BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 11 March 2014

இவர்களே மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போடுவார்களாம்! இவர்களே மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவிப்பார்களாம்! திமுகவின் நாடகம்.

திமுக ஆட்சி காலத்தில் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசுக்கும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கும் இடையே மீதேன் வாயு எடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது, ஆனால் தற்போது "காவிரி டெல்டாவில் மீதேன் வாயு எடுக்க எதிர்ப்பு தெரிவிப்போம்" என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களே ஒப்பந்தம் போடுவார்களாம், இவர்களே அதை எதிர்பார்களாம்.. மக்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா?

# இது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்டில் தெரிவியுங்கள்

சற்றுமுன் செய்திகள் படிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் லைக் போட்டு இணைந்திருங்கள்: சற்றுமுன் செய்திகள்

இணையதளம்: http://www.satrumun.net

திமுக தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் மற்றும் ஒரு நாடகம்

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு, தேர்தல் அறிக்கையிலோ எதிர்ப்பு.

திமுக தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் மற்றும் ஒரு நாடகம்.


மீத்தேன் வாயு எடுக்க மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் போட்டுவிட்டு தற்போது அதை எதிர்ப்பதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போலவே சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்க காங்கிரஸ் அரசு முடிவெடுத்தபோது அதற்கு ஆதரவு அளித்துவிட்டு தற்போது தேர்தல் அறிக்கையில் அன்னிய முதலீட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துள்ளது திமுக.

# மக்கள் இதையெல்லாம் மறந்து போக 10 ஆண்டுகளுக்கு முன்பா நடந்தது? ஒரு ஆண்டு தானே ஆகின்றது? மக்களின் மறதி மீது திமுகவுக்கு எத்தனை நம்பிக்கை!

# இது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்டில் தெரிவியுங்கள்

மேலும் பல சற்றுமுன் செய்திகள் படிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் லைக் போட்டு இணைந்திருங்கள்: சற்றுமுன் செய்திகள்

இணையதளம்: http://www.satrumun.net/

உருளை கிழங்கு வறுவலில் ஏன் தக்காளி சேர்க்கவில்லை என்று மனைவியை அடித்து கொலை செய்த கணவன்


உத்தரகாண்ட்டில் விரேந்தர் சிங் என்ற 32 வயதானவர், பூத்நாத் கோவிலில் பாதுகாப்பு காவலராக பணி புரிந்து வருகிறார்.  இவரது மனைவிக்கு 30 வயது.

விரேந்தர் அவரது வீட்டில், மனைவியிடம் அவர் சமைத்த உருளைக்கிழங்கு வறுவலில், ஏன்  தக்காளி சேர்க்கவில்லை என்று சண்டை போட்டு இருக்கிறார். சண்டை பெரிதாகி, வன்முறையில் ஈடுப்பட்ட விரேந்தர், அவர் மனைவியின் தலையை சுவற்றில் இடித்து இருக்கிறார். இதனால், தலையில் பலத்த காயம் அடைந்த அவரின் மனைவி உயிர் இழந்தார்.

விரேந்தருக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகிறது, அவருக்கு 10 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை யோகா மையத்திற்கு தீ வைப்பு


உலகம் முழுவதும் 152 நாடுகளில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை யோகா அமைப்பு செயல்படுகிறது. பாகிஸ்தான் இஸ்லாமாபாத் புறநகர் பகுதியிலும் வாழும் கலை யோகா மையம் அமைந்துள்ளது. இந்த மையத்திற்கு சிலர் சனிக்கிழமை அன்று தீ வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், “சனிக்கிழமை மாலை இதன் வளாகத்துக்குள் சுமார் 8 பேர் கொண்ட கும்பல் நுழைந்து அங்கிருந்த காவலாளிகளிடம், உள்ளே பணம் எங்கே இருக்கிறது? என கேட்டுள்ளனர். காவலாளிகள் தெரியாது என கூறியதும் அவர்களை கட்டிப்போட்டுவிட்டு கட்டிடத்துக்கு தீவைத்தனர். பிறகு தப்பியோடிவிட்டனர்” என்றனர்.

