BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 20 August 2014

2014 இல் உலகில் பிரபலமான 100 மனிதர்களில் ஒருவராக இருந்தவர் மரணமடைந்தார்




1918 இல் பிறந்தவர் பி.கே.எஸ். ஐயங்கார் . ஐயங்கார் யோகா என புதிய யோகாவையே கண்டுபிடித்தவர். உலகின் சிறந்த யோகா ஆசிரியர்களில் ஒருவராக இவர் இருக்கிறார். இந்தியாவின் பெருமையை உலகிற்கு சேர்த்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. இவருக்கு 1991 இல் பதம் ஸ்ரீயும், 2002 இல் பதம் பூஷணும், 2014 இல் பதம் விபூஷண் விருதும் வழங்கப்பட்டது. 2004 இல் டைம்ஸ் பத்திரிக்கையில் உலகில் 100 பிரபலமான மனிதர்களில் இவரும் ஒருவராக இருந்தார்.

இவர் இன்று இதய பிரச்சனை காரணமாகவும், சிறுநீரக செயல் இழப்பு காரணமாகவும் இன்று இயற்கை எய்தினார்,

மோடியின் ஒரே டார்கெட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்





சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவாரோ என ஒரு கூட்டமே காத்துக் கொண்டு இருக்கிறது. அதே வேளையில் அவர் அரசியலுக்கு வந்து விடக்கூடாது என ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது. இப்போது அமைந்து உள்ள பாஜக அரசு அமைவதற்கு முக்கிய காரணம் மோடி என்னும் மந்திர சொல். அது போல் ஏதாவது மந்திரம் செய்து 2016 இல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என தமிழக பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதற்காக அவர்கள் கையில் எடுத்து இருக்கும் ஆயுதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகும். ஆம் அந்த ஒரு மனிதனால் தமிழக மக்களையே தன் பக்கம் திருப்ப முடியும். எனவே ரஜினியை பாஜகவில் சேர்த்து, அவரை 2016 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது தான் மோடியின் திட்டம். இந்த அசைன்மென்ட்டை அவர் பாஜக தலைவர் அமித் ஷாவிடம் கொடுத்து உள்ளார். அவர் இதனை வெற்றிகரமாக செய்து முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிங்கா படப்பிடிப்பு முடிந்த பிறகு இது குறித்து ரஜினியிடம் அமித் ஷா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவதை ஜெயலலிதாவும், கருணாநிதியும் துளி கூட விரும்ப மாட்டார்கள். எனவே அதனை தடுப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்வார்கள்.

2ஜி வழக்கில் தயாளு அம்மாளுக்கு ஜாமீன் !! விடுவிக்க நீதிமன்றம் தீர்ப்பு !!



2ஜி வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி அவரின் மனைவிக்கு ஜாமீன் வழங்க டில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . ஆனால் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது .

83 வயதான தயாளு அம்மாளுக்கு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம் , " தயாளு அம்மாள் சொந்த ஜாமினுக்காக ரூபாய் 5 இலட்சம் , பிணையாக கட்ட வேண்டும் . மேலும் அவருக்கு இரண்டு பேர் உறுதித் தொகையாக அதே மதிப்பீட்டில் பிணை கட்ட வேண்டும் . ஜாமீன் பத்திரிக்கையை இரண்டு நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் தரப்பில் சமர்பிக்க வேண்டும் " என்று உத்தரவிட்டுள்ளனர் .

வயது ஆனதால் தனக்கு ஞாபக சக்தி குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் , அதனால் 2ஜி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என தயாளு அம்மாள் மனு தாக்கல் செய்து இருந்தார் .

ஆம் ஆத்மி கட்சி தலைவர்களின் முகத்திரையை கிழித்து தொங்கவிடப் போவதாக கூறும் புது இயக்கம் !!



ஆம் ஆத்மி கட்சி தலைவர் டில்லி முதல்வர் பொறுப்பில் இருந்து வெளியேறியபின் கட்சியின் மீது பலருக்கு அதிருப்தி ஏற்பட்டது . மேலும் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டு இருந்ததாக செய்திகள் வெளிவந்தன . இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாட்டில் திருப்தி இல்லாத தொண்டர்கள் சிலர் இணைந்து ஆகஸ்து 20 முதல் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரின் உண்மை முகத்தை ஆதாரத்துடன் வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளனர் .

