பெரம்பலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மருதைராஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பெரம்பலூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. எதிரும் புதிருமாக உள்ள ராமதாசும், விஜயகாந்தும் கூட்டணி அமைத்துள்ளனர். பா.ஜனதாவிற்கு பெரும்பான்மை கிடைக்காது என கருத்து கணிப்பு கூறுகிறது. நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுவதாக ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. அது நரேந்திர மோடி அலை அல்ல. அது மாய வலை. மோடி என்ற மாய அலைக்காக ஓட்டுகள் விழப்போவதில்லை.
தமிழ் நாடு, புதுச்சேரியில் 40 பாராளுமன்ற தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றினால் மத்தியில் நமது முதல் அமைச்சர், பிரதமராகும் நிலை உருவாகும் சாதகமான சாத்தியக்கூறுகள் உள்ளன.
மாபெரும் ஊழல் செய்த ஆ.ராசா மீதான வழக்கில் நீதிமன்றம் நிரபராதி என்று தீர்ப்பு கூறிய பின்னர் அவர் தேர்தலில் நிற்கலாம். ஆனால் அதற்கு முன்னரே அவருக்கு இந்த தேர்தலில் தி,மு.க. சீட்டு வழங்கி உள்ளது.
பாரதீய ஜனதா கட்சி, சாதீய கட்சிகளுடன், கொள்கையே இல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. சாதிக்கட்சிகளை அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய விஜயகாந்த், பா.ம.க.வுடன் கைகோர்த்து செயல்படுகிறார். நரேந்திர மோடியை வைத்து நதிகளை இணைத்து தண்ணீர் கொடுக்கப்போகிறோம் என்கிறார். மோடி பிரதமரானால் ஈழம் பிறந்துவிடும் என்று வைகோ கூறுகிறார். இவர்கள் எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
திராவிட கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்துவந்த காங்கிரசை அனைத்து திராவிட கட்சிகளும் ஒதுக்கி வைத்துவிட்டன. தமிழ்நாட்டில் தனித்து விடப்பட்ட காங்கிரஸ் கட்சியில் தலைவர்களே அதிகம் உள்ளனர். தொண்டர்கள் இல்லாத காங்கிரஸ் கட்சி இனி தமிழகத்தில் தலைதூக்க முடியாது. மக்களே மூடுவிழா நடத்தி வைப்பார்கள்.
சட்டமன்ற உறுப்பினர் பணிகளையே இன்னும் 2 ஆண்டுகள் நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளதால் சமத்துவ மக்கள் கட்சி இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. எதிரும் புதிருமாக உள்ள ராமதாசும், விஜயகாந்தும் கூட்டணி அமைத்துள்ளனர். பா.ஜனதாவிற்கு பெரும்பான்மை கிடைக்காது என கருத்து கணிப்பு கூறுகிறது. நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுவதாக ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. அது நரேந்திர மோடி அலை அல்ல. அது மாய வலை. மோடி என்ற மாய அலைக்காக ஓட்டுகள் விழப்போவதில்லை.
தமிழ் நாடு, புதுச்சேரியில் 40 பாராளுமன்ற தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றினால் மத்தியில் நமது முதல் அமைச்சர், பிரதமராகும் நிலை உருவாகும் சாதகமான சாத்தியக்கூறுகள் உள்ளன.
மாபெரும் ஊழல் செய்த ஆ.ராசா மீதான வழக்கில் நீதிமன்றம் நிரபராதி என்று தீர்ப்பு கூறிய பின்னர் அவர் தேர்தலில் நிற்கலாம். ஆனால் அதற்கு முன்னரே அவருக்கு இந்த தேர்தலில் தி,மு.க. சீட்டு வழங்கி உள்ளது.
பாரதீய ஜனதா கட்சி, சாதீய கட்சிகளுடன், கொள்கையே இல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. சாதிக்கட்சிகளை அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய விஜயகாந்த், பா.ம.க.வுடன் கைகோர்த்து செயல்படுகிறார். நரேந்திர மோடியை வைத்து நதிகளை இணைத்து தண்ணீர் கொடுக்கப்போகிறோம் என்கிறார். மோடி பிரதமரானால் ஈழம் பிறந்துவிடும் என்று வைகோ கூறுகிறார். இவர்கள் எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
திராவிட கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்துவந்த காங்கிரசை அனைத்து திராவிட கட்சிகளும் ஒதுக்கி வைத்துவிட்டன. தமிழ்நாட்டில் தனித்து விடப்பட்ட காங்கிரஸ் கட்சியில் தலைவர்களே அதிகம் உள்ளனர். தொண்டர்கள் இல்லாத காங்கிரஸ் கட்சி இனி தமிழகத்தில் தலைதூக்க முடியாது. மக்களே மூடுவிழா நடத்தி வைப்பார்கள்.
சட்டமன்ற உறுப்பினர் பணிகளையே இன்னும் 2 ஆண்டுகள் நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளதால் சமத்துவ மக்கள் கட்சி இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.