ஆசிரம நிர்வாகி மீனா கபீனா கூறுகையில், “அந்த கும்பல் காவலாளிகளை கட்டிப்போட்டு, கட்டிடத்துக்கு தீவைத்தது. மற்றபடி காவலாளிகளிடம் எதுவும் பேசவில்லை” என்றார். 2012-ல் பாகிஸ்தான் சென்ற ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தனது வாழும் கலை அமைப்புக்காக இந்த மையத்தை திறந்துவைத்தார். தாலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்த தாம் தயார் என்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.

மலேசிய விமானம் மாயமானதை நேரில் பாரத்தவர்கள் விளக்கம், 11 பயணிகளின் போன் பயன்பாட்டில் இருக்கிறது


239 பயணிகளுடன் கடந்த 8-ம் தேதி அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கிச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வியட்நாம் கடல் எல்லைக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து, திடீரென மாயமானது.

மலேசியாவின் கம்பங் கொடாக் பகுதியில் வசிக்கும் அலிஃப் ஃபாத்தி அப்துல் ஹாதி என்பவர் சம்பவத்தன்று அதிகாலை 1.45 மணியளவில் வானத்தில் பெரிய ஒளிப்பிழம்பு தோன்றியதாக தெரிவித்துள்ளார். இவர் கூறியதாவது, "சாதாரணமாக விமானத்தின் முகப்பு விளக்குகள் வானத்தில் உள்ள சிறிய நட்சத்திரங்கள் போல் காட்சியளிக்கும்.
ஆனால், நான் பார்த்த பிரமாண்டமான தீப்பிழம்பு, சுமார் 5 நிமிடங்கள் நீடித்தது. சில வினாடிகளுக்குள் தாய்லாந்து கடல் எல்லை நோக்கி நகர்ந்து சென்று, திடீரென்று மறைந்து விட்டது. " இவரது வீட்டில் இருந்து தெற்கே சுமார் 100 மைல் தொலைவில் வாழும் மீனவரான ஆஸித் இப்ராகிம் என்பவரும் அப்துல் ஹாதியின் வீடு இருக்கும் திசையை சுட்டிக்காட்டி, தீப்பற்றி எரிந்தபடி பறந்த ஒரு விமானம் தென்னந்தோப்பின் பின்புறமாக மறைந்து போனதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த விமானத்தில் சென்ற 11 பேரின் அலைபேசி இன்னும் இயங்கிக் கொண்டுள்ளன என அவர்களின் உறவினர்கள் பேட்டியளித்துள்ளனர்.

பா.ஜ.க. பிரச்சார கூட்டங்களில் இலவச டீ கொடுக்க கூடாது: தேர்தல் ஆணையம்


பா.ஜ.க. பிரச்சார கூட்டங்களில் தொண்டர்களை உற்சாகப்படுத்த இலவசமாக டீ வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை விட உத்தரபிரதேசத்தில் தான் பா.ஜ.க. பிரச்சார கூட்டங்களில் அதிக அளவில் இலவச டீ வழங்கப்படுகிறது. மோடி பெயரில் இலவச டீ கொடுப்பதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் தெரிவித்தன. இதையடுத்து உத்தரபிரதேச தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்கா இதுப்பற்றி ஆய்வு செய்தார்.

இலவசமாக டீ கொடுப்பதால் வாக்களர்கள் மனநிலை மாறும். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று தேர்தல் அதிகாரி உமேஷ் சின்கா கூறினார். எனவே, அவர் பா.ஜ.க. பிரச்சார கூட்டங்களில் இனி இலவச டீ கொடுக்க கூடாது என்று தடை விதித்தார்.

இதற்கு உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் அதிகாரியின் நடவடிக்கை பாரபட்சமானது என்று குற்றம் சாட்டிய அவர், "சமாஜ்வாடி கட்சியினர் டிஜிட்டல் டைரி கொடுத்து வருகிறார்கள். அது தேர்தல் அதிகாரி கண்ணுக்கு தெரியவில்லையா?",  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க. வேட்பாளர்களில் 90 சதவீதம் பேர் ஸ்டாலினின் ஆதரவாளர்கள், பணம் கொடுத்தே சீட் வாங்கியவர்கள்


தற்போது சென்னையில் தங்கியிருக்கின்ற அழகிரி, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சதவீதம் பேர் ஸ்டாலினின் ஆதரவாளர்கள். வேட்பாளர்கள் தேர்வில் முறையான நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. பணம் கொடுத்தவர்களுக்கே தேர்தலில் போட்டியிட சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.வேட்பாளர் தேர்வில் கட்சிக்குள் நிலவும் அதிருப்தி குறித்து நான் எதுவும் சொல்வதற்கில்லை. அதனை பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

மதுரையில் எனக்கு சீட் வழங்கவில்லை. நான் தான் சீட்டே கேட்கவில்லையே, சஸ்பெண்டு செய்தவர்களிடம் போய் எப்படி சீட் கேட்க முடியும்?

தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் டி.கே.எஸ்.இளங்கோவனை தவிர மற்றவர்கள் யாரும் கருணாநிதியால் முடிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் இல்லை. தலைவரால் கூட தான் விரும்பியவர்களை வேட்பாளராக அறிவிக்க முடியாத நிலை மிகவும் வேதனை அளிக்கிறது.

இந்த தேர்தலில் தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும். பல தொகுதிகளில் திமு.க. வேட்பாளர்கள் 3–வது இடத்துக்கு தள்ளப்படுவார்கள்.

டி.ஆர்.பாலு உருவ பொம்மை எரித்த‌ 75 தி.மு.க.வினர் மீது வழக்கு



பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியலை நேற்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 
இதில் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்போதைய மக்களவை உறுப்பினர் பழநிமாணிக்கத்தின் ஆதரவாளர்கள், தஞ்சை பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே, போலீசார் முன் அனுமதி இல்லாமல் டி.ஆர்.பாலுவின் உருவ மொம்மை எரித்தும், அவரது படத்தை அவமதித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தஞ்சை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு உள்ள வேட்பாளரை உடனே மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் போட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தஞ்சை ஒன்றிய அவைத் தலைவர் சோமு உட்பட 75 பேர்கள் மீது வழக்குப் பதிவுச் செய்துள்ளனர்.

எளிமையானவர் பழநிமாணிக்கம், அதிகார தோரணை உடையவர் டி.ஆர்.பாலு என்று கூறி, டி.ஆர் பாலுவின் உருவபொம்மைகள் தஞ்சையில் எரிப்பு

தஞ்சை தொகுதிக்கு தேர்தல் வேட்பாளராக டி.ஆர்.பாலுவை நேற்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்த நிலையில், தற்போதைய மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கத்தின் ஆதரவாளர்கள், கட்சி அலுவலகத்தில் கூடி, அங்கிருந்த பழநிமாணிக்கத்திடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அவர்களை பழநிமாணிக்கம் சமாதானம் செய்து அனுப்பினார்.
தஞ்சை ஒன்றிய திமுக அவைத்தலைவர் சோமு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அண்ணா சிலை எதிரில் கூடி, டி.ஆர்.பாலுவுக்கு எதிராக ஆவேசமாக முழக்கமிட்டனர். அவரது உருவப்படங்களை தாக்கியதுடன், 2 உருவபொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழநிமாணிக்கத்தையே வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

அப்போது பேசிய சோமு, “எல்லோரும் எளிதாக தொடர்பு கொள்ளக் கூடியவர் பழநிமாணிக்கம். ஆனால், டி.ஆர். பாலு அதிகாரத் தோரணையோடு நடக்கக் கூடியவர். சென்னையில் இருப்பவரை தஞ்சை தொகுதி மக்கள் எப்படி பார்க்க முடியும். பாலுவுக்கு மட்டும் சிறப்புச் சலுகை அளிக்கப்படுவதன் காரணம் என்ன? பாலு, வரும்போதே தனது சாதிப் பின்புலத்தோடே வருகிறார். இது கட்சிக்கு நல்லதல்ல. திமுக தலைமை பழநிமாணிக்கத்துக்கே இத்தொகுதியை வழங்க வேண்டும்” என்றார்.

