BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 18 July 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special News


செக்ஸ் நேரத்தில் நேரத்தில் பெண்களுக்கு ஆண்கள் மீது பிடித்ததும் பிடிக்காததும்
http://www.satrumun.net/2014/07/women-like-and-dislike-at-that-moment.html

மாபெரும் ஆன் லைன் மார்க்கெட், ஆன் லைன் விளம்பரங்கள் செய்யலாமா? அறியாத பல தகவல்கள்
http://www.satrumun.net/2014/07/online-marketing-industry-in-tamil.html

இனி பிளிப்கார்ட்டில் 'காண்டம்' போன்ற செக்ஸ் பொருட்கள் வாங்கலாம்
http://www.satrumun.net/2014/07/blog-post_1940.html

சதுரங்க வேட்டை - திரை விமர்சனம்
http://goo.gl/O702dn

மலேசியன் ஏர்லைன்ஸ் தாக்குதல் : நீங்கள் பார்த்திடாத புகைப்படங்கள்
http://www.satrumun.net/2014/07/blog-post_3324.html

பைலட்டின் புத்திசாலிதனத்தால் மோடி உயிர் தப்பினார்
http://www.satrumun.net/2014/07/blog-post_8478.html

கின்னஸ் சாதனை புரிந்தார் சச்சின் டெண்டுல்கர்
http://www.satrumun.net/2014/07/blog-post_4003.html

வரலாறு காணாத அளவு லே-ஆஃப், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சோதனை
http://www.satrumun.net/2014/07/blog-post_9803.html

கன்னியாகுமரியை தமிழகத்தில் இருந்து பிரித்து கொடுக்க வேண்டுமாம் , சொல்லுகிறது காங்கிரஸ் !!!
http://www.satrumun.net/2014/07/blog-post_4754.html

பேஸ்புக்கில் 100 மில்லியன் லைக்குகள் பெற்று புதிய சாதனை படைத்தார் பாடகி ஷகிரா
http://www.satrumun.net/2014/07/100.html

10 ஆண்டுகளுக்கு பிறகு கும்பகோணம் தீ விபத்து வழக்கில் தீர்ப்பு
http://www.satrumun.net/2014/07/10_18.html

ரஜினி பற்றி வந்த செய்தி பொய்யானது, நலமுடன் இருக்கிறார்
http://www.satrumun.net/2014/07/blog-post_18.html

இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் 'டாக்டர்' ஆகிறார்
http://www.satrumun.net/2014/07/blog-post_295.html

செக்ஸ் நேரத்தில் பெண்களுக்கு ஆண்கள் மீது பிடித்ததும் பிடிக்காததும்

செக்ஸ் உறவுக்கு முன்பு ஆண்களிடம் உங்களுக்கு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய பட்டியலையே கொடுப்பார்கள். அதில் முக்கியமானது செக்ஸ் உறவு என்பதை உடல் ரீதியானதாக  பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் அப்படி கருதுவதில்லை, அதை மனதோடும் தொடர்பு படுத்தி உண்மையான உடல் மற்றும் மன இன்பத்தை அனுபவிப்பவர்கள்
பெண்கள். உடலும், மனதும் இணையும் உறவாகவே உடல் உறவை பெண்கள் கருதுகிறார்கள்.

செக்ஸின் போது மியூசிக்? எதுக்கும் கேட்டுக்குங்கப்பா

சில ஆண்கள் மென்மையான இசையை கேட்டுக் கொண்டே செக்ஸில் ஈடுபட விரும்புவார்கள். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது பிடிப்பதில்லை. இசை உண்மையான லயிப்பைத் தருவதில்லை என்பது பெண்கள் கூறும் காரணம். எனவே உங்களது துணைக்கு இசை பிடிக்குமா, இல்லையா என்பதை அறிந்து கொண்டு இசையை பரவ விடுங்கள்.

செல் போன் பேச்சி, செக்ஸின் போது போச்சி

இன்று கிட்டத்தட்ட அத்தனை பேருமே 'செல்'லும் கையுமாகத்தான் உள்ளனர். சாப்பிடும்போதும் செல்போனில் பேச்சு, குளிக்கும் போதும் கூட சிலர் பேசப் பார்த்திருக்கலாம். ஆனால் உறவின்போது மட்டும் எப்பாடுபட்டாவது இந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுங்கள், உறவு தொடர்பான பேச்சுக்களை மட்டுமே 'ஆன்' செய்து வைத்திருங்கள். பெண்களுக்கு இந்த செல்போன் பேச்சு, குறிப்பாக 'அந்த' நேரத்தில் அரட்டை அடிப்பது அறவே பிடிக்காது. அவசரக் குடுக்கைகளை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது. எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள். உடல் ரீதியான தழுவல்களும் சரி, உறவும் சரி, மென்மையாக, அதேசமயம், சீரான வேகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.


