BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 10 November 2014

தமிழரின் இயற்கை மருத்துவம்



1.வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

சளிக் காய்ச்சல்
2.புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

3.இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

4.சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

5.டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

6.வயிற்றுப் போக்கு
சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

7.வாயுக் கோளாறு
மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

8.நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

9.தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

10.தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தமிழரின் அறிவியல் : சுவாசித்தல் முறையும் ஆயுளும்

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15
முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100. {21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440) மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,

80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,

66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு
கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7
வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில்
கொள்ளவேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால்
முடிவேயில்லை (இது சித்தர்களால்
மட்டுமே முடியும்).

Pranayama - The Art of Yoga Breathing
When the Breath wanders, the mind is unsteady, but when the Breath is still, so is the mind still." - Hatha Yoga Pradipika

Breathing is life. It is one of our most vital functions. One of the Five Principles of Yoga is Pranayama or Breathing Exercise which promotes proper breathing. In a Yogic point of view, proper breathing is to bring more oxygen to the blood and to the brain, and to control Prana or the vital life energy. Pranayama Yoga also goes hand in hand with the Asanas. The union of these two Yogic Principles is considered as the highest form of purification and self-discipline, covering both mind and body. Know more about Pranayama techniques in the following sections:

Pranayama - What is Yoga Breathing?
One of the Five Principles of Yoga is Pranayama or the science of breath control. This is an overview of what Pranayama is and the Breathing Exercises practiced in Yoga.
Pranayama - Importance of Breathing
Breathing is the only means of supplying our bodies and its various organs with oxygen which is vital for our survival. Learn the importance of proper breathing in this section.
Pranayama - Traditional Breathing Techniques
Take a closer look at the different Traditional Breathing Techniques - High Breathing, Low Breathing, Middle Breathing, and the Complete Breath.
Pranayama - Stages of Breathing in Yoga
Each cycle of breathing which is usually thought of as merely inhalation followed by exhalation, may be analyzed based on its four phases or stages. Take your yoga kit and know the Four Stages of Breathing in Yoga.
Pranayama - Arrested and Resting Breath
The empty pause completes the cycle which terminates as the pause ends and a new breathing cycle begins. Know the importance of Arrested and Resting Breath in this section.
Pranayama - Techniques to Prolong Pauses
Bhandas are Yoga Techniques and aids which are practiced in order to slow down one's breathing. Know the four important Bandhas and learn how they are done.
Pranayama - Patterns of Rest
In this section, know the importance of Pattern of Rest between inhalation and exhalation. Also, know the various benefits of having self-control in Yoga breathing.
Pranayama - Importance of Exhalation

The Pranayama practice gives emphasis to inhalation, exhalation, and retention of breath. Learn why proper exhalation is considered as the most important part of Pranayama practice.
Pranayama - Safety Guidelines
The Pranayama practice is safe to do as long as you keep some essential things in mind. Know some general guidelines or principles to keep you on the safe side while doing the exercises.
Pranayama - Prana and the Body
Prana is the center of all Yoga Exercises and practices. It is the energy, the self-energizing force that embraces the body. Know more about Prana and its role in Pranayama.

தமிழகத்தில் தனியார் பால், தயிர் விலை உயர்வு


தமிழகத்தில் தனியார் பால், தயிர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய விலை உயர்வு திங்கள்கிழமை (நவ.10) முதல் அமலுக்கு வருவதாக தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: அண்மையில் ஆவின் பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நவம்பர் 6-ஆம் தேதி முதல், தமிழகத்திலிருந்து வரும் ஆரோக்யா, கெவின்ஸ் பால் நிறுவனங்கள் தங்களின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தின. ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் 4 முன்னணி தனியார் பால் நிறுவனங்களில், திருமலா, ஹெரிடேஜ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.4-ம், டோட்லா, ஜெர்சி ஆகிய இரண்டு நிறுவனங்கள் லிட்டருக்கு வகைக்கு ஏற்ப ரூ.2 முதல் ரூ.4 வரையும் விற்பனை விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. புதிய விலை உயர்வு திங்கள்கிழமை (நவ.10) முதல் அமலுக்கு வருகிறது.