எவிஎம் (AVAM - AAP VOLUNTARY MANCH ) என்ற பெயரில் செயல்படும் இந்த இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றும் , அவர்களிடம் நிறைய கோரிக்கைகள் இருக்கின்றன எனவும் கூறி வருகின்றனர் . எனவே இந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில் , " புதன் கிழமை முதல் ஒவ்வொரு தலைவரின் உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் . அவர்கள் அனைவருக்கும் எதிரான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன " என்றார் .


இன்று பேஸ்புக்கை கலக்கி வரும் ஐஸ் பக்கெட் சாலஞ் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்





இப்போது பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் எங்கு பார்த்தாலும் தெரியும் வார்த்தை, போட்டோ மற்றும் வீடியோ எது என்று பார்த்தால் அது ஏ.எல்.எஸ். ஐஸ் பக்கெட் சாலஞ் பற்றியதாக தான் இருக்கும். அந்த அளவுக்கு இது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. இது இன்னும் தமிழகத்தில் பிரபலமாக இல்லை. அதற்கு முன் நாம்  அதனை பற்றிய அனைத்து தகவல்களை தெரிந்து கொள்வோம். முதலில் ஐஸ் பக்கெட் சாலஞ் என்றால் என்னவென்று பார்ப்போம்.

ஐஸ் பக்கெட் சாலஞ் என்றால் ??
           
                          இது ஏ.எல்.எஸ் என்னும் அமைப்பு நடத்தும் விழிப்புணர்வு சாலஞ் ஆகும். இது ஏ.எல்.எஸ். என்னும் நோயை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஆகும். இதில் பங்கேற்பவர் ஒரு பக்கெட்டில்  ஐஸ் வாட்டரை எடுத்துக் கொண்டு அதனை அவர் மீது ஊத்தி கொள்ள வேண்டும். அதன் பின்பு அவருக்கு தெரிந்த மூன்று பேரை கைக்காட்ட வேண்டும். அவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் இது போல செய்ய வேண்டும். இதனை செய்ய தவறுபவர்கள் ஏ.எல்.எஸ். அமைப்புக்கு 100 டாலர் உதவியாக வழங்க வேண்டும். இதன் மூலம் இந்த நோயை பற்றி உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்வார்கள்.

இது எப்படி தொடங்கப்பட்டது ??

                           அமெரிக்காவை சேர்ந்த பீட் பிராட்ஸ் என்னும் பேஸ்பால் வீரர் தான் இதனை தொடங்கினார். அவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர். அவருக்கு இந்த ஐடியாவை தந்தது அவரது நண்பர் ஆவார். சமூக வலைதளங்களின் உதவியுடன் இது இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதனால் நடந்தவை ??

                            இதன் மூலம் ஏ.எல்.எஸ். அமைப்புக்கு இதுவரை 23 மில்லியன் டாலர் பணம் வந்துள்ளது. ஜுன் 1 முதல் ஆகஸ்ட் 13 வரை பேஸ்புக்கில் இது தொடர்பாக 1.2 மில்லியன் வீடியோக்கள் ஷேர் செய்யப்பட்டு உள்ளன.

ஏ.எல்.எஸ். நோய் என்றால் என்ன ??

                            இது மூளைக்கு மற்றும் ஸ்பைனால் கார்டுக்கு செல்லும் நரம்புகளையும் செல்களையும் பாதிக்கும் நோய் ஆகும். இந்த நோயால் 2 லட்சம் பேரில் 2 பேர் பாதிக்கப்படுகிறார்கள் . ஏ.எல்.எஸ் நோய் உள்ளவர்களில் 20 சதவீதம் பேர் 5 வருடங்களுக்கு மேலும், 10 சதவீதம் 10 வருடங்களுக்கு மேலும், 5 சதவீதம் பேர் 20 வருடங்களுக்கு மேலும் உயிர் வாழ்கிறார்கள்.

இதனை செய்த பிரபல நட்சத்திரங்கள் ??

                           இதனை பலர் செய்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர்கள் என்றால் எல்லாருமே தான். அதில் சிலர் யார் என்றால், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கு, பில் கேட்ஸ், லேடி காகா, ஜஸ்டின் பெய்பர், ரோனால்டோ, மெஸ்ஸி என இந்த லிஸ்டு நீண்டு கொண்டே இருக்கிறது. இது இப்போது கால்பந்து வீரர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இது இந்தியாவில் பிரபலமாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. தமிழகத்தில் இந்த வாய்ப்பு முதன் முதலில் நடிகை ஹன்சிகாவுக்கு வந்து உள்ளது.






