BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 29 October 2014

சிந்தனை களம் : அறிவு பாடம்



ஒர் பள்ளியின் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு முக்கியமான பாடம் கற்றுத்தர விரும்பினார். அவர் அனைத்து மாணவர்களையும் ஒரு பிளாஸ்டிக் பையை வாங்கச்சொன்னார். அந்த மாணவர்களிடம். உங்களுக்கு எத்தனை மாணவர்களின் மீது வெறுப்பு உள்ளதோ அத்தனை உருளைக் கிழங்குகளை போடச் சொன்னார். மாணவர்களும் அப்படியே செய்தனர். சில மாணவர்கள் இரண்டு உருளைக்கிழங்குகளும் ஒரு சிலர் 3 முதல் 5 உருளைக் கிழங்குகளைப் போட்டனர். அந்த உருளைக்கிழங்கு பையை நீங்கள் எங்கு சென்றாலும் ஒரு வாரம் உங்களிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என்றார், மாணவர்களும் அப்படியே உற்சாகமாக செய்ய ஆரம்பித்தனர். முதல் இரண்டு நாட்கள் ஆர்வமாகச் செய்ய ஆரம்பித்த மாணவர்கள், பிறகு அவர்களுக்கு அதை எடுத்துச் செல்வது சிரமமாக எண்ணினர். மேலும் உருளைக்கிழங்கு அழுக ஆரம்பித்ததால் துர்நாற்றமும் ஏற்ப்பட்டது. எப்படியோ ஒருவாரம் உருளைக் கிழங்குகளுடன் கழித்து விட்டனர்.

ஆசிரியர் அனைத்து மாணவர்களிடத்தும் கருத்தைக் கேட்டார். அனைவர்களும் ஒரே பதில் தான், நாங்கள் இதனால் சிரமத்துக்குள்ளா னோம் இதனுடைய துர்நாற்றமும், சுமந்துகொண்டு செல்வதும் மிகவும் சிரமமாக இருந்தது ஐயா என்று தெரிவித்தனர். அதற்கு ஆசிரியர் இப்படித்தான் நாம் பிறர் மீது வைத்திருக்கும் வெறுப்பும் நம் மனபாரத்தை அதிகரிக்கும், நம் மனதை கெடுத்துவிடும் (துர்நாற்றம்) இது நம்மை நாமே கெடுத்துக் கொள்ளும் ஒரு செயல். எனவே இந்தப் பையைத் தூக்கிக் குப்பையில் வீசி எறிவது போல் பிறர் மிது வைத்திருக்கும் வெறுப்பை மனதிலிருந்து தூக்கி எறிவோம். மனதைச் சந்தோசமாக வைத்து அனைத்து செயல்களிலும் வெற்றியும் காணுவோம் என்றார் அசிரியர்.

ஜப்பானியர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்


1. ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள்.

2. ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது அதற்கெனவே வடிவமைக்கப்பட்ட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.

3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் சுகாதாரப் பொறியியலாளர் என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டாலரில் 5,000/-த்திலிருந்து 8,000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழித்தேர்வுகளுக்குப் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.

4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை. அத்துடன் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.

5. ஜப்பானில் முதல் வகுப்பிலிருந்து தொடக்கம் ஆறாம் வகுப்புவரையான மாணவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.

7. ஜப்பான் பள்ளிக்கூடங்களில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை தேர்வுகள் இல்லை.கல்வியின் நோக்கம் செய்திகளை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர தேர்வு மூலம் அவர்களை தரப்படுத்துவதற்கல்ல என்கிறார்கள்.

8. ஜப்பானில் மக்கள் உணவகங்களில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.

9. ஜப்பானில் சராசரியாக ஓர் ஆண்டில் தொடர்வண்டிகள் தாமதமாக வந்த நேரம் அதிகபட்சமாக 7 வினாடிகள் மட்டுமே.

10. ஜப்பானில் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.

மழையால் பாதித்த சாலைகளைச் சீரமைக்க ரூ.60 கோடி


பருவமழை பாதிப்பால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மழை காரணமாக மின்சாரம், இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு மேலும் தலா ரூ.1 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டார். வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரணப் பணிகளை முடுக்கிவிடும் வகையிலும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: வடகிழக்குப் பருவமழை காரணமாக, இந்த ஆண்டு இதுவரை 204.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பாக பெறும் மழை அளவான 151 மில்லி மீட்டருடன் ஒப்பிடும்போது 35 சதவீதமாகும். தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் 28 மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்துள்ளது.

