BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 13 July 2014

அப்பா , அம்மா எனக்கு கல்யாணம் செய்து வைக்கவில்லை , கேஸ் போடும் மகள்கள் !!


தங்களுக்கு உரிய நேரத்தில் தங்களுடைய பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கவில்லை என ஒரு நாட்டில் மகள்கள் வழக்கு தொடுப்பது அதிகரித்து வருகிறது . எந்த நாடு என்று தெரியுமா ?? இறுக்கமான சட்டங்களைக் கொண்ட சவுதீ அரேபியாவில் இந்த வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது ஆச்சரியமாக இருக்கிறது .

திருமணம் செய்வதில் காலம் தாழ்த்தப்படுவதால் பெண்கள் அதிகமாக மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன . எனவே சவுதீயில் உள்ள பெண்கள் தங்களது பெற்றோர்கள் தங்களுக்கு உரிய நேரத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர் .

எனவே இவ்வாறு வழக்கு தொடுப்பது அதிகரிப்பதைக் கண்ட சமூக ஆர்வலர் ஒருவர் , குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் பெண்கள் தங்கள் பெற்றோரின் அனுமதிக்காக காத்திராமல் தாங்களாகவே திருமணம் செய்து கொள்ளும் சட்டம் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்தார் .

கபடி அணி ஒன்றை வாங்கிய யோ யோ ஹணி சிங் !!


வட இந்தியாவில் பிரபலமான ராப் பாடகர் யோ யோ ஹணி சிங் . இவர் தமிழக மக்களுக்கு அனிருத் இசையில் , எதிர் நீச்சல் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி அறிமுகமானார் . மேலும் இவர் சூப்பர் ஸ்டாருக்காக பாடிய லுங்கி டான்ஸ் பாடலை நாம் அனைவரும் அறிவோம் .


இவர் இப்போது உலக கபடி லீக்கில் ஒரு கபடி அணியை வாங்கி உள்ளார் . அந்த அணிக்கு " யோ யோ டைகர்ஸ் " என பெயர் வைத்துள்ளார் . முதலில் அக்ஷய் குமார் ஒரு அணியை வாங்கினார் . அவரை தொடர்ந்து ஹணி சிங் வாங்கியுள்ளார் .

இந்த கபடி லீக் ஐந்து நாடுகளில் நடைபெற இருக்கிறது . வருகிற ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் இந்த லீக் தொடங்க இருக்கிறது .


கபடி போட்டிகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இவர்களது முயற்சிகளை பாராட்டுவது நமது கடைமை ஆகும் . 

இன்னும் 75 நாளில் மங்கல்யான் செவ்வாய் கிரகத்தைச் சென்று அடையும் !!


சனிக்கிழமையில் இருந்து 75 நாளில் மங்கல்யான் செவ்வாய் கிரகத்தைச் சென்று அடையும் ...

மங்கல்யான் தனது செவ்வாய் கிரகத்தை நோக்கிய 680 மில்லியன் கீ.மீ பயணத்தை தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறது . இந்த பயணத்தில் 525 மில்லியன் கீ.மீ இதுவரை கடந்துள்ளது . இந்த விண்கலம் செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை சென்று அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த விண்களம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தைச் சென்று அடைந்தால் , செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய நாடுகள் என்னும் மதிப்புமிக்க பட்டியலில் இந்தியாவுக்கு ஒரு இடம் கிடைக்கும் . இதுவரை அமெரிக்கா , ரஷ்யா , ஐரோப்பிய நாடுகள் மட்டுமே செவ்வாய் கிரகத்துக்கு விண்களம் அனுப்பியுள்ளது .

இந்த விண்கலத்தை வடிவமைக்க 450 கோடி ஆனது . இது நாசாவின் விண்கலத்தைக் காட்டிலும் ஆறு மடங்கு குறைந்த செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இன்று கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாள்




கடந்த 2002 ஆம் ஆண்டு ஜுலை13 ஆம் தேதி தான் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்ற நாட்வெஸ்ட் தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதி போட்டியில் மோதின. இது தான் உலகில் உள்ள அனைவரையும் இந்தியா கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைத்தது. இந்தியா ரசிகர்களிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தியது இந்த போட்டி தான்.

