
Sunday, 27 July 2014
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல ராகுல் டிராவிட் தலைமையில் இந்தியாவின் புதிய திட்டம்

டைட்டன் வாட்ச் கம்பெனி தனியார் கம்பெனியா? அதன் பங்குதாரர்கள் யார் யார் தெரியுமா?

துணை அதிபரின் மனைவியை கடத்திய போக்கோ ஹாரம் அமைப்பினர் !!
+in+a+warm+handshake+with+Nigeria's+President+Goodluck+Jonathan+(right).jpg)
"தலை"க்கு கனம் இருக்க கூடாது, நடிகர் விஜய் பேச்சு, மீண்டும் ஆரம்பமாகும் அஜீத்-விஜய் மோதல்
அஜீத் விஜய் போட்டி என்பது நீண்ட ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றது, அஜீத்தும் விஜய்யும் தாங்கள் நடிக்கும் திரைப்படங்களில் மாறி மாறி சவால் விட்டுக்கொள்வதும் அவர்களின் ரசிகர்கள் மோதிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ரசிகர்களிடையேயான மோதல் போக்கை தடுக்க அஜீத்தும் விஜய்யும் நல்ல நண்பர்களாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தன, இருவரின் குடும்பங்களும் பழகும் போட்டோக்கள் வெளியாகின. ஆனாலும் இருவரின் ரசிகர்களும் தொடர்ந்து ஃபேஸ்புக் டிவிட்டர்களில் அடித்துக்கொள்கின்றனர், சமீப காலமாக விஜய்யும் அஜீத்தும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வசனங்களை தங்கள் படங்களில் வைப்பதில்லை.
விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அஜீத் கலந்து கொள்ளவில்லை, ஆனாலும் பலர் பல முறை அஜீத் பெயரை சொல்லி கரகோஷம் எழுப்பினார்கள், விஜய் டிவியும் அஜீத்தை புகழ்ந்து தலையில் வைத்து கொண்டாடினார்கள்.
ஃபேவரிட் ஹீரோ அவார்டை நடிகட் விஜய்க்கு வழங்கினார்கள், அந்த விருதை வாங்கிக்கொண்டு பேசும் போது தலையில் எவ்வளவு கனமான கிரீடம் இருந்தாலும் அந்த கிரீடத்தை தாங்கும் தலைக்கு கனம் இருக்க கூடாது என்றார். இது அஜீத்தை விமர்சிப்பது போல் உள்ளது என்றும் மீண்டும் விஜய் அஜீத் மோதல் வசனங்களுக்கு இது ஆரம்பமாக இருக்குமோ என்றும் பலர் கருதுகின்றனர்.
காஸாவில் ரம்சானுக்கு முன் 24 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் !!

அடுத்த குழந்தைக்கு அப்பாவாக போகிறார் தல அஜித்

இனி இந்தியா முழுவதும் சியோமி மொபைல் தான், இதுவரை 1 லட்சம் மொபைல்கள் முன்பதிவு


சாய்னா நெஹ்வாலிடம் 50 இலட்சம் கடன் பாக்கி வைத்து இருக்கும் தெலுங்கானா அரசு


3 வது டெஸ்டில் இங்கிலாந்து பேட்டிங், இஷாந்த் சர்மா இல்லை


ஆடி அமாவாசை அன்று திதி கொடுப்பதால் மட்டும் நன்மை வந்து விடாது

நேரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

மீண்டும் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் ராணுவம் !!

