BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 22 February 2014

சென்னையில் மயங்கி விழுந்த ராம் ஜெத்மலானி


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்காக உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய‌ பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, வெள்ளிக்கிழமை சென்னை வந்தார்.

சென்னையில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அவர், இன்று காலை திடீரென தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்து மயக்கம் அடைந்த அவர், உடனே ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து தங்கியிருந்த ஹேட்டல் அறைக்கு திரும்பிய அவர், பின்னர் பிற்பகலில் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றார்.

ஏழு பேர் விடுதலைக்கு மன்மோகன்சிங் எதிர்ப்பு தெரிவித்ததற்கு, வருகிற லோக்சபா தேர்தலில் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள், ஏழ்வரையும் விடுதலை செய்ய, ஜெ. எடுத்த முடிவு மிக சரியானது- ராம் ஜெத்மலானி


நேற்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய போது, "ராஜிவ் கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேரையும், விடுதலை செய்ய ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை சரியானது என்றும், மத்திய அரசில் உள்ள சில பேர் கூறுவது போல், எந்த விதிமுறைகளையும்  அவர் மீறவில்லை என்றும், சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர், "ஏழு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதில் இருந்து மரணத்தின் பிடியில், அதன் நிழலில் அவர்கள் சிக்கி தவித்தனர். இது 5 ஆயுள் தண்டனைக்கு சமமானது. இதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் விரிவாக எடுத்துரைப்பேன்", என்றும் கூறினார்.

"ஏழு பேர் விடுதலைக்கு மன்மோகன்சிங் எதிர்ப்பு தெரிவித்து கூறியதற்கு, வருகிற லோக்சபா தேர்தலில் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள்." என்றும் ராம் ஜெத்மலானி தான் பேசுகையில் கூறினார்.

ஜெயலலிதாவிற்கு செருப்பு மாலை போட்டு ஆர்ப்பாட்டம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய ஏழு தமிழர்கள், 23 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து இருந்தது.

இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும், வட இந்தியாவில் உள்ள ஒரு பகுதி மக்களும், இந்த விடுதலை உத்தரவை பிறப்பித்த, ஜெயலலிதாவுக்கு எதிராக மிக மோசமாக பேசி, கீழ்த்தரமான‌ ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மும்பையில் நேற்று காங்கிரஸ்காரர்கள் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா படத்திற்கு செருப்பு மாலையும், ராஜீவ் காந்திக்கு மலர் மாலையும் அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் ஜெயலலிதாவை இந்தியில் மோசமான வார்த்தைகளால் திட்டி கோஷங்கள் எழுப்பினர். ஒரு மாநிலத்தின் முதல்வரை, அவதூறாக பேசியும், செருப்பு மாலை அணிவித்தும் நடந்த ஆர்ப்பாட்டம், மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியின் அலுவலகத்திலேயே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை: டிசிஎஸ் பெண் ஊழியர் உடல் கண்டெடுப்பு

சென்னை சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  அந்த பெண்ணின் பெயர், உமா மகேஸ்வரி, வயது 24, இவரது சொந்த ஊர் சேலம். கடந்த ஒரு வருடமாக, சிறுசேரியில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.  கடந்த ஒன்பது நாட்களாகவே காணாமல் போயிருந்தவர், சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் டிசிஎஸ் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி காஞ்சிபுரம் மாவட்ட போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தைக் கைப்பற்றி, மர்ம மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெண் ஊழியர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டரா அல்லது எந்த காரணத்திற்காக‌ இந்த கொலை நிகழ்ந்தது என்பது பற்றி விசாரணைக் நடந்து வருகிறது.

நேரடி தொலைகாட்சி நிகழ்ச்சியில், ஆம் ஆத்மி நிர்வாகியை ஆத்திரத்தில் அறைந்த பாஜக பெண்



பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான இஜாஸ் கான் என்பவரும், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த டீனா சர்மா என்ற பெண்ணும் பங்கேற்றனர். "ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சாதி ரீதியாக செயல்படுகிறாரா?" என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

இருவரும், கடுமையான விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, ஒரு கட்டத்தில் டீனா சர்மாவை, இஜாஸ் கான் தகாத‌ வார்த்தைகளால் பேசினார். இதனால், கோபம் அடைந்த டீனா சர்மா, இஜாஸ் கான் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.  பதிலுக்கு டீனா சர்மாவை, இஜாஸ் கான் தாக்க முயற்சித்தார், இதனால், அதிர்ச்சி அடைந்த, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், ஓடி வந்து, இருவரையும் பிரித்து விட்டனர்.

தொலைக்காட்சியில் இந்த காட்சிகள் நேரடியாக போய் கொண்டிருந்தது. இச்சம்பவத்தை அடுத்து ஒளிபரப்பு  நிறுத்தப்பட்டது.

பேருந்துகளில் கலாட்டா செய்வதை தடுக்க மாணவர்களை வீடியோ படம் பிடிக்க போலீசார் திட்டம்


மாணவர்கள் பேருந்துகளில் செய்யும் அட்டகாசத்தினால், பொதுமக்கள் பலரும் அன்றாடம் அவதிபட்டு கொண்டிருக்கின்றனர். இவர்கள் செய்யும் கலாட்டாவினால், காவல் துறைக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மாணவர்கள் பிரச்சினையை தீர்க்க எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்தாலும், இதுவரை ஒரு நல்ல தீர்வு காண முடியவில்லை. ஆகவே, போலீசார், ஒரு புதிய உத்தியை கையாள இருக்கின்றனர்.

பஸ்களில் கலாட்டா செய்யும் மாணவர்களை,  வீடியோகிராபர்கள் மூலம் ரகசியமாக படம் பிடிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் பஸ் ஊழியர்களையும், தங்கள் செல்போன் மூலம் ரகசியமாக படம் எடுக்க, போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாறு எடுக்கப்படும் வீடியோ, செல்போன் படக்காட்சிகளை குறிப்பிட்ட மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளின் நிர்வாகத்திற்கு காட்டி உரிய நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும் வீடியோ படக்காட்சிகளை குறிப்பிட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கும் போட்டு காட்ட முடிவு செய்துள்ளனர். படக்காட்சிகளை போட்டு காட்டி மாணவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கினால், நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலீசாரின் இந்த திட்டம், வரவேற்கபட வேண்டியது என நீங்கள் நினைத்தால், லைக் போடுங்கள்!

அரவிந்த் கேஜ்ரிவால் கருத்து தவறானது - சுப.உதயக்குமார்

7 தமிழர்கள் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த அரவிந்த் கேஜ்ரிவால் கருத்து தவறானது - சுப.உதயக்குமார்
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media