இதில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் நாசிர் ஹுசைனும், ட்ரஸ்கோதிக்கும் சதமடிக்க அந்த அணி 50 ஒவர்களில் 325 ரன்கள் எடுத்தது. அது நல்ல டார்கெட் என்றாலும் இந்தியாவின் தொடக்கம் நன்றாக அமைந்தது. கங்குலியும், சேவாக்கும் சேர்ந்து 106 ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட்டாக கங்குலி வீழ்ந்தார். அதன் பிறகு வந்த யாரும் நிலைத்து ஆடவில்லை. மேலும் 40 ரன்களை சேர்ப்பதற்குள்   சேவாக்,சச்சின்,டிராவிட் அவுட் ஆகிவிட்டனர். சச்சின் அவுட் ஆகி விட்டதால் பலரும் மேட்ச் பார்ப்பதை நிறுத்தி விட்டனர். அனைவரும் இந்தியாவின் தோல்வி உறுதி என நினைத்தனர்.

ஆனால் ஆட்டத்தின் போக்கு மாறியது. இளம் வீரர்களான யுவராஜும் ,கைஃபும் ஜோடி சேர்ந்தனர். 25 ஒவர்களில் 180 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்த ஜோடி 121 ரன்கள் சேர்த்தது. இறுதியில் ஆட்டத்தின் போக்கும் மாறியது. யுவராஜ் ஆட்டமிழந்த போது யார் ஜெயிப்பார்கள் என்ற பதட்டம் இருந்தது. கடைசி ஒவரில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. 3 பந்துகள் மீதம் இருக்கையில் வெற்றி நம் வசம் வந்தது. மைதானத்திற்குள் வெற்றியை கொண்டாடி கொண்டு இருந்த அனைவரின் பார்வையும் லார்ட்ஸ் மைதான பால்கனிக்கு வந்தது.

அங்கு இந்திய கேப்டன் கங்குலி தனது சட்டையை கழ்ற்றி சுற்றி கொண்ட் இருந்தார். இது அனைவரையும் கவர்ந்தது. இந்த போட்டியில் தான் கங்குலிக்கு என தனி ரசிகர் கூட்டம் உருவாகியது. இளம் வீரர்கள் மீதும் நம்பிக்கை வந்தது


இன்றும் கூகுளில் சென்று லார்ட்ஸ் பால்கனி என்று அடித்தால் அங்கு முதலில் வருவது கங்குலி சட்டையை கழற்றி சுற்றும் படம் தான்.

இனி பஸ்ஸில் பாட்டு பாடினால் 5 ஆயிரம் அபராதம்


பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் பேருந்தில் சென்றால் அது எப்போதும் கலகலப்பாக தான் இருக்கும். அவர்கள் பாட்டு பாடி கொண்டும், நடனம் ஆடி கொண்டும் செல்வார்கள். இது அவர்களுக்கு சந்தோஷத்தை தந்தாலும் இது சில சமயங்களில் பேருந்தில் உள்ள சக பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் சில நேரங்களில் பேருந்துகளில் இதனால் சண்டைகளும் நடக்கும்.



ஆனால் இப்போது அதற்கு கனடாவில் தடை விதித்து உள்ளார்கள். இதனை மீறி பேருந்தில் பாட்டு பாடினால் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றார். அங்கு உள்ள சில இசை குழுவினர் எப்போதும் பேருந்தில் பாட்டு பாடி கொண்டு தான் செல்வார்கள். இந்த உத்தரவு அவர்களது மகிழ்ச்சியை பறிப்பதாக உள்ளது என்று கருத்து தெரிவித்து உள்ளார்கள்.



தமிழக போலீஸார் அனைவருக்கும் இலவச சிம் கார்டு : புதிய திட்டம்


தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இலவச சிம் கார்டு வழங்கப்பட உள்ளது. எஸ்பி,டிஎஸ்பி,இன்ஸ்பெக்டர்,எஸ்ஐ  ஆகியோர் தகவல்களை பரிமாறி கொள்ள அவர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்பட்டு வருகிறது. எஸ்ஐ க்கு கீழ் பணிபுரியும் காவலர்கள் தகவல்களை பரிமாறி கொள்ள அவர்களுக்கு இலவச சிம் கார்டுகளை வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அவர்களுக்கு பி.எஸ்.என்.எல். சிம் வழங்கப்பட உள்ளது. இது அவர்களின் வேலைக்கு உதவியாக இருக்கும். இதற்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என கூறப்பட்டு உள்ளது.



இதன் மூலம் குற்றங்களை விரைவில் கண்டுபிடிக்கவும், அனைத்து காவல் நிலையங்களையும் ஒருங்கிணைக்கவும் பயன்படும்.அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு காவலருக்கும் 7 சிம் கார்டுகள் தரப்பட உள்ளது. இதனை அவர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் அதற்கான கட்டணத்தை அவர்களே செலுத்த வேண்டும்.

