளை எதிர்த்து போராடும் இயக்கம் ஒன்றை தொடர உள்ளோம் . மதுக்கடைகளை மூட வேண்டும் என நினைக்கும் அனைத்து பெண்களும் , அந்த இயக்கத்தில் கலந்து கொண்டு போராட முன்வர வேண்டும் . இவ்வாறு ஒன்றுபட்டால் தான் நாம் மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் " என்று கூறினார் .

அத்வானிக்கு ஜனாதிபதி பதவி கொடுக்கலாம் , மத்திய அமைச்சர் நிதின் கட்காரி !!


மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் , " அத்வானி அவர்களின் திறமைக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற பதவி ஜனாதிபதி பதவி . அவரது நீண்ட கால அரசியல் வாழ்க்கைக்கு நாங்கள் மதிப்பு அளிக்கிறோம் . அவருக்கு ஜனாதிபதி பதவி கொடுப்பதே அவருக்கு நாங்கள் செய்யும் மரியாதையாக இருக்கும் .

நாட்டின் துணைப் பிரதமராக இருந்த அத்வானிக்கு சபாநாயகர் கொடுப்பது சரியாக இருக்காது என்பதற்காக தான் அவருக்கு அந்த பதவி கொடுக்கவில்லை . 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு அமைச்சரவைப் பதவி கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதால் தான் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர்க்கு பதவி கொடுக்க இயலவில்லை " என்றார் .

தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் 2017 ஆம் ஆண்டு முடிவடைகிறது .

உலகின் டாப் கால்பந்து ஜோடிகள் !!

 1. ரஷ்ய மாடலான இரினா ஷயக் தான் நம்பர் 1. இவர் கால்பந்தில் அதிக ரசிகர்களை கொண்ட ரொனால்டோவின் காதலி .உலகின் செக்ஸியான பெண் என்று மேற்க்கத்திய பத்திரிகைகளால் போற்றபடுகிறார்  .ஆனால் இவர் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் இல்லாதவர் .




2. உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்டவர் ஷகிரா .இவர் ஒரு பாப் பாடகி .இவர் ஸ்பெயின் அணியின் பின்கள  வீரர் பிக்யுவின் காதலி .கடந்த உலக கோப்பையின் போது காதலில் மலர்ந்தார்கள் .



3. அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியின் காதலி ,ஆண்டொனெல்லா ரோகுசோ .இவர்கள் முதல் சந்திப்பு 5 வயதில் நடந்தது ,அப்போது இருந்து நண்பர்களாக பழகி வந்தார்கள் .2008 இல் தங்கள் காதலை ஒப்பு கொண்டார்கள் .இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது .உலக கோப்பைக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் .



 4. இவர் ஸ்பெயின் அணியின்  கேப்டன் இகர் காசில்லசின் காதலி , சாரா கார்பநேரோ .இவர் ஒரு தொலைக்காட்சி நிருபர் .உலகின் அழகான பெண் நிருபர் என்று அமெரிக்க பத்திரிக்கைகளால் பாராட்டப்பட்டவர் .2010 உலக கோப்பையை வென்ற பிறகு இவரை முத்தமிட்டு தனது காதலை ஒப்புகொண்டார் .இப்போது திருமணம்  செய்துகொண்டு ஒரு குழந்தையும் பெற்று உள்ளார்கள் .




5. பிரேசில் நாட்டு நெய்மரின் காதலியாக கருதபடுபவர் காப்ரியல்லா லென்சி .இவர் 20 வயது மாடல் அழகி .இவர் ,அவர் விளையாட  செல்லும் இடங்களுக்கு எல்லாம் தவறாமல் சென்று விடுகிறார் .பிரேசிலில் ஒன்றாக சுற்றாவிட்டாலும் ,வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றுகிறார்களாம் .இவர்கள் காதல் இன்னும் கிசுகிசுவாகவே உள்ளது .


இரயில்வே கட்டணங்களை உயர்த்துவது கடினமான முடிவு , ஆனா சரியான முடிவு சொல்கிறார் அருண் ஜெட்லி !!!

புதிதாக வந்த மோடி அரசு இரயில்வே கட்டணங்களை 14.2 சதவீதம் உயர்த்தியது . இந்த முடிவு பல்வேறு தரப்பட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியது . 


இந்த முடிவு பற்றி நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில் , “ தரமான ரயில்கள் வேணுமா , இல்லை தரமற்ற இரயில்கள் வேண்டுமா என்பதை இந்தியா தான் முடிவு செய்ய வேண்டும் . இரயில்வே அமைச்சகம் ஒரு கடினமான முடிவு , ஆனால் சரியான முடிவை எடுத்துள்ளது . கடந்த சில வருடங்களாக இந்தியன் ரயில்வே நஷ்ட்த்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது . தொடர்ந்து இருக்க மக்கள் அனைவரும் தங்களுக்கு கிடைக்கும் சேவைகளுக்கு கட்டணம் கட்ட வேண்டும் “ என்றார் 

அமெரிக்க காங்கிரஸின் கூட்டுத் தொடரில் மோடியை உரையாற்ற அழைப்பு !!


ஒரு காலத்தில் அமெரிக்காவில் உள்ளே  நுழைய விசா கொடுக்காமல் இருந்த அமெரிக்கா , இப்போது மோடியை கூட்டுத் தொடரில் உரையாற்ற வைத்து மரியாதை செய்ய அழைத்துள்ளனர் .

இது குறித்து வெளியுறவுத்துறை தலைமை அதிகாரி , அவையின் தலைமை அதிகாரி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் . அந்த கடிதத்தில் மோடியை அவைகளின் கூட்டுத் தொடரில் உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . மேலும் அரசியல் , பொருளாதாரம் , பாதுகாப்பு எதுவாக இருந்தாலும் மத்திய ஆசியாவில் அமெரிக்காவிற்கு சிறந்த நட்பு நாடு இந்தியா “ என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர் .

மோடி தேர்த்லில் வெற்றி பெற்ற உடன் அமெரிக்க அதிபர் தொலைப்பேசியில் அழைத்து மோடியை வாழ்த்தி அமெரிக்காவிற்கு வருகை தரும்படி கேட்டுக் கொண்டார் .

இது போன்ற கூட்டுத் தொடரில் உரையாற்ற , மற்ற நாடுகளின் முக்கிய தலைவர்களை அளிக்கும் வழக்கம் 1800 ஆம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது ..

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media