ஐஸ், தாஜா, கெஞ்சுவது நோ நோ, ஸ்டெரெயிட்டா மேட்டர்க்கு வா

பெரும்பாலான பெண்களுக்கு ஐஸ் வைப்பது, கெஞ்சுவது, தாஜா செய்வது பிடிக்காது. நேர்மையாக, நேருக்கு நேராக கேட்பதும், தெளிவாகப் பேசுவதும்தான் பல பெண்களுக்குப் பிடித்திருக்கிறது. அதைத்தான் அவர்கள் ஆண்களிடம் பொதுவாக எதிர்பார்க்கிறார்கள். எப்போது ஒருவர் தாஜா செய்கிறாரோ, ஐஸ் வைக்கிறாரோ அவர் நிச்சயம் வெளிப்படையான ஆள் இல்லை என்று பெண்கள் கருதத் தொடங்கி விடுகிறார்களாம். எனவே உறவுக்காக கெஞ்சுவதை தவிருங்கள். மாறாக, வெளிப்படையாக பேசுங்கள். இன்று வேண்டாம், இன்னொரு நாள் பார்ப்போம் என்று உங்கள் துணை கூறினால் உடனே முகம் சுளிக்காதீர்கள். இதன் மூலம் உங்கள் துணையின் மனதை நீங்கள் முழுமையாகஆக்கிரமிக்க முடியும். செக்ஸ் உறவின்போது பெண்கள் முழுமை அடைய நிறைய நேரம் பிடிக்கும். ஆண்களுக்கோ சில நிமிடங்களில் எல்லாம் நெருங்கி வந்து முடிந்தும் விடும். அதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. முத்தமிடுவது, தொடுதல், உரசுதல், தழுவுதல் உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள்.ஆண்கள் இதையெல்லாம் செய்வதற்கு பொறுமை இழத்தல் கூடாது.

நோ அவசரம், நிதானமே முக்கியம்

மேலும் ஒரு பெண்ணுக்கு உச்ச நிலை ஏற்பட 2 நிமிடங்களுக்கும் மேலாகும். எனவே எந்த அளவுக்கு பெண்ணின் உணர்வுகளை தூண்ட முடியுமோ, அந்த அளவுக்கு இன்பத்தில் பூர்த்தி நிலை கிடைக்க வாய்ப்புண்டு. மாறாக அதி வேகமாக உறவுக்குப் போக முற்பட்டால் இன்பத்திற்குப் பதில் கசப்புதான் வந்து சேரும். முத்தமிடுவதில் சொதப்புவதை தவிருங்கள். எந்த மாதிரியான முத்தம் உங்களது துணைக்குப் பிடிக்கும் என்பதை அறிந்து அதை வாரிக் கொடுங்கள். அது உங்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்க உதவும். முத்தம் கொடுப்பதற்கு முன்பு வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் - அது ரொம்ப ரொம்ப முக்கியம். உறவின்போது நடைபெறும் முன்விளையாட்டுக்களில் முக்கியமான ஒரு விஷயம் உணர்வுகளைத் தூண்டும் பேச்சு. இது இரு பாலாருக்கும் முக்கியமானது. இருவரும் பேசுவதற்கு நிறைய விஷயங்களை யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும். போர் அடிப்பது போன்ற பேச்சு்க்களை அறவே தவிருங்கள். உணர்வின் வேகம் கூட வேண்டும்- நமது பேச்சின் போக்கில். அப்படி இருக்குமாறு பேச்சுக்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சமயத்தில் 'சித்தாந்தம்' பேசுவதை விட்டு விட்டு 'செக்ஸி'யாக பேசுவதற்கு முயலுங்கள்.

எல்லவற்றுக்கும் பெர்மிஷனா? தூக்கி போடுங்க‌

எல்லாவற்றையும் விட முக்கியமானது, எதைச் செய்தாலும் அதற்கு 'பெர்மிஷன்' கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பது. உங்களது துணைக்குப் பிடித்ததை அறிந்து வைத்துக் கொண்டு அதில் ஈடுபட்டு அவரை உங்கள் வசப்படுத்த வேண்டும். மாறாக, இப்படி கட்டிப்பிடிக்கவா, இங்கு முத்தமிடவா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப செய்து அவரை முழுமையாக உங்களுக்குள் கொண்டு வருவதன் மூலம், இன்பமான உறவுக்கு வழி கோல முடியும். இப்படி சின்னச் சின்னதாக நிறைய உள்ளன. இவற்றைப் புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு தெளிந்து செயல்படும் ஆண்கள் மீது பெண்களுக்குக் கொள்ளைப் பிரியம் உண்டாகுமாம்.

இனி பிளிப்கார்ட்டில் 'காண்டம்' போன்ற செக்ஸ் பொருட்கள் வாங்கலாம்





ஆண்கள் கடைக்கு சென்று வாங்க தயங்கும் பொருட்களில் ஒன்று காண்டம். இதனை வாங்குவதற்கு அவர்கள் கூச்சப்படுவார்கள் . இதனை யாராவது தவறாக பார்ப்பார்களே என ஒருவித சந்தேகத்துடன் இருப்பார்கள். அப்படிபட்டவர்களுக்கு இனி கவலையில்லை . செக்ஸுக்கு தேவையான பொருட்களை இனி பிளிப்கார்ட் இணையதளம் மூலம் வாங்கி கொள்ளலாம். அவர்கள் வீட்டிற்கே கொண்டு வந்த 'அந்த' பொருளை தந்து விடுவார்கள்.