இந்த திட்டம் காவலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் விவகாரத்தில் சிம்புவின் அதிரடி முடிவு


தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடித்து வரும் நடிகர்கள் யார் என்றால் அது கமலும் சிம்புவும் தான். சிம்பு தனது சிறு வயதில் இருந்தே தனது தந்தை டி.ராஜேந்தரின் படங்களில் நடித்து வந்தார். அதன் பின்பு தானும் ஒரு நடிகனாக உயர்ந்தார். தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி கொண்டார். அவருக்கு என லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டமும் தரப்பட்டது.




அதன் பிறகு தான் இனி லிட்டில் இல்லை என்பதால் தனது பட்டத்தை "யங் சூப்பர் ஸ்டார் " என மாற்றி கொண்டார். ஆனால் அதற்கு பிறகு சிம்புவிற்கு வந்த எந்த படங்களும் வெற்றி பெறவில்லை. அந்த பட்டம் தனக்கு ராசியில்லை என்பதால் அந்த பட்டத்தை துறக்க தயாராகி விட்டார். இனி தன்னை யாரும் "யங் சூப்பர் ஸ்டார்" என்று அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் வருகிறது

 இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2022 ஆம் ஆண்டு செயல்பட உள்ளது இந்த தகவலை ரயில்வே வாரிய தலைவர் அருணேந்திர குமார் தெரிவித்தார். கடந்த 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் புல்லட் ரயிலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இருந்தது. இந்தியர்களின் நீண்ட நாள் கனவு செயல்பாட்டிற்கு வர போகிறது.



கடந்த 1980 களில் இருந்து இந்தியாவில் உள்ள ரயில்களில் வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை. சிறிய நாடுகளான தைவான் , வியட்னாம், மொனாக்கோ நாடுகளில் கூட அதிவேக ரயில்கள் வந்துவிட்டன. ஆனால் நாம் இன்னும் பின்தங்கி தான் இருக்கிறோம். இந்த ஆண்டு இறுதியில் தான் சில ரயில்களின் வேகம் அதிகரிக்க பட உள்ளது.


சீக்கிரம் வாப்பா புல்லட்டு !!

ஜெயில் கைதிகள் நடத்தும் ஏசி உணவகம்




டெல்லி திகார் சிறை சார்பில் ஏசி உணவகத்தை அமைக்க உள்ளார்கள். இந்த உணவகத்தில் சமைக்கும் மற்றும் பரிமாறும் வேலையை அந்த சிறை கைதிகள் செய்வார்கள். இதற்காக அவர்களுக்கு ஒட்டல் மேலாண்மை பயிற்சி வழங்கப்படுகிறது. இது டெல்லியில் உள்ள ஜெயில் ரோட்டில் இந்த உணவகம் செயல்ப்பட்டு வருகிறது. இன்னும் முழுமையாக இதனை தொடங்கவில்லை. அங்கு உள்ள கைதிகளுக்கு ஒரு மாத காலமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.


இதற்காக கொடிய குற்றம் புரியாத கைதிகளை தேர்வு செய்து உள்ளார்கள். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நல்ல நிலையில் உள்ளவர்களை இந்த வேலைக்கு தேர்ந்தெடுத்து உள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் அவர்களது தண்டனை காலம் 12 வருடங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும்.



இப்போது இந்த உணவகம் டெல்லிவாசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இங்கு தயாரிக்கப்படூம் உணவு நல்ல தரமானவையாக இருக்கும். இங்கு ஒரே நேரத்தில் 50 பேர் சாப்பிடலாம். காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை உள்ளது.


தரமான உணவுகளை நியாயமான விலையில் வழங்குவதே இவர்களது நோக்கம் ஆகும்.

இந்தியாவின் டாப் 10 செக்ஸியான விளையாட்டு வீராங்கனைகள்


இவர்கள் தான் இந்தியாவின் டாப் 10 செக்ஸியான விளையாட்டு வீராங்கனைகள் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு கூறுகிறது.