தமிழக குடிகாரர்களுக்கு ஒரே நேரத்தில் மகிழ்ச்சி மற்றும் கவலை தரும் செய்தி




தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சோதனை செய்ததில் பல முறைகேடுகள் நடந்தது தெரியவந்துள்ளது. மதுபானங்களின் விலையை அதிக விலைக்கு விற்றதன் மூலம் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதிக விலைக்கு விற்ற ஊழியர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கபடவில்லை. எனவே அவர்கள் மீதும் குற்றம் உள்ளது. எனவே முறைகேடு செய்த அந்த பணத்தை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடமே இருந்த வசூல் செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதனால் இனி அதிக விலைக்கு விற்பதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் பயப்படுவார்கள் என்பதால் சரியான விலைக்கு சரக்கு கிடைக்கும் என தமிழக குடிமக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஆனால் இன்று முதல் எல்லா சர்க்குகளின் விலையும் உயருவதால் கொஞ்சம் கவலையாகவும் உள்ளார்கள்.

கத்தி படத்தை தடை செய்ய கோரிய வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது




தற்போது விஜய் நடித்து வரும் படம் கத்தி. இதனை துப்பாக்கி பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். இந்த படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பு. இது இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு வேண்டிய நிறுவனம் என்பதால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் 65 அமைப்புகள் ஒன்று கூடி உள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் இலங்கை தமிழர்களை அவமதிக்கும் காட்சி இடம்பெற்று உள்ளது. அதனால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். ஒரு திரைப்படம் சென்சார் போர்டு சென்று சர்டிபிகேட் வாங்கிய பிறகுதான் அந்த படம் திரையிடவே அனுமதிக்கப்படுகிறது. கத்தி படம் சென்சார் போர்டுக்கு சென்று வந்த பின்னர் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகவேண்டுமே தவிர படம் தயாராகிக்கொண்டிருக்கும் போதே படத்தை தடை செய்ய நீதிமன்றத்தை அணுகக்கூடாது என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

ஒரு பாடலுக்கு நடனம் ஆட 75 லட்சம் கேட்கும் நடிகை





தமிழில் குத்தாட்டம் போடுவதற்கு முமைத் கான் என்றால் பாலிவுட்டில் அந்த வேலையை செய்து வருபவர் ஸ்ருதி ஹாசன் ஆவார். பாலிவுட்டில் சஞ்சய் கபூர் தான் தயாரிக்க உள்ள அடுத்த படமான மத்யமா என்ற படத்தில்தான் ஸ்ருதிஹாசன் குத்தாட்டம் ஆட உள்ளார். மத்யமா என்ற இந்த படத்தில் அர்ஜூன் கபூர் மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஜோடியாக நடிக்கின்றனர் .

இதில் ஒரு குத்தாட்டம் ஆடுவதற்கு ஸ்ருதி ஹாசன் கேட்டு உள்ள சம்பளம் 75 லட்சம் ஆகும். அவர் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளமே 1 கோடி தான். ஆனால் வெறும் 15 நாட்கள் கால்ஷீட் தந்து  ஒரு பாடலுக்கு நடனம் ஆடி 75 லட்சம் சம்பாதிக்கவுள்ளார்.

தமிழக மக்களுக்கு ஒரு கலர்புல் செய்தி




நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்தவர்களுக்கு புதிய வடிவில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அது எப்பொழுதும் போல் கருப்பும் வெள்ளையுமாக இல்லாமல் கலர்புல்லாக இருக்க உள்ளது. முன்பு உள்ள அட்டைகள் எளிதில் சேதமடைவதாக இருந்தன ,ஆனால் இப்போது தரப்பட உள்ள அடையாள அட்டைகள் பிளாஸ்டிக்கில் எளிதில் சேதமடையாத வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது.

புதிய வாக்காளர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் இந்த அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்படும். அதன் பின்பு பழைய அடையாள அட்டை வைத்து இருப்பவர்களுக்கு வழங்கப்படும். இதனை அச்சிடிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

ஜாக்கி சான் வீட்டில் இருந்து போதை பொருள் எடுக்கப்பட்டது, போலீஸார் கைது செய்தனர்




சீன அதிபர் சீன நாட்டில் சட்ட விரோதமாக போதை பொருள் பயன்படுத்துவோர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி இருந்தார். இந்த உத்தரவு கடந்த ஜூன் மாதம் அன்று வந்தது . இதனையடுத்து போலீஸார் நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். இதில் பல முக்கியமான பிரபலங்கள் பிடிபட்டு வந்தனர்.