பிளிப்கார்ட் நிறுவனம் இதற்காக செக்ஸ் தொடர்பான விற்பனை பிரிவை தொடங்கி உள்ளது. இந்தியாவில் இந்த பொருட்களின் வியாபாரம் 1000 கோடியில் நடைபெற்று வருகிறது. அதனால் இதற்கு மக்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைக்கும். வாடிக்கையாளரின் கூச்சத்தை புரிந்து கொண்டு இது வெளியே தெரியாத அளவிற்கு கச்சிதமாக பேக் செய்து தருவார்கள்.



சரி விடுங்கப்பா, இந்தியாவின் மக்கள் தொகை உயராமல் இருந்தாமல் சரி தான். 2 பேருக்கு நல்லதுனா, எதுவுமே தப்பு இல்ல.

பேஸ்புக்கில் 100 மில்லியன் லைக்குகள் பெற்று புதிய சாதனை படைத்தார் பாடகி ஷகிரா

பாப் பாடகி ஷகிரா பேஸ்புக்கில் புதிய சாதனை புரிந்து உள்ளார். பேஸ்புக் பக்கங்களில் தனி நபர் பக்கத்திற்கு 100 மில்லியன் லைக்குகள் வந்தது முதல்முறையாக இவரது பக்கத்திற்கு தான். இந்த சாதனை இன்று தான் நிகழ்த்தப்பட்டது. இவரது பாட்டுக்கு பல கோடி ரசிகர்கள் இருந்தாலும் இவரது அழகுக்கு என பல கோடி ரசிகர்கள் உள்ளார்கள். இவர் இடுப்பை சுற்றும் அழகு பலரையும் கவர்ந்து உள்ளது.



5 ஆண்டுகளுக்கு முன்பு 318,000 மாக இருந்த ஷகிராவின் பக்கம் இன்று 100 மில்லியன் லைக்குகளை தொட்டு உள்ளது. இவரது ரசிகர்களின் முக்கிய காரணமாக இருப்பது கால்பந்து உலக கோப்பையும் தான். தான் கடந்த உலக கோப்பையில் வக்கா வக்கா, இந்த உலக கோப்பையில் லா லா என பல கோடி ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார்.



இந்த சாதனை குறித்து ஷகிராவிடம் கேட்டதற்கு , இதனை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் இதனால் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சாதனை பிறரால் முறியடிப்பதற்கு கடினமான சாதனை என்று கூறினார். 

மலேசியன் ஏர்லைன்ஸ் தாக்குதல் : நீங்கள் பார்த்திடாத புகைப்படங்கள்

நேற்று மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விபத்து நடந்து விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
















இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் 'டாக்டர்' ஆகிறார்




தனது இசையின் மூலம் இந்தியாவின் பார்வையை தமிழுக்கு திருப்பியவர் ஏ.ஆர். ரகுமான் ஆவார். அதே இசைக்காக ஆஸ்கர் விருது பெற்று உலகின் பார்வையை இந்தியாவின் பக்கம் திருப்பினார் . இவரது இசைக்கு இந்த உலகமே அடிமையாகும். குறிப்பாக இவரது மெலோடி பாடல்களுக்கு பல அடிமைகள் உள்ளார்கள். இவருடைய இன்னொரு சிறப்பு இவரது எளிமை. ஆஸ்கர் விருது பெற்ற போது கூட எல்லா புகழும் இறைவனுக்கே என்று எளிமையாக கூறினார்.

இப்படி பல சிறப்புகளை பெற்று உள்ள இவருக்கு டாக்டர் பட்டத்தை கொடுக்க உள்ளது அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைபள்ளியான பெர்க்லீ. இந்த கௌரவ டாக்டர் பட்டம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி அன்று கொடுக்கப்பட உள்ளது. இந்த விழா பாஸ்டன் நகரில் நடைபெற உள்ளது. அவரை கௌரவிக்கும் விதமாக அவரது இசையில் உருவான சில பாடல்களை வைத்து ஒரு இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு அவரே தலைமை தாங்க உள்ளார்.


இனி இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் , டாக்டர் ஏ.ஆர்.ரகுமான் ஆக போகிறார்.

பைலட்டின் புத்திசாலிதனத்தால் மோடி உயிர் தப்பினார்





நெதர்லாந்தில் இருந்து கோலாலம்பூரி நோக்கி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சுட்டு தாக்கப்பட்டது. இது யாருடைய செயல் என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் பலியாகினர். இந்த தாக்குதல் உக்ரைன் அருகே நடந்து உள்ளது. இந்த வழியாக பிரிக்ஸ் மாநாட்டை முடித்து விட்டு மோடி வருவதாக இருந்தது.

மோடி ஏர் இந்தியா 001 என்னும் விமானம் மூலம் இந்தியா நோக்கி வந்து கொண்டு இருந்தார். அந்த விமானம் பிராங்பர்ட் விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்த அந்த பாதையில் தாக்குதல் நடத்தப்பட்டது மோடி வந்து கொண்டு இருந்த விமானத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . இதனை புரிந்து கொண்ட அந்த விமானத்தின் பைலட் புத்திசாலித்தனமாக விமானத்தை வேறு பாதையில் செலுத்தினார். இதனால் அந்த விமானத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

இந்த தாக்குதலுக்கு காரணம் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் என்று கூறப்படுகிறது.

