மலேசிய விமானம் நொருங்கி இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்திருக்கலாம் என்று கணிக்கப்படும் இடத்தில், கருப்புப் பெட்டியிலிருந்து வெளியேறும் சிக்னல்களை ஆஸ்திரேலிய கடற்படையின் உபகரணங்கள் கண்டறிந்துள்ளன. பேட்டரியின் ஆயுள் காலம் இன்று அல்லது நாளை காலாவதி ஆகிவிடும் என்பதால், தற்போது கண்டறியப்பட்டுள்ள சிக்னலை கொண்டு தரவுகளை ஆராயும் பணி தீவிரமடைந்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய கடற்படையின் கூட்டு நிறுவனமான ஜே.ஏ.சி.சி. தளபதி ஆங்கஸ் ஹவ்ஸ்டன் கூறியதாவது:
"தேடலில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் மிகவும் நம்பிக்கைக்குரிய தகவல் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படை கப்பல் கேடயம் இரண்டு மணி நேரத்தில் இரண்டுக்கும் அதிகமான சிக்னல்களை கண்டறிந்துள்ளது. கடல் பரப்பிலிருந்து சரியாக 4,500 மீட்டர் கீழே இந்த சிக்னல் கருவியில் பதிவாகியுள்ளது. எனினும், விமானம் தொடர்பாக எந்த தகவலும் இதுவரை பெறப்படவில்லை. தெற்கு இந்திய பெருங்கடலில் இங்கிலாந்தின் எச்.எம்.எஸ். (HMS) எக்கோ என்ற ஒலி சிக்னல்களை கண்டறியும் மேம்படுத்தப்பட்ட நீர் மூழ்கி கப்பல் மூலம், கருப்புப் பெட்டியின் சிகனல் பெறப்பட்ட இடத்திற்கு விரைந்துள்ளது. அங்கிருந்து ஒலி தரவுகள் மூலம் கண்டறியப்பட்ட சிக்னல்கள் எம்.எச்.370 விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து பதிவானதா என்று உறுதி செய்ய வேண்டும்."
இது குறித்து ஆஸ்திரேலிய கடற்படையின் கூட்டு நிறுவனமான ஜே.ஏ.சி.சி. தளபதி ஆங்கஸ் ஹவ்ஸ்டன் கூறியதாவது:
"தேடலில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் மிகவும் நம்பிக்கைக்குரிய தகவல் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படை கப்பல் கேடயம் இரண்டு மணி நேரத்தில் இரண்டுக்கும் அதிகமான சிக்னல்களை கண்டறிந்துள்ளது. கடல் பரப்பிலிருந்து சரியாக 4,500 மீட்டர் கீழே இந்த சிக்னல் கருவியில் பதிவாகியுள்ளது. எனினும், விமானம் தொடர்பாக எந்த தகவலும் இதுவரை பெறப்படவில்லை. தெற்கு இந்திய பெருங்கடலில் இங்கிலாந்தின் எச்.எம்.எஸ். (HMS) எக்கோ என்ற ஒலி சிக்னல்களை கண்டறியும் மேம்படுத்தப்பட்ட நீர் மூழ்கி கப்பல் மூலம், கருப்புப் பெட்டியின் சிகனல் பெறப்பட்ட இடத்திற்கு விரைந்துள்ளது. அங்கிருந்து ஒலி தரவுகள் மூலம் கண்டறியப்பட்ட சிக்னல்கள் எம்.எச்.370 விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து பதிவானதா என்று உறுதி செய்ய வேண்டும்."