இந்நிலையில் அந்த வரிசையில் ஜாக்கி சானின் மகன் சிக்கியுள்ளார். ஜாக்கி சான் மகன் ஜெய்சி கான் இவருக்கு 31 வயது ஆகிறது. இவரது வீட்டில் இருந்து 100 கிராம் மதிப்புள்ள போதை பொருள் எடுக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையின் மூலம் அவர் போதை பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் போலீஸார் இவரை கைது செய்தார்கள்.

4 மாதங்களாக மக்களை ஏமாற்றி வரும் ஏர்டெல் நிறுவனம்




ஏர்டெல் என்றாலே அதற்கு மறுபெயர் ஏமாற்றுத்தனம் என்று ஆகி விடும் போல. பேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு தான் வாட்ஸ் ஆப்பை வாங்கியது. வாட்ஸ் அப்புக்கு 500 மில்லியன் யூசர்கள் உள்ளார்கள். அதில் 50 மில்லியன் பேர் இந்தியாவில் உள்ளார்கள். எனவே அவர்கள் மூலம் ஏர்டெல் நிறுவனம் பணம் சம்பாதிக்க முடிவு செய்தது. ஏர்டெல்லும் வாட்ஸ் ஆப்பும் கூட்டு சேர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் பேக் என்னும் புதிய திட்டத்தை  கடந்த மே மாதம் கொண்டு வந்தார்கள்.

இதன் விலை 36 ரூபாயில் இருந்து 49 வரை உள்ளது. இது நாம் எந்த மாநிலத்தில் இருக்கிறோம் என்பதை பொருத்து மாறும். இவர்கள் கூறியது என்னவென்றால் வாட்ஸ் ஆப் மட்டும் பயன்படுத்தி கொள்ள மாதம் 200 எம்.பி. இலவசமாக வழங்கப்படும் என்று . ஆனால் அந்த பேக்கை பயன்படுத்திய பலர் கூறும் புகார் என்னவென்றால் அந்த 200 எம்.பி.யில் இருந்து டேட்டா குறைவது இல்லை. நமது மெயின் பேலன்சில் இருந்து தான் பணம் குறைகிறது. இது குறித்து ஏர்டெல் கஸ்டமர் கேரிடம் கேட்டால், அது சாட்டிங்குக்கு மட்டும் தான் போட்டோ , வீடியோ டவுன்லோட் செய்தால் தனியாக பணம் வசூலிக்கப்படும் என்றும் .வாட்ஸ் ஆப்பை அப்ளிகேஷனில் பயன்படுத்தாமல் வேறு முறையில் பயன்படுத்த வேண்டும் என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதிலை கூறுகிறார்கள்.

மொத்தத்தில் இது ஒரு ஏமாற்றுதனம் என்று தெளிவாக தெரிகிறது. எனவே இந்த பேக்கை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இந்த பதிவை முடிந்த அளவு ஷேர் செய்து உங்களது நண்பர்களுக்கு உதவுங்கள்.

நீங்கள் எங்கே சென்றாலும் உங்கள் ஸ்மார்ட்போன் கூகுளிற்கு தெரிவித்து விடும் !!



நீங்கள் ஸ்மார்ட்போன் வைத்து இருக்கீறீர்களா ?? அதில் இண்டர்நெட் சேவையை பயன்படுத்தி வருகிறீர்களா ?? அப்படி என்றால் நீங்கள் இதுவரை எங்கே எங்கே சென்று இருக்குறீர்கள் என்பது கூகுளிற்கு தெரியும் . ஆம் , கூகுள் மேப்ஸ் மூலம் கூகுள் உங்களை கண்காணித்து வருகிறது .

இந்த தகவல்கள் எல்லாம் நமது கூகுள் அக்கௌண்டிற்கு தானாக அனுப்பப்பட்டு விடுகிறது . அதுவும் ஒரு தெளிவான விவரங்கள் உடைய மேப்பில் . இந்த மேப்பின் மூலம் ஒவ்வொரு நாளும் எங்கே சென்றோம் என்பதை பார்க்கும் அளவுக்கு தெளிவாக இருக்கிறது .


ஆனால் கூகுள் நிறுவனம் இது கட்டாயம் இல்லை , வேண்டும் என்றால் இதனை உங்கள் மொபைலில் ஆப் செய்து வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது .

இதனை எப்படி ஆப் செய்வது : ( ஆண்ட்ராய்ட் )


  1. முதலில் " செட்டிங்க்ஸ் " செல்லவும் 
  2. " லோகேஷன் " ஆழுத்தவும் 
  3. " கூகுல் லோகேஷன் ரிப்போர்டிங் " என்பதை அழுத்தவும் . 
  4. " லோகேஷன் ஹிஸ்டரி " என்பதை ஆப் செய்யவும் .

அமெரிக்கர்கள் எங்கு இருந்தாலும் அடித்து ரத்தத்தால் மூழ்க வைப்போம் - ஐ.எஸ்.ஐ.எஸ் அமெரிக்காவுக்கு மிரட்டல் !!



ஈராக்கில் சில பகிதிகளை ஆக்கிரமித்து தனி இஸ்லாமிய நாடு என்று அமைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் , அமெரிக்கர்கள் தாக்கினால் அமெரிக்கர்கள் எங்கு இருந்தாலும் அடித்து ரத்தத்தால் மூழ்க வைப்போம் என மிரட்டல் விடுத்துள்ளனர் .

அமெரிக்கர்கள் ஈராக்கில் தாக்குதல் நடத்துவோம் என்று அறிவித்த பின் இந்த மிரட்டல் விடியோ வெளியாகி உள்ளது .

இதுவரை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் நிலங்களை ஆக்கிரமித்து தனி நாடு அமைப்பதில் தான் தீவிரம் காட்டி வந்தனர் .

தனது ரசிகர்களுக்காக அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டார் ஏ.ஆர் ரகுமான் !!



தனது ரசிகர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் இணைக்கும் வகையில் , ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் தனக்கென்று அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளார் .

பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பல இலட்சம் ரசிகர்களைக் கொண்ட இவரை இனிமேல் ரசிகர்கள் இந்த அப்ளிகேஷன் மூலமாகவும் பின் தொடரலாம் . இந்த அப்ளிகேஷனில் ஏ.ஆர் ரகுமானின் பாட்டு ஆல்பம் மற்றும் ஏனைய விற்பனை பொருட்களை விலைக்கு வாங்கலாம் , அல்லது அங்கு இருக்கும் சிறு சிறு போட்டிகளை வென்று , பரிசுகள் பெறலாம் .

இந்த அப்ளிகேஷன் இப்போது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ-ஓஎஸ் களில் கிடைக்கிறது .

375 வது பிறந்த நாளை கொண்டாட தயாராகி வரும் சென்னை !!



வருகிற ஆகஸ்டு 22 ஆம் தேதி மெட்ராஸ் டே என்று அழைக்கப்படும் அந்த நாளில் சென்னை மாநகரம் அதன் 375 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளது . அதனை கொண்டாட இப்போவே சென்னை தயாராகி வருகிறது .


1969 ஆம் ஆண்டில் ஆகஸ்டு 22 ஆம் தேதி தான் ஆங்கிலேய அரசில் கிழக்கு இந்திய நிறுவனம் , உள்ளூர் நாயக்கர் அரசர்களிடம் இருந்து சென்னைப்பட்டணம் என்னும் ஒரு சிறிய இடத்தை வாங்கியது . வணிக முன்னேற்றதிற்காக கடல் நோக்கி ஒரு துறைமுகத்தை எழுப்பியது , அந்த துறைமுகம் தான் இன்றைய மெரினா பீச் .



பின்னர் ஜார்ஜ் டவுன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு பின்னர் மெட்ராஸ் நகரம் என்றானது . தமிழக அரசின் முயற்சியால் 1996 ஆம் ஆண்டு சென்னை என்று மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது .

பின்னர் படி படியாக உயர்ந்து நம் கண் முன்னே வானளவு உயர்ந்து , பல தமிழக மக்களுக்கு சென்னை ஒரு செல்லப்பிள்ளையாகவே இருந்து வருகிறது .

டாக்டர்களை கழுவி ஊற்றிய நீயா நானா நிகழ்ச்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்


கடந்தவார விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் காசு ஆசை கொண்டு அலையும் மருத்துவர்களை கடுமையாக விமர்சித்தார்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐபாட் அமைப்பு (Intern and post graduate association of tamilnadu (IPAT-Chennai) இன்று (செவ்வாய்)  மாலை 4 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது, இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில்

விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் மக்களுக்காக 24*7 மணியும் உழைக்கும் மருத்துவர்களை இழிவு செய்யும் விதமாக கருத்துக்களை தெரிவித்தமைக்காகவும், மகப்பேறு ஸ்கேன் தொடர்பாக அறிவியல் பூர்வமற்ற கருத்துக்களை மக்களை குழப்பும் விதமாக தெரிவித்ததை எதிர்த்தும் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நாளை (20.08.14) மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.என்று குறிப்பிட்டனர்.