அதேபோல், கப் தயிர் விலை, வகைக்கு ஏற்ப ரூ.1 முதல் ரூ.2 வரை உயர்த்தப்படுகிறது. ஒரு கிலோ தயிர், வகைக்கு ஏற்ப ரூ.17-லிருந்து, ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பாக்கெட் தயிர் விலையையும் கிலோவுக்கு ரூ.2 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. தனியார் நிறுவனங்கள் நிகழாண்டில் இதுவரை நான்கு முறை பால் விலையை உயர்த்தியுள்ளன. தற்போது, ஐந்தாவது முறையாக விற்பனை விலை உயர்த்தப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 10 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தன்னிச்சையாக செயல்படும் தனியார் பால் நிறுவனங்களின் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். தொடர்ந்து உயர்த்தப்படும் பால் விலையால் பாதிக்கப்படுவது பொதுமக்களும், முகவர்களுமே. ஆகையால், தமிழக அரசு இந்தப் பிரச்னையில் தலையிட்டு, தனியார் பால் விலையையும் அரசே நிர்ணயம் செய்யும் வகையில் உடனே சட்டம் இயற்ற முன்வர வேண்டும் என்றார் பொன்னுசாமி.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவோம் : ஓ.பன்னீர்செல்வம்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தமிழக அரசு 152 அடியாக உயர்த்தியே தீரும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி "செயல்படுகிற ஆட்சி சீக்கிரம் வருமா?' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவருக்குப் பதிலளிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் திமுக அங்கம் வகித்த முந்தைய மத்திய அரசும், திமுகவும் தொடர்ந்து துரோகம் இழைத்ததை தமிழக மக்கள் மறந்துவிடவோ, மன்னித்துவிடவோ இல்லை. தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றவுடன் அவர் எடுத்த திடமான உறுதியான நடவடிக்கைகள் காரணமாக, அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என, 07.05.2014 அன்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

தீர்ப்பில், மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுக் கூட்டத்தில், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த ஜூலை 17-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினமே அணை மதகுகளின் கதவுகள் கீழிறக்கப்பட்டன. நவம்பர் 8-ஆம் தேதி நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.40 அடியாகவும், அணையிலிருந்து வெளியேற்றும் நீரின் அளவு நொடிக்கு 456 கன அடியாகவும் இருந்தது. பெரியாறு அணைப் பாசனம், வைகை அணைப் பாசனப் பகுதிகளுக்கு நீர் அளிப்பதற்காக அணைகளிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. வைகை அணையில் நவம்பர் 1-ஆம் தேதி 2.4 டி.எம்.சி. நீர் மட்டுமே இருந்தது. அணைக்கு நீர்வரத்து குறைந்தும், நவம்பர் 3-ஆம் தேதி முதல் அதிகரித்தும், அதன்பிறகு மீண்டும் குறைந்தும் வந்தது.

எனவே, வைகை அணையின் பாசனதாரர்கள், பெரியாறு அணை பாசனதாரர்கள் ஆகியோருக்கு பாசனத்திற்கு நீர் வழங்குவதற்கு ஏதுவாக, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. பருவகால சூழ்நிலைக்கேற்பவும், அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தைக் கருத்தில் கொண்டும், அணைகளிலிருந்து நீரை உரிய வகையில் பயன்படுத்த ஏதுவாக நீர் மேலாண்மை செய்யப்படுகிறது. எனவே, நீர் மேலாண்மை குறித்து குழப்பம் விளைவித்து அரசியல் ஆதாயம் தேட முற்படும் கருணாநிதியின் போக்கு கண்டிக்கத்தக்கது. 152 அடியாக உயர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், கேரள அரசு மறுப்புத் தெரிவித்ததால் முடிக்கப்படாமல் உள்ள எஞ்சிய பணிகளை மத்திய நீர்வளக் குழுமத்திற்கு திருப்தி அளிக்கக் கூடிய வகையில் செய்து முடிக்கப்பட்ட பின்னர், தனிப்பட்ட வல்லுநர்கள் ஆய்வு செய்து அணையின் நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் எனவும், அதிகாரம் படைத்த குழு மேலும் சில பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில், 142 அடிக்கு மேலாக அணையின் உச்ச நீர் மட்ட அளவான 152 அடி வரையில் நீரைத் தேக்கி வைப்பதற்காக தமிழ்நாடு செய்ய உள்ள வலுப்படுத்தும் பணிகள் பற்றிய விவரங்கள் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டது.

இப்போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், வடகிழக்குப் பருவ மழைக்காலம் முடிந்த பின்னர், கோடை காலத்தில்தான் அணையைப் பலப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு செய்து முடிக்க முடியும். தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தியே தீரும். முல்லைப் பெரியாறு பிரச்னையில் கருணாநிதி எந்தவித கவலையும் கொள்ளத் தேவையில்லை. அமராவதி ஆற்றின் கிளை நதியான பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு பட்டிசேரி என்னுமிடத்தில் அணை கட்டப்போவதாக செய்திகள் வந்ததையடுத்து, தேவையான நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. தமிழக அரசின் இசைவு பெறாமலும், காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒப்புதல் பெறாமலும், கேரள அரசு பாம்பாற்றின் குறுக்கே எந்தவொரு அணை கட்டும் பணியையும் மேற்கொள்ளக் கூடாது என அறிவுரை வழங்குமாறும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று கோரியும் பிரதமருக்கு கடந்த 8-ஆம் தேதி கடிதம் எழுதினேன். காவிரிப் பிரச்னையை உள்ளடக்கிய பாம்பாறு, பவானி ஆறு போன்ற பிரச்னைகளில் கேரள அரசு புதிய அணை கட்ட மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும் தடுக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

