பாராளுமன்ற தேர்தலில் தெற்கு மும்பை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் கவுரவ் ஷர்மா, ஸ்பைடர்மேன் உடை அணிந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஸ்பைடர்மேன் போல் சிகப்பு கலர் டி–சர்ட், தொப்பி, புளுகலர் ஜீன்ஸ் அணிந்து, மோட்டார் சைக்கிளில் தொகுதி முழுவதும் சுற்றி வருகிறார். மக்களை கூட்டமாக பார்த்ததும் பைக்கை நிறுத்தி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வாக்கு சேகரிக்கிறார். தனது தொகுதிக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஸ்பைடர் மேன் உடையில் செல்கிறார். வாசல் வழியாக சென்று ஓட்டு கேட்காமல் காவலாளியிடம் அனுமதி பெற்று, வீட்டின் சுவர்களில் சரசரவென்று தொற்றி ஏறுகிறார். அவருக்கு ஜன்னல் சின்னம் ஒதுக்கப்பட்டதால், ஜன்னல் வழியாகவே மக்களிடம் பேசி ஓட்டு கேட்கிறார்.
கவுரவ் ஷர்மா, முக்கிய பிரமுகர்கள் நடிகர்கள், நடிகைகளுக்கு உடல் திறன் ஆலோசகராகவும் இருந்து பயிற்சி அளித்து வருகிறார். 31 வயதாகும் இவர் மும்பையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் 90 நிமிடங்களில் ஏறி சாதனை படைத்தவர். சாதனைகளின் போது அவர் ஸ்பைடர்மேன் உடை அணிந்து கலந்து கொள்வார். இதனால் இவர் இந்தியன் ஸ்பைடர்மேன் என்று அழைக்கப்படுகிறார்.
இது குறித்து கவுரவ் ஷர்மா கூறுகையில், "டி.வி. தொடர்களில் நான் ஜன்னல் வழியாக வந்து ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதை பார்த்து இருப்பார்கள். இப்போது மக்கள் பிரச்சினைகளை உண்மையிலேயே தீர்த்து வைக்கவும் மக்களை காப்பாற்றவும் நேரில் வந்து இருக்கிறேன்." என்று தெரிவித்தார்.
ஸ்பைடர்மேன் போல் சிகப்பு கலர் டி–சர்ட், தொப்பி, புளுகலர் ஜீன்ஸ் அணிந்து, மோட்டார் சைக்கிளில் தொகுதி முழுவதும் சுற்றி வருகிறார். மக்களை கூட்டமாக பார்த்ததும் பைக்கை நிறுத்தி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வாக்கு சேகரிக்கிறார். தனது தொகுதிக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஸ்பைடர் மேன் உடையில் செல்கிறார். வாசல் வழியாக சென்று ஓட்டு கேட்காமல் காவலாளியிடம் அனுமதி பெற்று, வீட்டின் சுவர்களில் சரசரவென்று தொற்றி ஏறுகிறார். அவருக்கு ஜன்னல் சின்னம் ஒதுக்கப்பட்டதால், ஜன்னல் வழியாகவே மக்களிடம் பேசி ஓட்டு கேட்கிறார்.
கவுரவ் ஷர்மா, முக்கிய பிரமுகர்கள் நடிகர்கள், நடிகைகளுக்கு உடல் திறன் ஆலோசகராகவும் இருந்து பயிற்சி அளித்து வருகிறார். 31 வயதாகும் இவர் மும்பையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் 90 நிமிடங்களில் ஏறி சாதனை படைத்தவர். சாதனைகளின் போது அவர் ஸ்பைடர்மேன் உடை அணிந்து கலந்து கொள்வார். இதனால் இவர் இந்தியன் ஸ்பைடர்மேன் என்று அழைக்கப்படுகிறார்.
இது குறித்து கவுரவ் ஷர்மா கூறுகையில், "டி.வி. தொடர்களில் நான் ஜன்னல் வழியாக வந்து ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதை பார்த்து இருப்பார்கள். இப்போது மக்கள் பிரச்சினைகளை உண்மையிலேயே தீர்த்து வைக்கவும் மக்களை காப்பாற்றவும் நேரில் வந்து இருக்கிறேன்." என்று தெரிவித்தார்.