BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 16 November 2014

கண் நோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள்

மெட்ராஸ்–ஐ என்று அழைக்கப்படும் கண் நோய் சென்னையில் வெகுவேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாரபட்சமின்றி பாதிக்கும் இந்த கண் நோய், கடந்த 3 வாரங்களுக்கும் மேலாகசென்னைவாசிகளை பாடாய்படுத்தி வருகிறது. எப்போதும் கோடை காலத்தில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் மட்டுமே பரவும் மெட்ராஸ்–ஐ கண் நோய் இந்த முறை வழக்கத்துக்கு மாறாக மழைக்காலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஒருவருக்கு இந்த நோய் வந்தால் உடனடியாக அனைவருக்கும் பரவும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை தொட்டாலே அதன் மூலமாக இந்த நோய் பரவும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் எரிச்சலுடன் வலியும் அதிகமாக உள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள்.

அடினோ என்ற வைரஸ் மூலமாகவும், பாக்டீரியா கிருமி மூலமாகவுமே மெட்ராஸ்–ஐ கண் நோய் பரவுகிறது. இதில் 75 சதவீத நோய் பாதிப்பு வைரஸ் கிருமிகளாலேயே பரவுகிறது. பெரும்பாலும் மெட்ராஸ்–ஐ கண் நோய் ஒரு கண்ணை மட்டுமே பாதிக்கும். ஆனால் தற்போது பரவி வரும் வைரசால் 2 கண்களுமே கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதற்கு இந்நோயை பரப்பும் வைரஸ் கிருமியின் வீரியம் அதிகரித்திருப்பதே காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.எழும்பூரில் உள்ள அரசு கண்மருத்துவ மனையில் மெட்ராஸ் – ஐ கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். 50–ல் இருந்த 60 பேர் வரை இந் நோய் பாதிப்புடன் தினமும் ஆஸ்பத்திரிக்கு வருகிறார் கள்.

கடந்த சில வாரங்களில் எழும்பூர் ஆஸ்பத்திரியில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கண் நோயின் பாதிப்புகள் பற்றியும், தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், எழும்பூர் கண் மருத்துவமனை இயக்குனர் மற்றும் கண்காணிப்பாளர் நமிதா புவனேஸ்வரி கூறியதாவது:– எழும்பூர் கண் மருத்துவமனைக்கு நோய் பாதிப்புடன் வருபவர்களின் கண்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதனை பெங்களூரில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதன் பரிசோதனை முடிவுகள் இன்னும் 2 வாரத்தில் தெரியவரும். இதன் பின்னர் வைரசின் தன்மையை பொறுத்து நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். மெட்ராஸ்–ஐயால் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளி, கல்லூரிகள், பணிபுரியும் அலுவலகங்கள், சினிமா தியேட்டர்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது. இதனால் மற்றவர்களுக்கும் நோய் பாதிப்புகள் ஏற்படும்.

கண்களில் இருந்து நீர் வடிதல், கண்வீக்கம், கண் சிவப்பது உள்ளிட்டவையே மெட்ராஸ்–ஐயின் அறிகுறிகளாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கண் டாக்டர்களிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முறையான சிகிச்சை பெறாவிட்டால் கருவிழி பாதிக்கப்பட்டு கண் பார்வையை இழக்கும் அபாயமும் ஏற்படலாம். எப்போதுமே நாம் வசிக்கும் இடத்தை சுகாதாரமாக வைத்திருந்தாலே நோய் பரப்பும் வைரஸ் கிருமிகள் உருவாவதை தவிர்க்கலாம். எனவே அனைவரும் வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நமது உடலையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். இவ்வாறு டாக்டர் நமிதா புவனேஸ்வரி தெரிவித்தார்.

மெட்ராஸ்–ஐ கண் நோயை பொறுத்தவரை பொதுமக்கள் மத்தியில் எப்போதுமே ஒருவித பீதி நிலவி வருகிறது. மெட்ராஸ்–ஐயால் பாதிப்புக்குள்ளானவர்களின் கண்களை பார்க்கக்கூடாது என்றும், அப்படி பார்த்தால் மெட்ராஸ்–ஐ உடனே பரவிவிடும் என்பதுதான் அதுவாகும். ஆனால் டாக்டர்கள் இதனை முழுமையாக மறுக்கின்றனர். மெட்ராஸ்–ஐயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்களை பார்ப்பதால் மட்டுமே அந்நோய் பரவாது என்று அவர்கள் கூறுகிறார்கள். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் துணி, சோப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே மெட்ராஸ்–ஐ பரவும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அதே நேரத்தில் மெட்ராஸ்–ஐ கண் நோய் ஒருமுறை வந்து விட்டால் மீண்டும் உடனடியாக பாதிப்பு ஏற்படாது என்பதும் டாக்டர்களின் கருத்தாக உள்ளது.

உணவே மருந்து : வாரம் ஒரு கீரை!