வறுமையில் வாடிய சுமார் 15 கோடி பேரை, காங்கிரஸ் மீட்டெடுத்துள்ளது


மக்களவைத் தேர்தலை பிரச்சாரம் செய்து வரும் ராகுல் காந்தி, ராஜஸ்தான் மாநிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

பாஜக தலைவர்கள் ஊழல் குறித்துப் பேசுகிறார்கள் .ஆனால் கர்நாடகம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பாஜக ஆட்சி நிர்வாகத்தில் நிலவிய ஊழல்கள் பற்றி அவர்கள் பேசுவதில்லை. ஊழலைப் பொறுத்தவரை ராஜஸ்தான் மாநில பாஜக அரசு முதலிடத்தில் உள்ளது. ஆட்சியாளர்களின் ஊழல் விவகாரங்களை காங்கிரஸ் அம்பலப்படுத்தும்.

வறுமையில் இருந்து மக்களை மீட்கவும் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகள் கிடைக்கச் செய்யவும் காங்கிரஸ் பாடுபட்டு வருகிறது. ஏழைகளை காங்கிரஸ் ஒருபோதும் மறந்தது இல்லை. நாடு முழுவதும் வறுமையில் வாடிய சுமார் 15 கோடி பேரை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீட்டெடுத்துள்ளது. தற்போது வறுமைக் கோட்டுக்கு மேலேயும் நடுத்தர வர்க்கத்துக்கு கீழேயும் சுமார் 70 கோடி மக்கள் உள்ளனர். அவர்களை பொருளாதாரரீதியாக முன்னேற்ற, அவர்களுக்காக அரசியல் நடத்த காங்கிரஸ் விரும்புகிறது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தது போல் பேசும் ராகுல், ஆணவத்தின் உச்சத்தில் நிதிஷ், அறிவிஜீவி என்ற மிதப்பில் கபில்சிபல்-மோடி தாக்கு


பிஹார் மாநிலத்தில், பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்பொழுது அவர் பேசியதாவது:

 காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர் போல, பிறர் மீது குற்றம்சாட்டி பேசி வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் நடந்து வரும் ஊழல், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட எந்த பிரச்சினைகளைப் பற்றியும் பதில் அளிக்க இளவரசர் (ராகுல்) தயாராக இல்லை.

பிஹாரில் 2 சதவீத பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர் வசதி உள்ளது. அதேபோன்று ஹரியாணாவில் 40 சதவீதம் பள்ளிகளிலும், அசாமில் 7, ஹரியாணாவில் 40, மகாராஷ்டிரத்தில் 45, ராஜஸ்தானில் 22 சதவீத பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர் உள்ளது. குஜராத்தில் 71 சதவீத பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதி உள்ளது. தன்னை அறிவுஜீவி என்று கருதிக்கொள்ளும் அமைச்சர் ஒருவர் (கபில் சிபல்), ஆகாஷ் டேப்லட் கணினி வழங்கும் திட்டம் என்னவானது என்பது பற்றி உடனடியாக பதில் அளிக்க வேண்டும். அந்த திட்டத்துக்கு செலவிட்ட பணம் எங்கே போனது?

தான் பிரதமர் ஆகி விடுவோம் என்ற கனவில் மிதக்கும் (பிஹார் முதல்வர்) நிதிஷ்குமார், இப்போதெல்லாம் சரியான தூக்கமின்றி தவித்து வருகிறார். அவரின் ஆணவம் எவரெஸ்ட் சிகரத்தை விட மிகவும் பெரியது. உலகில் தன்னைவிட சிறந்தவர் யாருமில்லை என்ற எண்ணம் அவருக்கு உள்ளது.

இவ்வாறு மோடி பேசியது மிகவும் சரி என்று நினைப்பவர்கள், லைக் போடுங்கள், இல்லையெனில், உங்கள் கருத்தை கமென்டி செய்யுங்கள்!

சீட்டு கிடைக்காது என்று முன்பே தெரிந்து கொண்ட பழனிமாணிக்கம், அரசியலில் இருந்து விலகுகிறார் ?

சீட்டு கிடைக்காது என்று முன்பே தெரிந்து கொண்ட சுனா பானா (சு.பழனிமாணிக்கம்), அரசியலில் இருந்து விலகுகிறார் பழனிமாணிக்கம்?

திமுகவுடன் கூட்டணி வைக்க மீண்டும் உருவாகும் தமாகா?

ரெக்கை கட்டி பறக்குமா மூப்பனாரு சைக்கிள்? திமுகவுடன் கூட்டணி வைக்க மீண்டும் உருவாகும் தமாகா

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media