ஸ்பைடர்மேனுடன் போட்டோ எடுக்க 20 டாலர் இருந்தால் போது

சிகிச்சை முடிந்து சென்னைக்கு திரும்பினார் கேப்டன்
தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த 9 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. உடல் நலம் சரியான பின்பு அவர் வீடு திருப்பினார். ஆனால் அவரது உடல் நிலை முழுமையாக குணமடையவில்லை என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் 2 வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார் . இந்த பயணம் ரகசியமாக இருந்து உள்ளது. அவருடன் அவரது மனைவி பிரமேலதா மட்டும் சென்றார்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து கேப்டன் இன்று சென்னைக்கு திரும்பி உள்ளார். அவர் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். கேப்டனுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வரவில்லை. கேப்டன் சிகிச்சைக்கு பிறகு திரும்பியுள்ளதால் அவரது தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
சின்ன குயில் சித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தனது குரலின் மூலம் பலரையும் கவர்ந்த சித்ராவுக்கு இன்று 51 வது பிறந்த நாள். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். அவரது பிறந்த நாள் அன்று நாம் அவரை பற்றி தெரிந்து கொள்வோம்.
* இவர் சின்ன குயில் என்றும், கேரளத்தின் வாணியம்பாடி என்றும் அழைக்கப்படுகிறார்.
* இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பஞ்சாபி, ஒரியா, உருது, துளு, சம்ஸ்கிருதம், பெங்காலி, அசாமீஸ் என பல மொழிகளில் பாடியுள்ளார்.
* 6 தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். ஒரு பெண் பாடகர் வாங்கியுள்ள அதிகப்பட்ச விருதுகள் இவருடையது தான்.
* 6 பிலிம்பேர் விருதுகளும், 31 மாநில விருதுகளும் வாங்கியுள்ளார்.
* தென்னிந்தியாவில் உள்ள 4 மாநிலங்களின் விருதுகளையும் வாங்கியுள்ளார்.
* பிரிட்டன் பாராளுமன்றத்தில் பாட்டு பாடிய முதல் இந்திய பாடகி இவர் தான்.
* லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் லதா மங்கேஷ்கருக்கு அடுத்து பாட்டு பாடிய பெண் பாடகர் இவர் தான்.
* 2005 ஆம் ஆண்டு பதம் ஸ்ரீ விருது பெற்று உள்ளார்.
* இவர் வாங்கிய ஆறு தேசிய விருதுகளில் மூன்று தமிழ் பாடல்களுக்கு வழங்கப்பட்டது.
* தமிழக அரசால் கலைமாமணி விருதும், சத்யபாமா பல்கலைகழகத்தால் கவுரவ டாக்டர் பட்டமும் வழக்கப்பட்டது.
நடிகர் விஜய்யின் பள்ளி சான்றிதழில் மதம் என்னும் இடத்தில் இந்தியன் என்று உள்ளது
ஒரு சாதாரண நடிகனாக சினிமாவில் நுழைந்து இளைய தளபதியாக வளர்ந்து தன்னை இன்று நாளைய சூப்பர் ஸ்டார் என்னும் தரத்திற்கு உயர்த்தி கொண்டவர் நடிகர் விஜய். விஜய் சினிமாவில் அதிரடியாகவும் மாஸாகவும் தெரிந்தாலும், நேரில் பார்க்கும் போது மிகவும் இயல்பாக இருப்பார். அவர் கடந்த ஆண்டு நடித்து வெளிவந்த படம் "தலைவா". அதில் விஜய் ஒரு வசனம் பேசுவார். நீ வேர ஜாதி நா வேர ஜாதி இல்ல, ஒரே ஜாதி இந்தியா என்று. இந்த வசனத்திற்கு திரையரங்குகளில் கைதட்டல்கள் குமியும்.
சினிமாவில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் விஜய் அப்படி தான் போல. விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் பேசிய அவர் , விஜய்யை எல்.கே.ஜி.யில் சேர்க்கும் போது அவரது பள்ளி சான்றிதழ் மதம் என்னும் இடத்தில் இந்தியன் என்று கொடுத்ததாக கூறினார். இன்றளவும் விஜய்யின் பள்ளி சான்றிதழில் இந்தியன் என்றே இருப்பதாக கூறினார்.
உன்னை யாரோ பெத்து இருப்பா என்னை யாரோ பெத்து இருப்பா ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பி டா !!
சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் புதிய திருப்பம்
சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள ஒரு கட்டிடம் கடந்த மாதம் 28 ஆம் தேதி அன்று இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை செய்து கொண்டு இருந்த 61 பேர் பலியாகினர். இது 11 மாடி கட்டிடம் என்பதால் மீட்பு பணிகள் ஒரு வாரம் நடந்தது. இதில் சுமார் 25 பேர் மட்டும் மீட்கப்பட்டனர். இந்த விபத்து நடந்து ஒரு மாத காலம் முடிய போகிறது. இந்த கட்டிடத்தில் வீட்டை வாங்கியோரின் நிலை என்னவென்று தெரியாமல் இருந்து வந்தது. இப்போது அதில் புதிய திருப்பம் வந்து உள்ளது,