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special news

3 வாட்ஸ் அப் அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
http://www.satrumun.net/2014/08/3-whatsapp-admins-arrested.html

அஞ்சானை கிண்டல் செய்த ரசிகர்கள், ரசிகர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு படப்பிடிப்பை விட்டு வெளியேறினார் சூர்யா
http://www.satrumun.net/2014/08/angry-surya-left-from-shooting-fans.html

டாக்டர்களை கழுவி ஊற்றிய நீயா நானா நிகழ்ச்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
http://www.satrumun.net/2014/08/doctors-agitation-again-neeya-naana.html

அஞ்சான் படத்தில் ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய மாற்றம்
http://www.satrumun.net/2014/08/6-minutes-reduced-in-anjaan-movie.html

ஏம்பா இது மொபைலா இல்ல வேற எதோவா ??
http://www.satrumun.net/2014/08/whether-its-phone-or-something-else.html

க‌த்தி படத்தின் பாடல் தொகுப்பு வெளிவந்தது
http://www.satrumun.net/2014/08/blog-post19.html

இந்திய அணியில் புதிய மாற்றங்கள், தோனி கேப்டன் பதவியில் நீடிக்கிறாரா ??
http://www.satrumun.net/2014/08/few-changes-made-in-indian-team.html

ஏ.ஆர்.ரஹ்மானை சங்கடப்பட வைத்த 'ஈரானிய' டைரக்டர்!
http://goo.gl/2HbwnV

நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு ஆசைப்படவில்லை : ஆட்களைக் கண்டதும் அடக்கி வாசித்த விஷால்!
http://goo.gl/01Z0Ij

மக்களுக்காக மக்களிடமே உதவி கேட்டு உள்ள மோடி
http://www.satrumun.net/2014/08/Modi-asks-suggestion-from-the-people-for-the-people.html

எபோலா பற்றி தவறான செய்தி வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது
http://www.satrumun.net/2014/08/ebola-rumours-in-whatsapp.html

இங்கிலாந்து வீரரின் நிர்வாண படம் டிவிட்டரில் வெளிவந்தது
http://www.satrumun.net/2014/08/ian-bothams-nude-photo-released-in.html

பெற்றோர் போன் செய்தால் குழந்தைகள் போனை கட்டாயம் எடுக்க வேண்டும் - புதிய அப் வந்துள்ளது
http://www.satrumun.net/2014/08/an-app-that-prevents-teens-from.html

சூர்யாவை கிண்டல் செய்த ரசிகர்கள், ரசிகர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு படப்பிடிப்பை விட்டு வெளியேறிய‌ சூர்யா


லிங்குசாமி இயக்கி சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான அஞ்சான் படம் சூர்யாவின் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை, இதனால் படம் ஃப்ளாப் ஆகியுள்ளது மட்டுமின்றி சமூக வலைதளங்களில் மிக மோசமாக கிண்டல் அடிக்கப்பட்டது, இதனால் சூர்யாவும் லிங்குசாமியும் ஏற்கனவே கோபத்தில் உள்ளனர், சமூக வலைதளங்களில் இப்படத்தை கிண்டல் அடிப்பது குறித்து தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தனர்

இந்நிலையில் ஏகக்கடுப்பிப்பில் இருந்த சூர்யாவுக்கு மேலும் எரிச்சலை கிளப்பும் சம்பவம் நடந்தது, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் அருகே நடைபெற்றது, படப்பிடிப்பில் சூர்யா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த போது படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் சிலர் சூர்யாவையும் அஞ்சான் படத்தையும் பற்றி கிண்டலடித்து கமென்ட் அடித்தார்கள்,
இதனால் கோபமான சூர்யா ரசிகர்களிடம் கோபமாக  பேசியுள்ளார். ஆனால் சூர்யாவின் கோபத்தை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல்  ரசிகர்கள் மீண்டும், மீண்டும் கிண்டல் அடிக்க கடும் கோபத்துக்குள்ளானார் சூர்யா. இதனால் மாஸ்  படக்குழுவினர் காவல்துறைக்கு தகவல் கொடுக்க, காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து ரசிகர்களை விரட்டியடித்தனர்,
இதனால் கடுப்பான சூர்யா, அஞ்சான் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிவிட்டு படப்பிடிப்பை ரத்துசெய்துவிட்டு வெளியேறிவிட்டார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media