ரயில்வே துறையை மேம்படுத்த மோடி அரசின் 10 அம்ச திட்டங்கள்




ரயில்வே சேவை மக்களுக்கு தரமானவையாக இருக்க வேண்டும் என மோடி அரசு தீவிரம் காட்டி உள்ளது. இதற்காக ரயில்வே துறையின் மூலம் 10 அம்ச திட்டங்களை அறிவித்து உள்ளார்கள். அவை,

* ரயில் நிலையங்கள் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும்.

* மெயில்,எக்ஸ்பிரஸ் ரயில்களின் புறப்படும் நேரமும், சென்றடையும் நேரமும் சரியாக கடைப்பிடித்தல் இருக்க வேண்டும்.

* பயணிகளுக்கு தரப்படும் போர்வைகள் தரமானவையாக இருக்க வேண்டும்.

* காத்திருப்போர் பட்டியல் அதிகம் உள்ள ரயில்களின் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் இருக்க வேண்டும்.

* ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலில் வழங்கப்படும் உணவுகள் தரமானவையாகவும் சரியான விலையிலும் விற்கப்பட வேண்டும்.

* நேரில் சென்று டிக்கெட் எடுப்பவர்களுக்கு வசதியாக தானியங்கி இயந்திரம் ரயில் நிலையங்களில் வைக்கப்படும்.

* விவசாயம் சமந்தமான பொருட்களை ரயிலில் எடுத்து செல்வதற்கு அனுமதி அளித்தல்.

* ரயில் பயண நேரத்தை முடிந்த அளவு குறைத்தல்.

* குளிர்சாதன பெட்டிகளில் குளிர்சாதனங்கள் தரமானவையாக இருக்க வேண்டும். அது சீரான குளிர்ச்சியை தர வேண்டும்.

* சுரங்க பாலம் திட்டங்களை நெடுஞ்சாலை துறையினர் உதவியுடன் விரைந்து முடித்தல்.

மாபெரும் ஆன் லைன் மார்க்கெட், ஆன் லைன் விளம்பரங்கள் செய்யலாமா? அறியாத பல தகவல்கள்


இந்தியாவில் விளம்பரங்களுக்காக செலவழிக்கப்படும் தொகை ஒரு ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய்கள், அதில் 46% அச்சு ஊடகங்களுக்கும், 47% தொலைகாட்சி ஊடகங்களுக்கும் செலவழிக்கப்படுகின்றது. 7% மட்டுமே இணையத்தில் செலவழிக்கப்படுகிறது, 7% என்பது 1,050 கோடி ரூபாய்களாகும்.

இணையத்தில் விளம்பரங்களுக்கு செலவழிப்பதில் முதலிடத்தில் வங்கிகளும், கடன் தரும் நிறுவனங்களும் உள்ளன, இதை அடுத்த இடத்தில் வேலை வாய்ப்பு விளம்பரங்கள், அதற்கடுத்து படிப்பு மற்றும் ட்ரெயினிங் விளம்பரங்கள் உள்ளன.

ஆன் லைன் விளம்பரங்களை பற்றி பெரிய அளவில் வணிக நிறுவனங்கள் இது வரை கண்டு கொள்ளவில்லை, அதுவும் குறிப்பாக தமிழில் இது குறித்து விழிப்புணர்வே வணிக நிறுவனங்களிடம் இல்லாமல் உள்ளது. பேப்பர், டிவி ஊடகங்களை விட ஆன் லைன் விளம்பரங்கள் துல்லியமானது. மிகச்சரியாக எந்த கஸ்டமரிடம் கொண்டு சேர்க்க வேண்டுமோ அவர்களிடம் சேர்க்க இயலும்.

இணையத்தின் அபார வளர்ச்சியும், ஸ்மார்ட் போன்களின் மாபெரும் வளர்ச்சியும் ஆன் லைன் விளம்பரங்களை முக்கியமான இடத்தில் கொண்டு வந்துள்ளது, ஆன் லைன் விளம்பரங்களை வணிக நிறுவனங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது அந்நிறுவனங்களுக்கு தான் தான் இழப்பாகும்.

இணைய விளம்பரங்களின் சிறப்பம்சங்களாக கீழ் கண்டவைகளை குறிப்பிடலாம்

1) துல்லியமாக அளவிடும் வசதி, உங்கள் விளம்பரங்கள் எத்தனை பேரின் பார்வைக்கு சென்றுள்ளது, எவ்வளவு பேர் உங்கள் விளம்பரத்தை அழுத்தி உங்கள் தளத்திற்கு வந்துள்ளார்கள், என்கிற கணக்கு ஆன் லைன் விளம்பரங்களில் துல்லியமாக அளக்கலாம், இதையே டிவி அல்லது பேப்பர் விளம்பரங்களில் செய்ய இயலாது.

2) டிவி, பேப்பர் விளம்பரங்களின் விலை மிக அதிகமானது, சிறு, குறு தொழில் வணிக நிறுவனங்கள் செலவு செய்ய இயலாது, ஆனால் ஆன் லைன் விளம்பரங்கள் ஒரு டாலருக்கு கூட செய்ய இயலும்.

