BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 27 October 2014

உணவே மருந்து : மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்

மா, பலா, வாழை இவை மூன்றும் முக்கனிகள் என்பது நமக்கு தெரியும். முக்கனிகளின் பயன்கள் பல உள்ளது என நம்மில் பலருக்கு தெரியாது. இவற்றில் முதலில் நாம் மா பற்றி பார்ப்போம்.

  • தினமும் உணவில் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நோய் குணமாகும்.
  • தினமும் உணவில் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை ஊக்கத்துடன் பிறக்கும்
  • மாம்பழத்தில் வைட்டமின் எ சத்து உள்ளதால் நல்ல கண் ஒளிதருகிறது இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உண்பதால் இரத்தம் அழுத்தம் சீராகும்.
  • மாம்பழம் பப்பாளி இரண்டையும் வெட்டி தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மூலநோய் சரியாகும்.
  • மாமரத்தின் தளிர் இலை உலர்த்தி பொடியாக்கி ஒரு ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.
  • மாவிலை பறித்து பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் உறுதியாகும்.
  • மாங்கொட்டை பருப்பை காயவைத்து பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனில் குழைத்து ஒரு நாள் இரண்டு வேளைகொடுக்க குடல் பூச்சி அகலும்.
  • மாவிலை பறித்து தணலில் போட்டு புகையை வாய் திறந்து பிடித்தால் தொண்டை கட்டு ,கமறல் குணமாகும்.
ஆகவே மாம்பழம் சாபிடுவோம் உடல் நலம் காப்போம்.

ஆதார் அட்டைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திடீர் ஆதரவு



ஆதார் அட்டை விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. இந்த அட்டைக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், இது பயனாளிகளுக்கு எந்த நேரத்திலும், எங்கும், எப்போதும் அங்கீகாரத்தை எளிதாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் ஆதார் எண் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த அட்டையானது ஒருவரின் அடையாளத்தை சர்வதேச அளவில் சரிபார்க்க அனுமதிக்கிறது. ஆதார் அட்டை பின்தங்கிய மக்கள், வங்கி வசதி தேவைப்படுவோருக்கு வங்கி வசதி உள்ளிட்ட உரிய சேவைகளை வழங்க உதவியாக இருக்கும். என்று குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரம்: இந்தியா தன்னிச்சையாக தீர்வுகாண அனுமதிக்க மாட்டோம்: பாகிஸ்தான்

காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா தன்னிச்சையாகத் தீர்வுகாண பாகிஸ்தான் அனுமதிக்காது என்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு, வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் தெரிவித்தார். இதுகுறித்து இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது: காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா தன்னிச்சையாகத் தீர்வுகாண முயற்சித்து வருகிறது. இந்தியாவின் இந்த முயற்சியை வெற்றியடையச் செய்ய விடமாட்டோம். பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால் அதை எங்கள் நாட்டின் பலவீனமாக தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புகள், மனித உரிமை மீறல்களை எங்கள் நாட்டின் தூதர்கள், பிரநிதிகள் குழுவினர் மூலம் பல்வேறு நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே ஐ.நா. சபை கொண்டுவந்த தீர்மானங்கள் இன்னும் பொருத்தமானதாகவே உள்ளன. அந்தத் தீர்மானங்களுக்கு இருதரப்பு ஒப்பந்தங்கள் மாற்றாக முடியாது. காஷ்மீர் பிரச்னையில் ஐ.நா. ராணுவ கண்காணிப்புக் குழுவின் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, சர்வதேச நிலையிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று சர்தாஜ் அஜிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சமீபத்தில் நடைபெற்ற கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஐ.நா. பொதுச் செயலர் பான்-கீ-மூனுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியிருந்தது. மேலும், இந்திய பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களால் பாகிஸ்தானின் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாதிப்புக்குள்ளான கிராமங்களை ஐ.நா. கண்காணிப்புக் குழுவினர் பார்வையிட்டனர்.

மூளைப் புற்று நோயை குணப்படுத்தும் ஸ்டெம் செல்: இந்திய - அமெரிக்க மருத்துவர் சாதனை


புற்றுநோய் மருத்துவத் துறையில் ஒரு திருப்புமுனையாக, மூளைப் புற்று நோயைக் குணப்படுத்தும் குருத்தணுவை (ஸ்டெம் செல்) இந்திய - அமெரிக்க மருத்துவ ஆய்வாளர் காலித் ஷா தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் இயங்கி வரும் ஹார்வர்டு குருத்தணு ஆய்வு மையத்தில், அவரது தலைமையில் செயல்பட்டு வரும் ஆராய்ச்சியாளர்கள் குழு இந்தச் சாதனையை புரிந்துள்ளது. இந்தக் குழு உருவாக்கிய, மரபணு மாற்றம் செய்யப்பட்ட குருத்தணுவை, எலிகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதில், அருகிலுள்ள பிற உயிரணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், புற்றுநோய் அணுக்களை மட்டும் கொல்லும் நச்சுப் பொருளை அந்தக் குருத்தணுக்கள் வெளிப்படுத்துவது கண்டறியப்பட்டது.

இந்தப் பரிசோதனை குறித்து காலித் ஷா கூறியதாவது: மூளைப் புற்று அணுக்களை அழிக்கும் திறன் குருத்தணுவை சில ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் கண்டறிந்தோம். எனினும், அந்தக் குருத்தணு வெளிப்படுத்தும் நச்சுப் பொருளால், புற்று நோய் அணுக்கள் மட்டுமின்றி, அந்த குருத்தணுவும் கொல்லப்பட்டது. தற்போது, தாம் வெளிப்படுத்தும் நச்சுப் பொருளிலிருந்து தன்னையே காப்பாற்றிக் கொள்ளும் வகையில் அந்தக் குருத்தணுவில் மரபணு மாற்றம் செய்துள்ளோம் என்றார் அவர். இந்த ஆய்வின் மூலம், மூளைப் புற்று நோயை குணப்படுத்தும் மருந்துகளைத் தயாரிப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளதால், இது புற்று நோய் மருத்துவத்தில் ஒரு திருப்புமுனை என்று கூறப்படுகிறது. காலித் ஷா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media