10. ஜூவலா குட்டா (பேட்மிண்டன்)



 9. சுனிதா ராவ் (டென்னிஸ்)



 8. சோனிகா காளிராமன் (ரெஸ்ட்லிங்)



 7. ப்ரச்சி டெலான் (நெட்பால்)



 6. அகன்ஷா சிங் (கூடைப்பந்து)



 5. சானியா மிர்சா (டென்னிஸ்)




 4. சாய்னா நெஹ்வால் (பேட்மிண்டன்)



 3. தீபிகா பல்லிகல் (ஸ்குவாஷ்)



 2. டானியா சச்தேவ் (செஸ்)



 1.ஷர்மிளா நிக்கோலட் (கோல்ப்)




லெஸ்பியன் செக்ஸிற்கு கட்டாயபடுத்தப்பட்ட யாஹூ ஊழியர்





பெண்ணோடு பெண் உறவு வைப்பது தான் லெஸ்பியன் செக்ஸ் எனப்படும். இந்த செக்ஸ் கூத்து தான் பிரபல ஐடி நிறுவனமான யாஹூவில் நடந்து உள்ளது. ஐடி நிறுவனங்களில் செக்ஸ் புகார்கள் வருவது புதிது அல்ல, ஆனால் லெஸ்பியன் செக்ஸ் என்று புகார் வருவது சற்று புதிது தான். நான் ஷி என்னும் இன்ஜினியர் தனது பாஸ் மரியா ஜங் என்பவரால் செக்ஸ் வைக்க கட்டாயபடுத்தப்பட்டு உள்ளார். இவர்கள் இருவரும் பெண்கள். கடந்த வருடம் இவர்கள் இருவரும் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்கள்.




தன்னுடன் செக்ஸ் வைத்து கொண்டால் அவளுக்கு அந்த நிறுவனத்தில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தருவதாகவும் அதற்கு மறுத்தால் அவரை வேலையை விட்டே தூக்கி விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இது குறித்து அந்த ஊழியர் யாஹூ நிறுவனத்திடம் புகார் தெரிவித்து உள்ளார். அதற்கு அந்த நிறுவனம் உண்மையை விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்போம் என்றது.

ரஜினியை விட அதிகம் சம்பளம் வாங்க போகிறார் ஹிரித்திக் ரோஷன்





இந்தியாவிலையே இப்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் என்றால் அது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக தான் இருக்கும். இவர் கடைசியாக நடித்த எந்திரன் படத்தில் இவரது சம்பளம் மட்டும் 50 கோடி என கூறப்பட்டது. ஏனென்றால் இவருக்கு என தனி ரசிகர் கூட்டம் உலகம் முழுவதும் உள்ளது. இவரது படம் எப்போது வரும் என காத்து கொண்டு இருக்கும் பல பக்தர்களும் இருக்கிறார்கள். இப்போது இவர் வாங்கும் சம்பளத்தை முந்துவதற்கு ஒருவர் வந்து விட்டார். அவர் வேறு யாரும் இல்லை பாலிவுட் ஸ்டார் ஹிரித்திக் ரோஷன் தான்.

இவர் அடுத்து நடிக்க போகும் படம் "மொகன்ஜதாரோ" ஆகும். இது ஒரு சரித்திர படம் ஆகும். அதனால் படப்பிடிப்பிற்கு அதிக நாள்கள் ஆகலாம், படப்பிடிப்பில் சில கடினமான காட்சிகள் இடம் பெறலாம். அது மட்டுமல்லாமல் பாலிவுட் படங்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இது ஒரு சரித்திர படம் என்பதால் அதிகம் பேரை கவரும் விதமாக இருக்கும். எனவே படத்தின் லாபம் உயரும் என்பதால் தனது சம்பளத்தை ஹிரித்திக் உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

18 வயதில் எம்.எல்.ஏ ஆக போகும் பள்ளி மாணவி

அமெரிக்காவில் இளம் வயது எம்.எல்.ஏ என்னும் சாதனையை பெறுவதறகாக ஒரு மாணவி காத்து கொண்டு இருக்கிறார். அந்த மாணவியின் பெயர் சாரா பிளர். அவருக்கு அடுத்த மாதம் தான் 18 வயது ஆக உள்ளது. இப்போது தான் தனது பள்ளி படிப்பை முடித்தார். இவர் மேற்கு விர்ஜினியா மாநிலத்தை சேர்ந்தவர்.



அங்கு உள்ள முறைப்படி குடியரசு கட்சியின் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான பிரைமரி தேர்தல் நடைபெற்றது. இதில் தான் இந்த மாணவி வெற்றி பெற்று உள்ளார்.நவம்பர் மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் லேய்ன் தேக்லை எதிர்த்து போட்டியிட உள்ளார் . இதில் இவர் வெற்றி பெற்றால் எம்.எ.ஏ தான்.

படிப்பை விட மக்கள் சேவையில் ஆர்வம் உள்ளதாக கூறி உள்ளார்.

