யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய ஒரு புதிய வசதி, மத்திய சென்னை தொகுதியில் மட்டும் அறிமுகம் செய்யப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவதுயாருக்கு வாக்களித்தோம் என்பதை அந்தந்த வாக்காளரே ‘பிரின்ட் அவுட்’டில் பார்த்து உறுதி செய்துகொள்ளும் புதிய வசதியை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மட்டும் மத்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் இந்த புதிய வசதி மத்திய சென்னை தொகுதியில் (எண்: 4) மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த தொகுதியில் உள்ள 1153 வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.
இதன்படி, ஒரு வாக்காளர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்தி ஓட்டு போட்டதும், அவர் வாக்களித்த வேட்பாளரின் சின்னம் பிரின்ட் அவுட்டில் வரும். அதை கண்ணாடி திரை வழியாகப் பார்த்து வாக்காளர் உறுதி செய்து கொள்ளலாம். பின்னர் அந்த பிரின்ட் அவுட் சீட்டு, மின்னணுவாக்குப்பதிவு இயந்திரத்திலேயே பத்திரமாக பாதுகாக்கப்படும். இந்த புதிய முறையை கையாள்வது குறித்து முதன்மைப் பயிற்சியாளர் களுக்கு டெல்லியில் தேர்தல் ஆணையம் பயிற்சி அளிக்கவுள்ளது. அவர்கள், மத்திய சென்னை வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பார்கள்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவதுயாருக்கு வாக்களித்தோம் என்பதை அந்தந்த வாக்காளரே ‘பிரின்ட் அவுட்’டில் பார்த்து உறுதி செய்துகொள்ளும் புதிய வசதியை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மட்டும் மத்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் இந்த புதிய வசதி மத்திய சென்னை தொகுதியில் (எண்: 4) மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த தொகுதியில் உள்ள 1153 வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.
இதன்படி, ஒரு வாக்காளர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்தி ஓட்டு போட்டதும், அவர் வாக்களித்த வேட்பாளரின் சின்னம் பிரின்ட் அவுட்டில் வரும். அதை கண்ணாடி திரை வழியாகப் பார்த்து வாக்காளர் உறுதி செய்து கொள்ளலாம். பின்னர் அந்த பிரின்ட் அவுட் சீட்டு, மின்னணுவாக்குப்பதிவு இயந்திரத்திலேயே பத்திரமாக பாதுகாக்கப்படும். இந்த புதிய முறையை கையாள்வது குறித்து முதன்மைப் பயிற்சியாளர் களுக்கு டெல்லியில் தேர்தல் ஆணையம் பயிற்சி அளிக்கவுள்ளது. அவர்கள், மத்திய சென்னை வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பார்கள்.