3) டிவி, ப்ரின்ட் விளம்பரங்களை விட ஆன்லைன் விளம்பரங்கள் விலை மலிவானது

4) உங்களுடைய துல்லியமான கஸ்டமர்களிடம் கொண்டு சேர்க்க இயலும், உதாரணத்திற்கு மதுரையில் உள்ள குறிப்பிட்ட கடை விளம்பரம் மதுரை கஸ்டமர்களுக்கு மட்டும் கொண்டு சேர்க்க வேண்டுமெனில் இணையத்தில் அதை செய்ய இயலும், ஆனால் டிவி விளம்பரங்களிலோ பேப்பர் விளம்பரங்களிலே அதை செய்ய இயலாது. குறிப்பிட்ட டார்கெட் ஆடியன்சிற்கு விளம்பரம் செய்ய இயலும்

Cost per mille (CPM)
ஆயிரம் முறை உங்கள் விளம்பரங்கள் காண்பிப்பதற்கு எவ்வளவு விலை என்பது தான் CPM  ஆகும், உதாரணத்துக்கு ஒரு CPM(1000) க்கு 30 ரூபாய் என்றால் உங்கள் விளம்பரங்களை ஒரு இலட்சம் முறை காண்பிப்பதற்கு 30X100 = 3000 ரூபாய் ஆகும்.

Click-through rate (CTR)
நூறுமுறை உங்கள் விளம்பரம் காண்பிக்கப்படும் போது எத்தனை முறை அந்த விளம்பரம் கிளிக் செய்யப்படுகிறது என்பதை Click-through rate (CTR) என்பார்கள். எடுத்துக்காட்டாக நூறுமுறை உங்கள் விளம்பரம் காண்பிக்கப்படும் போது அதை இரண்டு பேர் கிளிக் செய்திருந்தால் Click-through rate  இரண்டு ஆகும்.

Cost Per Click (CPC) 
Cost Per Click என்பது ஒவ்வொரு முறை உங்கள் விளம்பரம் கிளிக் செய்யப்படும் போதும் அதற்கான கட்டணம் எவ்வளவு என்பது.

பெரும்பாலும் ஆன்லைன் விளம்பர கட்டணங்கள் Cost Per Click (CPC) அல்லது Cost per mille (CPM) முறையில் தான் நிர்ணயிக்கப்படுகின்றன.

என்னென்ன மாதிரியான விளம்பரங்கள் ஆன் லைனில் செய்யலாம்.

அனைத்து விளம்பரங்களையும் ஆன்லைனில் செய்யலாம். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மாதிரியான விளம்பர யுக்திகளை கையாள வேண்டும்.

ஆன்லைன் ஸ்டோர்ஸ், ஆன்லைன் புத்தகங்கள் விற்பனை, திரைப்படங்கள், ப்ராப்பர்ட்டி மற்றும் பில்டர்ஸ், துணிக்கடைகள், நகைக்கடைகள் என அத்தனையையும் நீங்கள் ஆன்லைனில் விளம்பரம் செய்யலாம்.

ஆன் லைன் விளம்பரங்களில் செய்யப்படும் தவறுகள் என்ன?

ஒரு பிரிண்ட் மீடியாவிலோ, டிவி மீடியாவிலோ விளம்பரம் செய்பவர்கள் நேரடியாக போய் செய்வதில்லை, அதற்கென உள்ள ஏஜென்சிகளிடம் சென்று ஆலோசித்து செய்கின்றார்கள், ஆனால் ஆன் லைன் விளம்பரங்கள் செய்யும் போது அது குறித்த புரிதல்கள், எந்த மாதிரியான விளம்பரங்களுக்கு எப்படிபட்ட ஆன்லைன் விளம்பர  உத்திகளை பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் தமிழில் உள்ள சில பிரபல பத்திரிக்கை இணையதளங்களிலோ கூகிள் ஆட்வேர்ட்சிலோ விளம்பரங்களை கொடுத்து விட்டு பணம் போய்விட்டது, ரிட்டன்ஸ் வரவில்லை, ஆன்லைன் விளம்பரமே வேஸ்ட் என்று தெனாலிராமன் பூனை சூடுபாலை குடித்த கதையாக ஆன்லைன் விளம்பரம் பக்கமே வராமல் போய்விடுவார்கள்.

கூகிள் ஆட்வேர்ட்ஸ் விளம்பரம் தருவதிலும் பல நுணுக்கங்கள் உள்ளன, எவ்வளவு பணம் எந்த அளவு விளம்பரங்களுக்கு, எத்தனை கிளிக்குகளுக்கு செட்டிங் செய்வது என்று உள்ளது, இவைகள் தெரியாமல் பலரும் கூகிள் ஆட்வேர்ட்சில் தவறான செட்டிங் செய்து பணத்தை இழந்து விட்டு ஆன்லைன் விளம்பரமே வேஸ்ட் என்று கூறிவிடுகிறார்கள்.