அம்மாவை திணறடிக்க விஜய்காந்தின் புதிய திட்டம்





நாடாளுமன்ற தேர்தல் தோல்வியில் இருந்து இப்போது தான் தேமுதிக கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. மீண்டும் மக்களிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பெறுவதற்கு அந்த கட்சி முயற்சி செய்து வருகிறது. அடுத்து தொடங்க இருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்பது குறித்து அந்த கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் 2 மணி நேர பேச்சுவார்த்தை நடத்தினார் கேப்டன். அதில் சட்டசபையில் துறை வாரியான கூட்டத்தில் தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் பேச்சு அதிமுக அமைச்சர்களை திணறடிக்க  வேண்டும்.

இதன் மூலம் அதிமுக மீது மக்கள் நம்பிக்கை குறையலாம் ,அதனை பயன்படுத்தி கொள்ளலாம் என்று கேப்டன் திட்டம் வைத்து உள்ளார். அது மட்டுமில்லாமல் சட்டசபையில் அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேட்கும் கேள்விகள் புள்ளி விவரங்களோடு இருக்க வேண்டும் என்று கூறி அதற்கு உதவியும் செய்து வருகிறார்.


ஆனால் மக்களிடையே அந்த கட்சி நல்ல பேரை பெற வேண்டுமானால் கேப்டனும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும். எதிர்கட்சி தலைவராக அவருக்கு பொறுப்புகள் அதிகம் உள்ளது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் எதிர்கட்சி தலைவர்களாக இருந்த போது சட்டசபைக்கு போவது இல்லை என்று கேப்டன் குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் இப்போது அவரும் அதே தவறை தான் செய்து வருகிறார்.

இனி சட்டசபைக்கு லேட்டாக வந்தால் 500 ரூபாய் ஃபைன் : முதல்வர் அதிரடி உத்தரவு


இனிமேல் ராஜஸ்தான் மாநிலத்தில் தாமதமாக சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏ க்களிடம் இருந்து 500 ரூபாய் அபராதம் விதிக்குமாறு உத்தரவு பிறப்பித்து உள்ளார் அந்த மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா. அங்கே பாஜக வின் ஆட்சி நடைபெறுகிறது. சட்டசபைக்கு எம்.எல்.ஏ.க்கள் லேட்டாக வருவது நாளுக்கு நாள் இருந்து கொண்டே இருந்தது. அதிலும் குறிப்பாக ஆளும் கட்சி எம்.எல்.ஏ .க்கள் லேட்டாக வந்து கொண்டு இருந்தார்கள். இதற்கு முடிவு கட்ட நினைத்த முதல்வர் இனி லேட்டாக வந்தால் 500 ரூபாய் ஃபைன் என்றார். இந்த உத்தரவுக்கு பிறகும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு 15 பேர் தாமதமாக வந்தனர் , அவர்களிடம் இருந்து அபராத தொகை வசூலிக்கப்பட்டது.



500 ரூபாய் என்பது அவர்களுக்கு சாதாரண பணம் தான், ஆனால் அதனை அவர்கள் அபராதமாக கட்டும் போது மக்களிடம் அவர்களது நற்பெயருக்கு தீமை விளைவிக்கும். எனவே முதல்வரின் இந்த  உத்தரவு வரவேற்கத்தக்கது தான்.

மீண்டும் ஒரு அடி வாங்கியது பிரேசில் அணி, 4 வது இடத்தை பெற்றது




3 வது இடத்திற்கான போட்டி நடைபெற்றது . இதில் போட்டியை நடத்தும் பிரேசில் அணியும், கடந்த முறை இரண்டாம் இடம் பெற்ற நெதர்லாந்து அணிகளும் மோதின. ஜெர்மனி அணியிடம் பெற்ற தோலிவியை மறந்து விட்டு எப்படியாவது 3 வது இடம் பெற்று விடுவார்கள் என நம்பினார்கள் உள்ளூர் ரசிகர்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோ ஏமாற்றம் தான்.

ஆட்டத்தின் 2 வது நிமிடத்திலே பெனால்டி மூலம் நெதர்லாந்து வீரர் வான் பெர்சி கோல் அடித்தார். இதனால் பிரேசில் வீரர்களும் , ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். இருந்தாலும் நம்பிக்கையுடன் விளையாடினார்கள். ஆனால் 17 வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியினர் 2 வது கோலை அடித்தார்கள். பிரேசில் அணியினர் இறுதி வரை போராடினார்கள், ஆனால் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. 91 வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி 3 வது கோலை அடித்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணிக்கு 4வது இடம் தான் கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் காயத்தில் சென்றது.



 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media