BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 18 September 2013

வண்டலூர் ஜூ வில் அம்மா மலிவு விலை மெஸ்

மல்டிபிளக்ஸ் கலாச்சாரத்தால் சென்னை மக்கள் பொழுது போக்க செல்லுமிடங்கள் குறைந்து வருங்கிறன. ஆயிரம் ருபாய் இருந்தால்தான் குடும்பத்துடன் சினிமா பார்க்க முடியும் என்ற நிலை. 

மக்களுக்கு இன்னும் பொழுதுபோக்கிடமாக இருப்பது மெரினா பீச். அதனை அடுத்து அதிக மக்கள் செல்வது வண்டலூர் உயிரியல் பூங்கா. குறைவான கட்டணம் வசூலிக்கப் படுவதால் அனைத்து தரப்பு மக்களையும் இங்கே காணலாம்.

இங்கு வரும் மக்கள் பயன்பெறும் வண்ணம், சென்னை மாநகர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘அம்மா உணவகம்’ விரைவில் வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் தொடங்கப்பட இருக்கிறது.

அம்மா உணவகம் அமைய வண்டலூர் பூங்கா அதிகாரிகள் இடம் ஒதுக்கி கொடுத்து விட்டனர். உணவகம் துவங்கும் வேலைகளை மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக செய்து வருகின்றனர். 

செக்ஸ் புகார் தி.மு.க. மாவட்ட செயலாளர் கானா தலைமறைவு

நெல்லை மாவட்ட தி.மு.க மாவட்ட செயலாளராக இருப்பவர் கருப்பசாமி பாண்டியன், இவரை தி.மு.க வில் சேர விருப்பம் தெரிவித்து மொழிப்போர் தியாகி குறளேருழவரின் பேத்தி நா.தமிழரசி சந்தித்து பேசினார்.

தல போல வருமா! அஜீத் செய்த அந்த காரியம்

தன் சினிமா வாழ்வின் ஆரம்ப காலங்களில் தன்னம்பிக்கையா? தலைக்கணமா? என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வெளிப்படையான  பேட்டிகள் கொடுத்து சினிமா கிசு கிசுக்களில் வாய்க்கொழுப்பு நடிகர் என்று உருட்டப்பட்டவர் அஜீத், ஹூரா உட்பட பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டவர் நடிகை ஷாலினியை திருமணம் செய்து எல்லா கிசு கிசுக்களையும் செட்டில் செய்தவர், அதன் பின் சினிமாவில் கிசு கிசுக்களை கடந்து பெரும் வளர்ச்சி கண்டார்.

"நல்ல மனிதன்" என்ற பெயர் வாங்குவதுதான் மிக கடினமான விஷயம். தமிழ் சினிமாவில் "நல்ல மனிதன்" என்ற பெயரெடுத்தவர் அஜீத்.

தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் குமார் தனது செயல்பாடுகள் மூலம் ரசிகர்கள் மனதில் மேன்மேலும் உயர்ந்து வருகிறார்.

அஜீத்திடம் நீண்டகாலமாக சமையல் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை செய்யும் 10 ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. இவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று பிரியப்பட்ட அஜீத், கேளம்பாக்கத்தில் இடம் வாங்கி தன பணியாட்கள் பெயரில் பதிவு செய்து உள்ளார்.

இவர்களுக்கு தனது சொந்த செலவிலேயே வீடு கட்டித்தர முடிவு செய்த அஜீத், அதற்கான வேலைகளை ஆரம்பித்து உள்ளார். அதற்கான பூமி பூஜை நடந்து முடிந்துள்ளது. கட்டுமான வேலைகள் விரைவில் துவங்க உள்ளன.

ரஜினி தன்னிடம் வேலை பார்த்த 50 பணியாட்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு வீடு கட்டிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல விஷயம். இது போன்று பல உதவிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார் அஜித். நம் இறப்புக்கு வருந்துபவர்கள் எண்ணிக்கைதான் நாம் வாழ்ந்த வாழ்வின் அடையாளம் என்று நண்பர்களிடம் அடிக்கடி கூறுவாராம் அஜீத்.

அந்த வகையில் அஜீத் பல குடும்பங்களில் தெய்வமாக பூஜிக்கப்பட்டு வருகிறார் என்பதே நிதர்சனம். 

7 வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய 15 வயது சிறுவனின் இதயம்!

கடந்த வெள்ளியன்று மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமணையில் ஒரு 7 வயது சிறுவனுக்கு இதயத்தில் இடது புறம் இருந்த கட்டியை அகற்ற ஆபரேசன் நடைபெற்றுக்கொண்டிருந்தது.. எப்படியும் ஆபரேசன் முடிந்து தம் பையன் பிழைத்துவிடுவான்

என்.ஆர்.ஐ க்கள் எங்களுக்கு பணம் தருகிறார்கள் - கட்சி தலைவர் அறிவிப்பு

நாங்கள் முழு மெஜாரிட்டியுடன் வெல்வோம், என்.ஆர்.ஐ க்கள் எங்களுக்கு பணம் தருகிறார்கள் - ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால்.

70,000 கோடிக்கு வரிபாக்கி வைத்துள்ள டாப் 10 நிறுவனங்கள்

மாத சம்பளக்காரனுக்கு மட்டும் வரியை சம்பளத்திலேயே பிடிப்பார்கள், ஆனால் பல பெரிய நிறுவனங்கள் வைத்திருக்கும் வரிபாக்கி 70,000 கோடி ரூபாய்.

வரி செலுத்தாத பத்து முன்னணி நிறுவனங்கள்

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media