முருங்கைக் கீரை மொ ரிங்கா! நம்மூரில் 'முர்ரேங்க்கா' என்று கடைத் தெருவில் கூவி விற்கப்படும் முருங்கை மரத்துக் கீரையின் அறிவியல் பெயர் இது. ஆண்மை விருத்திக்கான கீரை என்றே ஊடகங்களில் பிரபலப்படுத்தப்பட்டுள்ள இந்தக் கீரையில், அதற்கும் மேலே நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ரத்தசோகை உள்ளவர்கள் கலர் கலராக விழுங்கிக்கொண்டு இருக்கும் எல்லா மாத்திரைகளையும் ஓரங்கட்டும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது முருங்கைக் கீரை. முருங்கை, முந்நூறு வகையான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உடையது என்று சான்றிதழ் தருகிறது இயற்கை மருத்துவம். நவீன மருத்துவமும் இதை ஒப்புக்கொள்கிறது. ‘நம் உடலுக்கு இது ஒரு பவர் ஹவுஸ்’ என்றே குறிப்பிடுகிறார்கள். ஆரஞ்சுப் பழத்தில் உள்ளது போல ஏழு மடங்கு வைட்டமின் C, பாலில் உள்ளது போல நாலு மடங்கு கால்ஷியம், இரண்டு மடங்கு புரோட்டீன், கேரட்டில் உள்ளது போல நாலு மடங்கு வைட்டமின் ஏ, வாழைப்பழத்தில் உள்ளது.

சேகுவாரா கொல்லப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியீடு

உலகம் முழுவதும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துதலாகத் திகழும் சேகுவாரா கொல்லப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. க்யூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்டு, ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட சேகுவாரா, பொலிவியாவில் கடந்த 1967ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பிறகு, அவரது உடல் ரகசிய இடத்தில் புதைக்கப்பட்டது. அப்போது புகைப்பட கலைஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பொலிவியாவில் மத போதகர் லூயிஸ் கார்டேரா என்பவரிடம் இருந்தன.

2012ஆம் ஆண்டில் அந்த மத போதகர் இறந்தபோது, அவரது உடைமைகளை உறவினர்கள் சோதனையிட்டதில், சேகுவாராவின் புகைப்படங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த புகைப்படங்களை, அவரது உறவினரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவருமான இமானுல் ஆர்டியா என்பவர் தனது நாட்டுக்கு எடுத்து வந்தார். தற்போது அந்தப் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களில், ஒரு படத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும், கம்பீரத்துடன் சேகுவாராவின் முகம் இருப்பது போன்றும், மற்றொரு படத்தில் சேகுவாராவின் உடல் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருப்பதும் இருக்கின்றன.
சேகுவாரா கொல்லப்பட்ட பிறகு, ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் மார்க் ஹட்டனால் எடுக்கப்பட்ட புகைப்படமே சர்வதேச பத்திரிகைகளில் வெளியாகின. அதுதவிர, வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. எனவே இந்த புகைப்படங்களை மதபோதகர் கார்டேராவிடம் மார்க் ஹட்டனே கொடுத்திருக்கலாம் என இமானுல் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி அளித்தது நார்வே : ராஜபட்ச

"இலங்கையில் 30 ஆண்டு கால உள்நாட்டுப் போரின்போது, விடுதலைப் புலிகளுக்கு அப்போதைய நார்வே அரசு நிதியுதவி அளித்து வந்தது. இதுதொடர்பாக, நார்வே அரசு விசாரணை நடத்த வேண்டும்' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:

விடுதலைப் புலிகளுக்கு நார்வே அரசு நிதியுதவி அளித்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இதுதொடர்பாக, அந்நாட்டு அரசு விசாரணை நடத்த வேண்டும். போரின்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட நார்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம், தற்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் எங்களுக்கு எதிராக ஆதாரங்களைக் கொடுப்பதற்குத் திட்டமிட்டு வருகிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட நாங்கள் தயாராகிக் கொண்டிருந்த வேளையில், "அவர்களை தோற்கடிக்க முடியாது' என்று கூறி எங்களது தைரியத்தைக் குறைத்தவர் எரிக் சோல்ஹெய்ம் என்றார் ராஜபட்ச.

கருப்புப் பண விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகிறார் மோடி : திக்விஜய் சிங்

கருப்புப் பண விவகாரத்தில், நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றுகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சனிக்கிழமை குற்றம்சாட்டினார்.மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங்கிடம், ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் கருப்புப் பணத்தை மீட்பதற்கு தனது அரசு முன்னுரிமை கொடுத்து வருவதாக மோடி தெரிவித்தது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது: கருப்புப் பண விவகாரத்தில், நாட்டு மக்களை மோடி ஏன் ஏமாற்றுகிறார்? வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் எவ்வளவு என்பது கூட அரசுக்கு தெரியாது. ஆனால், மக்களவைத் தேர்தலின்போது, இந்தியர்களின் கருப்புப் பணம் ரூ.400 லட்சம் கோடி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளதாக யோகா குரு (பாபா ராம்தேவ்) தெரிவிக்கிறார். ரூ.400 லட்சம் கோடி இருப்பதாக அவர்களுக்கு எங்கிருந்து தகவல் கிடைத்தது? இதுகுறித்து அவர்கள் விளக்கமளிக்க வேண்டும்.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3 லட்சம் கொடுக்கப் போவதாக மக்களவைத் தேர்தலின்போது மோடி தெரிவித்தார். இதற்கு நேர்மாறாக, வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் எவ்வளவு இருக்கிறது என்பது தெரியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்கிறது. அதாவது, உச்ச நீதிமன்றத்தில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தெரிவித்ததையேதான் தற்போதைய மத்திய அரசும் தெரிவித்துள்ளது. அதாவது, கருப்புப் பண விவகாரத்தில் உண்மை நிலவரத்தை புரிந்து கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பின்பற்றிய நிலைப்பாட்டை மோடி எடுத்துள்ளார் என்று திக்விஜய் சிங் கூறினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media