BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 23 October 2014

பொது அறிவு : வினா விடை



01. வெள்ளி, தங்கம் ஆகிய உலோகங்களில் பாரமானது எது?

தங்கம்

02. வண்ணாத்திப்பூச்சியின் கால்கள் எத்தனை?
ஆறு

03. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு எது?
சீனா

04. அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலம் எது?
அலாஸ்கா

05. அதிகளவு பரப்பளவைக் கொண்ட நாடு எது?
ரஸ்யா

06. 2008 இல் ஒலிம்பிக் விளையாட்டை நடாத்திய நாடு எது?
சீனா

07. அமெரிக்காவில் பிரபலமான உள்ளக விளையாட்டு எது?
கூடைப்பந்து

08. பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் பூட்ஸ் அவர்களது தாயாரின்
நாடு எது? தாய்லாந்து

09. Aurora Borealis பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
Northern Lights

10. உலகில் அதிகளவில் காணப்படும் தொற்றலடையாத நோய் எது?
பற்சிதைவு

பொது அறிவு : இந்திய குடியரசு தலைவரின் அதிகாரம்



  • இந்திய நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் ஆவார். 
  • இவர் இந்திய அரசின் தலைவரும் ஆவார். "பெயரளவிலான தலைவர்' (Nominal Chief), "சட்டப்படியான தலைவர்' (Legal Chief), "நாட்டின் தலைவர்' (ஐங்ஹக் ர்ச் ற்ட்ங் ள்ற்ஹற்ங்), "நடைமுறைத் தலைவர்' (எர்ழ்ம்ஹப் ஈட்ண்ங்ச்), "முப்படைகளின் தலைவர்' என்ற சிறப்புப் பெயர்களும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு உண்டு.
  •  இந்தியக் குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் 
  •  இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்வுக் குழுமம் (Electoral College) மூலம் தேர்ந்தெடுக்கப்படு கிறார். 
  • மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், மாநிலச் சட்டமன்றங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்து எடுப்பார்கள். ஒற்றை மாற்று வாக்கு எனப்படும் ரகசியத் தேர்வு முறையில் குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். 
  • குடியரசுத் தலைவர் தேர்வு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அது உச்சநீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்படும்
  • ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம். 
  • குடியரசுத் தலைவர் தனது ராஜினாமாவை துணைக் குடியரசுத் தலைவரிடம்தான் அளிக்க வேண்டும்.
  • குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்ய குற்ற விசாரணை முறை மூலம் இதைச் செய்யலாம். 
  • குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணைக் கான முன்னறிவிப்பு கால அவகாசம் 14 நாட்களாகும். 
  • குடியரசுத் தலைவரை பதவிநீக்கம் செய்யக் கோரும் குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் கொண்டுவரப் பட்டு குற்ற விசாரணை நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும்.

விரைவில் நடக்க இருக்கிறது விராத் கோஹ்லி - அனுஷ்கா சர்மா திருமணம் ??



இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உள்ளதாக தெரிகிறது . இவர்கள் இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இது தொடர்பாக கோஹ்லியின் தாய் அனுஷ்கா சர்மா வீட்டினரை பார்த்து பேசி விட்டார் என்றும் கூறுகிறார்கள் .

இந்த சந்திப்பு தான் இது போன்ற செய்திகள் பரவுவதற்கு காரணம்  . இவர்கள் இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர் . ஆனாலி இது குறித்து இருவரும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை . 

சியோமி மொபைல்களை பயன்படுத்தாதீர்கள் - எச்சரிக்கிறது இந்திய விமானப் படை !!



சியோமி மொபைல் நிறுவனம் இந்தியாவில் தனது மொபைல்களை அறிமுகப்படுத்தி இந்திய மக்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றது . சீன தயாரிப்பான இந்த மொபைலின் தனி நபர் பாதுகாப்பு குறித்தும் , மற்ற பாதுகாப்புகள் குறித்தும் கேள்வி எழுந்தது . இப்போது இந்திய விமானப்படை அதிகாரிகள் அவர்களது அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினரை இந்த மொபைல்கள் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது .

விமானப்படையிடம் இருந்து வெளிவந்த அறிவிப்பின்படி இந்திய கண்ணி தொடர்பு மையத்தின் தகவல்கள் படி இந்த சியோமி மொபைல்கள் சில தகவல்களை சீனாவுக்கு அனுப்புவது உறுதி செய்யப்பட்டுள்ளது . ஆனால் கணிணி தொடர்பு மையம் எதனடிப்படையில் இதனை தெரிவித்து இருக்கிறது என தெரியவில்லை .

சியோமி நிறுவனம் இந்த தகவல் உண்மை இல்லை என்றும் , ஆனால் கிளவுட் ஸ்டோரேஜ் வசதியில் ஒரு பகுதியாக சில தகவல்கள் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்றது . இதேப் போன்று தான் சியோமி நிறுவனம் தைவான் நாட்டிலும் தகவல்களை அனுப்பவதாக பிரச்சனை வந்துள்ளது . 

விஜய் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்கையில் ரசிகர் தவறி விழுந்து பலி !!


நடிகர் விஜய் நடித்த " கத்தி " நேற்று பல பிரச்சனைகளுக்குப் பின் வெளிவந்தது . இந்தப் படத்தைப் பார்த்து முடித்து விட்டு ரசிகர் ஒருவர் உயரமான கட் அவுட் ஒன்றில் பாலாபிஷேகம் செய்யும் போது தவறி கீழே விழுந்து பலியானார் . இந்த சம்பவம் கேரளாவில் பாலக்காட்டு பகுதியில் நடந்துள்ளது .

கேரளாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் . இதற்காக அங்கே இரயில்களில் கூட கத்திப் பட போஸ்டர்கள் ஓட்டப்பட்டது . விஜய் ரசிகர்களில் ஒருவரான உன்னி என்பவர் கட் அவுட் மேலே சென்று பால் அபிஷேகம் நடந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது .

இது போன்று உயிரை அழிக்கும் பாலாபிஷேகம் தேவைதானா ?? ரசிகர்கள் யோசிக்கவும் ...

பதக்கம் வேண்டாம் என்று புறக்கணித்த சரிதா தேவிக்கு தடை விதிக்கப்பட்டது !!


 நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை எதிர்க்கும் விதமாக தனக்கு அளிக்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை வாங்க மறுத்தார் . அதனை தன்னுடன் மோதிய சக வீராங்கனையிடம் ஒப்படைத்து விட்டார் . பின்னர் ஒரு நாள் கழித்து அவர் இது குறித்து ஆசிய ஒலிம்பிக் அமைப்பிடம் மன்னிப்பு கேட்டார் .

ஆனால் சர்வதேச பாக்சிங் அமைப்பு இவரை சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தடை செய்துள்ளது . அவர்கள் தெரிவிக்கும் வரை இவரால் பங்கு கொள்ள முடியாது . இவருடைய பயிற்சியாளர்களையும் தடை செய்துள்ளனர் . இதனால் இவரால் அடுத்த மாதம் நடக்க உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கு கொள்ள முடியாது .

இது குறித்து சரிதாவின் கணவர் கூறுகையில் நாங்கள் பதில் கடிதம் தயாரித்துக் கொண்டு இருக்கிறோம் . இந்த பிரச்சனை விரைவில் முடிவுபெறும் என்று தெரிகிறது  என்றார் .