இத்தனை நாட்கள் அவர்கள் பொறுமையுடன் இருந்து பார்த்தார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதாக தெரியவில்லை. இங்கு வீடு வாங்கியோர் எல்லாம் பெரிய பணக்காரர்கள் இல்லை . பலரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து, வங்கியில் கடன் வாங்கி இந்த வீட்டை வாங்கி உள்ளார்கள்.
இங்கு இருக்கும் ஒரு வீட்டின் மதிப்பு சுமார் 70 இலட்சம் இருக்கும். கடன் கொடுத்த வங்கிகள் இப்போது வட்டி கட்ட சொல்லி விட்டார்கள். தனக்கு என்று ஒரு வீடு வருகிறது என்றால் அதற்கு வட்டி கட்டலாம். ஆனால் எந்த உபயோகமும் இல்லாமல் எதற்கு வட்டி கட்ட வேண்டும் என நினைகிறார்கள். அதனால் வங்கியிடம் அந்த கடனை தள்ளுபடி செய்யுமாறு கேட்டார்கள், ஆனால் வங்கி மறுத்து விட்டது. இதனால் அவர்கள் புது அமைப்பு ஒன்றை ஆரம்பித்து உள்ளார்கள். அந்த விபத்தால் பாதிக்கப்பட்டு வீட்டை இழந்தவர்களால் அமைக்கப்பட்டு உள்ளது. இப்போது இவர்கள் அரசிடம் அவர்கள் இழந்த பணத்தை கேட்கிறார்கள். மீடியாவின் உதவியையும் நாடி உள்ளார்கள். இதனை சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறார்கள்.
இந்த தகவல்களை அந்த அமைப்பை சேர்ந்த ரத்னா மிஷ்ரா என்பவர் தெரிவித்தார். வீட்டை கட்டியவர்கள் சிறையில் இருப்பதால் யாரிடம் நியாயம் கேட்பது என தெரியாமல் இருக்கிறார்கள்.
சென்னையும் சனிக்கிழமை விபத்துகளும்
சென்னைக்கும் சனிகிழமைக்கு கடந்த சில வாரங்களாக ஒத்து வரவில்லை என்றே கூறலாம். ஏனென்றால் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு விபத்து நடந்து கொண்டு இருக்கிறது.
1. ஜூன் மாதம் 28–ந்தேதி மவுலிவாக்கத்தில் 11 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்து . இந்த விபத்தில் 61 பேர் பலியாகினார்கள்.
2. ஜூலை 5–ந்தேதி நள்ளிரவில் செங்குன்றம் அருகே சுற்றுசுவர் இடந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் காப்பாற்றப்பட்டார்.
3. ஜூலை 12–ந்தேதி பாரிமுனையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இதில் கட்டிடம் முழுவதும் எரிந்தது. அங்கு இருந்த முக்கியமானவைகளும் எரிந்து சாம்பலாகின.
4. ஜுலை 26 - தேதி, அதாவது நேற்று எழிலகம் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து செயல்பட்டு இந்த தீ அணைக்கப்பட்டது.
ஜடேஜா - ஆண்டர்சன் விவகாரம் நடந்தது என்ன ?? மனம் திறந்தார் தோனி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுடன் சண்டையில் ஈடுபட்டதால் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆட்டத்தொகையில் பாதியை அபராதமாக செலுத்த உத்தரவிட்டு உள்ளது. முதல் டெஸ்டின் 2 ஆம் நாள் ஆட்ட இடைவேளியின் போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்டர்சன் கோபமாகி ஜடேஜாவை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்திய அணி ஆண்டர்சன் மீது புகார் அளித்து இருந்தது. பதிலுக்கு இங்கிலாந்து அணி ஜடேஜா மீது புகார் அளித்தது. இது விசாரணையில் இருந்தது . இதில் ஜடேஜாவுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்டர்சன் மீதான விசாரணை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் இந்திய கேப்டன் தோனி தனது மனம் திறந்த பேட்டியை அளித்து உள்ளார். இந்த தீர்ப்பு எங்களை மிகவும் புண்படுத்தி உள்ளது என்றார். இதில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. ஜடேஜா எல்லைக்கோட்டு அருகே சென்று கொண்டு இருக்கும் போது ஆண்டர்சன் ஜடேஜாவை நோக்கி கெட்ட வார்த்தையில் திட்டி உள்ளார். தோனி அவரை சமாதனம் செய்து உள்ளார். எல்லாம் முடிந்து விட்டது என தோனி நினைத்த வேளையில் ஆண்டர்சன் மீண்டும் திட்டி உள்ளார். அது மட்டுமில்லாமல் ஜடேஜாவை தள்ளி விட்டு உள்ளார். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழும் நிலைக்கு சென்று உள்ளார். இருந்தும் அவர் எதுவும் பேசவில்லை. இது எப்படி ஆக்ரோஷமான நடத்தையாகும். ஜடேஜாவின் மீது எந்த தவறும் இல்லை.
ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டு உள்ள தண்டனை தோனியை மிகவும் காயப்படுத்தி உள்ளதாக கூறி உள்ளார். ஜடேஜா மீது லெவல் 1 தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்பது குறிபிடத்தக்கது.
Subscribe to:
Posts
(
Atom
)