பிராண்டிங் விளம்பரம் Branding

ஒரே ஒரு முறை டிவியில் ஒரு விளம்பரம் காட்டினால் அந்த ப்ராண்ட் பெயர் மனதில் நின்றுவிடுமா? அல்லது ஒரே ஒரு முறை பேப்பரில் விளம்பரம் செய்துவிட்டால் அந்த பிராண்ட் பெயர் மனதில் நிற்குமா? தொடர்ந்து செய்ய வேண்டும் அல்லவா அது போலத்தான்  ஆனால் ஆன்லைனில் தொடர்ந்து விளம்பரம் செய்யவேண்டும், இதற்கு பேனர் விளம்பரங்கள் மற்றும் சிபிஎம் முறை சரியானதாகும், மேலும் ப்ராண்டிங் விளம்பரங்களில் கிளிக்கிற்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது, அது எப்படி படிப்பவர்களின் பார்வையில் படுகிறது என்பதற்கான முக்கியத்துவத்தை தர வேண்டும்.

டிரைவ் டிராபிக் Drive Traffic

ஒரு குறிப்பிட்ட நிகழ்வு, அல்லது தள்ளுபடி குறித்து மக்களுக்கு அதிகமாக சென்று சேர வேண்டும், அது ப்ராண்டிங்காக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை குறிவைத்து விளம்பரம் செய்வதென்றால் டிரைவ் டிராபிக் என்று சொல்லப்படும் முறையை கையாள வேண்டும், இது அதிக அளவில் டெக்ஸ்ட் விளம்பரங்களை பயன்படுத்தலாம், இதற்கு Cost Per Click முறையை கையாள வேண்டும்.

உங்களுக்கு ஆன்லைன் விளம்பரங்கள் செய்ய வேண்டுமா? தினமும் இலட்சக்கணக்கான தமிழர்களை உங்கள் விளம்பரங்கள் சென்று சேர வேண்டுமா?

10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைனில் முன் அனுபவமுள்ள தமிழின் மிகப்பெரிய ஆன்லைன் விளம்பர நெட்வொர்க்கான எங்கள் நெட்வொர்க்கில் விளம்பரம் செய்யுங்கள். அனைத்து தளங்களிலும், பேஸ்புக் மூலமாகவோ, கூகிள் ஆட்வேர்ட்ஸ் மூலமாகவோ விளம்பரம் செய்ய எங்களை அணுகுங்கள்

கழிவறையில் இருந்து ஒரு கிலோ தங்கம் கிடைத்தது

நேற்று ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் மங்களூருக்கு ஒரு பயணி வந்தார். அவர் துபாயில் இருந்து ஒரு கிலோ தங்கத்தை கடத்தி வந்து உள்ளார். இதனை விமான நிலையத்தில் உள்ள சுகாதார பணியாளரின் உதவியில்  கழிவறையில் பாதுகாப்பாக வைத்து உள்ளார். பிறகு அங்கு இருந்து தப்ப முயற்சி செய்து உள்ளார். ஆனால் அதற்குள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் சென்று விட்டது.



அவர்கள் விரைவாக செயலபட்டு தங்கத்தை மீட்டு அந்த பயணியையும், அவருக்கு உதவி செய்த பணியாளரையும் கைது செய்தார்கள். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 31.64 இலட்சம் ஆகும். துபாய் - கோழிக்கோடு இடையே தங்கம் கடத்தல் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது.

கின்னஸ் சாதனை புரிந்தார் சச்சின் டெண்டுல்கர்





சச்சினின் மறுபெயர் என்றால் அது சாதனைகளாக தான் இருக்கும் . அந்தளவுக்கு கிரிக்கெட்டில் சாதனைகள் புரிந்து உள்ளார். கிரிக்கெட்டில் உள்ள பல சாதனைகளுக்கு சொந்தகாரர் அவர் தான். இப்போது அவர் புதிய சாதனை புரிந்து உள்ளார். இந்த சாதனையை அவர் நேரடியாக பண்ணவில்லை . அவரது உருவப்படம் இந்த சாதனையை புரிந்துள்ளது. இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உள்ளது. இந்த சாதனையை புரிந்தவர் லிம்னேஷ் ஆகஸ்டின் ஆவார். இவர் மிக சிறந்த ஓவியர்.


இவர் தனது குழுவை சேர்ந்த ஓவியர்களுடன் 6*9.5 போட்ரைட் அளவில் காபி கப்களை வைத்து சச்சினின் உருவ படத்தை வரைந்து உள்ளார்கள்.இதற்காக 10,000 கப்களை பயன்படுத்தி உள்ளார்கள். இதற்கு முந்தைய சாதனையில் 5642 கப்கள் உபயோகப்படுத்தப்பட்டன .இது இறந்த அமெரிக்க பாடகர் எல்விஸ் ப்ரெஸ்லியின் ஓவியமாகும். 


சச்சினின் உருவத்தை வரைந்த குழுவின் பெயர் டி பிரைன் என்களேவ் ஆகும். இவர்கள் இதற்காக சுமார் 12 மணி நேரம் எடுத்து கொண்டார்கள். சச்சின் ஓய்வு பெற்று விட்டாலும் அவரது சாதனைகள் இன்னும் ஓய்வு பெறவில்லை.