உணவே மருந்து : முருங்கைக் கீரை



முருங்கைக் கீரை என்ன சத்து?
தண்ணீர் : 63.8%
புரதம் : 6.1%
கொழுப்பு : 10%
தாதுஉப்புக்கள் : 4%
நார்ச்சத்து : 6.4%
மாவுச்சத்து : 18.7%
வைட்டமின் ஏ : 11300/IU
வைட்டமின் பி : 0.06 மில்லி கிராம்
(தயாமின்) (100 மில்லி கிராம் கீரைக்கு)
சுண்ணாம்புச் சத்து : 440 மில்லி கிராம்
குளோரின் : 423 மில்லி கிராம்
இரும்புச் சத்து : 259 மில்லி கிராம்
ரைபோஃபிளேவின் : 0.05 மில்லி கிராம்
கந்தகச் சத்து : 137 மில்லி கிராம்
மாங்கனீஸ் : 110 மில்லி கிராம்
நிகோடினிக் அமிலம்: 0.8 மில்லி கிராம் வைட்டமின் சி : 220 மில்லி கிராம் 

முருங்கைக் கீரையில் சிறந்த உயிர்ச்சத்துக்களும், தாதுஉப்புக்களும், மாவு, புரதப் பொருட்களும், சுண்ணாம்பு, மாங்கனிஸ், மணிச்சத்து, இரும்புச் சத்துக்களும் உள்ளன‌.


பலன்கள் :
முருங்கைக் கீரை 108 கலோரி சக்தியை நமக்குக் கொடுக்கின்றது. கண்ணுக்கு மிகவும் நல்லது. மலச் சிக்கலைத் தீர்க்கும். தாது உப்புகள் இந்த கீரையில் ஓரளவுக்கு இருப்பதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்பு உறுதி பெறும். வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன. முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.  கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.

இயற்கை மருத்துவம் : தலைமுடி பராமரிப்பு


வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர: கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக: நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக: ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற: அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற: மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க: தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும். முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு: கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும். காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர: நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய: நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

மோடியின் காஷ்மீர் பயணம்: முழுஅடைப்புக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுடன் கொண்டாடுவதாக அறிவித்து வியாழக்கிழமை காஷ்மீர் செல்கிறார். இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளான ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இஸ்லாமிய பெரும்பான்மை உள்ள மாநிலத்தில், இந்துப் பண்டிகையான தீபாவளி அன்று மோடி வருவது கலாசார ஆக்கிரமிப்பு அல்லாமல் வேறு அல்ல என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், போலீஸார் காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர். இருப்பினும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரிவினைவாத அமைப்புகள் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கனடாவில் ராணுவவீரர்களின் மீது நடக்கும் தொடர் தாக்குதல்


நேற்றுமுன் தினம் மொன்றியல் நகரிலிருந்து 30 கி.மீற்றர் தொலைவில் உள்ள சென்ற் றீசெலு நகரில் இரு ராணுவத்தினர் வாகனத்தால் மோதி விபத்துக்குள்ளாக்கப்பட்டனர்.இன்றுகாலை ஒட்டாவா நகரின் மையத்தில் நாடாளுமன்றின் அருகில் போர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் மீண்டும் ஒரு சிப்பாய் சுடப்பட்டார்.இவ்விருதாக்குதலும் மிகவும் கச்சிதமாக நேர்த்தியாக திட்டமிடப்பட்டுள்ளது.இத் தாக்குதலை நடத்தியவர்களில் முதலாமவர் இடையிட்டு இஸ்லாத்தில் இணைந்த கியுபெக்கர்.இன்றைய தாக்குதலில் கறுப்பு இனத்தவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதுவரை முஸ்லீம்கள் நேரடியாக சம்பந்தப்படவில்லை.இருந்தாலும் ஐஎஸ் ஐஎஸ்ன் பின் புலமிருப்பதாகத்தான் கருதுகின்றனர்.இதுவரை காலமும் கனடா ஒரு அமைதியான பாதுகாப்பான நாடு என்று தான் பல இலட்சம் மக்கள் குடியேறியிருந்தனர்.இதற்காக பெரும் பண மற்றும் பொருட்செலவு செய்துள்ளனர்.ஆனால் இது கேள்விக்குறியாகுமோ?
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media