BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 2 July 2013

காடுவெட்டி குருவுக்கு ஓகே தயாளு அம்மாள் மனு நாட் ஓகே, பணியிடங்களில் பெண்கள் பாலியல் பிரச்சினைகளுக்கு குழு.


காடுவெட்டி குரு மற்றும் 19 பேர் மீதான  தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து. விரைவில் விடுதலை ஆவார்களா?

 பாமக எம்.எல்.ஏ.  காடுவெட்டி குரு மற்றும் 19 பாமகவினர் மீது  தேசிய பாதுகாப்பு சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.  குரு உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் அவர்கள் மீதான வழக்குகளில் ஜாமீன் கிடைத்தாலும் மேலும் வழக்குகள் போட்டு உள்ளேயே வைத்திருக்க அரசு முயலும் என்பதால் விரைவில் விடுதலை ஆவது சந்தேகமே.

# வெளியே வந்தாலும் அபராதம் போடுவாங்களோ?

தயாளு அம்மாள் மனு 2ஜி விசாரணையை முடக்கும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நீதிபதி கருத்து

2ஜி வழக்கில் சாட்சி சொல்ல நேரில் ஆஜராக வேண்டும் என்பதிலிருந்து விலக்கு கோரிய தயாளு அம்மாள் மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் 3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது, இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி 2ஜி விசாரணையை முடக்கும் நோக்கத்துடன் தயாளு அம்மாள் மனு செய்துள்ளார் என்று கூறியுள்ளார்கள் மேலும் தயாளு அம்மாள் டெல்லி வந்தால் உடல்நிலை பற்றி நீதிபதிகள் முடிவு செய்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

# பாவம் அந்த அம்மா பெயரில் டிவியும் ஆரம்பித்து ஊழலையும் செய்துவிட்டவர்கள் சுகமாக இருக்க இப்போது இவர் அலைகழிக்கப்படுகிறார்.


பணியிடங்களில் பெண்கள் பாலியல் பிரச்சினைகளுக்கு உள்ளாவதை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழக அரசு அமைத்த 5 பேர் குழுவில் ஐபிஎஸ் அதிகாரிகள் சீமா அகர்வால், லலிதா லட்சுமி, நல்லசிவம் , வெங்கட்ராமன் ஐ.பி.எஸ்., வழக்கறிஞர் வைசாலக்குமாரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

# இந்த குழு சன் செய்திகள் மன்மத ராசாவை விசாரிக்குமா?

மீண்டும் மின்தடை அபாயம், சூர்யா நிதி உதவி, கெமிக்கல் ஆயுதங்களை ஊனமுற்ற குழந்தைகளின் மேல் சோதனை

மீண்டும் மின்தடை அபாயம்

நாளை நல்லரவு முதல் வேலை நிறுத்தம் செய்வதாக நெய்வேலி நிலக்கரி சுரங்க பணியாளர்கள் அறிவித்திருந்தனர்.

5% பங்கை விற்பதை குறித்து மத்திய அரசு எந்த மாற்றமும் தெரிவிக்காததால் வேலை நிறுத்தம் நடைபெறும் என்றே தெரிகிறது.

அனல் மின்நிலையத்தின் மூலாதாரம் நிலக்கரி தான் என்பதால் மீண்டும் மின்தடை ஏற்படலாம் என மக்களிடயே பீதி கிளம்பியுள்ளது.

# தயிரை வித்து வெண்ணைய் வாங்குற கதை இந்தியாவில் மட்டும் தான்.


நடிகர் சூர்யா நிதி

அகரம் என்ற அமைப்பின் மூலம் ஏழை குழந்தைகளுக்கு படிப்பளித்து வரும் நடிகர் சூர்யா உத்ராகான்ட் பேரிடர் நிகழ்வுக்கு 10 லச்சம் நிவாரண நிதி வழங்கினார்.

# ரசிகனால் சம்பாரிக்கிறவன் எல்லாத்துக்கும் சவுக்கடி.


கெமிக்கல் ஆயுதங்களை ஊனமுற்ற குழந்தைகளின் மேல் சோதனை செய்வதாக கொரிய மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு.

வடகொரியாவிலிருந்து எந்த தகவலும் கசியாதவாறு உலகின் பார்வையை இரும்புத்திரை கொண்டு மறைத்து வைத்துள்ளது. உயிரியல் மற்றும் வேதியல் ஆயுதங்களை ஊனமுற்ற குழந்தைகளின் மேல் சோதனை செய்வதாக தென் கொரியாவின் பிரிட்டிஷ் தூதரகத்திலிருந்து ஜோவான்னா ஹாசினிக், டெபுடி டைரக்டர் ஜெனரல் Citizens Alliance for North Korean Human Rights குற்றம் சாட்டியுள்ளார்கள்.

# நம்ம ஊர் கார்ப்பரேட் கம்யூனிஸ்ட்கள் இதுவும் அமெரிக்க சதி என்பார்களோ? 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media