இதுவரை 30 பேர் பலி: பலத்த மழை காரணமாக, மின்சாரம் தாக்கியும், இடி, மின்னல் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டும் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மேலும் ரூ.1 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2.50 லட்சம் வழங்கப்படும். பயிர்ச் சேதம் குறித்து ஆய்வு: பலத்த மழை காரணமாக, சில இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. வெள்ள நீர் வடிந்த பிறகே பயிர்ச் சேதம் குறித்து சரியாக ஆய்வு செய்ய முடியும். எனவே, வெள்ள நீர் வடிந்த பிறகு ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சாலைகளைப் பொறுத்தவரை, பலத்த மழை காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 797 சாலைகளில் 3 ஆயிரத்து 70 இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில், 2 ஆயிரத்து 505 இடங்களில் உள்ள பள்ளங்கள் செப்பனிடப்பட்டுள்ளன. மீதமுள்ள பள்ளங்களை செப்பனிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 765 கிலோமீட்டர் சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளன. அவற்றை செப்பனிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட சாலைகளைச் செப்பனிடவும், குளம் குட்டைகளைச் சீரமைக்கவும் ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு இயந்திரம் தயார்: இந்த ஆண்டு இறுதிவரை வடகிழக்குப் பருவமழை நீடிக்க வாய்ப்புள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து பாதுகாப்பு, மீட்பு, நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அரசு இயந்திரம் தயாராக உள்ளது என்று தனது அறிவிப்பில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையாளர் டி.எஸ்.ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பலியான கால்நடைகள்; சேதமடைந்த குடிசைகளுக்கு நிவாரணம் : மழையால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள், சேதம் அடைந்த குடிசை வீடுகள் ஆகியவற்றுக்கும் தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது. இதுகுறித்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பருவமழைக்கு இதுவரை 108 கால்நடைகள் பலியாகியுள்ளன. அதில், மாடுகளை இழந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரமும், ஆடுகளை இழந்தவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், கோழிகளை இழந்தோருக்கு ரூ.100-ம் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 250 குடிசை வீடுகள் முழுமையாகவும், 623 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன. முழுவதும் சேதம் அடைந்தவற்றுக்கு ரூ.5 ஆயிரமும், பகுதியாக சேதம் அடைந்தவற்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு அரிசி, வேட்டி-சேலை, மண்ணெண்ணெய் ஆகிய பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.பருவமழை பாதிப்பால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மழை காரணமாக மின்சாரம், இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு மேலும் தலா ரூ.1 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரணப் பணிகளை முடுக்கிவிடும் வகையிலும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: வடகிழக்குப் பருவமழை காரணமாக, இந்த ஆண்டு இதுவரை 204.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பாக பெறும் மழை அளவான 151 மில்லி மீட்டருடன் ஒப்பிடும்போது 35 சதவீதமாகும். தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் 28 மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்துள்ளது. இதுவரை 30 பேர் பலி: பலத்த மழை காரணமாக, மின்சாரம் தாக்கியும், இடி, மின்னல் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டும் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மேலும் ரூ.1 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2.50 லட்சம் வழங்கப்படும்.