2ஜி வழக்கு : இன்று இறுதி வாதம்


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கின் இறுதி வாதங்கள் திங்கள்கிழமை (நவம்பர் 10) தொடங்குமா அல்லது வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில் சிபிஐ வழக்குரைஞராக அண்மையில் நியமிக்கப்பட்ட ஆனந்த் குரோவர், வழக்கு தொடர்பான ஆவணங்களையும், குற்றம்சாட்டப்பட்டோர் முன் வைத்த சாட்சியங்களையும் தொடர்ந்து படித்து வருவதால், அவற்றின் மீது தனது வாதங்களை முன்வைக்க சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனியிடம் கூடுதல் அவகாசம் கேட்கக்கூடும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், இந்த வழக்கின் சிபிஐ தரப்பு கூடுதல் சாட்சிகளாக மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநர் சத்யேந்திர சிங், மத்திய தகவல் ஒலிப்பரப்புத் துறை உதவிச் செயலர் நவில் கபூர், தனியார் வங்கி அலுவலர் டி. மணி, கலைஞர் டிவி பொது மேலாளர் ஜி. ராஜேந்திரன் ஆகியோரை விசாரிக்க அனுமதி கேட்டு கடந்த செப்டம்பரில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது கடந்த அக்டோபரில் சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி விசாரணை நடத்தினார். அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் சிபிஐ மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இருப்பினும், இந்த மனு மீதான விசாரணையை திங்கள்கிழமைக்கு (நவம்பர் 10) ஒத்திவைத்தார். எனவே, 2ஜி அலைக்கற்றை வழக்கின் இறுதி வாதங்கள் திங்கள்கிழமை தொடங்காவிட்டாலும், கூடுதல் சாட்சிகளை விசாரிக்க அனுமதி கோரியுள்ள சிபிஐ மனு மீது சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று ஆண்டுகளாகத் தொடரும் வழக்கு: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத் குமார் ரெட்டி உள்பட 14 பேர் மீதும், மூன்று நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

182 பேரிடம் சாட்சியம் பதிவு: இந்த வழக்கில் 2011, அக்டோபர் 22-ஆம் தேதி மேற்கண்ட 17 பேர் மீதும் சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, 2011, நவம்பர் 11-ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த ரிலையன்ஸ் ஏடிஏஜி நிறுவனத் தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்பட 153 பேரிடமும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 29 பேரிடமும் இதுவரை சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளுடன் சிபிஐயும், குற்றம்சாட்டப்பட்டவர்களும் அவ்வப்போது தாக்கல் செய்த சுமார் 1,150 மனுக்களை சிபிஐ நீதிமன்றம் விசாரித்துள்ளது. அமலாக்கத் துறை வழக்கு: சிபிஐ தொடர்ந்த வழக்கு நீங்கலாக இதே விவகாரத்தில் நடைபெற்ற சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ஆ. ராசா, ஷாஹித் உஸ்மான் பால்வா, சரத் குமார் ரெட்டி, தயாளு அம்மாள், கனிமொழி, பி. அமிர்தம் உள்பட 10 பேர் மீதும், ஸ்வான் டெலிகாம், கலைஞர் டிவி உள்பட 9 நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டப்பட்டுள்ளது.

இறுதி வாதங்கள் முடிவடைந்ததும், 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்புடைய சிபிஐ வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் எனத் தெரிகிறது.

மத்திய மந்திரிசபையை விரிவாக்கம் : 21 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு



பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்தார். மத்திய அமைச்சரவையில் புதிதாக 21 பேர் சேர்க்கப்பட்டனர். இவர்களில், 4 பேர் கேபினட் அமைச்சர்கள்; மூவர் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள். எஞ்சிய 14 பேர் இணையமைச்சர்கள் ஆவர். இந்த விரிவாக்கத்தையடுத்து, மோடி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியை சிவசேனைக் கட்சி கடைசி நேரத்தில் புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய மத்திய அமைச்சர்கள் 21 பேருக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்றுக் கொண்டவர்களில், பாஜக மூத்த தலைவர்கள் மனோகர் பாரிக்கர், ஜே.பி. நட்டா, சௌத்ரி வீரேந்தர் சிங், சிவசேனையில் இருந்து பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை சேர்ந்த சுரேஷ் பிரபு ஆகிய 4 பேர் கேபினட் அமைச்சர்கள். பாஜக மூத்த தலைவர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ராஜீவ் பிரதாப் ரூடி, மகேஷ் சர்மா ஆகிய 3 பேரும் தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள்.