சூப்பர் ஒவரை மெய்டன் ஆக்கி விக்கெட் எடுத்து பவுலர் சாதனை




மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனின் சுழலில் சிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அவரது பந்து எவ்வாறு வரும் என்பது கணிப்பது மிகவும் கடினம். ஒரு எவ்வளவு சிறப்பாக பந்து வீசினாலும் சூப்பர் ஒவரில் அவரது பந்துவீச்சில் அடிக்க தான் செய்வார்கள். ஆனால் சுனில் நரைன் அதிலும் ரன் எதுவும் கொடுக்காமல் மெய்டன் ஆக்கி சாதனை புரிந்து உள்ளார். அது மட்டும் இல்லாமல் இந்த ஒவரில் ஒரு விக்கெட்டும் எடுத்தார். இது பலரும் அதிர்ச்சியடைய வைத்தது.


கரீபியன் பிரிமியர் லீக் நடைபெற்று வருகிறது. சுனில் நரைன் கயானா வாரியர்ஸ் அணிக்காக விளையாடுகிறார். ரெட் ஸ்டீல் அணிக்கு எதிரான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஸ்கோர்கள் சமநிலையில் இருந்தன . இதனால் ஆட்டம் சூப்பர் ஒவருக்கு சென்றது. முதலில் பேட் செய்த கயானா வாரியர்ஸ் அணி 11 ரன்கள் எடுத்தது. அடுத்த வந்த ரெட் ஸ்டீல் அணி நரைனின் பந்து வீச்சில் திணறியது. முதல் 4 பந்துகளில் ரன் எடுக்கவில்லை. 5 வது பந்தில் விக்கெட் எடுத்தார். கடைசி பந்திலும் ரன் எடுக்கவில்லை.


எனவே சுனில் நரைனின் அபாரமான பந்துவீச்சால் கயானா வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.

வரலாறு காணாத ஆட்குறைப்பை மேற்கொள்ள இருக்கிறது , மைக்ரோசாப்ட் நிறுவனம் !!!


உலகின் முன்னனி நிறுவங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணி செய்பவர்களில் 18,000 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கம் செய்ய உள்ளது . இது அந்த நிறுவனத்தின் பணியாளர்களின் 14 சதவீதம் ஆகும் . இந்த ஆட்குறைப்பு இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வாங்கப்பட்ட நோக்கியா நிறுவனத்தில் கடுமையாக இருக்கும் . நோக்கியா நிறுவனத்தில் வேலை செய்யும் 12,500 பேர் வேலை விட்டு நீக்கப்படுவர் .

இது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா எழுதிய கடிதத்தில் , இந்த வேலைக்க்குறைப்பு நிறுவனத்தின் வேலை யூனிட்களை ஒன்றினைக்கவும் , முன்னேற்ற பாதை நோக்கி முன்னேறவும் உறுதுணையாக இருக்கும் . முதல் கட்டமாக 13,000 பேரின் வேலையை விட்டு நீக்க உள்ளோம் . வேலையை விட்டு நீக்கம் செய்ய உள்ளவர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குல் தகவல் தெரிவிக்கப்படும் . மேலும் இது குறித்த அடுத்த தகவலை விவரமாக ஜூலை 22 ஆம் தேதி அறிவிப்பதாக கடிதத்தில் கூறி இருந்தார் .

நோக்கியா நிறுவனத்தை வாங்கிய பின்ன மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 1,27,000 பணியாளர்கள் பணி செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

கன்னியாகுமரியை தமிழகத்தில் இருந்து பிரித்து கொடுக்க வேண்டுமாம் , சொல்லுகிறது காங்கிரஸ் !!!


நேற்று தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சியினர் கன்னியாகுமரியை தமிழகத்தில் இருந்து பிரித்து அதை ஒரு யுனியன் பிரதேசமாக அறிவிக்கும் படி  அந்த கட்சியின் எம்.எல்.ஏ க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

நேற்று நடந்த தமிழக சட்டசபையில் இளைஞர் நலன் , விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகிய துறைகள் மீதான விவாதம் நடைபெற்றது . அந்த விவாதத்தில் அனைத்து எம்.எல்.ஏ க்களும் கலந்து கொண்டனர் . தங்களுக்கு பேச அனுமதி கிடைக்கும் என காத்து இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ க்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது . அவர்களுக்கு பேசவே அனுமதி கொடுக்கப்படவில்லை . இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ க்களான விஜயதாரணி . பிரின்ஸ் , ஜான் ஜக்கேப் ஆகியோர் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை எதிர்த்து சபாநாயகரிடம் முறையிட்டனர் . பின்னர் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர் .

இது குறித்து ஜான் ஜேக்கப் கூறுகையில் , " நாங்கள் 3 பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் , எங்கள் மாவட்டத்தில் சாலைகள் மோசமாக உள்ளது , இதுகுறித்து நாங்கள் பேசிவிடுவோம் என்று எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . கன்னியாகுமரி மக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கொதிப்படைந்துள்ளனர் . எனவே , கன்னியாகுமரியை தமிழகத்தில் இருந்து பிரித்து தனி யுனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க போகிறோம் என்றார் .

கோப்பை வெல்லும் முன்னரே தங்கள் அணி கண்டிப்பாக வெல்லும் என்ற நம்பிக்கையில் அஞ்சல் தலை அடித்த ஜெர்மணி நாட்டினர் !!



நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் , ஜெர்மணி அணி கோப்பையைக் கைப்பற்றியது . இந்த முறை ஜெர்மணி அரசினர் உலக கோப்பை முடியும் முன்னரே உலக கோப்பை வெற்றியை பறைசாற்றும் விதமாக அஞ்சல் தலை ஒன்றை அச்சடித்து தயராக வைத்து இருந்தனர் . இந்த அஞ்சல் தலை நேற்று முதல் விற்பனைக்கு வந்தது .



ஜெர்மணி நாட்டு அரசினர் அவர்கள் காலிறுதிப் போட்டிக்கு முன்னரே அவர்களின் வெற்றியைக் கணித்து இந்த அஞ்சல் தலையை தயார் செய்ய திட்டமிட்டனர் . இந்த அஞ்சல் தலையில் எந்தவொரு வீரரையும் குறிப்பிட்டு காட்டாமல் மொத்த ஜெர்மணி அணியையும் குறிப்பிடும்படி அஞ்சல் தலையை வடிவமைத்தனர் .



இது குறித்து ஜெர்மணி அணியின் நிதி அமைச்சர் கூறுகையில் , " இந்த முறை ஜெர்மணி அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் அஞ்சல் தலையை உருவாக்கினோம் . எங்கள் நம்பிக்கையை தகர்க்காமல் அவர்கள் கோப்பையை பெற்று தந்தது எங்களுக்கு வியப்பாக உள்ளது . ஒரு வேளை தோற்று இருந்தால்  அரசுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு இருக்கும் " என்றார் .

நெல்சன் மண்டேலாவின் 96 வது பிறந்த நாள் அன்று அவரை கௌரவித்த கூகுள்




இன்று நெல்சன் மண்டேலாவின் 96 வது பிறந்த நாள் ஆகும். இவர் தென் ஆப்பிரிக்காவின் அதிபராக இருந்த கறுப்பின மக்களுக்காக போராடியவர். சுமார் 27 ஆண்டுகளை சிறையில் கழித்து விட்டு பின்பு தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அந்த நாட்டின் அதிபராக 1994-99 வரை இருந்தார்.
தென் ஆப்பிரிக்காவின் தந்தை என அழைக்கப்படுபவர் இவர். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இறந்தார். இவர் நோபல் பரிசு , இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது என பலவற்றை வாங்கி உள்ளார்.




இன்று அவரது பிறந்த நாள் என்பதால் அவரை கௌரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் அவரை பற்றிய டூடளை வெளியிட்டு உள்ளது. இதில் அவரை பற்றிய சிறந்த கருத்துகள் இடம் பெற்று உள்ளன.

* அடுத்த மனிதனை அவனது நிறம் , மதம், அவனது வாழ்க்கை ஆகியவற்றால் வெறுப்பதற்காக எந்த மனிதனும் பிறக்கவில்லை.

* அடுத்த மனிதனிடம் எப்படி அன்பு காட்டுவது என்பதை ஒருவனுக்கு எளிதில் சொல்லி தர முடியும். ஏனென்றால் அவனுக்கு இயற்கையாகவே ஒருவனை வெறுப்பதை விட அவனிடத்தில் அன்பு காட்டுதல் எளிதாக வரும்.

இன்று கறுப்பின் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு முக்கிய காரணமான நெல்சன் மண்டேலாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

10 ஆண்டுகளுக்கு பிறகு கும்பகோணம் தீ விபத்து வழக்கில் தீர்ப்பு





கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தொடக்க பள்ளியில் தீ விபத்து நடந்தது. இது ஜுலை 16 ஆம் தேதி அன்று நடைபெற்றது.இதில் இந்த பள்ளியில் படித்த 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரின் கவனத்தையும் பள்ளிகளின் பக்கம் திருப்பியது.


அதன் பிறகு தான் பள்ளிகளில் இருந்த கூரைகள் அகற்றப்பட்டன. இந்த வழக்கில் ஜுலை 30 ஆம் தேதி அன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் என 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 232 பேரை விசாரணை செய்து உள்ளார்கள். ஜுலை 30 ஆம் தேதி வர உள்ள இந்த வழக்கின் தீர்ப்புக்காக பலரும் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

ரஜினி பற்றி வந்த செய்தி பொய்யானது, நலமுடன் இருக்கிறார்




சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் லிங்கா. இதில் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதில் கதாநாயகிகளாக அனுஷ்காவும், சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது ஹைதரபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு சண்டை காட்சியில் நடிக்கும் போது ரஜின் உடல்நலம் சரியில்லாமல் மயங்கி விட்டார் என்னும் தகவல் நேற்று காலை வந்தது.


இந்த செய்தி சமூக வலைதலங்களில் காட்டு தீயாக பரவியது. இதனால் ரஜினி ரசிகர்கள் சோகத்திற்கு சென்றனர். தலைவருக்கு என்ன ஆனதோ என்று கவலையில் இருந்தனர். இந்நிலையில் ரஜினி பற்றி வந்த செய்தி பொய்யானது என அந்த படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார். ரஜினி நலமுடன் தான் இருக்கிறார். எனவே ரசிகர்கள் யாரும் கவலை பட வேண்டாம் என்றார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media