பயிர்ச் சேதம் குறித்து ஆய்வு: பலத்த மழை காரணமாக, சில இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. வெள்ள நீர் வடிந்த பிறகே பயிர்ச் சேதம் குறித்து சரியாக ஆய்வு செய்ய முடியும். எனவே, வெள்ள நீர் வடிந்த பிறகு ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சாலைகளைப் பொறுத்தவரை, பலத்த மழை காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 797 சாலைகளில் 3 ஆயிரத்து 70 இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில், 2 ஆயிரத்து 505 இடங்களில் உள்ள பள்ளங்கள் செப்பனிடப்பட்டுள்ளன. மீதமுள்ள பள்ளங்களை செப்பனிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 765 கிலோமீட்டர் சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளன. அவற்றை செப்பனிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட சாலைகளைச் செப்பனிடவும், குளம் குட்டைகளைச் சீரமைக்கவும் ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு இயந்திரம் தயார்: இந்த ஆண்டு இறுதிவரை வடகிழக்குப் பருவமழை நீடிக்க வாய்ப்புள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து பாதுகாப்பு, மீட்பு, நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அரசு இயந்திரம் தயாராக உள்ளது என்று தனது அறிவிப்பில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையாளர் டி.எஸ்.ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பலியான கால்நடைகள்; சேதமடைந்த குடிசைகளுக்கு நிவாரணம்:
மழையால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள், சேதம் அடைந்த குடிசை வீடுகள் ஆகியவற்றுக்கும் தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது. இதுகுறித்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பருவமழைக்கு இதுவரை 108 கால்நடைகள் பலியாகியுள்ளன. அதில், மாடுகளை இழந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரமும், ஆடுகளை இழந்தவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், கோழிகளை இழந்தோருக்கு ரூ.100-ம் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 250 குடிசை வீடுகள் முழுமையாகவும், 623 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன. முழுவதும் சேதம் அடைந்தவற்றுக்கு ரூ.5 ஆயிரமும், பகுதியாக சேதம் அடைந்தவற்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு அரிசி, வேட்டி-சேலை, மண்ணெண்ணெய் ஆகிய பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

தில்லி திரிலோக்புரி: ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு



தில்லியின் கிழக்குப் பகுதியான திரிலோக்புரியில் இருதரப்பினர் இடையே மதக்கலவரம் மூண்ட இடங்களில், ஆளில்லா விமானங்களில் கேமராக்களை பொருத்தி செவ்வாய்க்கிழமை கண்காணிப்பு மேற்கொண்டனர். அதில், பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, வீடுகளில் சோதனை நடத்தி, மோதலின்போது தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏராளமான ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த மோதல் சம்பவம் தொடர்பாக கௌரவ், ராகேஷ், பல்ராஜ் குமார், திலக் ராஜ், முகேஷ் ஆகிய 5 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து கத்திகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். திரிலோக்புரியில் மோதல் மூண்ட இடங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை 3 மணி நேரம் தளர்த்தப்பட்டது.

சீன எதிர்ப்பை மீறி இந்தியா - வியத்நாம் ஒப்பந்தம்



சீன எதிர்ப்பையும் மீறி, தென் சீனக் கடல் பகுதியில் எண்ணெய் துரப்பணப் பணியை மேற்கொள்வது தொடர்பாக இந்தியா-வியத்நாம் இடையே செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்த வியத்நாம் பிரதமர் குயென் டான் டங், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய உறவுகள், பிராந்திய விவகாரங்கள், சுமுகமான கடல் போக்குவரத்து ஆகியவை குறித்து இரு நாட்டுப் பிரதமர்களும் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, தென் சீனக் கடல் பகுதியில் இந்தியா-வியத்நாம் இடையேயான மற்றொரு எண்ணெய் துரப்பணப் பணியை மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

ராணுவ ஒத்துழைப்புக்கு இந்தியா இசைவு : இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:

  • வியத்நாமின் கடற்படைக்கு வலுசேர்க்கும் விதமாக இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான 4 ரோந்துக் கப்பல்கள் அந்நாட்டுக்கு வழங்கப்படும்.
  • இரு நாட்டு ராணுவங்கள் இணைந்து நடத்தும் பாதுகாப்பு ஒத்திகைகள், ராணுவக் கருவிகளைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றில் கூடுதல் ஒத்துழைப்பு அளிக்கப்படும்.
  • வியத்நாம் விமானப் படையினருக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சிகளை இந்தியா அளிக்கும்.
  • பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துதல், கடற்படையினருக்கு பயிற்சி, ராணுவத் தரம் மேம்பாடு ஆகியவற்றில் இரு நாடுகளும் பரஸ்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கும்.
  • தென் சீனக் கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து நடைபெறுவதற்கோ, அங்கு விமானங்கள் பறப்பதற்கோ எந்த நாடும் தடைவிதிக்க முடியாது என்ற உறுதிப்பாட்டை இரு நாடுகளும் எடுத்துக்கொள்ளும்.

கருப்புப் பணம் : முழுப் பட்டியலையும் தாருங்கள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு



வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் அனைவரது பெயர்களையும், புதன்கிழமைக்குள் ரகசிய உறைக்குள் வைத்து அளிக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media