டெல்லியில் அக்டோபர் 2012 முதல் ஏப்ரல் 2013 வரையிலான காலத்தில், மின்கட்டண உயர்வைக் கண்டித்து, மின் கட்டணம் செலுத்தாமல் இருந்தவர்களுக்கு, அவர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தில் பாதியை மானியமாக டெல்லி அரசே அளிப்பதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லி அரசு ரூ.6 கோடியை செலவிட உள்ளது. இந்த தகவலை ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
ஆனால், மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில், மின் கட்டணம் செலுத்தியவர்களுக்கு பணம் திருப்பித் தர மாட்டாது என்றும் சிசோடியா தெரிவித்தார்.