BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 16 October 2013

சரக்கு ஊற்றி தன் மூன்றாவது பெண் குழந்தையை கொன்ற கொடூர தந்தை

மூன்றாவது குழந்தையும் பெண்ணாக பிறந்த ஆத்திரத்தில் தனது 18 மாத குழந்தைக்கு மதுவை கொடுத்து கொன்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை இன்றளவும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு சாட்சி.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் வசிக்கும் ஷேக் இஸ்மாயில் என்ற மெக்கானிக்கின் மனைவிக்கு அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அடுத்த குழந்தையாவது ஆண் குழந்தையாக பிறக்கும் என எதிர்பார்ப்பில் இருந்த இஸ்மாயிலிற்கு மூன்றாவதும் பெண் குழந்தை என்ற செய்தி ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நேற்று காலை நிதானம் தெரியாத போதையில் வீட்டுக்கு வந்துள்ள இஸ்மாயில் தனது மூன்றாவது மகளை பார்த்த உடன் தனது பாக்கெட்டில் இருந்த மது பாட்டிலை திறந்து மகளின் வாயில் வற்புறத்தி ஊற்றி, குழந்தையை மது குடிக்க வைத்துள்ளார். இதனால், தொண்டை மற்றும் குடல் எரிச்சல் ஏற்பட்டு குழந்தை வீறிட்டு அழுதுள்ளது. பின்னர், சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி விழ, பயந்து போன இஸ்மாயில் குழந்தையை உடனடியாக குண்டூர் அரசு ஆஸ்பத்திரி வாசலில் போட்டுவிட்டு தப்பி தலைமறைவாகி விட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை பிழைக்கவில்லை, தற்போது போலிஸ் இந்த தந்தையை தேடி வருகிறார்கள்.

முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சு ஆமைகளுக்கு கடல் எந்த பக்கம் இருக்கிறது என எப்படி தெரியும்?

உயிரினங்களில் உள்ள எல்லா அம்மாக்களும் தங்கள் குஞ்சுகளை அவைகளை பாதுகாத்து பாலூட்டி ஒரு சில காலம் வரை வளர்க்கும், ஆனால் உயிரினங்களிலேயே டுபாக்கூர் அம்மா என்றால் அது கடல் ஆமைகள் தான், கடல் ஆமைகள் இரவில் கரைக்கு வந்து முட்டையிட்டுவிட்டு செல்லும், அதோடு அதன் கடமை முடிந்தது என்று சென்று விடும்.

முட்டை பொறித்து குஞ்சாக வெளிவரும் ஆமையோ கடலை நோக்கி ஒரு ரன்னிங் ரேஸ் ஓடும், இந்த குஞ்சுகளை சாப்பிடவென்றே பறவைகள் கூட்டம் கூட்டமாக பறக்கும், பெரும் அளவில் முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக்குஞ்சுகள் இந்த பறவைகளுக்கு இரையாகிவிடும், சில நொடிகளில் முடிந்து போய்விடும் வாழ்க்கை, ஆனால் அதையும் தாண்டி அந்த ஆமைக்குஞ்சுகள் கடலினுள் வந்து சேர்ந்து விட்டால் அதன் பிறகு அதன் வாழ்க்கை நூறாண்டுகளையும் தாண்டி இருக்கும். சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதப்பட்டது இது.

மணலில் முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுக்கு கடல் எந்த பக்கம் என எப்படி தெரியும்? ஆனால் மிகச்சரியாக அனைத்து குஞ்சுகளும் கடலை நோக்கி ஓடுவது எப்படியென்றால் கடல் ஆமை முட்டையிடும் போதே முட்டையில் தலைவெளிவரும் பக்கத்தை கடலை நோக்கி இருக்குமாறு முட்டையிட்டுவிட்டு சென்று விடும். இது தான் அந்த கடல் ஆமை குஞ்சுகள் முட்டையை உடைத்து வெளியே வந்த உடன் சரியாக கடலை நோக்கி ஓடுவதன் காரணம்.

# சிறிது நேர துன்பங்களை எதிர்கொண்டு கடந்துவிட்டால் பல கால மகிழ்ச்சியான வாழ்வு காத்திருக்கின்றது.

24 X 7 தமிழில் சற்றுமுன் செய்திகள். உண்மைகளை உடனுக்குடன் அறிய சற்றுமுன் செய்திகள் பக்கத்தை லைக் செய்யுங்கள்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media