பாஜகவைச் சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி, ராம் கிருபால் யாதவ், ஹரிபாய் பார்திபாய் சௌத்ரி, சோன்வார் லால் ஜாட், மோகன்பாய் குண்டாரியா, கிரிராஜ் சிங், ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், ராம் சங்கர் கதேரியா, ராஜ்ய வர்தன் சிங் ரத்தோர், பாபுல் சுப்ரியா, ஜெயந்த் சின்ஹா, சாத்வி நிரஞ்சன் ஜோதி, விஜய் சாம்ப்லா ஆகிய 13 பேர் இணையமைச்சர்கள். இவர்களுடன் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஒய்.எஸ். சௌதரியும் மத்திய இணையமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர் அமீத் ஷா, மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் வசுந்தரா ராஜே சிந்தியா (ராஜஸ்தான்), ரமண் சிங் (சத்தீஸ்கர்), மனோகர் லால் கட்டார் (ஹரியாணா), தேவேந்திர பட்னவீஸ் (மகாராஷ்டிரம்), தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் பங்கேற்கவில்லை: நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. இதுகுறித்து மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது' என்றார். ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பாக அவர்களிடம் இருந்து தகவல் வந்ததா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

அதேசமயம், எதிர்க்கட்சி வரிசையில் சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் கலந்து கொண்டார். மற்ற எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் யாரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

19 பேர் ஹிந்தியில் பதவியேற்பு: தெலுங்கு தேசத்தை சேர்ந்த ஒய்.எஸ். சௌதரி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியா ஆகிய 2 பேரைத் தவிர, மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்ற 19 பேரும் ஹிந்தியில் பதவியேற்றனர். சௌதரியும், சுப்ரியாவும் ஆங்கிலத்தில் பதவியேற்றனர்.

மத்திய அமைச்சர் வீரேந்திர சிங், பதவி, அலுவலகத்தின் கௌரவத்தை காப்பேன் என்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். மனோகர் பாரிக்கர், முக்தார் அப்பாஸ் நக்வி, பண்டாரு தத்தாத்ரேயா, ராஜீவ் பிரதாப் ரூடி, மகேஷ் சர்மா உள்ளிட்டோர் கடவுளின் பெயரால் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

அமைச்சர்களின் எண்ணிக்கை 66ஆக உயர்வு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்தியில் கடந்த மே மாதம் பாஜக அரசு அமைந்த பிறகு மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட முதல் விரிவாக்கம் இதுவாகும். மத்திய அமைச்சரவையில் புதிதாக 21 பேர் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை 45-லிருந்து 66ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், பிரதமர் நரேந்திர மோடி உள்பட 27 பேர் கேபினட் அந்தஸ்து உடையவர்கள். 13 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், 26 பேர் இணையமைச்சர்கள். இதேபோல மத்திய அமைச்சரவையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் எம்.பி. சாத்வி நிரஞ்சன் ஜோதி பதவியேற்றதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் பெண்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.புதிய அமைச்சர்களுக்கு மோடி விருந்து: முன்னதாக, புதிதாக மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றவர்களுக்கு, தில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளித்தார்.

கடைசி நேரத்தில் சிவசேனை புறக்கணிப்பு: மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, புதிதாகச் சேர்ப்பதற்கு 2 எம்.பி.க்களின் பெயர்களைப் பரிந்துரை செய்யுமாறு சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் மோடி கேட்டிருந்தார். இதையேற்று, சிவசேனையைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அனில் தேசாயின் பெயரை அவர் பரிந்துரை செய்திருந்தார். அதன்படி, மத்திய அமைச்சராகப் பதவியேற்பதற்காக தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை அனில் தேசாய் வந்தார். ஆனால், கடைசி நேரத்தில் தில்லியில் இருந்து மும்பைக்கு அவர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். மகாராஷ்டிர அரசில் சேருவது தொடர்பாக பாஜகவுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.மனோகர் பாரிக்கர் உள்பட 4 பேருக்கு கேபினட் அந்தஸ்து மோடி அமைச்சரவையின் எண்ணிக்கை 66ஆக உயர்வு கடைசி நேரத்தில் விழாவை புறக்கணித்தது சிவசேனை

இன்று அமைச்சரவைக் கூட்டம்

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துக்குப் பிறகு, தில்லியில் முதல்முறையாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை (நவ.10) நடைபெறுகிறது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தில்லியில் அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது' என்றன. அளவில் சிறியது: மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்தபோதிலும், முந்தைய வாஜ்பாய் அமைச்சரவை (88 அமைச்சர்கள்), ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையைக் (78 அமைச்சர்கள்) காட்டிலும் அளவில் சிறியதாகும்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media